தொகுப்பு

Archive for ஏப்ரல் 22, 2010

மனைவிக்கு மட்டுமா உபதேசம்? – மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி


மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி
முதல்வர், ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா, நீடூர்.
………………………………………………………………………………………………………

‘ஒரு மனிதன் பாவியாகிவிட, அவன் உணவளிக்க கடமைப்பட்டவரு(மனைவி)க்கு உணவளிக்காமல் கடமை தவறுவது போதுமாகும்.’ (நூல்: அபூதாவூது.)

ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டால் அவள் கரம்பிடித்த கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்து அவனது கௌரவத்தையும், குடும்ப கண்ணியத்தையும் காப்பது அவளது கடமை என்பதில் இருகருத்தில்லை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற, “நல்ல பெண் எவரென்றால், கணவன் அவளைக் காணும்பொழுது மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் கீழ்படிந்து நடப்பாள். தனது விஷயத்திலும்; தமது பொருள் விஷயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத போக்கை கடைப்பிடிக்க மாட்டாள்!’ என்ற நபிமொழிக்கொப்ப, ஒரு பெண் பணிந்து வாழ்ந்தால்தான் அவள் சிறந்த பெண்மணி என்ற நற்பெயரை அடைய முடியும்.

கண்ணியம் வாய்ந்த கணவனை அவமதிக்கும் வகையிலும் பெற்ற பிள்ளைகளை நிராதரவாக விட்டும் ஒரு பெண் வாயடித்துக்கொண்டும், வம்பளத்துக்கொண்டும், அடங்காப்பிடாரியாக சுற்றியளைந்தாள் என்றால்…ஊர்மக்கள், இவளா? ராட்சசியாயிற்றே! வாயாடியாயிற்றே பெண்ணுருவில் நடமாடும்…ஆயிற்றே! என்றெல்லாம் (அவள் காதில் விழாதவாறு) பேசத் தலைப்படுவர். இத்தகைய பெண்களை நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கடிந்துரைத்துள்ளார்கள்.

‘கணவனுக்கு மாறு செய்வதன் மூலமும் வந்தபடி பிறரை சாபமிடுவதன் மூலமும் அனேக பெண்கள் நரகம் புகுத நான் கண்டேன்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக, ஒரு கணவன் தமது மனைவியுடன் இன்புற்று வாழ அப்பெண் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்க முறைகள், சட்டமுறைகள், வழிபாட்டு முறைகள் பற்றி இஸ்லாம் நன்குரைத்துள்ளது. இதன்படி வாழ்வது இஸ்லாமிய பெண்ணின் கடமையாக இருக்கிறது.

ஆயினும் ஒரு பெண்ணுக்கு இஸ்லாம் கூறிய அளவு அறிவுரைகளை, அவளைக் கரம்பிடித்த கணவனுக்கு எடுத்துரைக்கவில்லையா? என்ற கேள்விக்கணை பல ஊர் முஸ்லிம் பெண்கள் தரப்பிலிருந்து எழுந்தவாறுள்ளது. இவ்வாறு இவர்கள் கேள்வி எழுப்ப நியாயமான காரணங்களும் உள்ளன.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு பெண் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? ஒழுக்கம் பேண வேண்டும்? கணவனையும், குழந்தைகளையும், அண்டை அயலாரையும் அவள் எப்படி ஆதரிக்க வேண்டும் என்பதற்கான பெண்ணுபதேசங்கள் நிறைய உள்ளன. அவை ஒவ்வொரு ஊரிலும் பிசங்கங்களில் உபதேசிக்கப்படுகின்றன. ஆனால், இவைபோன்ற அறிவுரைகள் கணவனுக்கும் அதிகம் இருந்தும் கணவனுக்கு செய்யும் உபதேசங்கள் குறைவாக உள்ளன.! இது ஏன்? ஏன்ற கேள்வியை பேண்கள் கேட்கின்றனர்.

தவிர, ஒரு சில குடும்பங்களில் சில கணவன்களால் குடும்பப்பெண்கள் கடும் பிரச்சனைக்கும் தொல்லைக்கும் ஆளாகி, அவனது கொடும்பிடியில் நரக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நிலை. ஒரு சில கணவன்கள் பெண்களை அடிமைகளைப்போலெண்ணி இழிவுபடுத்துகின்றனர். இன்னும் பலர் தமது குடும்பப்பொறுப்பை எண்ணி சம்பாதிக்காமல் மாமனார் வீட்டை உறிஞ்சிக்கொண்டு மிடுக்குடன் பவனி வருகின்றனர். மற்றும் சிலர் மணமுடித்த கையோடு பெண்ணை அந்தரத்தில் விட்டு திரும்பிப்பாராமல் தலைமறைவாகி விடுகின்றனர். வேறு சிலரிடம் சொல்ல முடியாத உடல்கூறு நோய்கள், கடும் பிணிகள் இருப்பதால் பெண்கள் தமது சுகமான வாழ்வை இழக்கும் நிலை!

இப்படி எத்துனையோ வெகு மோசமான குற்றங்கள் குறைகள் பல கணவன்களிடம் உண்டு. இதில், தந்தை, நாத்திகளின் அவதூறுகளையும் கிசுகிசுப்புகளையும் காதில் போட்டுக்கொண்டு அமைதியின் வடிவங்களாகத் திகழும் பெண்மணிகளை அணுஅணுவாக இம்சித்து சித்ரவதை செய்யும் கொடும்பாவிகளும் உண்டு. ஊர்தோறும் இப்படிப்பட்ட அவஸ்தைகளால் மனம் குமைந்து குமுறி அவதியுறும் அபலைப் பெண்களின் ஈனஸ்வரங்கள்தான் சில சமயம் கேள்விக்கணைகளாக மாறுகிறது.

அதாவது, பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்லாம் இவர்களைப்போன்ற கொடுமைக்கார கணவன்களுக்கு ஒன்றும் கூறவில்லையா? என்பதுதான் அந்தக் கேள்விக்கணைகள்! உண்மையில் கணவன்மார்களுக்கும் இஸ்லாம் நிறைய அறிவுரைகள் நல்கியுள்ளன. இதோ, ஒரு பெண்ணை கரம்பிடித்து விட்டால், அந்த நிமிடமே கணவனின் கடமையென்னவென்பதை தெளிவுபடுத்துகிறது.

நீங்கள் அப்பெண்களை நல்ல முறையில் வாழச்செய்யுங்கள். இது சுருக்கமான திருக்குர்ஆன் வசனமாகும். இதைத்தொடரந்து இவ்வாறு உபதேசிக்கிறான் அல்லாஹ். ‘அவர்களை நீங்கள் வெறுத்தால்; நீங்கள் அவர்களை வெறுக்கலாம்-ஆனால் அல்லாஹ் அவர்களில்தான் உங்களுக்கு பெரும் நன்மைகளை வைத்திருப்பான்.’ – அல்குர்ஆன் 4:19

பெண்ணினத்தின்மீதே நல்லபிப்ராயத்தை விதைக்கும் வகையில் இவ்வசனங்களை அல்லாஹ் கூறியுள்ளான். இனிய வாழ்க்கை, இரணவிருத்தி, மன அமைதி போன்ற பாக்கியங்கள் ஒருவன் மணமுடித்தபின் கரம்பிடித்தவள் மூலம் பெறவியலும்-அதை முறையாகப் பெறுவது கணவனின் கடமை என்பது இவ்வசனங்களின் நோக்கம்.

ஒரு மனிதன் பதவி பட்டங்கள் சொத்து செல்வங்கள் குழந்பை;பேறுகள் மூலம் அடையாத அமைதியை தமது இல்லாள் மூலம் அடைய முடியும். தமது மனைவி மூலம் அவன் காணும் அன்பும் ஆதரவுமே அத முக்கியமானது, நீடித்தது, கலங்கலில்லாதது! என்பதை இதோ இன்னொரு வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். ‘நீங்கள் சேர்ந்து வாழும்) மனைவிகளை அவர்களிடம் நீங்கள் நிம்மதி பெறுவதற்காகவே உங்களிலிருந்து அல்லாஹ் அவர்களைப் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டுபண்ணினான்  – அல்குர்ஆன் 30:21

இந்தளவு பெண்ணின் பெருமையை அல்லாஹ் கணவன்களுக்கு அறிவித்துள்ளான். ஒரு பெண்ணுக்குரிய கடமைகளை தனது திருமறையில் விபரித்துள்ளதுபோல், ஆணுக்கும் தெளிவாக உபதேசித்துள்ளான். இஸ்லாமியப் பெண்களில் பலர் குர்ஆன், ஹதீ }; அறிவுரைகளை கற்பதிலும் மார்க்க நூல்களை படிப்பதிலும் அக்கறையில்லாமல் இருப்பதால், கணவன்மீது தங்களுக்குரிய உரிமைகளைப் பெறத் தெரியாமல் இருக்கிறார்கள்.

பெண்ணுரிமை நிலைநிறுத்தும் உபதேசங்கள் திருக்குர்ஆனில் நெடுகேயுள்ளன. குர்ஆனில் எங்கெல்லாம் பெண்களுக்கான உபதேசங்கள் இடம்பெற்றுள்ளனவோ அங்கெல்லாம் ஆண்களுக்கும், உபதேசிக்கப்பட்டுள்ளன. சுpல எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். ‘நபியே! விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறும்!அவர்களும் தமது பார்வையை கீழ் தாழ்த்தி தமது கற்பை அரட்சித்துக் கொள்வார்களாக! அதுவே அவர்களுக்கு பரிசுத்தமானதாகும். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாகும்.’ – அல்குர்ஆன் 24:30 மேலும் அல்லாஹ் கூறுகிறான்: ‘ஆண்கள் சம்பாதித்தவை அவர்களுக் குரியதாகும். பெண்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே உரியதாகும்.’ – ஆல்குர்ஆன் 4:32

இப்படி ஆண்களுக்கும் பெண்ணுரிமைகளை போதிக்கும் பொன்மொழிகள் குர்ஆனிலும், ஹதீஸிலும் சட்ட அமைப்பிலும் நிறையவுள்ளன.

அதேபோல், பெண்கள் விஷயத்தில் ஆண்களுக்கு சற்று அதிகமான அறிவுரைகள் உள்ளன. அதில் முத்தாய்ப்பாக் ‘அப்பெண்களுக்கு உரிமைகள் உள்ளன! கடமைகள் உள்ளதுபோல்!’ என்ற திருக்குர்ஆன் வசனத்தை அறிஞர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். இவ்வசனத்தில் பெண்களின் கடமைகளை காட்டும் சொல்லைவிட அவர்களது உரிமைகளுக்கு குரல் எழுப்பும் சொல் முதன்மை இடம் பெற்றுள்ளது. பெண்களின் நியாயமான உணர்வுகளுக்கு இஸ்லாம் முழுமையாக செவி சாய்த்துள்ளதற்கு இவ்வசனம் ஒன்றே பலமான சான்று!

ஒரு கணவனால், தமது மனைவிக்கு நியாயமான முறையில் வாழ்க்கையை தரவில்லையெனில் அவளுக்கு அன்பான முறையில் விவாக விடுதலை அளித்து விடுவதே அவனது மனுஷத்தன்மைக்கும் மனித நேயத்துக்கும் அடையாளமாகும்.

அண்டை அயலாருக்கும் தமது பணியாட்களுக்கும் ஏன் முஸ்லிம் அல்லாதோருக்கும்-இன்னும் சொல்வதெனில் வாயற்ற ஜீவன்களுக்கும் புற்பூண்டுகளுக்கம் அத்துணை படைப்புகளின் உரிமைகளையும் போற்றச்சொல்லும் இஸ்லாம் கணிசமான மஹரீந்து கண்ணியமான முறையில் ஒரு பெண்ணை கரம் கோர்க்கச் செய்யும்போது அவளது பெண்ணுரிமையை எந்தளவு போற்றும்ஃ என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு பெண்ணை ஆதரித்து பாதுகாக்கும் முறையை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள்: ‘நீங்கள் உண்ணும்பொழுது மனைவியையும் உண்ணச்செய்யுங்கள். உங்களுக்க உடை வாங்கும்போது அவருக்கும் வாங்குங்கள். அவரது முகத்தில் அடிக்காதீர்கள். அசிங்கமாக பேசாதீர்கள். வீட்டில் தவிர (வெளியில்) அவரை கண்டிக்காதீர்கள்.’ (ஆதாரம்: அபூதாவூது)

இதுபோன்ற ஹதீஸ்களெல்லாம், ஒரு பெண்ணை இரக்கமின்றி தண்டிப்பதையும், அவளது பாசம் மிக்க பெற்றோரிடமிருந்து அரக்கத்தனத்துடன் அவளை பிரித்து வைப்பதையும், அனாதையாக அவளை விட்டு விட்டு ஒதுங்கி பதுங்கி விடுவதையும், தமது அக, புற நோய்கள் காரணமாக அவளுக்கு வாழ்வளிக்க முடியாத பொழுது, இதமான முறையில் விவாக விலக்களித்து அவளது மறுவாழ்வுக்கு இடந்தராதிருப்பதையும் பெரிதும் கண்டிக்கின்றன.


