மனைவிக்கு மட்டுமா உபதேசம்? – மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி
மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி முதல்வர், ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா, நீடூர். ………………………………………………………………………………………………………நன்றி:-மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி
பாலைவன வாழ்க்கை – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்.
பாலையான வாழ்க்கையைப்
பசுஞ்சோலையாய் ஆக்கவே
பாலைவன நாட்டுக்கே
பறந்து வந்த பறவைகள் நாங்கள்…
இச்சையை மறந்தோம்;
இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;
பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;
பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்…
இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;
இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;
“பொருளிலார்க்கு இவ்வுலகில்லை”
பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;
“இல்லானை இல்லாலும் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்; அவன்
சொல் செல்லாமல் போய்விடும்” என்றாள்
ஔவ்வையார் அன்றே……
மூதாட்டியின் மூதுரைக்கும்
முழுமையான விரிவுரை நாங்களே…
பாதாளம் வரை பாயும் பணமே
பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே
நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம்.
இவர்களின் படைப்புகளில் சில…
- அப்பா
- இணயதளம் ஓர் இனியதளம்
- உறவுகள்
- ஊனம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
மனைவியைத் தண்டித்தல் ஷரீஆவின் கண்ணோட்டத்தில் – மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:
மேற்படி வசனம் மனைவியருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு பணிக்கின்றது.
மனைவியிடம் குறை தேடாமல் நிறைகண்டு நிம்மதி பெறவேண்டும்.
நன்மை செய்பவர்களுக்கு நற்கூலியும், தவறு செய்பவர்களுக்குத் தண்டனையும் வழங்குவது அல்லாஹ்வின் வழிமுறையாகும். இந்த அடிப்படையில் மனைவியின் நற்பண்புகளைப் பாராட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கு முற்பட்டு, இறுதிக் கட்டமாக தண்டிக்க அனுமதி உள்ளது. இந்த அனுமதி அளவோடும், நிதானமாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் பயன்படுத்துவதற்குரியதாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
அப்படி மனைவியைத் தண்டிப்பது என்றால் பின்வரும் நிபந்தனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்:
(2) பெண்மையின் தனிப்பட்ட உறுப்புக்களில் தாக்கக் கூடாது:
(3) கடுமையான அடியாக இருக்கக் கூடாது:
(4) பிறர் முன்னிலையில் தாக்கக் கூடாது:
(5) தவறுக்குத் தக்கதாக இருக்க வேண்டும்:
தான் அடிக்காத அதேவேளை அடிப்பவர்களைக் கண்டித்து முள்ளார்கள்.
(1) கணவனுக்கு மாறு செய்தல், கட்டுப்பட மறுத்தல், கடமைகளைச் செய்யாதிருத்தல்:
(2) கணவன் மீது சந்தேகங்கொள்ளல்:
(4) கணவனின் அனுமதி இன்றி வீட்டை விட்டும் வெளியேறுதல்:
(5) கணவன் இல்லாத போது கணவன் வெறுக்கக் கூடியவர்களுக்கு வீட்டில் இடமளித்தல்:
(1) ஆண்களின் அளவுக்கு மீறிய ரோச குணம்:
(4) கணவனின் கேவலமான வார்த்தைகள்:
PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்
குறிப்பிட்ட சில பொருட்களையே அடிக்கடி சமையல்ல சேர்த்தாலும், சலிப்பு வந்துடாதபடிக்கு அதை வேற வேற பதார்த்தமா மாத்தி வித்தியாசம் காட்டறது கிராமத்து சமையலோட சிறப்பம்சம். மரவள்ளிக் கிழங்கு, தட்டைப் பயிறு, கருப்பட்டினு வழக்கமான கிராமத்து ஐட்டங்களுக்கு புது சுவை தர்றதுதான் இந்த குறிப்புகள்…
மரவள்ளிக் கிழங்கு புட்டு
அரைக் கிலோ மரவள்ளிக் கிழங்கை அரை மணி நேரம் தண்ணீர்ல ஊற வெச்சு, அப்புறமா மண் போக கழுவிட்டு மேல இருக்கற பட்டைய உரிச்சுடுங்க. கிழங்கை சன்னமாத் துருவி, இட்லிப் பானைல பரவலாத் தூவி, பதினைந்து நிமிஷம் வேக வைங்க. வெந்ததும், சூட்டோட இருக்கறப்பவே ஒண்ணுலேர்ந்து ஒண்ணரைக் கப் அளவுக்கு சர்க்கரை, ஒரு டீஸ்பூன் ஏலத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து பிசறுங்க.
அவ்வளவுதான் வேலை. புட்டு தயார்! இதை அப்படியேயும் சாப்பிடலாம். சின்னச் சின்னதா உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம்.
கிழங்குத் துருவலை ஒரு டிரேல கொட்டி சமப்படுத்தி, அப்புறமா ஆவியில வேகவெச்சு எடுத்து, விரும்பின வடிவத்துல துண்டுகளா போட்டு, அதுமேல முந்திரி துண்டுகளை பதிச்சுக் கொடுத்தா… குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.
——————————————————————————————————————
தட்டைப் பயிறு அடை
தட்டைப் பயிறு அடையும் கடலைப் புண்ணாக்கு சட்னியும்
பத்து சின்ன வெங்காயம், ரெண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை கொஞ்சம்… இதை எல்லாத்தையும் பொடியா நறுக்கி, அரை கப் தேங்காய்த் துருவலையும் சேர்த்து மாவோட கலக்குங்க.
தோசைக்கல்லை காயவெச்சு, எண்ணெய் தடவி அதுல மாவை கனமா, சின்னச்சின்ன அடைகளா ஊத்துங்க. சுத்தியும் எண்ணெய் ஊத்தி வேக வைங்க. வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபடியும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேகவெச்சு எடுங்க.
பூண்டு, பெருங்காயத் தூளை மாவுல கலந்துக்கறது நல்லது. ஏன்னா தட்டைப் பயிறு வாயு கோளாறை உண்டாக்கும். பூண்டு, பெருங்காயத்தை சேர்க்கறதால அந்தத் தொல்லை குறையும்.
இந்த தட்டை பயிறு அடையை வேர்க் கடலை புண்ணாக்கு சட்னியோட சாப்பிட்டா பிரமாதமா இருக்கும்.
வேர்க்கடலை புண்ணாக்கு சட்னியை செய்யறது எப்படினும் பார்ப்போம்…
ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதுல ஆறு மிளகாய் வற்றல், ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து, கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள் இதையெல்லாம் ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணாப் போட்டு வறுத்தெடுங்க. அப்புறமா அதுல அரைக் கப் வேர்க் கடலைப் புண்ணாக்கு, ரெண்டு பல் பூண்டு, ரெண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் இதையெல்லாம் வறுத்து, கடைசியா கொஞ்சம் கறிவேப்பிலை, மல்லித்தழை, தேவையான உப்பு, சின்ன நெல்லிக் காய் அளவுக்கு புளி இதையெல்லாம் சேர்த்து வதக்கி இறக்குங்க. ஆறினதும் நைஸா அரைச்செடுத்தா… அதுதான் வேர்க்கடலை புண்ணாக்கு சட்னி!
____________________________________________________________
கருப்பட்டி பணியாரம்
இந்த கருப்பட்டிக் கரைசலை பச்சரிசி மாவுல கொஞ்சம் கொஞ்சமா ஊத்திக் கலக்குங்க. தோசை மாவு பதத்துக்கு வந்துடும்.
பணியாரத்தை பொரிச்செடுக்கிற அளவுக்கு எண்ணெயை வடை சட்டில ஊத்தி, அதுல ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய் யையும் ஊத்தி மிதமான தீயில காயவைங்க. காய்ஞ்சதும் அதுல மாவுக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமா ஊத்துங்க. மாவு வெந்து, மேல வந்ததும் திருப்பிப் போட்டு வேகவெச்செடுங்க.
இந்த பணியாரத்தை ரெண்டு நாள் வரைக்கும் வெச்சு சாப்பிடலாம். கருப்பட்டி மணம் கமகமக்க, அவ்வளவு ருசியா இருக்கும் இந்த பணியாரம்.
___________________________________________________________________
உளுந்து பலகாரம்
உளுந்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். தேங்காய்ப்பாலில் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் கலந்து வைத்து, பொரித்த உளுந்து உருண்டைகளைப் போட்டு சிறிது நேரம் அதில் ஊற வைத்து, பிறகு சாப்பிட்டுப் பாருங்கள். பிரமாதமாக இருக்கும்!