‘ஒரு மணிதர் அவரது மனைவி மக்களை நேர்மையுடன் பராமரிக்க வேண்டியவராக இருக்கின்றார். அது பற்றி அவர் மறுமையில் விசாரிக்கப்படுவார்!’ (ஆதாரம்-புகாரி) என்ற ஹதீஸை சம்மந்தப்பட்ட கணவன்கள் சிந்திக்க வேண்டும். தமது மனைவியை எந்தவொரு வகையில், இம்சித்தாலும், தமக்கு விளையும் இறை முனிவுகள் தண்டனையிலிருந்து எந்த ஆணும் தப்பிக்கவியலாது.

நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் சமுதாயத்துக்கு அவர்கள் வழங்கிய ஆயிரக்கணக்கான பிசங்க நிகழ்ச்சிகளில் ஹிஜ்ரீ 9-ஆம் ஆண்டு அவர்கள் நிகழ்த்திய அரஃபாத் பிரசங்கம் வரலாற்று சிறப்பு கொண்டதாகும். இக்காலம் இஸ்லாம் முழுமை பெற்றிருந்த காலமாகும். பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் இறையோனைக் காணச்செல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருந்த காலமாகும். லுட்சக்கணக்கான சஹாபாக்கள் குழுமியிருந்த அந்த சபையில் அவர்களின் பெரும்பகுதி பேச்சு பெண்ணினத்துக்கே பெருமை சேர்ப்பதாகவும், அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் அமைந்தது.

‘மக்களே! பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாக நடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக் காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்க நீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம்.தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள்மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள்! முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிக்க வேண்டும்.’ (ஆதாரம்-புகாரி)

‘உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியிடம் சிறந்தவராகும்! நான் எமது மனைவியரிடம் நல்லவனாக இருக்கிறேன். என்ற நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிக்கிணங்க- ஒவ்வொரு ஆண் மகனும் தனது துணைவியின் உரிமைகளையும், அந்தஸ்துகளையும் காப்பாற்றுவது புனித கடமையாகும்.

நன்றி:-மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி

பாலைவன வாழ்க்கை – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்.

ஏப்ரல் 22, 2010 1 மறுமொழி

பாலையான வாழ்க்கையைப்
பசுஞ்சோலையாய் ஆக்கவே
பாலைவன நாட்டுக்கே
பறந்து வந்த பறவைகள் நாங்கள்…

இச்சையை மறந்தோம்;
இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;
பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;
பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்…

இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;
இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;
“பொருளிலார்க்கு இவ்வுலகில்லை”

பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;

“இல்லானை இல்லாலும் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்; அவன்
சொல் செல்லாமல் போய்விடும்” என்றாள்
ஔவ்வையார் அன்றே……

மூதாட்டியின் மூதுரைக்கும்
முழுமையான விரிவுரை நாங்களே…
பாதாளம் வரை பாயும் பணமே

பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம்.

செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் படைப்புகளில் சில

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்

மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில் – மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர். அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டை இவ்வாக்கத்தினூடாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘தன் மனைவிக்கு யார் நல்லவராக இருக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியருக்குச் சிறந்தவனாக நடந்துகொள்கின்றேன்’ என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (இப்னுமாஜா, தாரமி, பைஹகீ)

எனவே, ஒருவர் நல்லவர் எனச் சாட்சி பகர வேண்டுமென்றால் அவர் அவரது மனைவியிடம் நல்லவர் என்ற பெயர் எடுத்திருக்க வேண்டும்.

‘அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக்கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.’ (ல் குர்ஆன்4:19)

மேற்படி வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு பணிக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூடத் தமது இறுதி ஹஜ் உரையில்; ‘பெண்கள் விடயத்தில் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்!’ என உபதேசித்துள்ளார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

அலட்டிக்கொள்ளக் கூடாது:

பெண்களிடம் சில நாணல்-கோணல்கள் இருக்கும். அவற்றை அலட்டிக்கொள்ளக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பெண்கள் வளைந்த எலும்புகளால் படைக்கப்பட்டவர்கள். அவர்களை ஒரேயடியாக நிமிர்த்த முயன்றால் முறித்து விடுவீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நிறைகண்டு நிம்மதி பெறுங்கள்!

மனைவியிடம் குறை தேடாமல் நிறைகண்டு நிம்மதி பெறவேண்டும்.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘முஃமினான் ஆண் தனது முஃமினான மனைவியை விட்டும் பிரிந்து விடவேண்டாம்! அவளிடத்தில் ஒரு விடயத்தில் குறைகண்டால் அவளிடத்தில் காணப்படும் நல்ல விடயத்தை நினைத்துத் திருப்தி கொள்ளுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (சுனனுல் குப்ரா)

தண்டிக்கும் அனுமதி:

நன்மை செய்பவர்களுக்கு நற்கூலியும், தவறு செய்பவர்களுக்குத் தண்டனையும் வழங்குவது அல்லாஹ்வின் வழிமுறையாகும். இந்த அடிப்படையில் மனைவியின் நற்பண்புகளைப் பாராட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கு முற்பட்டு, இறுதிக் கட்டமாக தண்டிக்க அனுமதி உள்ளது. இந்த அனுமதி அளவோடும், நிதானமாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் பயன்படுத்துவதற்குரியதாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

தண்டனை என்பது மருந்து போன்றதாகும். நோய் தீர்ந்த பின்னர் மருந்து தேவைப்படாது. எனவே உரிய பிரச்சினைக்கு மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்.

அடுத்தது, ‘தண்டித்தல்’ என்பது திருத்துவதற்கான ஆரம்ப விதிமுறையல்ல. திருத்துவதற்கான இறுதி வழிமுறை என்பதும் கவனிக்கத்தக்கதாகும். மனைவி விடயத்தில் தவறான போக்கைக் காணும் போது பண்பாக எடுத்துச் சொல்ல வேண்டும். மாற்றம் இல்லையென்றால் படுக்கையை விட்டும் பிரிந்து உளவியல் ரீதியில் அவளிடம் மாற்றத்தைக் கொண்டுவர முயலவேண்டும். அறிவு ரீதியான முயற்சியும், உளவியல் ரீதியான வழிமுறையும் பயனளிக்காத போது இறுதிக்கட்டமாக உடல் ரீதியான அணுகுமுறையை இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இது குறித்துக் குர்ஆன் கூறும் போது; பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதியுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறுசெய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தா விட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களுக்கு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனும், பெரியவனுமாக இருக்கின்றான்.(ல் குர்ஆன்4:34)

‘அவர்களுக்குக் காயம் வராத முறையில் கடுமை இல்லாத விதத்தில் மென்மையாக அடியுங்கள்!’ என நபி(ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

‘முறையற்ற தண்டித்தல்’ குடும்பத்தில் குழப்பத்தை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறைக்காது. மனைவியின் மனதில் கணவன் மீது வெறுப்பை விதைக்கும். இதனால் சில பெண்கள் கணவனைப் பழிவாங்க நினைத்துக் கொலை கூடச் செய்கின்றனர். சிலர் தன் மீது அன்பில்லாதவனைத் வஞ்சம் தீர்ப்பதற்காக கள்ளக் காதலர்களை நாடுகின்றனர். இதற்கும் துணியாத சில மனைவியர் எதற்கெடுத்தாலும் முரண்பட்டுக் கணவனின் நிம்மதியையும், கண்ணியத்தையும் குறைக்க முற்படுகின்றனர்.

மற்றும் சிலர் தற்கொலை செய்து தாம் பிரச்சினையிலிருந்து தப்பி விடுகின்ற அதேவேளை கணவனுக்குக் கேவலத்தையும், தண்டனையையும் கொடுக்க முற்படுகின்றனர்.

எனவே, பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் வழி பிரச்சினையைத் தீர்ப்பதாக அல்லது குறைப்பதாக இருக்க வேண்டுமே தவிர குழப்பத்தைக் கூட்டுவதாக இருக்கக் கூடாது.

ஷரீஆவின் வரையறைகள்:

அபூதுபாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; பெண்கள் என்ன செய்தாலும் அவர்களைத் தண்டிக்கக் கூடாது என ஆரம்பத்தில் தடை விதித்திருந்தார்கள். அதனால் பெண்கள் ஆண்களை மிகைக்கும் வண்ணம் நடந்து கொண்டார்கள். அப்போது ஆண்கள் மனைவியருக்கு அடிக்கும் அனுமதியைக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அனுமதியளித்தார்கள். அன்று இரவே பல மனைவியர்கள் தமது கணவர்களினால் தாக்கப்பட்டார்கள். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அவ்வாறு தாக்கியவர்களைக் கண்டித்ததுடன் அவர்கள் (தாக்கியவர்கள்) நல்லவர்கள் அல்ல என்றும் கூறினார்கள். (அல்முஸ்தத்ரக்)

எனவே, மனைவியருக்கு அடிக்கும் அதிகாரம் என்பது விருப்பத்திற்குரிய ஒன்று அல்ல. ‘தவிர்த்தால் நல்லது; தவிர்க்க முடியாது’ என்ற அளவுக்குத் தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், சில வரையறைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படி மனைவியைத் தண்டிப்பது என்றால் பின்வரும் நிபந்தனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்:

(1) முகத்தில் அறையக் கூடாது:

முகம் கண்ணியத்திற்குரிய உறுப்பு. அதன் மூலந்தான் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யப்படுகின்றது. ‘முகத்தில் அறைய வேண்டாம்!’ என நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அபூதாவூத்)

(2) பெண்மையின் தனிப்பட்ட உறுப்புக்களில் தாக்கக் கூடாது:

சில வக்கிரம் கொண்ட ஆண்கள் பெண்களின் மார்பகங்களில் சிகரட்டால் சுடுவது, பிறப்பு உறுப்பில் தாக்குவது போன்ற கொடூரங்களைச் செய்து வருகின்றனர். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றது.

(3) கடுமையான அடியாக இருக்கக் கூடாது:

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட (4:34) வசனமும், ஸஹீஹ் முஸ்லிமின் ஹதீஸும் இதைத்தான் உணர்த்துகின்றன. இது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது, ‘பாதிப்பு ஏற்படுத்தாத அடியாக இருக்க வேண்டும்!’ எனக் குறிப்பிடுகின்றார்கள்.

இஸ்லாமியச் சட்டத்துறை அறிஞர்கள் இது பற்றிக் கூறும் போது, ‘அடி ஒரு உறுப்பை முறிப்பதாகவோ, அதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது!’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த வகையில் மனைவியின் கண்கள் சிவக்கும் அளவுக்கோ, உதடுகள் வெடிக்கும் விதத்திலோ, பல்லு உடையும் விதத்திலோ, தோல் வீங்கும் விதத்திலோ அடிப்பவர்கள் தெளிவாக இஸ்லாத்திற்கு முரண்படுகின்றனர். இவர்கள் தமது மனைவியைத் திருத்த முன்னர் தம்மைத் திருத்திக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

(4) பிறர் முன்னிலையில் தாக்கக் கூடாது:

மனைவி மீது பிறர் முன்னிலையில் வெறுப்பை வெளிப்படுத்துவதைக் கூட இஸ்லாம் விரும்பவில்லை. ‘வீட்டைத் தவிர வேறு இடத்தில் அவள் மீது வெறுப்பை வெளிப்படுத்தாதே!’ நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சில ஆண்கள் மனைவியின் குடும்பத்தினர் முன்னிலையில் அவளைத் தாக்கி அதன் மூலம் முழுக் குடும்பத்தையும் அவமானத்துக்கும், அவஸ்தைக்கும் உள்ளாக்க விரும்புகின்றனர். இது தவறாகும்.

(5) தவறுக்குத் தக்கதாக இருக்க வேண்டும்:

தவறுக்காகத் தண்டிக்கும் போது அந்தத் தவறுக்குத் தக்கவாறே தண்டிக்க வேண்டும். சின்னக் குற்றம் செய்தவளுக்குப் பெரிய தண்டனையளித்தால் அது குற்றவாளியைத் திருத்தாது. அவளைக் குமுறச் செய்து மீண்டும் வெறியுடன் தவறு செய்யத் தூண்டும்.