=================================================================
அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்
30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.
30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்
கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி
PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்
PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்
PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்
தாயின் மணிக்கொடி பாரீர்!
உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், அதற்கே உரிய தேசியக்கொடி உண்டு.
பண்டைக்காலக்கொடிகள்
ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் கொடி, நட்சத்திரங்களும், பட்டைகளும் உள்ள அமெரிக்கக் கொடி, பிறையும் நட்சத்திரமும் கொண்ட இஸ்லாமியர்களின் கொடி ஆகியவை பழம்பெருமை மிக்கவை.
கொடி என்பது…
தேசியக்கொடி என்பதற்கு ஆங்கிலப்பதம் National Flag ஆகும். ஃபிளாக் (Flag) என்பது ஜெர்மானிய மொழியிலிருந்து வந்த சொல். ‘காற்றில் மிதக்கக்கூடியது’ என அதற்கு அர்த்தம்.
கொடி ஏற்பட காரணம்
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், இந்திய மக்களைப் பார்த்து ‘உங்களைக்கென்று ஒரு கொடி உண்டா?’ என்று கேலி பேசினார்கள். அப்போது சத்ரபதி சிவாஜி, ‘பாக்வஜண்டா’ என்ற கொடியை அமைத்து, மக்களிடம் எழுச்சி உண்டாக்கினார். 1831\ல் ராஜா ராம்மோகன் ராய், பாரத தேசத்துக்கு என்று ஒரு கொடி வேண்டும் என்கிற எண்ணத்துக்கு விதைபோட்டார்.
1857\ல் பகதூர்ஷா, சப்பாத்தியும் தாமரை மலரும் பொறித்த கொடியைப் பயன்படுத்தினார். ஜான்சிராணி, அனுமன் சின்னம் பதித்த கொடியைப் பயன்படுத்தினார். 1883\ல் சிரீஸ் சந்திரபோஸ் என்பவர் இந்திய தேசிய சங்கம் ஒன்றை தொடங்கி மக்களைத் திரட்டி கொடியுடன் உலாவர செய்தார். இந்தியருக்கு தேசியமும், தேசியக்கொடியும் இல்லை என வெள்ளையன் கேலி செய்தபோது, தன் சேலையின் முந்தானையை வீராவேசத்துடன் காட்டினார் \ தாய்நாட்டின் மானம் காத்த வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மை. அதில் இருந்த மூவண்ணமே நமது தேசியக் கொடியில் பிரதிபலிக்கிறது.
நம் தேசியக்கொடியின் வளர்ச்சி
1905-ல் சகோதரி நிவேதிதா, சதுரமான சிவப்பு வண்ணம் கொண்ட கொடியில் நான்கு பக்க விளிம்பிலும், 108 ஜோதி விளக்குகளும் நடு மையத்தில் வஜ்ஜிரமும், இடப்புறத்தில் வந்தே என்றும் வலப்புறத்தில் மாதரம் என்றும் அமைந்த ஒரு கொடியை வடிவமைத்தார்.
1906\ல் கல்கத்தா கிரின்பார்க் சதுக்கத்தில் ஒரு கொடி வடிவமைக்கப்பட்டது. மேலே சிவப்பு, அதில் எட்டு தாமரை, நடுவில் உள்ள மஞ்சள் பட்டையில் வந்தே மாதரம், கீழே பச்சைப் பட்டையில் இடப் பக்கத்தில் சூரியன், வலப் பக்கத்தில் நட்சத்திரப்பிறை ஆகியவற்றைக் கொண்டதாக ஏற்றி வைக்கப்பட்டது.
1907\ல் ஸ்ரீமதி காமாவும் நாடு கடத்தப்பட்ட புரட்சியாளர்களும் வடிவமைத்த கொடி, முதல் கொடி போலவே வண்ணங்கள் அமைந்து சிவப்புப் பட்டையில் ஒரு தாமரைப் பூவும் ஏழு நட்சத்திரங்களும் கொண்டதாக இருந்தது.