(போர் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதத்திற்குப் புனித மாதமே நிகராகும். புனிதப்படுத்தப்பட்டவை (அவற்றின் புனிதம் மீறப்பட்டால் அவை)களுக்கும் பழிவாங்குதல் உண்டு! ஆகவே, எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறினால் அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்று நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்! மேலும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்! (ல் குர்ஆன் 2:194)

நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமையுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும். (ல் குர்ஆன் 16:126)

மேற்படி வசனம், எமது எதிரி எம்மைத் தாக்கினால் கூட அவனைப் பதிலுக்குத் தாக்கும் போது வரம்பு மீறி நடக்கக் கூடாது. அவன் தாக்கிய அளவே பதில் தாக்குதல் கொடுக்க வேண்டும் என எமக்குக் கட்டளை இடுகின்றது. எதிரி விடயத்திலேயே இவ்வளவு நேர்மையை இஸ்லாம் வலியுறுத்தும் போது எமது வாழ்க்கைத் துணைவியின் தவறுக்காகக் கண்-மண் தெரியாது கொடூரமாக நடந்துகொள்வதை இஸ்லாம் எப்படி அங்கீகரிக்கும்!?

மனைவியைத் தண்டிக்கும் கணவன் தனது நோக்கம் மனைவியை சீர்திருத்துவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பழிதீர்ப்பதோ, வஞ்சம் தீர்ப்பதோ தனது இலக்கு அல்ல என்பதில் அவன் அவதானமாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாகத் தனது கோபத்தை அவள் மீது கொட்டித் தீர்க்க முடியாது. சில கணவர்கள் தன்னை மறந்து மனைவியைத் தாக்குகின்றனர். அப்போது அவர்களது புலன்கள் அனைத்தும் மரணித்து விடுகின்றன.

அவன் அடிக்கின்றான்; தனது கை அவளது உடலில் எந்த இடத்தில் விழுகின்றது என்பது அவனுக்குத் தெரியாது. உதைகின்றான்; தனது கால் எங்கே படுகின்றது என்பது அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. திட்டுகின்றான்; தனது வாய் பேசியது என்ன என்பது அவனுக்குத் தெரியாது. அடிப்பதை நிறுத்துமாறு அவள் கெஞ்சுகின்றாள்; அந்த வார்த்தைகள் அவனது செவிகளில் விழுவதில்லை. அவள் பாதுகாப்புக் கோறுகிறாள்; இவன் பாதுகாப்பளிப்பதில்லை. அவள் அழுகிறாள்; கத்துகிறாள்; இவனது உள்ளம் இரங்குவதில்லை. சிலபோது அவளது ஆடைகள் களைந்து, கிழிந்து, உடல் இரத்தம் வழிந்தால் கூட இவனது கண்களுக்கு அவை புலப்படுவதில்லை.

இந்த நிலையில் இல்லறத்தைத் தொடர்பவன் தனது மனைவியைத் திருத்தி விட முடியாது. எதற்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது நல்ல எதிர்வினையை உண்டுபண்ணாது.

எனவேதான் மனைவியைத் தண்டிக்க அனுமதிக்கும் வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது; ‘அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால், அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான்’ (ல் குர்ஆன் 3:34) என்று முடிக்கின்றான். தான் தனது தவறுக்கு வருந்துவதாகவோ அல்லது தான் தனது தவறுக்குக் கட்டுப்படுவதாகவோ வார்த்தை மூலமோ, செயல் மூலமோ மனைவி உணர்த்தினால் அதன் பின் அவளுக்கு அடிப்பது தடையாகும்.

இது குறித்து இமாம் இப்னு கதீர் அவர்கள் கூறும் போது; ‘அல்லாஹ் அனுமதியளித்த விடயத்தில் மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவளுக்கு அடிக்கவோ, அவளை வெறுக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை. அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கின்றான் என இந்த வசனத்தை அல்லாஹ் முடித்திருப்பது, காரணமின்றி பெண்கள் விடயத்தில் அத்துமீறும் ஆண்களை அச்சுறுத்துவதற்காகவும், ஆணாதிக்கச் சிந்தனையில் அவர்கள் மீது அத்துமீறும் காஃபிர்களை விட பெரியவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்பதை இறுதி வார்த்தை உணர்த்துகின்றது.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை:

இஸ்லாம் மனைவியரைத் தண்டிக்க அனுமதியளித்துள்ளது. இருப்பினும் அதைப் பயன்படுத்தாதிருப்பதே சிறந்தது என நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இதற்கான அழகான முன்மாதிரியை நாம் நபி(ஸல்) அவர்களின் குடும்ப வாழ்வில் காணலாம். ‘போர்க் களத்தைத் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் எவரையும் அடித்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரையோ, தமது பணியாளையோ எப்போதும் அடித்ததில்லை’ (முஸ்லிம்) என்ற நபிமொழி நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரை அடித்ததில்லை என்று கூறுவதால் நாமும் அந்த வழிமுறையைப் பின்பற்ற முனைய வேண்டும்.

தான் அடிக்காத அதேவேளை அடிப்பவர்களைக் கண்டித்து முள்ளார்கள்.

‘உங்களில் ஒருவர் தனது மனைவியை அடிமையை அடிப்பது போன்று அடித்து விட்டுப் பின்னர் இரவில் அவளுடன் உடலுறவில் ஈடுபடுகின்றீர்களே!’ எனக் கூறி நபி(ஸல்) கண்டித்தார்கள். (புகாரி)

ஃபாதிமா பின்து கைஸ் என்ற பெண்மனி தன்னை இருவர் பெண் பேசுவதாகவும், அவர்களில் எவரை மணப்பது என்பது குறித்தும் நபி(ஸல்) அவர்களுடன் ஆலோசனை செய்த போது, ‘அபூஜஹ்ம் மனைவிக்கு அடிக்கக்கூடியவர்!’ என்று காரணம் கூறி மாற்று ஆலோசனை கூறினார்கள்.

‘உங்களில் மார்க்கமும், நல்ல பண்பும் உள்ளவர்கள் பெண் கேட்டு வந்தால் அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுங்கள்!’ (திர்மிதி) எனக் கூறிய நபி(ஸல்) அவர்கள் ‘பெண்களை அடிக்கும் இயல்பு உள்ளவர் பெண் கேட்ட போது மாற்று அபிப்பிராயம் கூறியுள்ளார்கள் என்றால் பெண்களை அடிப்பது வரவேற்கத்தக்க அம்சமோ, பண்போ அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

காரணங்களைக் கண்டறிவோம்:

கணவன், மனைவியை அடிப்பது அனுமதிக்கப்பட்ட அதேவேளை தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். இது இல்லற வாழ்வின் இனிமையை ஒழித்து விடும். குடும்பத்தின் அமைதியைக் குலைத்து விடும். குழந்தைகளின் உள்ளங்களில் ரணத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். பிள்ளைகள் தந்தையை வில்லனாகக் காண்பார்கள். எனவே இதைத் தவிர்க்க வேண்டும். இதைத் தவிர்ப்பதாக இருந்தால் இந்தப் பிரச்சினை உருவாகக் காரணமாக இருக்கும் குறைகளைக் களைய வேண்டும்.
மனைவி தரப்பில்:

மனைவி தரப்பில் உள்ள சில குறைகள் அவள் தாக்கப்படக் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, அவள் முதலில் தனது குறைகளை அறிந்து அவற்றைக் களைய முனைய வேண்டும்.

(1) கணவனுக்கு மாறு செய்தல், கட்டுப்பட மறுத்தல், கடமைகளைச் செய்யாதிருத்தல்:

இது மனைவி தரப்பில் ஏற்படும் தவறாகும். இந்தத் தவறை மனைவி களைய வேண்டும். கணவனுக்குக் கட்டுப்படுவதைப் பெண் அடிமைத்துவமாகப் பார்க்காமல் அல்லாஹ்வுக்காகச் செய்யும் இபாதத்தாக அவள் பார்க்க வேண்டும்.

தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பியதனால் இரண்டாம் கணவருக்குக் கட்டுப்படாமல் அவர் ஆண்மை அற்றவர் எனப் பொய் அவதூறு கூறிய பெண்மணிக்கு ஒரு கணவர் அடித்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அந்தப் பெண்ணைத் தண்டித்தவரை நபியவர்கள் கண்டிக்கவில்லை என்பதை புகாரியின் (5825) நீண்ட ஹதீஸ் கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(2) கணவன் மீது சந்தேகங்கொள்ளல்:

கணவனுக்கு ஏனைய பெண்களுடன் தொடர்பிருப்பதாக எண்ணுதல் அல்லது கதைத்தல் அல்லது அது குறித்துக் கணவனுடன் தர்க்கித்தல் என்பவை கணவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணும் செயல்களாகும். அத்தோடு அது கணவனைத் தவறான பாதைக்கும் இட்டுச் செல்லும். கணவன் குறித்து பிறர் தவறாகப் பேசினாலும் ‘அவர் அப்படிச் செய்ய மாட்டார். அவர் என்னுடன் அன்பாக உள்ளார்!’ என்று மறுக்க வேண்டும். இவ்வாறு நடக்கும் போது ‘தன் மனைவிக்கு நாணயமாக நடக்க வேண்டும். அவள் என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்படும். வெறுமனே சந்தேகத்தைக் கிளப்பினால் ‘நான் செய்வேன். உன்னால் தடுக்க முடிந்தால் தடு பார்க்கலாம்’ என்ற எண்ணம் ஏற்பட்டு கணவன் தவறக் கூடும். சிலபோது இந்தப் பிரச்சினையால் மன உளைச்சலுக்குள்ளாகும் கணவர்கள் விபச்சார விடுதிகளையும், மதுபானச் சாலைகளையும் நாடலாம். எனவே, கணவன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தக் கூடாது. சிலபோது கணவனுடன் அந்நியப் பெண்கள் பேசும் போது கணவன் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும், பெண்களிடம் இருக்கும் இயல்பான பொறாமையினாலும் சந்தேகம் வருவதுண்டு. அப்படி இருந்தால் கூட அதைக் கணவனிடம் அவனது ஆண்மைக்கோ, நாணயத்திற்கோ பங்கம் ஏற்படாவண்ணம் முறையாகப் பேசித் தீர்த்துக்கொள்ள முனைய வேண்டும்.

(3) இல்லறத்துக்கு இணங்காதிருத்தல்:

பெண்களுக்கு ரோசம் வரும் போது கணவனுக்கு இணங்கிப் போகாத போக்கைக் கடைபிடிக்கின்றனர். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. கணவன் தாம்பத்திய உறவுக்கு அழைத்து மனைவி காரணமில்லாமல் மறுத்தால் விடியும் வரை அவளை மலக்குகள் சபிக்கின்றனர் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே மலக்குகளின் சாபத்தை அஞ்சி, பெண்கள் இந்தத் தவறைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு பெண்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்கெல்லாம் மனைவியைத் தாக்கித் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்வதுடன் தவறான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் சிலர் தன்னினச் சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர்.

(4) கணவனின் அனுமதி இன்றி வீட்டை விட்டும் வெளியேறுதல்:

மனைவி வீட்டை விட்டு வெளியேறுவதென்றால் கணவனின் அனுமதியைப் பெற வேண்டும். அருகில் உள்ள தனது தாய்-உறவினர் வீட்டுக்குச் செல்வதானால் கூட கணவனிடம் கூறாது செல்லக் கூடாது. குறிப்பாகக் கணவன் வீட்டுக்கு வரும் போது அவனுக்குத் தெரியாமல் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது குடும்ப வன்முறைகள் உருவாகக் காரணமாக அமைகின்றது.

(5) கணவன் இல்லாத போது கணவன் வெறுக்கக் கூடியவர்களுக்கு வீட்டில் இடமளித்தல்:

ஆண்களின் சுபாவங்களை ஆண்களே அதிகம் அறிவர். கணவன் சில ஆண்களைக் குறிப்பிட்டு, ‘அவனுடன் பேச வேண்டாம்! அவன் நான் இல்லாத போது வந்தால் உள்ளே எடுக்க வேண்டாம்!’ என்று கூறியிருந்தால், அதன்படி செயல்படுவது மனைவிக்குக் கடமையாகும். இதற்கு மாறுசெய்யும் போது மனைவி கணவனால் தண்டிக்கப்படும் நிலைக்காளாகின்றான்.

கணவன் தரப்பில் ஏற்படும் தவறுகள்:

பெண்கள் தாக்கப்படுவதற்குப் பெண்களது தவறான போக்குகள் காரணமாக அமைவது போன்றே சில கணவர்களது ஆளுமையற்ற போக்கும் காரணமாக அமைவதுண்டு. அவற்றில் சிலவற்றைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.