1917\ல் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், லோகமான்யதிலகரும், ஹோம்ரூல் இயக்கத்தின்போது. ஐந்து சிவப்பு பட்டைகளும், நான்கு பச்சை பட்டைகளும், மாற்றி மாற்றி சேர்த்து, அதில் ஏழு நட்சத்திரங்கள் பொறித்த பிரிட்டிஷ் கொடி மேல்புறம் வலது மூலையிலும், மற்றொரு மூலையில் வெள்ளைநிற இளம் பிறையும், ஒரு நட்சத்திரமும், பொறித்து தயாரித்தார்கள். தொமினியன் அந்தஸ்துக்காக பிரிட்டிஷ் கொடியும் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.
1921\ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டிக்கூட்டம் பெஜவாடாவில் இந்து\ முஸ்லிம் ஒற்றுமையை குறிக்கும் வகையில் வெங்கையா என்பவரை ஒரு கொடி அமைத்து தரவேண்டிக் கேட்டு அமைத்த மூவண்ணக்கொடி காந்தியடிகளால் ஏற்கப்பட்டு, அகமதாபாத்தில் இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் ஏற்றிவைக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கான வெள்ளை மேலே அதற்கு அடுத்து முஸ்லிம்களின் பச்சை கீழே, இந்து வண்ணமாகசிவப்பு வண்ணங்களும் ராட்டையும் (சர்க்கா) அமைந்த கொடியாக அது திகழ்ந்தது.
26.1.1930\ல் ஒரு கொடியை ஏற்றி,அக்கொடிக்கு ‘சுவராஜ்ஜியக்கொடி’ என்று பெயரிட்டனர். 1931\ம் ஆண்டில் கொடிகமிட்டி பரிந்துரையின்படி புதிய தேசியக்கொடி செம்மஞ்சள் நிறத்தில், மேல்பகுதியில் சர்க்காவோடு கூடிய கொடியை காங்கிரஸ் குழு அங்கீகரிக்காமல் விட்டுவிட்டது.
அதே ஆண்டில் மேலே செம்மஞ்சள் நிறம், நடுவில் வெள்ளை, கீழே பச்சை, ஒரு சர்க்கா என்று அமைத்து புதிய கொடி உருவாக்கப் பட்டது. இந்தக் கொடியை காந்தியடிகள் பாராட்டினார்.இந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்து 1947\ம் ஆண்டு ஜுன் 23\ந் தேதி தேசியக்கொடி உருவாக்க தனி குழு ஒன்று அமைத்தனர். முன்பிருந்த மூவண்ணக்கொடியில் சர்க்காவுக்குப் பதிலாக அதன் ஒரு பகுதியான சக்கரம் அமைக்கப்பட்டது. அச்சக்கரம் நீலநிறமான அசோக சக்கரம். 24 ஆரங்கள் கொண்டசக்கரத்துடன் கூடிய அந்தக் கொடி நமது தேசியக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியா கேட்டுக்கு அருகே 15.8.1947 அன்று பண்டித நேருஜி, நமது தேசியக்கொடியை ஏற்றியது எல்லோர் மனதிலும் குதூகலத்தை ஏற்படுத்தியது. ஆகஸ்டு 16\ம் நாள் செங்கோட்டையில் நமது தேசியக்கொடியை ஏற்றி நமது நாட்டு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் நேரு.
தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். கொடியின் நீளத்துக்கும், உயரத்துக்கும் (அகலம்) உள்ள விகிதம் 3:2 ஆக இருக்க வேண்டும்.
மூன்று வண்ணங்களுடன் சம இடை வெளிகொண்ட 24 ஆரங்களுடன் கடல் நீலத்தில் அசோக சக்கரம் அமைய வேண் டும். கம்பளி/ பஞ்சு காதி பட்டு மூலம் உருவாக் கப்பட வேண்டும்.
கொடியின் நிறம், சக்கரம் பற்றி முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அளித்த விளக்கம்:
‘‘குங்குமச் சிவப்பு நிறம் ஆதாயம் கருதாத துறவைக் குறிக்கிறது. மையத்தில் உள்ள வெண்மை ஒளியாக இருந்து நமக்கு வழி காட்டும். மண்ணுக்கும் நமக்கும் உள்ள உறவை பச்சை நிறம் காட்டிக் கொண்டிருக்கிறது. வெண்மை யின் மையத்தில் உள்ள அந்த அசோக சக்கரம் தர்ம சட்டத்தின் சக்கரமாகவே இருக்கிறது.