(1) ஆண்களின் அளவுக்கு மீறிய ரோச குணம்:

சில ஆண்கள் அதிக ரோசம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஷரீஆ சட்டப்படி மஹ்ரமில்லாத ஆண்களுடன் சகஜமாக உரையாடுவது, சாதாரண ஆடையுடன் அவர்கள் முன்னால் வருவது போன்றவற்றை அவர்கள் தடுக்கும் போது மனைவி அதற்கு உடன்பட வேண்டும். தனது கணவன் தன் மீது சந்தேகம் கொள்கிறான் என்ற தொணியில் பெண்கள் எதிர்த்துப் பேசும் போது சண்டையாக அது மாறுகின்றது. சிலபோது சில ஆண்கள் குடும்ப உறுப்பினர்கள், மஹ்ரமான ஆண்களுடன் உரையாடுவதைக் கூடத் தடுப்பதுண்டு. இது தவறாகும். இந்தத் தவறான போக்கிற்கு மனைவி உடன்படாத போது கண்டிக்கின்றான்.

(2) தாயையும், தாரத்தையும் மதிப்பிடும் மதிநுட்பம்:

மனைவியின் உரிமைகளையும், தாயிக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஒருமுகப்படுத்திச் செயல்படும் திறன் கணவனிடம் இல்லாமையும் மனைவி தண்டிக்கப்படக் காரணமாக அமைகின்றது. சில தாய்மார்கள் மருமகள் மீது கொண்ட பொறாமையினால் மூட்டி விடுபவர்களாக இருப்பார்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் விதவையாக வேண்டும் என நினைக்கும் தாய்மாரும் உள்ளனர். தான் பெற்றுக் கஷ்டப்பட்டு வளர்த்த மகனுக்கு இவள் முழுமையாக உரிமை கொள்கின்றாளே! என்ற எண்ணத்தால் சில தாய்மார் இவ்வாறு நடந்துகொள்வதுண்டு. சில ஆண்கள் தாயை முழுமையாக நம்பி மனைவியைத் தண்டிக்கின்றனர். சிலர் மனைவியின் வாக்கை வேத வாக்காக ஏற்று பெற்றோரை நோவினை செய்கின்றனர். இரண்டும் தவறானவைகளாகும். இந்தத் தவறான போக்கால் பெற்றோரை நோவினை செய்தல் அல்லது மனைவியின் உரிமையை மறுத்தல் என்ற இரண்டு ஹறாம்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது சிலபோது இரண்டு ஹறாம்களிலும் சில ஆண்கள் வீழ்ந்து விடுகின்றனர். தாயையும், மனைவியையும் சரியாக மதிப்பிடும் திறனற்ற போக்கு மனைவி கண்டிக்கப்படக் காரணமாக இருப்பதை இது உறுதி செய்கின்றது.

(3) தவறான பிள்ளைப் பாசம்:

ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தந்தைக்கே அதிகம் அஞ்சுவர். ஆனால் அண்மைக்கால நிகழ்வுகள் மாறி, குழந்தைகளுக்கு அதிகம் அடிப்பவர்களாகத் தாய்மார் மாறியுள்ளனர். குழந்தைகளுடன் அதிக நேரத்தைக் கழிப்பதனாலும், குழந்தைகளின் குறும்புத்தனங்கள் அதிகரித்து விட்டதனாலும் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். தந்தையர் குழந்தைகளிடம் குறைந்த நேரத்தைச் செலவிடுவதாலும், முற்காலத்தில் தமது தந்தையர் தம்மை தாறு-மாறாகத் தாக்கிய போது தாம் மனமுடைந்தது போன்று தனது பிள்ளைகள் மனமுடையக் கூடாது என எண்ணுவதாலும் தந்தையர் பிள்ளைகளைத் தண்டிப்பது குறைந்திருக்கலாம்.

எனினும், தாய் குழந்தைகளுக்கு அடிக்கும் போது குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு அடிக்கும் போது கணவன் கோபப்பட்டு மனைவியைத் தண்டிக்க முற்படுகின்றான். இது தவறாகும்.

இதன் மூலம் தனது தாய் தவறு செய்கிறாள் என்ற எண்ணமும், தாய்க்கு அறிவும் அன்பும் இல்லை என்ற உணர்வும் குழந்தைகள் மனதில் உண்டாகும். மனைவி தவறாகத் தண்டித்தால் கூட பிள்ளைகளின் முன்னால் அவளைக் கண்டிக்கவோ, அதை விமர்சிக்கவோ கூடாது.

பெண் மாதத் தீட்டுடன் இருக்கும் போது அதிக எரிச்சலடைகின்றாள். அந்த எரிச்சலோ அல்லது மன அழுத்தங்களோ கூட அவளது நடத்தைக்குக் காரணமாக இருக்கலாம். இதையும் ஆண் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, குழந்தைகளை நெறிப்படுத்துவதில் மனைவிக்கிருக்கும் உரிமையையும், கடமையையும் இது மறுப்பதாக அமைந்து விடும். அத்துடன் கூட்டமாகக் குதூகலாமாக இருக்க வேண்டிய குடும்பம் தாயைத் தனிமையாகவும், பிள்ளைகள் தந்தையைத் தனி அணியாகவும் ஆக்கி விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளைத் தன்பால் ஈர்க்க ஒரு பெண் தவறான வழிமுறைகளைக் கைக்கொள்ளவும் தந்தை பற்றிய தப்பெண்ணத்தைத் குழந்தைகளில் சிலரிடமாவது ஏற்படுத்தவும் முனையலாம்.

(4) கணவனின் கேவலமான வார்த்தைகள்:

சில ஆண்கள் பெண்களைச் சீண்டுவதற்காகக் கேலி செய்கின்றனர். கேலி முற்றிச் சண்டையாக மாறுகின்றது. சிலரிடம் பெண்களைப் பற்றிய இழிவான எண்ணங்கள் உண்டு.

பெண் என்பவள் செருப்புப் போன்றவள்; தேவைக்கு அணிந்து விட்டு, தேவையற்ற போது கழற்றி விட வேண்டும் என்றெல்லாம் கூறுவர்.

சிலர் அவளது அழகு, ஆடை, உணவு பற்றியெல்லாம் கேலியாகப் பேசி அவளைச் சீண்டி விட்டு, அவள் ஏதும் பேசி விட்டால் அடிக்க முற்படுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இந்தத் தவறுகளைக் களைந்து, வாழ்க்கை வாழ்வதற்கே! என்று எண்ணி, இஸ்லாமிய விதிமுறைகளைப் பேணி இல்லறத்தை நல்லறமாகவும், இனிமையாகவும் மாற்றிக்கொள்ள கணவன்-மனைவி இருவரும் முனைய வேண்டும்.

நன்றி: இஸ்லாம் கல்வி

பிரிவுகள்:இல் அறம், இஸ்லாம், மனைவியைத் தண்டித்தல் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்


குறிப்பிட்ட சில பொருட்களையே அடிக்கடி சமையல்ல சேர்த்தாலும், சலிப்பு வந்துடாதபடிக்கு அதை வேற வேற பதார்த்தமா மாத்தி வித்தியாசம் காட்டறது கிராமத்து சமையலோட சிறப்பம்சம். மரவள்ளிக் கிழங்கு, தட்டைப் பயிறு, கருப்பட்டினு வழக்கமான கிராமத்து ஐட்டங்களுக்கு புது சுவை தர்றதுதான் இந்த குறிப்புகள்…

மரவள்ளிக் கிழங்கு புட்டு

வழக்கமா மாவு வகைகள்லதான் புட்டுப் பண்ணுவோம். ஆனா, கிழங்குகளை வெச்சும் கிராமங்கள்ல புட்டு அவிக்கறதுண்டு. அந்த வகைல வர்ற இந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு சாப்பிட அத்தனை ருசியா இருக்கும்!

அரைக் கிலோ மரவள்ளிக் கிழங்கை அரை மணி நேரம் தண்ணீர்ல ஊற வெச்சு, அப்புறமா மண் போக கழுவிட்டு மேல இருக்கற பட்டைய உரிச்சுடுங்க. கிழங்கை சன்னமாத் துருவி, இட்லிப் பானைல பரவலாத் தூவி, பதினைந்து நிமிஷம் வேக வைங்க. வெந்ததும், சூட்டோட இருக்கறப்பவே ஒண்ணுலேர்ந்து ஒண்ணரைக் கப் அளவுக்கு சர்க்கரை, ஒரு டீஸ்பூன் ஏலத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து பிசறுங்க.

அவ்வளவுதான் வேலை. புட்டு தயார்! இதை அப்படியேயும் சாப்பிடலாம். சின்னச் சின்னதா உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம்.

கிழங்குத் துருவலை ஒரு டிரேல கொட்டி சமப்படுத்தி, அப்புறமா ஆவியில வேகவெச்சு எடுத்து, விரும்பின வடிவத்துல துண்டுகளா போட்டு, அதுமேல முந்திரி துண்டுகளை பதிச்சுக் கொடுத்தா… குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

——————————————————————————————————————

தட்டைப் பயிறு அடை
தட்டைப் பயிறு அடையும் கடலைப் புண்ணாக்கு சட்னியும்

ஒரு கப் அளவுக்கு தட்டைப் பயிறை எடுத்து கல், மண் போகச் சுத்தப்படுத்தி, தண்ணீர்ல ஊற வைங்க. குறைஞ்சது ஆறு மணி நேரமாவது ஊறணும். அப்புறமா தண்ணிய வடிகட்டிட்டுப் பயிறை மட்டும் எடுத்து அதோட, காய்ஞ்ச மிளகாய் ரெண்டு, அரை டீஸ்பூன் சீரகம் இல்லேனா சோம்பு, தேவையான உப்பு சேர்த்து கரகரப்பா அரைச்செடுங்க.

பத்து சின்ன வெங்காயம், ரெண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை கொஞ்சம்… இதை எல்லாத்தையும் பொடியா நறுக்கி, அரை கப் தேங்காய்த் துருவலையும் சேர்த்து மாவோட கலக்குங்க.

தோசைக்கல்லை காயவெச்சு, எண்ணெய் தடவி அதுல மாவை கனமா, சின்னச்சின்ன அடைகளா ஊத்துங்க. சுத்தியும் எண்ணெய் ஊத்தி வேக வைங்க. வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபடியும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேகவெச்சு எடுங்க.

பூண்டு, பெருங்காயத் தூளை மாவுல கலந்துக்கறது நல்லது. ஏன்னா தட்டைப் பயிறு வாயு கோளாறை உண்டாக்கும். பூண்டு, பெருங்காயத்தை சேர்க்கறதால அந்தத் தொல்லை குறையும்.

இந்த தட்டை பயிறு அடையை வேர்க் கடலை புண்ணாக்கு சட்னியோட சாப்பிட்டா பிரமாதமா இருக்கும்.

வேர்க்கடலை புண்ணாக்கு சட்னியை செய்யறது எப்படினும் பார்ப்போம்…

ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதுல ஆறு மிளகாய் வற்றல், ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து, கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள் இதையெல்லாம் ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணாப் போட்டு வறுத்தெடுங்க. அப்புறமா அதுல அரைக் கப் வேர்க் கடலைப் புண்ணாக்கு, ரெண்டு பல் பூண்டு, ரெண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் இதையெல்லாம் வறுத்து, கடைசியா கொஞ்சம் கறிவேப்பிலை, மல்லித்தழை, தேவையான உப்பு, சின்ன நெல்லிக் காய் அளவுக்கு புளி இதையெல்லாம் சேர்த்து வதக்கி இறக்குங்க. ஆறினதும் நைஸா அரைச்செடுத்தா… அதுதான் வேர்க்கடலை புண்ணாக்கு சட்னி!

____________________________________________________________

கருப்பட்டி பணியாரம்

ஒரு கப் பச்சரிசியை தண்ணில அரை மணி நேரம் ஊற வெச்சு, வடிகட்டி பொடிச்சுக் குங்க. ஒரு கப் கருப் பட்டியை பொடிச்சு, கால் கப் தண்ணீர் ஊத்தி, காய்ச்சுங்க. கருப்பட்டி கரைஞ்சதும் இறக்கி, வடிகட்டி, மறுபடியும் காய்ச்சுங்க. அஞ்சு நிமிஷம் கொதிச்சதும் இறக்கி ஆற வைங்க.

இந்த கருப்பட்டிக் கரைசலை பச்சரிசி மாவுல கொஞ்சம் கொஞ்சமா ஊத்திக் கலக்குங்க. தோசை மாவு பதத்துக்கு வந்துடும்.

பணியாரத்தை பொரிச்செடுக்கிற அளவுக்கு எண்ணெயை வடை சட்டில ஊத்தி, அதுல ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய் யையும் ஊத்தி மிதமான தீயில காயவைங்க. காய்ஞ்சதும் அதுல மாவுக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமா ஊத்துங்க. மாவு வெந்து, மேல வந்ததும் திருப்பிப் போட்டு வேகவெச்செடுங்க.

இந்த பணியாரத்தை ரெண்டு நாள் வரைக்கும் வெச்சு சாப்பிடலாம். கருப்பட்டி மணம் கமகமக்க, அவ்வளவு ருசியா இருக்கும் இந்த பணியாரம்.

___________________________________________________________________

உளுந்து பலகாரம்

உளுந்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். தேங்காய்ப்பாலில் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் கலந்து வைத்து, பொரித்த உளுந்து உருண்டைகளைப் போட்டு சிறிது நேரம் அதில் ஊற வைத்து, பிறகு சாப்பிட்டுப் பாருங்கள். பிரமாதமாக இருக்கும்!

……………………………………………………………………

சந்திப்பு: கீர்த்தனா

படங்கள்: பொன். காசிராஜன்

——————————————————————————-

நன்றி:-ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

#############################################

தாயின் மணிக்கொடி பாரீர்!


லகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், அதற்கே உரிய தேசியக்கொடி உண்டு.

பண்டைக்காலக்கொடிகள்

ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் கொடி, நட்சத்திரங்களும், பட்டைகளும் உள்ள அமெரிக்கக் கொடி, பிறையும் நட்சத்திரமும் கொண்ட இஸ்லாமியர்களின் கொடி ஆகியவை பழம்பெருமை மிக்கவை.

கொடி என்பது…

தேசியக்கொடி என்பதற்கு ஆங்கிலப்பதம் National Flag ஆகும். ஃபிளாக் (Flag) என்பது ஜெர்மானிய மொழியிலிருந்து வந்த சொல். ‘காற்றில் மிதக்கக்கூடியது’ என அதற்கு அர்த்தம்.

கொடி ஏற்பட காரணம்

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், இந்திய மக்களைப் பார்த்து ‘உங்களைக்கென்று ஒரு கொடி உண்டா?’ என்று கேலி பேசினார்கள். அப்போது சத்ரபதி சிவாஜி, ‘பாக்வஜண்டா’ என்ற கொடியை அமைத்து, மக்களிடம் எழுச்சி உண்டாக்கினார். 1831\ல் ராஜா ராம்மோகன் ராய், பாரத தேசத்துக்கு என்று ஒரு கொடி வேண்டும் என்கிற எண்ணத்துக்கு விதைபோட்டார்.

1857\ல் பகதூர்ஷா, சப்பாத்தியும் தாமரை மலரும் பொறித்த கொடியைப் பயன்படுத்தினார். ஜான்சிராணி, அனுமன் சின்னம் பதித்த கொடியைப் பயன்படுத்தினார். 1883\ல் சிரீஸ் சந்திரபோஸ் என்பவர் இந்திய தேசிய சங்கம் ஒன்றை தொடங்கி மக்களைத் திரட்டி கொடியுடன் உலாவர செய்தார். இந்தியருக்கு தேசியமும், தேசியக்கொடியும் இல்லை என வெள்ளையன் கேலி செய்தபோது, தன் சேலையின் முந்தானையை வீராவேசத்துடன் காட்டினார் \ தாய்நாட்டின் மானம் காத்த வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மை. அதில் இருந்த மூவண்ணமே நமது தேசியக் கொடியில் பிரதிபலிக்கிறது.

நம் தேசியக்கொடியின் வளர்ச்சி

1905-ல் சகோதரி நிவேதிதா, சதுரமான சிவப்பு வண்ணம் கொண்ட கொடியில் நான்கு பக்க விளிம்பிலும், 108 ஜோதி விளக்குகளும் நடு மையத்தில் வஜ்ஜிரமும், இடப்புறத்தில் வந்தே என்றும் வலப்புறத்தில் மாதரம் என்றும் அமைந்த ஒரு கொடியை வடிவமைத்தார்.

1906\ல் கல்கத்தா கிரின்பார்க் சதுக்கத்தில் ஒரு கொடி வடிவமைக்கப்பட்டது. மேலே சிவப்பு, அதில் எட்டு தாமரை, நடுவில் உள்ள மஞ்சள் பட்டையில் வந்தே மாதரம், கீழே பச்சைப் பட்டையில் இடப் பக்கத்தில் சூரியன், வலப் பக்கத்தில் நட்சத்திரப்பிறை ஆகியவற்றைக் கொண்டதாக ஏற்றி வைக்கப்பட்டது.

1907\ல் ஸ்ரீமதி காமாவும் நாடு கடத்தப்பட்ட புரட்சியாளர்களும் வடிவமைத்த கொடி, முதல் கொடி போலவே வண்ணங்கள் அமைந்து சிவப்புப் பட்டையில் ஒரு தாமரைப் பூவும் ஏழு நட்சத்திரங்களும் கொண்டதாக இருந்தது.

1917\ல் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், லோகமான்யதிலகரும், ஹோம்ரூல் இயக்கத்தின்போது. ஐந்து சிவப்பு பட்டைகளும், நான்கு பச்சை பட்டைகளும், மாற்றி மாற்றி சேர்த்து, அதில் ஏழு நட்சத்திரங்கள் பொறித்த பிரிட்டிஷ் கொடி மேல்புறம் வலது மூலையிலும், மற்றொரு மூலையில் வெள்ளைநிற இளம் பிறையும், ஒரு நட்சத்திரமும், பொறித்து தயாரித்தார்கள். தொமினியன் அந்தஸ்துக்காக பிரிட்டிஷ் கொடியும் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.

1921\ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டிக்கூட்டம் பெஜவாடாவில் இந்து\ முஸ்லிம் ஒற்றுமையை குறிக்கும் வகையில் வெங்கையா என்பவரை ஒரு கொடி அமைத்து தரவேண்டிக் கேட்டு அமைத்த மூவண்ணக்கொடி காந்தியடிகளால் ஏற்கப்பட்டு, அகமதாபாத்தில் இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் ஏற்றிவைக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கான வெள்ளை மேலே அதற்கு அடுத்து முஸ்லிம்களின் பச்சை கீழே, இந்து வண்ணமாகசிவப்பு வண்ணங்களும் ராட்டையும் (சர்க்கா) அமைந்த கொடியாக அது திகழ்ந்தது.

26.1.1930\ல் ஒரு கொடியை ஏற்றி,அக்கொடிக்கு ‘சுவராஜ்ஜியக்கொடி’ என்று பெயரிட்டனர். 1931\ம் ஆண்டில் கொடிகமிட்டி பரிந்துரையின்படி புதிய தேசியக்கொடி செம்மஞ்சள் நிறத்தில், மேல்பகுதியில் சர்க்காவோடு கூடிய கொடியை காங்கிரஸ் குழு அங்கீகரிக்காமல் விட்டுவிட்டது.

அதே ஆண்டில் மேலே செம்மஞ்சள் நிறம், நடுவில் வெள்ளை, கீழே பச்சை, ஒரு சர்க்கா என்று அமைத்து புதிய கொடி உருவாக்கப் பட்டது. இந்தக் கொடியை காந்தியடிகள் பாராட்டினார்.இந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்து 1947\ம் ஆண்டு ஜுன் 23\ந் தேதி தேசியக்கொடி உருவாக்க தனி குழு ஒன்று அமைத்தனர். முன்பிருந்த மூவண்ணக்கொடியில் சர்க்காவுக்குப் பதிலாக அதன் ஒரு பகுதியான சக்கரம் அமைக்கப்பட்டது. அச்சக்கரம் நீலநிறமான அசோக சக்கரம். 24 ஆரங்கள் கொண்டசக்கரத்துடன் கூடிய அந்தக் கொடி நமது தேசியக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியா கேட்டுக்கு அருகே 15.8.1947 அன்று பண்டித நேருஜி, நமது தேசியக்கொடியை ஏற்றியது எல்லோர் மனதிலும் குதூகலத்தை ஏற்படுத்தியது. ஆகஸ்டு 16\ம் நாள் செங்கோட்டையில் நமது தேசியக்கொடியை ஏற்றி நமது நாட்டு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் நேரு.

தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். கொடியின் நீளத்துக்கும், உயரத்துக்கும் (அகலம்) உள்ள விகிதம் 3:2 ஆக இருக்க வேண்டும்.

மூன்று வண்ணங்களுடன் சம இடை வெளிகொண்ட 24 ஆரங்களுடன் கடல் நீலத்தில் அசோக சக்கரம் அமைய வேண் டும். கம்பளி/ பஞ்சு காதி பட்டு மூலம் உருவாக் கப்பட வேண்டும்.

கொடியின் நிறம், சக்கரம் பற்றி முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அளித்த விளக்கம்:

‘‘குங்குமச் சிவப்பு நிறம் ஆதாயம் கருதாத துறவைக் குறிக்கிறது. மையத்தில் உள்ள வெண்மை ஒளியாக இருந்து நமக்கு வழி காட்டும். மண்ணுக்கும் நமக்கும் உள்ள உறவை பச்சை நிறம் காட்டிக் கொண்டிருக்கிறது. வெண்மை யின் மையத்தில் உள்ள அந்த அசோக சக்கரம் தர்ம சட்டத்தின் சக்கரமாகவே இருக்கிறது.

அச்சக்கரம் இயங்குதலையும் குறிக்கிறது. இயங்காமையில் சாவு இருக்கிறது. வாழ்வு இயக்கத்தில் உள்ளது. இதற்கு மேலும் இந்தியா மாற்றத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. அது கட்டாயம் இயங்கவும் முன்னோக்கி செல்லவும் வேண்டும். அச்சக்கரம் அமைதியானதொரு மாற்றத்தின் இயக்கத்தை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. அசோக சக்கரம் தர்ம சக்கரம். உருண்டு ஓடும். நம் வாழ்க்கையும் ஓடிக்கொண்டே இருக்கிறது. சத்தியம், தர்மம் முதலியவற்றை வாழ்நாளில் நாம் கடைபிடிக்க வேண்டும். இந்த நியதியை நாம் உணர வேண்டும். அதன்படி நடக்க வேண்டும்.’’

கொடியை உபயோகிக்கும் முறை

கொடி மரத்தின் உச்சியில் நன்றாக பறக்கவிட வேண்டும்.

ஞாயிறு தோன்று கிற பொழுதில் (அ) உதயத்தில் கொடியை ஏற்றவும், மறையும்போது கொடியை இறக்கவும் வேண்டும். கொடியை கெளரவமான இடத்தில் எல்லா நாட்களிலும் பறக்க விடலாம்.

அழுக்கடைந்த கிழிந்துபோன கொடி களை பயன்படுத்துதல் கூடாது. நமது கொடிக்கு மேலே எந்த கொடியும் பறக்கலாகாது. ஊர்வலம் செல்லும்போதும் சுவரில் (அ) விழா மேடையில் பல கொடி களை வைக்க நினைத் தால் நமது தேசியக்கொடி வலப்புறமாக இருக்க வேண்டும். தேசியக் கொடியில் எழுதவோ, அதைப் போர்வை போல் போர்த்தவோ, மண்ணில் தவழவிடவோ கூடாது. துக்க நாளில், உச்சிவரை கொடியை ஏற்றி பின் அரை கம்பத் தில் பறக்கவிட வேண் டும். இறக்கும்போதும் உச்சிவரை ஏற்றி இறக்க வேண்டும். கொடியை எழுந்து நின்று வணங்க வேண்டும். வணிக நோக்கங்களுக்காக கொடியைப் பயன்படுத்தக்கூடாது. கொடியை கீழ்நோக்கி சரிவாய் பிடிக்கக்கூடாது. திரைச்சீலையாக பயன்படுத்தக் கூடாது. தோரணமாகக் கட்டக்கூடாது.

இந்திய தேசியக்கொடியை அவமதித்தால்3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

———————————————————————————

நன்றி:- சு.வி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி


கோடை வந்தாச்சு. வெயிலில் விளையாடி சோர்ந்து போய் வரும் நம் வீட்டுக் குட்டீஸ்க்கும், வியர்வையை வெளியேற்றியே களைப்படைந்து போகும் பெரியவர்களுக்கும் ஏற்ற..  உற்சாகம் தருகிற..  ஜில் மந்திரங்களை இங்கே வழங்கி இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் சமந்தகமணி!

_________________________________________________________________________________

அத்திப்பழ மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்: காய்ந்த அத்திப் பழம்– (ட்ரை ஃப்ரூட்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும்)- 3, ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, சர்க்கரை – இரண்டு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – 2 டீஸ்பூன், காய்ச்சிய பால் – ஒரு கப்.

செய்முறை: அத்திப் பழத்தைப் பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, அதை நன்கு விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைக்கவும். ஐஸ்கிரீமை இதன் மேலே வைத்துப் பரிமாறவும்.

——————————————————–

தர்ப்பூசணி ரசாயணம்

தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், தேங்காய் வழுக்கல் (இளநீரில் இருப்பது – பொடிப் பொடியாக நறுக்கவும்) – 1 கப், கெட்டித் தேங்காய்ப் பால் – அரை கப், ஏலக்காய் – ஒன்று, வெல்லம் – அரை கப், உப்பு – ஒரு சிட்டிகை. விருப்பப்பட்டவர்கள், சிறிது சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை: தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைய விட்டு அடுப்பில் இளம் சூட்டில் வைத்து சிறிது நேரம் ஆன பின், ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கவும். சூடு ஆறியதும்இதனுடன் தர்ப்பூசணி, தேங்காய் வழுக்கை, சுக்குப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும் (அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் போதுமானது.)