அச்சக்கரம் இயங்குதலையும் குறிக்கிறது. இயங்காமையில் சாவு இருக்கிறது. வாழ்வு இயக்கத்தில் உள்ளது. இதற்கு மேலும் இந்தியா மாற்றத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. அது கட்டாயம் இயங்கவும் முன்னோக்கி செல்லவும் வேண்டும். அச்சக்கரம் அமைதியானதொரு மாற்றத்தின் இயக்கத்தை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. அசோக சக்கரம் தர்ம சக்கரம். உருண்டு ஓடும். நம் வாழ்க்கையும் ஓடிக்கொண்டே இருக்கிறது. சத்தியம், தர்மம் முதலியவற்றை வாழ்நாளில் நாம் கடைபிடிக்க வேண்டும். இந்த நியதியை நாம் உணர வேண்டும். அதன்படி நடக்க வேண்டும்.’’
கொடியை உபயோகிக்கும் முறை
கொடி மரத்தின் உச்சியில் நன்றாக பறக்கவிட வேண்டும்.
ஞாயிறு தோன்று கிற பொழுதில் (அ) உதயத்தில் கொடியை ஏற்றவும், மறையும்போது கொடியை இறக்கவும் வேண்டும். கொடியை கெளரவமான இடத்தில் எல்லா நாட்களிலும் பறக்க விடலாம்.
அழுக்கடைந்த கிழிந்துபோன கொடி களை பயன்படுத்துதல் கூடாது. நமது கொடிக்கு மேலே எந்த கொடியும் பறக்கலாகாது. ஊர்வலம் செல்லும்போதும் சுவரில் (அ) விழா மேடையில் பல கொடி களை வைக்க நினைத் தால் நமது தேசியக்கொடி வலப்புறமாக இருக்க வேண்டும். தேசியக் கொடியில் எழுதவோ, அதைப் போர்வை போல் போர்த்தவோ, மண்ணில் தவழவிடவோ கூடாது. துக்க நாளில், உச்சிவரை கொடியை ஏற்றி பின் அரை கம்பத் தில் பறக்கவிட வேண் டும். இறக்கும்போதும் உச்சிவரை ஏற்றி இறக்க வேண்டும். கொடியை எழுந்து நின்று வணங்க வேண்டும். வணிக நோக்கங்களுக்காக கொடியைப் பயன்படுத்தக்கூடாது. கொடியை கீழ்நோக்கி சரிவாய் பிடிக்கக்கூடாது. திரைச்சீலையாக பயன்படுத்தக் கூடாது. தோரணமாகக் கட்டக்கூடாது.
இந்திய தேசியக்கொடியை அவமதித்தால்3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி
கோடை வந்தாச்சு. வெயிலில் விளையாடி சோர்ந்து போய் வரும் நம் வீட்டுக் குட்டீஸ்க்கும், வியர்வையை வெளியேற்றியே களைப்படைந்து போகும் பெரியவர்களுக்கும் ஏற்ற.. உற்சாகம் தருகிற.. ஜில் மந்திரங்களை இங்கே வழங்கி இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் சமந்தகமணி!
_________________________________________________________________________________
அத்திப்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்: காய்ந்த அத்திப் பழம்– (ட்ரை ஃப்ரூட்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும்)- 3, ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, சர்க்கரை – இரண்டு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – 2 டீஸ்பூன், காய்ச்சிய பால் – ஒரு கப்.
செய்முறை: அத்திப் பழத்தைப் பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, அதை நன்கு விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைக்கவும். ஐஸ்கிரீமை இதன் மேலே வைத்துப் பரிமாறவும்.
——————————————————–
தர்ப்பூசணி ரசாயணம்
தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், தேங்காய் வழுக்கல் (இளநீரில் இருப்பது – பொடிப் பொடியாக நறுக்கவும்) – 1 கப், கெட்டித் தேங்காய்ப் பால் – அரை கப், ஏலக்காய் – ஒன்று, வெல்லம் – அரை கப், உப்பு – ஒரு சிட்டிகை. விருப்பப்பட்டவர்கள், சிறிது சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை: தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைய விட்டு அடுப்பில் இளம் சூட்டில் வைத்து சிறிது நேரம் ஆன பின், ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கவும். சூடு ஆறியதும்இதனுடன் தர்ப்பூசணி, தேங்காய் வழுக்கை, சுக்குப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும் (அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் போதுமானது.)