—————————————————————————————————–

ஆப்பிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்: நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், சர்க்கரை – இரண்டு டீஸ்பூன், லவங்கப் பட்டைப் பொடி – அரை டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் – ஒரு கப்.

செய்முறை: ஆப்பிளை சிறிது தண்ணீர் சேர்த்து, சர்க்கரையுடன் நன்றாக அரைத்தெடுக்கவும். மீதமுள்ள தண்ணீரில் இந்த விழுதை நன்கு கலக்கி, ஒரு பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டி, லவங்கப் பட்டைப் பொடியை மேலே தூவி, அலங்கரித்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மிளகுப் பொடியையும் தூவலாம்.

—————————————————————————————————–

இளநீர் டிலைட்

தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கல் – அரை கப், ஜிலடின் (உணவுப் பொருட்களில் உபயோகமாகிற ஜிலடின், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன், காய்ச்சின பால் – ஒரு கப், சர்க்கரை, மில்க் மெய்ட், ஃப்ரெஷ் கிரீம் – தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: ஜிலடினை சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். இதைச் சில வினாடிகள் ஸ்டவ்வில் வைத்துக் கிளறி, ஆற விடவும். பின் இதோடு பால், மில்க் மெய்ட், சர்க்கரை, ஃப்ரெஷ் கிரீம் எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே இளநீர்த் துண்டுகளைச் சேர்த்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து உபயோகிக்கவும்.

—————————————————————————————————–
மேங்கோ லஸ்ஸி

தேவையான பொருட்கள்: மாம்பழத் துண்டுகள் (நறுக்கியது), தயிர் – தலா அரை கப், ஐஸ் கட்டிகள் – சிறிதளவு, தேன் (அல்லது) சர்க்கரை – 4 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: தயிரை மிக்ஸி அல்லது மத்து கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளையும், உப்பு, மாம்பழத் துண்டுகளையும், தேன் (அல்லது) சர்க்கரையையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்த பின் பரிமாறவும்.
—————————————————————————————————–


தண்டை

தேவையான பொருட்கள்: பால் – ஒரு கப், கன்டென்ஸ்ட் மில்க் – 2 டீஸ்பூன், பாதாம் பருப்பு – 6, பூசணி விதை, சூரியகாந்தி விதை – தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, பன்னீர் (ரோஸ் வாட்டர்) – அரை டீஸ்பூன்.

அலங்கரிக்க: ரோஜா இதழ்கள் – 4 (அல்லது) 5.

செய்முறை: பாதாம், சூரியகாந்தி விதை, பூசணி விதையை பன்னீருடன் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன், ஏலக்காய்ப் பொடி, பால், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து, நன்கு கலக்கவும். இதனுடன், சிறிதளவு குளிர்ந்த தண்ணீர் அல்லது க்ரஷ்ட் ஐஸ் சேர்த்து, கலக்கி, பரிமாறவும். மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரிக்கவும். (வட இந்திய ஸ்பெஷல் பானம் இது!)
—————————————————————————————————–


மாங்காய் பன்னா

தேவையான பொருட்கள்: மாங்காய் (துருவியது) – ஒன்று, சர்க்கரை, தண்ணீர் – தலா அரை கப், ப்ளாக் ராக் சால்ட் (இந்துப்பு), மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், சோம்புத் தூள் – ஒரு சிட்டிகை, வறுத்துப் பொடித்த சீரகப் பொடி – சிறிதளவு, க்ரஷ்ட் ஐஸ் – சிறிதளவு.

அலங்கரிக்க: புதினா இலை – சிறிதளவு.

செய்முறை: மாங்காய், சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும், ஆறிய பின் மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் இதனுடன், ப்ளாக் ராக் சால்ட், மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகப் பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறிய பின், க்ரஷ்ட் ஐஸை சேர்த்து, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும்.

(இதுவும் வட இந்தியாவின்.. முக்கியமாக, மகாராஷ்ராவின் தயாரிப்பு! அங்கெல்லாம் இதை ‘ஆம் பன்னா’ என்பார்கள். ஆம் – மாங்காய்)
—————————————————————————————————–

தர்ப்பூசணி சிப்

தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி ஜுஸ் – ஒரு கப், தயிர் – அரை கப், புதினா விழுது – அரை டீஸ்பூன், தக்காளி ஜுஸ் – அரை கப், மிளகுப் பொடி – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, தேன் – ஒரு டீஸ்பூன், லவங்கப் பட்டை பொடி – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: எடுத்துக் கொண்டுள்ள எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, லவங்கப் பட்டை பொடியைத் தூவி, அலங்கரித்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–


வெள்ளரி ஷேக்

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் (துருவியது), பால் – தலா ஒரு கப், தேன் – 2 டீஸ்பூன், சர்க்கரை, நறுக்கிய பாதாம், பாதாம் விழுது – தலா ஒரு டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் – அரை கப்.

செய்முறை: வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன், சர்க்கரை கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள், 2 டீஸ்பூன் ஐஸ்கிரீமை மேலே வைத்தும் பரிமாறலாம்.

மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்!
—————————————————————————————————–


ரெட் வொண்டர்

தேவையான பொருட்கள்: கேரட் (பொடியாக நறுக்கியது) – ஒன்று, பீட்ரூட் (பொடியாக நறுக்கியது) – பாதி, தக்காளி (பொடியாக நறுக்கியது) – ஒன்று, ஐஸ் கட்டிகள் – சிறிதளவு, எலுமிச்சம் பழச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க: புதினா இலைகள்.

செய்முறை: கேரட், பீட்ரூட், தக்காளி மூன்றையும் தனித் தனியே மிக்ஸியில் அடித்து, சாறு எடுத்து வடிகட்டவும். இதனுடன், எலுமிச்சம் பழச் சாறு, உப்பு, மிளகுத் தூள், ஐஸ் துண்டுகள் சேர்த்து, நன்கு கலந்து, 10 நிமிடங்கள் வைத்து, புதினாவை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

(கேரட், பீட்ரூட், தக்காளி என்று சிவப்பு நிறப் பொருட்களே கலந்திருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.)
—————————————————————————————————–


ரோஜா சர்பத்

தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள் – அரை கப், சர்க்கரை – கால் கப், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மாதுளம் பழச் சாறு – அரை கப்.

செய்முறை: ரோஜா இதழ்களை நன்றாகப் பொடி செய்து, ஒரு பாத்திரத்தில், கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து மூடி வைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பின், அதை வடிகட்டி சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, மாதுளைச் சாறு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கி மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரித்து, பரிமாறவும்.
—————————————————————————————————–

பரங்கிக்காய் டிலைட்

தேவையான பொருட்கள்: பரங்கிக்காய் (துருவியது) – அரை கப், முந்திரி விழுது – இரண்டு டீஸ்பூன், பால் – ஒரு கப், சர்க்கரை – 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை.

செய்முறை: பரங்கிக்காய்த் துருவலை கொதிக்-கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் நீரை வடிகட்டி, மிக்ஸியில் அரைத்து, இதனுடன் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்து, பாலில் கலக்கி, கொதிக்க விடவும். ஆறிய பின், ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின் பொடித்த முந்திரியை மேலே தூவி பரிமாறவும்.
—————————————————————————————————–


ஃப்ரூட்ஸ் வித் ஓட்ஸ்

தேவையான பொருட்கள்: பால் – ஒரு கப், ஃப்ரெஷ் கிரீம் – 2 டீஸ்பூன், ஆப்பிள் (நறுக்கியது) – அரை கப், பொடித்த லவங்கப் பட்டை – அரை டீஸ்பூன், மாதுளம் பழ முத்துக்கள், ஆரஞ்சு ஜுஸ், பாதாம் (நறுக்கியது), மில்க் மெய்ட் – தலா 2 டீஸ்பூன், வாழைப்பழம் (நறுக்கியது) – சிறிதளவு, ஓட்ஸ் – 3 டீஸ்பூன்,

செய்முறை: பாலில் ஓட்ஸை ஊற வைக்கவும். பால், ஆப்பிள், வாழைப்பழம், ஓட்ஸ் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். இதனுடன் ஆரஞ்சு ஜுஸ், லவங்கப் பட்டை, ஃப்ரெஷ் கிரீம், மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கலந்து, மாதுளம் பழம், பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
—————————————————————————————————–


மசாலா மோர்

தேவையான பொருட்கள்: தயிர் – ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – ஒரு பல், சீரகம் (வறுத்துப் பொடித்தது), தனியாப் பொடி – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, கொத்துமல்லி – அலங்கரிக்க.

தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – சிறிதளவு, பெருங்காயம் – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, தனியாப் பொடி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, பின் அதனுடன் தயிரையும் சேர்த்து அடிக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இதில் சேர்த்து, 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லி தூவி பரிமாறவும். அரைக்கும்போது, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.
—————————————————————————————————–


முலாம் பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்: முலாம் பழம் (நறுக்கியது) – ஒரு கப், சர்க்கரை – 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முலாம் பழத்தை நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–


தக்காளி ஜூஸ்

தேவையான பொருட்கள்: தக்காளி – 3, உப்பு – ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், தேன் – 3 டீஸ்பூன்.

அலங்கரிக்க: புதினா இலை – 5.

செய்முறை: கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, தக்காளி போட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தக்காளியை குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்தால், தோலை சுலபமாக உரித்தெடுக்க முடியும். இப்போது, தக்காளியை நன்றாக அரைத்தெடுத்து, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இதனுடன், மிளகுத் தூள், தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, புதினா இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

—————————————————————————————————–

மின்ட் ஐஸ் டீ

தேவையான பொருட்கள்: புதினா இலை – கால் கப், கொதிக்கும் நீர் – ஒரு கப், க்ரீன் டீ – – 1 பாக்கெட், தேன் – ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க: லெமன் க்ராஸ்- (அல்லது) புதினா இலை.

செய்முறை: கொதிக்கும் நீரில் தேன், டீ பாக்கெட், புதினா இலை ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி, ஆற வைத்து, தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, எடுத்து, லெமன் க்ராஸ் தூவி அலங்கரிக்கலாம்.
—————————————————————————————————–


சாக்லேட் ஸ்மூத்தி!

தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் (நறுக்கியது) – ஒன்று, ஸ்ட்ராபெர்ரி (நறுக்கியது) – – ஒன்று, மில்க் சாக்லேட் (பெரிய சைஸ்) – ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் – – அரை கப், வெனிலா ஐஸ்கிரீம் – தேவையான அளவு.

செய்முறை: சாக்லெட்டை சிறிது சூடு செய்து உருக்கிக் கொள்ளவும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஃப்ரெஷ் க்ரீம்.. மூன்றையும் ப்ளெண்டர் அல்லது மிக்ஸியில் அடித்து, உருக்கிய சாக்லேட்டுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும்.
—————————————————————————————————–


மின்ட் ஜூஸ்

தேவையான பொருட்கள்: புதினா இலை – 10, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 4 டீஸ்பூன், அலங்கரிக்க: எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள்.

செய்முறை: கல் உரலில் புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை எல்லாவற்றையும் நன்றாக நசுக்கி, தண்ணீர் சேர்த்து வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். எலுமிச்சைத் துண்டுகளை ஓரத்தில் செருகி, புதினா இலையை மிதக்க விட்டு அலங்கரிக்கவும்.
—————————————————————————————————–


பீ நட் பட்டர் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்: பீ நட் பட்டர் (றிமீணீஸீதt தீதttமீக்ஷீ – நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை வெண்ணெய் – டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கிறது) – ஒரு டீஸ்பூன், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் – 2 டீஸ்பூன், பால் – ஒரு கப், வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு ஸ்க்யூப்.

செய்முறை: பீ நட் பட்டர், மிக்ஸட் ஜாமை நன்றாக அடித்து, பாலுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஐஸ்கிரீம் வைத்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–


பானகம்

தேவையான பொருட்கள்: வெல்லம் (பொடித்தது) – அரை கப், தண்ணீர் – 2 கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி – தலா ஒரு சிட்டிகை, வெள்ளரிப் பழம் (பொடியாக நறுக்கியது) – 3 டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி, அதனுடன் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இதைக் கண்ணாடி டம்ளருக்கு மாற்றி மேலே வெள்ளரிப்பழம் தூவி அலங்கரிக்கவும்.
—————————————————————————————————–


லஸ்ஸி

தேவையான பொருட்கள்: தயிர் – ஒரு கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், ஐஸ் வாட்டர் – ஒரு கப், ஐஸ் துண்டுகள் — சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் — ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும். இதனுடன் ஐஸ் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடித்துக் கொண்டு, ஐஸ் வாட்டர் கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் கிரீமால் அலங்கரித்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–


மலாய் குல்ஃபி

தேவையான பொருட்கள்: கெட்டியான பால் – ஒரு கப், மில்க் மெய்ட், பால் பவுடர் – தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு.