—————————————————————————————————–
ஆப்பிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்: நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், சர்க்கரை – இரண்டு டீஸ்பூன், லவங்கப் பட்டைப் பொடி – அரை டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் – ஒரு கப்.
செய்முறை: ஆப்பிளை சிறிது தண்ணீர் சேர்த்து, சர்க்கரையுடன் நன்றாக அரைத்தெடுக்கவும். மீதமுள்ள தண்ணீரில் இந்த விழுதை நன்கு கலக்கி, ஒரு பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டி, லவங்கப் பட்டைப் பொடியை மேலே தூவி, அலங்கரித்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மிளகுப் பொடியையும் தூவலாம்.
—————————————————————————————————–
இளநீர் டிலைட்
தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கல் – அரை கப், ஜிலடின் (உணவுப் பொருட்களில் உபயோகமாகிற ஜிலடின், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன், காய்ச்சின பால் – ஒரு கப், சர்க்கரை, மில்க் மெய்ட், ஃப்ரெஷ் கிரீம் – தலா 2 டீஸ்பூன்.
செய்முறை: ஜிலடினை சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். இதைச் சில வினாடிகள் ஸ்டவ்வில் வைத்துக் கிளறி, ஆற விடவும். பின் இதோடு பால், மில்க் மெய்ட், சர்க்கரை, ஃப்ரெஷ் கிரீம் எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே இளநீர்த் துண்டுகளைச் சேர்த்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து உபயோகிக்கவும்.
—————————————————————————————————–
மேங்கோ லஸ்ஸி
தேவையான பொருட்கள்: மாம்பழத் துண்டுகள் (நறுக்கியது), தயிர் – தலா அரை கப், ஐஸ் கட்டிகள் – சிறிதளவு, தேன் (அல்லது) சர்க்கரை – 4 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: தயிரை மிக்ஸி அல்லது மத்து கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளையும், உப்பு, மாம்பழத் துண்டுகளையும், தேன் (அல்லது) சர்க்கரையையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்த பின் பரிமாறவும்.
—————————————————————————————————–
தண்டை
தேவையான பொருட்கள்: பால் – ஒரு கப், கன்டென்ஸ்ட் மில்க் – 2 டீஸ்பூன், பாதாம் பருப்பு – 6, பூசணி விதை, சூரியகாந்தி விதை – தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, பன்னீர் (ரோஸ் வாட்டர்) – அரை டீஸ்பூன்.
அலங்கரிக்க: ரோஜா இதழ்கள் – 4 (அல்லது) 5.
செய்முறை: பாதாம், சூரியகாந்தி விதை, பூசணி விதையை பன்னீருடன் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன், ஏலக்காய்ப் பொடி, பால், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து, நன்கு கலக்கவும். இதனுடன், சிறிதளவு குளிர்ந்த தண்ணீர் அல்லது க்ரஷ்ட் ஐஸ் சேர்த்து, கலக்கி, பரிமாறவும். மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரிக்கவும். (வட இந்திய ஸ்பெஷல் பானம் இது!)
—————————————————————————————————–
மாங்காய் பன்னா
தேவையான பொருட்கள்: மாங்காய் (துருவியது) – ஒன்று, சர்க்கரை, தண்ணீர் – தலா அரை கப், ப்ளாக் ராக் சால்ட் (இந்துப்பு), மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், சோம்புத் தூள் – ஒரு சிட்டிகை, வறுத்துப் பொடித்த சீரகப் பொடி – சிறிதளவு, க்ரஷ்ட் ஐஸ் – சிறிதளவு.
அலங்கரிக்க: புதினா இலை – சிறிதளவு.
செய்முறை: மாங்காய், சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும், ஆறிய பின் மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் இதனுடன், ப்ளாக் ராக் சால்ட், மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகப் பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறிய பின், க்ரஷ்ட் ஐஸை சேர்த்து, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும்.