செய்முறை: எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் நன்றாகக் கலந்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும். ஆறிய பின், சிறிய மண்ணால் ஆன கப் (அல்லது) கடைகளில் கிடைக்கும் குல்ஃபி மோல்டில் மாற்றி, ஃப்ரீஸரில் ஒரு இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் எடுத்து உபயோகிக்கலாம். பரிமாறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், வெளியில் எடுத்து வைத்து விட வேண்டும்.

குறிப்பு: மண் கப்களை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு, தண்ணீரில் ஊற வைத்து, சுத்தமாகக் கழுவ வேண்டும். தண்ணீரில் ஊற வைப்பதால் அதிலிருக்கும் மண் வாசனை போய் விடும். சுடு தண்ணீரில் மறுபடியும் கழுவி எடுப்பது மிகவும் சிறந்தது.
—————————————————————————————————–


கஸ்டர்ட்

தேவையான பொருட்கள்: வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை (இன்னும் வேண்டிய பழங்கள் – துண்டுகளாக நறுக்கியது) – 1 கப், பால் – -150 மி.லி, சர்க்கரை- – 50 கிராம், கஸ்டர்ட் பவுடர் – -2 டீஸ்பூன்

செய்முறை: காய வைத்து ஆற வைத்த நான்கு டீஸ்பூன் பாலில், இரண்டு டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து தனியே வைத்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், கலந்து வைத்துள்ள கஸ்டர்ட்- பால் கலவையை மெதுவாகக் கலந்து, அடி பிடிக்காமல் கிண்டவும். மைதா அல்வா பதத்துக்குக் கலவை வந்ததும், இறக்கி ஆற விடவும். நன்கு ஆறிய பின், பழத் துண்டுகளைப் போட்டு, தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடி தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: பழங்களுக்கு பதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். பல வகைப் பழங்களாக இல்லாமல், ஒரே வகைப் பழம் மட்டும் சேர்த்தால், அந்தக் குறிப்பிட்ட ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரைச் சேர்க்கலாம்!
—————————————————————————————————–

எலுமிச்சை ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு, தண்ணீர் – தலா 1 கப், சர்க்கரை – 2 கப், சிட்ரிக் ஆசிட் – கால் டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரில் சர்க்கரையை நன்றாகக் கரைத்து, கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் (ஒரு நிமிடத்திலிருந்து, இரண்டு நிமிடங்களில் பிசுக்கென்ற பதம் வரும்போது) அடுப்பை நிறுத்தி, இந்தக் கரைசலை வடிகட்டிக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, நன்கு கலக்கி, காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு என்ற விகிதத்தில் கலக்கி, பரிமாறவும்.

குறிப்பு: நிறைய ஸ்குவாஷ் தயாரித்து, ஃப்ரிட்ஜில் பத்திரப்-படுத்தினால், வருடம் முழுவதுக்கும்கூட வைத்துப் பயன்படுத்தலாம்.
—————————————————————————————————–


மேங்கோ ஸ்குவாஷ்

செய்ய தேவையான பொருட்கள்: மாம்பழம் – 5, சர்ககரை – அரை கிலோ, சிட்ரிக் ஆசிட் – 2 டீஸ்பூன், மேங்கோ எசன்ஸ் – சிறிதளவு, தண்ணீர் – மாம்பழச் சாற்றைப் போல 5 பங்கு.

செய்முறை: மாம்பழத் தோல், கொட்டை நீக்கி, மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு மாம்பழச் சாறைத் தயாரிக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து, பின் கொதிக்க வைத்து, அதில் சிட்ரிக் ஆசிட்டைச் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பின் இதை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய பின், மாம்பழச் சாறு, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது 1 கப் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து பரிமாறவும்.
—————————————————————————————————–


திராட்சை ஸ்குவாஷ்

செய்ய தேவையான பொருட்கள்: திராட்சைச் சாறு – 2 கப், சர்க்கரை – 4 கப், க்ரேப் எசன்ஸ் – 1 டீஸ்பூன், தண்ணீர் – 2 கப், சிட்ரிக் ஆசிட் – 1 டீஸ்பூன், ஃபுட் கலர் – கால் டீஸ்பூன்.

செய்முறை: சர்க்கரையைத் தண்ணீரில் நன்கு கரைய விட்டு அடுப்பில் வைக்கவும். இது கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பின் நிறுத்தவும். பின் இதை வடிகட்டி, இதனுடன் திராட்சைச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்க்கவும்.

தயாரான ஸ்குவாஷை சுத்தமான பாட்டிலில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து கலக்கி, பரிமாறவும். விருப்பப்பட்டால் பாரிமாறுகையில் மிளகுத் தூளைத் தூவலாம். சுவை கூடும்.
—————————————————————————————————–

ஆரஞ்சு ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: ஆரஞ்சுச் சாறு – 2 கப், சர்க்கரை – 6 கப், ஆரஞ்சு எசன்ஸ் – அரை டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் – கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் – 1 டீஸ்பூன், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரில் சர்க்கரையைக் கரைய விட்டு, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஸ்டவ்வில் வைத்துக் கொதிக்க விடவும். இதனுடன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடம் ஆன பிறகு இறக்கி, வடிகட்டவும். ஆறியவுடன் ஆரஞ்சுச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஸ்குவாஷ் ரெடி! ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
—————————————————————————————————–


தக்காளி ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: தக்காளி – ஒரு கிலோ, சர்க்கரை – அரை கப், உப்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறிய பின் தோலை நீக்கி, நன்றாக மசித்து. வடிகட்டவும். இந்தத் தக்காளிச் சாறுடன் சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிய பின் இந்த ஸ்குவாஷை பாட்டிலில் அடைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து நன்கு கலக்கி, தேவைப்பட்டால், புதினா, மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.

தொகுப்பு: பாரதி

நன்றி:-சமையல் கலை நிபுணர் சமந்தகமணி பெங்களூரு

நன்றி:-தேவதை

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பிரிவுகள்:கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக், சமையல், மகளீர் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அழகே வா!… அருகே வா! டாக்டர் A. ஷேக் அலாவுதீன்


அழகே வா!… அருகே வா!

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) (Chinese Traditional Medicinve).

அழகு எங்கிருக்கின்றதோ அங்கே இயற்கையாகவே செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட்டுவிடும். அழகு இறைவன் ஒருவருக்கு வழங்கும் சிபாரிசு கடிதம்.

இறைவன் ஒவ்வொரு மனிதனையும் மிக அழகாகவே படைத்திருக்கின்றான் (அல்குர்ஆன் 95:4). ஆனால் மனிதன் தான் அலட்சியத்தின் காரணமாக அந்த அழகை வீணடிக்கின்றான் அல்லது மேலும் அழகாக வேண்டும் என்ற பேராசையால் இரசாயான மருந்துகளாலும் தேவையில்லாத உணவு கட்டுபாடுகளாலும் தன்னை வருத்திக்கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளாலும் அழிவை நோக்கி செல்கின்றான் அந்த திசைகளை தெளிபடுத்தவே இந்த தொடர் இன்ஷாஅல்லாஹ்.

கொழுப்பு உணவை மனிதன் எதிரியாகவே நினைக்க தொடங்கிவிட்டான். மனிதனின் தோல் அழகுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் கொழுப்பு உணவு அவசியமே. ஒருவரின் தோல் பளபளப்பாக சொரசொரப்பு இல்லாமல் இருக்கவேண்டுமெனில் அதற்கு கொழுப்பு உணவு அவசியமே. கொழுப்பு உணவை முற்றிலும் தவிர்ப்பதது நமக்கு நாமே கேட்டை தான் உண்டாக்கிகொள்ளவே.

கொழுப்பு உணவினால் இரத்த குழாய் அடைப்பு, இதய நோய்கள்,உடல் பருமன் ஏற்படுகின்றதே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் அதற்கு காரணம் கொழுப்பு அல்ல!.

யாருடைய மண்ணீரலும் (Spleen) வயிறும் (Stomach) சரியாக வேலை செய்கிறதோ அவர் சராசரியான கொழுப்பை சாப்பிடுவதால் அவருக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது மாறாக, அக்கொழுப்பு உணவால் நன்மை ஏற்பட்டு உடலும் வனப்பு அடையும்.

இதற்கு மாற்றமாக யாருடைய வயிறும் (Stomach) மண்ணீரலும் (Spleen) சரியாக இயங்க வில்லையோ அவர் மிக குறைவான கொழுப்புணவு சாப்பிட்டாலும் அதனால் அவருக்கு தீங்கே ஏற்படும் காரணம் வயிறும் மண்ணீரலும் ஒழுங்காக இயங்காத காரணத்தல் கொழுப்புணவு முறையாக பயன்படாமல் போகின்றது. இந்த காரணத்தால் தான் பயன்படாத கொழுப்பு நம் உடம்பில் பல தீங்குகளை உண்டாக்குகின்றது. வயிறும் மண்ணீரலும் சரியாக செயல்பட வைத்துவிட்டால் இந்த கொழுப்பின் தீங்குகளிலிருந்து நம்உடலை காப்பாற்றி நன்மைகளை பெற்று நலமாக வாழலாம். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் கொழுப்பு உணவு அவசியமே.

உணவு உண்ணும் முறைகளை பின்பற்றினால் அது நம் உடலில் அழகையும் ஆரோக்கியத்தையும் அதிகபடுத்தும். காலை உணவு அவசியம் சாப்பிட்டே ஆகவேண்டும் அதுவும் காலை நேரம் 7-9 மணிக்குள் சாப்பிடவேண்டும் அதுதான் வயிறு நன்றாக இயங்கும் நேரம் . காலையில் நாம் உண்ணும் உணவே அன்று முழுவதும் நம் உடல் உழைப்புக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.

மதியம் உண்ணும் உணவு நடுநிலையாகவும் இரவு உணவு மிக மிக குறைவாக அல்லது சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி, இரு வேளை சாப்பிடுபவன் போகி, மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி, என்பதனை இவ்விடத்தில் நினைவு கூர்வது நல்லது.

இரவு என்பது நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வளிப்பதற்காக எல்லாம்வல்ல இறைவன் நமக்களித்த அருட்கொடை. வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு படுத்தால் ஓய்வு எப்படி கிடைக்கும்? வயிறு பெருங்குடல், சிறுகுடல், பித்தப்பை என உறுப்புகள் அனதைதும் சாப்பிட்டவுடன் இயங்கும் போது உறங்கினால் அது ஓய்வாகுமா?.

இந்த உறக்கத்தினால் உடல் தீங்iயே பெறும் இதன் பிரதிபலிப்பு உடல் அழகில் உடல் சைசில் தீங்கையே ஏற்படுத்தும் சாப்பிட்டு சில மணிநேரம் கழித்து உறங்குவதே நல்லது. காரணம் இடைப்பட்ட நேரத்தில் உண்ட உணவு முறையாக ஜீரணமாகியிருக்கும்.

உணவினை மிக நன்றாக மென்று நாக்கால் சுவைத்து சாப்பிடவேண்டும் அப்போதுதான் முறையான ஜீரணம் உண்டாகும் உணவின் பலனை உடல் பெறும் சாப்பிட்ட திருப்தி உண்டாகும். சாப்பிடும் அளவு குறையும்.

உணவை மெல்லாமல் சுவைக்காமல் வேகமாக விழுங்கினால் சாப்பிட்ட திருப்தி ஏற்படாது அதனால் அதிகம் சாப்பிட வேண்டிவரும். முறையாக ஜீரணமாகாது முறையாக ஜீரணமாக காரணத்தால் நல்ல உணவு உண்டும் அதன் சத்துக்களை பெற முடியாமல் போய்விடுகின்றது இது போன்ற முறையற்ற செயல்களால் வயிறு பாதிக்கப்பட்டு அதனால் உடல் தோற்றமும் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது.

நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் பசியே இல்லாத போதும் உணவை சாப்பிடாதீர்கள் அது உங்களின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்ற வாதமே அறிவுக்கு முரண்பட்ட தவறான வாதமாகும்.

நேரத்திற்கு சாப்பிடாத காரணத்தினால் தான் அல்சர் வருகின்றது என்றால் இன்று இந்தியாவில் வாழும் பல கோடி ஏழைகளுக்கும் வந்திருக்க வேண்டுமே! ஏன் வரவில்லை? அல்சர் வருவதற்கு காரணம் நேரத்திற்கு சாப்பிடாததல்ல, வயிறும் சிறுநீர்பைக்கும் உள்ள தொடர்பில் ஏற்படும் குறைபாடே 99% காரணம் அதை விட்டு மாத்திரைகள் மருந்துகள் சாப்பிட்டு வந்தால் அல்சர் சரியாகாது மருந்துகள் தான் சரியாகும். கையில் உள்ள பணம் தான் காலியாகும். எனவே நேரத்திற்கு சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரம் பசித்தால் மட்டுமே சாப்பிடவேண்டும்.

உடலின் வடிவமைப்பு அசிங்கமாக இருப்பதை குறைப்பதற்கு பலர் இரவு பகல் உடற்பயிற்சி செய்வதை பார்க்கின்றோம் அதே நேரத்தில் உடற்பயிற்சி எதுவும் செய்யாமலே சாதாரண வேலைகளை செய்துகொண்டே ஆரோக்கியமாகவும் கச்சிதமாகமான உடலேலடும் சிலர் இருப்பதற்கு காரணம் என்ன?

உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக சீராகயிருந்தால் இயங்கினால் உடல் கட்டமைப்பும் தோற்றமும் அழகாக இருக்கம்.

இடுப்பும் புட்டமும் (Buttock) சேரும் இடத்தில் அதிக சதை போட்டால் அவரது பெருங்குடல் பிரச்சனையில் இருக்கின்றது என்று அர்த்தம்.

புட்டப்பகுதியிலும் தொடையின் பின் பகுதியிலும் கழுத்தின் பின் பகுதியிலும் யாருக்கு எல்லாம் சதை உண்டாகின்றதோ அவருக்கு சிறுநீர்பையில் (Urinary Bladder) பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். இவர்களின் தொடையும் தொடையும் உரசிக்கொள்ளும்.

அக்குள் மடிப்புகளில் மார்பு பக்கவாட்டில் சிலருக்கு சதை உண்டாகி கைவீசி நடக்கவே மிகவும் சிரமபடுவார்கள் இவர்களுக்கு சிறுகுடல் இயக்கம் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

உடம்பில் அளவுக்கதிகமாக எங்கு சதை ஏற்பட்டாலும் அது நோயின் அறிகுறியே உடல் உறுப்பு ஏதோ ஒன்றால் ஏற்படும் இயக்க குறைவே இதற்கு காரணம் அதை சரி செய்து விட்டால் அந்த சதை பகுதி சரியாகி உடல் வடிவமைப்பு சரியாகிவிடும்.

முகத்தின் அழகு தோற்றம் தான் ஒருவரை பற்றிய முதல் நல் அபிப்பிராயத்யத்தை வரவழைக்கும் முகத்தின் தோற்றத்திறகும் உடல் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொண்டால் 6 வாரத்தில் ஆழகாக்குகின்றேன் என்று சொல்லும் இரசாயன முககீரீம்கலிருந்தும், பவுடர்களிலிருந்தும் இது போன்ற மற்ற பொருள்களிலிருந்தும் நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.

சிலருக்கு உடம்பு வெள்ளையாக இருக்கும் முகம் மட்டும் கருத்து கொண்டே பொகும். இவர் எத்தனை கிரீம் போட்டு தேய்த்தாலும் கிர்pம்தான் தீர்ந்து போகும் ஒழிய முகத்தின் கருப்பு மாறாது காரணம் யார் ஒருவருக்கு முகம் மட்டும் கருத்துக் கொண்டே போகின்றதோ அவருக்கு சிறுநீரகம் கிட்னி (kidney) சரியாக இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சிறுநீரக பலகீனத்தின் பிரதிபலிப்புதான் முகம் கருத்துபோவது. இதுமட்டுல்ல முகத்தில் வீக்கம், தசைகள் சுருங்கல் கழுத்தின் முன்பக்கம் சதை உண்டாகுதல், நாக்கு உலர்ந்து போவது இவையெல்லாம் சிறுநீரகத்தின் சக்தி குறைபட்டால் உருவாவதே.

புருவம் இமைகளில் உள்ள முடி யாருக்கொல்லாம் கொட்டுகின்றதோ அவருக்கு நுரையீரல்களின் இயக்கம் சரியில்லை அதை சரிசெய்யும் போது இவை சரியாகும். உடம்பில் உள்ள முடி கொட்டுவது (தாடி, மீசை, புருவம், இமை, பிறப்புறுப்புகள்) நுரையீரல் சம்பந்தப்பட்டது தலையில் உள்ள முடி கொட்டுவது கிட்னி சம்பந்தப்பட்டது.

கண்களில் கீழ் இமை சிலருக்கு சிறு பை போல் தொங்கும் அல்லது துடித்துக்கொண்டே இருக்கும் வயிறு சக்தியின் குறைபாடே இது.

உதடு அழகாயிருக்க ஆயிரக்கணக்கில் மேக்கப் உபகரணங்கள், ஆரோக்கிய உடலுக்கு அது தேவையில்லை. உதடு பெருத்து தொங்கினால் உங்களுடைய மண்ணீரலும் வயிறும் தான் காரணம் உதடு வரண்டு போனால் அதற்கு பெருங்குடலே காரணம். இந்த உறுப்புகள் சரியாக இயங்கினால் உதடு இயற்கையாகவே அழகாக அமைந்துவிடும்.

முகம் கருத்து போவது சிறுநீரக பலகீனத்தால் ஏற்படுவது போல் சிலருக்கு முகம் நீல கலராக மாறும் இதற்கு காரணம் கல்லீரலே அதே போல முகம் வெளுத்தல் போன்று தோன்றினாலும் அதற்கும் காரணம் கல்லீரலே இந்த உறுப்புகளின் இயக்கத்தை சரிசெய்தால் இவைகள் சரியாகிவிடும்.

முகத்தில் கன்னம் மட்டும் உப்பியிருந்தால் சிறுகுடலை கவனிக்கவேண்டும் முகம் முழுவதும் உப்பியிருந்தல் வயிறு பெருங்குடலை சரிசெய்ய வேண்டும்.

கண்களின் சிகப்பு, நீர்வடிதல் போன்றவற்றை சரிசெய்ய நாம் சிறுநீர்பையின் சக்தி நிலையை சரிசெய்யவேண்டும்.

முகத்தின் தோற்றம் இத்தனை உறுப்புகள் சம்மந்தப்பட்டிருக்கும் போது இவற்றையெல்லாம சரிசெய்யாமல்

மேக்கப் போட்டு சரிசெய்ய முற்படுவது நமது உடலில் தேவையில்லாத இரசாயண பொருட்களை உள் அனுப்பி தோல்வியாதிகளை விலைக்கு வாங்குவது போன்றதாகும்.

சிலரின் கை கால் நகங்கள் உடைந்தும் முறிந்தும் உழுங்கில்லாத அமைப்பிலும் சொத்தை போன்றும் கலர் மாறியும் இருக்கும் இதற்கு காரணம் பித்தபை (Gallbladder) கல்லீரலும் (Liver) சரியாக இயங்க வில்லை என்பதை அறிந்து அவற்றை சரிசெய்தால் இவை சரியாகிவிடும்.

முகத்தின் அழகும் உடலின் அழகு தோற்றமும் நம் மனதில் நல் அபிப்பிராயத்தை உருவாக்கும் அதே நேரத்தில் சிலரிடம் நாம் நெருங்கி பேச முற்படும்போது நம்மை தூர விலகி நிற்க வைக்கும அவர் மீது

வீசும் வாசம்.
பூவுக்கு மட்டும்தான் வாசமுண்டா?
வேருக்கும் உண்டு!
வேருக்கு மட்டும்தான் வாசம் உண்டா?
ஓவ்வொரு மனிதனுக்கும் உண்டு!
மனிதனின் உடலில் வீசும் வாசத்தை வைத்தே அவனுடைய பாதிக்கப்பட்ட உறுப்பை கனித்துவிடலாம் அதனால் ஏற்படும் நோய்களையும் சரிசெய்துவிடலாம்.

யாருடைய உடலில் அழுகல் (Putrid) வாசம் வீசுகின்றதோ அவருடைய சிறுநீரகமும் சிறுநீர்பையும் சரியாக இல்லை அதனை நாம் சரிவர இயங்கவைத்துவிட்டால் அந்த வாசம் வீசுவது நின்றுவிடும்.

யாருடைய உடம்பில் மாமிசவாசம் (Fleshy) வீசுகின்றதோ அவருடைய நுரையீரல், பெருங்குடல்
பிரச்சனை என்பதை நாம் அறிந்துகொண்டு அந்த உறுப்புகளை நாம் சரிசெய்ய வேண்டும் அதன் மூலம்
இந்த வாசத்pலிருந்து விடபடலாம்.

தீய்ந்த (Scoreched) வாசம் யார் மீது வீசுகின்றதோ அவருடைய இதயம் மற்றும் (Triplewarmer) எனும் மூவெப்ப மண்டலத்தில் இயக்கம் சரியில்லை என்று அர்த்தம் அவற்றை அறிந்து இயக்கத்தை சரிசெய்வதன் மூலம் இந்த வாசத்திலிருந்து விடுபடலவாம்.

கல்லீரலும் பித்தபையும் சரியில்லை என்றால் அவருடைய உடம்பில் ஊசிபோன (Rancid) வாசம் வீசும் கல்லீரல் பித்தப்பை இயக்கத்தை சரிசெய்து இந்த வாசத்திலிருந்து விடுபடலாம்.

யாருடைய உடம்பில் சுகந்தமான (Fragrant) இனிமையான வாசம் வீசுகின்றதோ அருடைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் இயக்கம் சரியாக இருக்கிறது குறிப்பாக வயிறும் மண்ணீரலும் நன்றான இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

பார்க்க அழகாக இருபார்கள் சிலர் ஆனால் வாய் திறந்து பேசினால் நம்மால் அருகில் நிற்க முடியாது அந்த அளவுக்கு வாசம் வீசும்.

பித்தப்பை சரியாக இயங்காவிட்டால் அவர்கள் நாக்கில் வெண்மை படியும் வாயும் வாசம் வீசும், இவர்கள் தினமும் காலையில் பல்துலக்கிவிட்டு நாக்கை டங்கிளீனர் (Tongue Cleaner) கொண்டு வழித்துக்கொண்டிருப்பார்கள்

. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இப்படிசெய்தாலும் இவர்களின் பிரச்சனை தீராது, இதனால் நாக்கின் சுவை உணர்வு மொட்டுக்கள் பாழடைந்து நாக்கின் சுவை உணரும் தன்மை இழந்து போகும். இதற்கு ஒரே வழி பித்தப்பையின் இயக்கத்தை சரிசெய்ய வேண்டும், வாய் வாசனை சரியாகும், வெண்மை படிதல் நிற்கும்.சிறுகுடல் பாதிக்கப்படின் வாயின் உட்பகுதியிலும் நாவிலும் புண்கள் ஏற்படும் இதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும், இதனை சரிசெய்ய சிறுகுடல் இயக்கத்தினை சரிசெய்தால் போதும்.

நாக்கு மிகவும் சிகப்பாக இருந்தால் உடன் நாம் இதயத்தை கவனிக்கவேண்டும். நாக்கு மஞ்சளாக இருந்தால் வயிற்று பகுதியில் பிரச்சனை என்று அறிந்து அவைகளை சரிசெய்ய வேண்டும். சில நேரங்களில் இவைகளாலும் வாய் வாசனை ஏற்படுவதுண்டு.

குளிக்காமல் பல் துலக்காமல் இருந்து வீசும் வாசத்திற்கு உடல் உறுப்புகள் பொருப்பல்ல அவைகள் அப்பாவிகள் தினமும் குளித்து வாசனை திரவியங்கள் பூசாமல் வீசும் இயற்கையான வாசத்திற்கே உடல் உறுப்புகள் பொறுப்பாகும்.

உடல் உறுப்புகளின் இயக்கத்தினை நாம் சரியாக வைத்துக்கொண்டால் உடல் அழகைப்பற்றி நாம் கவலைபட தேவையில்லை. அழகே வா அருகே வா என்று அழைக்க வேண்டிய அவசியமுமில்லை அவை நம்முடனே தங்கி கொள்ளும் நம்முடைய தோற்றம் சொல், செயல் அனைத்தும் அழகாவே அமையும் இன்ஷாஅல்லாஹ்.

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீய செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசம்) குழப்பமும் தோன்றின தீமைகளிலிருந்து அவர்கள் திரும்பி விடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகில்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கின்றான் (அல்குர்ஆன் 30:41).

இயற்கையான அழகை பெற்று வாழ முயற்சிப்போம். இரசாயண பொருட்களின் தீங்குகளிலிருந்து நம்மை காத்துக்கொள்வோம், அதற்காக பிராத்திப்போம்…

நன்றி:-டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)