(இதுவும் வட இந்தியாவின்.. முக்கியமாக, மகாராஷ்ராவின் தயாரிப்பு! அங்கெல்லாம் இதை ‘ஆம் பன்னா’ என்பார்கள். ஆம் – மாங்காய்)
—————————————————————————————————–
தர்ப்பூசணி சிப்
தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி ஜுஸ் – ஒரு கப், தயிர் – அரை கப், புதினா விழுது – அரை டீஸ்பூன், தக்காளி ஜுஸ் – அரை கப், மிளகுப் பொடி – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, தேன் – ஒரு டீஸ்பூன், லவங்கப் பட்டை பொடி – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: எடுத்துக் கொண்டுள்ள எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, லவங்கப் பட்டை பொடியைத் தூவி, அலங்கரித்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–
வெள்ளரி ஷேக்
தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் (துருவியது), பால் – தலா ஒரு கப், தேன் – 2 டீஸ்பூன், சர்க்கரை, நறுக்கிய பாதாம், பாதாம் விழுது – தலா ஒரு டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் – அரை கப்.
செய்முறை: வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன், சர்க்கரை கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள், 2 டீஸ்பூன் ஐஸ்கிரீமை மேலே வைத்தும் பரிமாறலாம்.
மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்!
—————————————————————————————————–
ரெட் வொண்டர்
தேவையான பொருட்கள்: கேரட் (பொடியாக நறுக்கியது) – ஒன்று, பீட்ரூட் (பொடியாக நறுக்கியது) – பாதி, தக்காளி (பொடியாக நறுக்கியது) – ஒன்று, ஐஸ் கட்டிகள் – சிறிதளவு, எலுமிச்சம் பழச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்.
அலங்கரிக்க: புதினா இலைகள்.
செய்முறை: கேரட், பீட்ரூட், தக்காளி மூன்றையும் தனித் தனியே மிக்ஸியில் அடித்து, சாறு எடுத்து வடிகட்டவும். இதனுடன், எலுமிச்சம் பழச் சாறு, உப்பு, மிளகுத் தூள், ஐஸ் துண்டுகள் சேர்த்து, நன்கு கலந்து, 10 நிமிடங்கள் வைத்து, புதினாவை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.
(கேரட், பீட்ரூட், தக்காளி என்று சிவப்பு நிறப் பொருட்களே கலந்திருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.)
—————————————————————————————————–
ரோஜா சர்பத்
தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள் – அரை கப், சர்க்கரை – கால் கப், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மாதுளம் பழச் சாறு – அரை கப்.
செய்முறை: ரோஜா இதழ்களை நன்றாகப் பொடி செய்து, ஒரு பாத்திரத்தில், கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து மூடி வைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பின், அதை வடிகட்டி சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, மாதுளைச் சாறு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கி மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரித்து, பரிமாறவும்.
—————————————————————————————————–
பரங்கிக்காய் டிலைட்
தேவையான பொருட்கள்: பரங்கிக்காய் (துருவியது) – அரை கப், முந்திரி விழுது – இரண்டு டீஸ்பூன், பால் – ஒரு கப், சர்க்கரை – 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை.
செய்முறை: பரங்கிக்காய்த் துருவலை கொதிக்-கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் நீரை வடிகட்டி, மிக்ஸியில் அரைத்து, இதனுடன் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்து, பாலில் கலக்கி, கொதிக்க விடவும். ஆறிய பின், ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின் பொடித்த முந்திரியை மேலே தூவி பரிமாறவும்.
—————————————————————————————————–
ஃப்ரூட்ஸ் வித் ஓட்ஸ்
தேவையான பொருட்கள்: பால் – ஒரு கப், ஃப்ரெஷ் கிரீம் – 2 டீஸ்பூன், ஆப்பிள் (நறுக்கியது) – அரை கப், பொடித்த லவங்கப் பட்டை – அரை டீஸ்பூன், மாதுளம் பழ முத்துக்கள், ஆரஞ்சு ஜுஸ், பாதாம் (நறுக்கியது), மில்க் மெய்ட் – தலா 2 டீஸ்பூன், வாழைப்பழம் (நறுக்கியது) – சிறிதளவு, ஓட்ஸ் – 3 டீஸ்பூன்,
செய்முறை: பாலில் ஓட்ஸை ஊற வைக்கவும். பால், ஆப்பிள், வாழைப்பழம், ஓட்ஸ் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். இதனுடன் ஆரஞ்சு ஜுஸ், லவங்கப் பட்டை, ஃப்ரெஷ் கிரீம், மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கலந்து, மாதுளம் பழம், பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
—————————————————————————————————–
மசாலா மோர்
தேவையான பொருட்கள்: தயிர் – ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – ஒரு பல், சீரகம் (வறுத்துப் பொடித்தது), தனியாப் பொடி – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, கொத்துமல்லி – அலங்கரிக்க.
தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – சிறிதளவு, பெருங்காயம் – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, தனியாப் பொடி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, பின் அதனுடன் தயிரையும் சேர்த்து அடிக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இதில் சேர்த்து, 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லி தூவி பரிமாறவும். அரைக்கும்போது, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.
—————————————————————————————————–
முலாம் பழ ஜூஸ்
தேவையான பொருட்கள்: முலாம் பழம் (நறுக்கியது) – ஒரு கப், சர்க்கரை – 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முலாம் பழத்தை நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–
தக்காளி ஜூஸ்
தேவையான பொருட்கள்: தக்காளி – 3, உப்பு – ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், தேன் – 3 டீஸ்பூன்.
அலங்கரிக்க: புதினா இலை – 5.
செய்முறை: கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, தக்காளி போட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தக்காளியை குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்தால், தோலை சுலபமாக உரித்தெடுக்க முடியும். இப்போது, தக்காளியை நன்றாக அரைத்தெடுத்து, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இதனுடன், மிளகுத் தூள், தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, புதினா இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–
மின்ட் ஐஸ் டீ
தேவையான பொருட்கள்: புதினா இலை – கால் கப், கொதிக்கும் நீர் – ஒரு கப், க்ரீன் டீ – – 1 பாக்கெட், தேன் – ஒரு டீஸ்பூன்.
அலங்கரிக்க: லெமன் க்ராஸ்- (அல்லது) புதினா இலை.
செய்முறை: கொதிக்கும் நீரில் தேன், டீ பாக்கெட், புதினா இலை ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி, ஆற வைத்து, தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, எடுத்து, லெமன் க்ராஸ் தூவி அலங்கரிக்கலாம்.
—————————————————————————————————–
சாக்லேட் ஸ்மூத்தி!
தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் (நறுக்கியது) – ஒன்று, ஸ்ட்ராபெர்ரி (நறுக்கியது) – – ஒன்று, மில்க் சாக்லேட் (பெரிய சைஸ்) – ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் – – அரை கப், வெனிலா ஐஸ்கிரீம் – தேவையான அளவு.
செய்முறை: சாக்லெட்டை சிறிது சூடு செய்து உருக்கிக் கொள்ளவும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஃப்ரெஷ் க்ரீம்.. மூன்றையும் ப்ளெண்டர் அல்லது மிக்ஸியில் அடித்து, உருக்கிய சாக்லேட்டுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும்.
—————————————————————————————————–
மின்ட் ஜூஸ்
தேவையான பொருட்கள்: புதினா இலை – 10, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 4 டீஸ்பூன், அலங்கரிக்க: எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள்.
செய்முறை: கல் உரலில் புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை எல்லாவற்றையும் நன்றாக நசுக்கி, தண்ணீர் சேர்த்து வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். எலுமிச்சைத் துண்டுகளை ஓரத்தில் செருகி, புதினா இலையை மிதக்க விட்டு அலங்கரிக்கவும்.
—————————————————————————————————–
பீ நட் பட்டர் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்: பீ நட் பட்டர் (றிமீணீஸீதt தீதttமீக்ஷீ – நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை வெண்ணெய் – டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கிறது) – ஒரு டீஸ்பூன், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் – 2 டீஸ்பூன், பால் – ஒரு கப், வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு ஸ்க்யூப்.
செய்முறை: பீ நட் பட்டர், மிக்ஸட் ஜாமை நன்றாக அடித்து, பாலுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஐஸ்கிரீம் வைத்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–
பானகம்
தேவையான பொருட்கள்: வெல்லம் (பொடித்தது) – அரை கப், தண்ணீர் – 2 கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி – தலா ஒரு சிட்டிகை, வெள்ளரிப் பழம் (பொடியாக நறுக்கியது) – 3 டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி, அதனுடன் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இதைக் கண்ணாடி டம்ளருக்கு மாற்றி மேலே வெள்ளரிப்பழம் தூவி அலங்கரிக்கவும்.
—————————————————————————————————–
லஸ்ஸி
தேவையான பொருட்கள்: தயிர் – ஒரு கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், ஐஸ் வாட்டர் – ஒரு கப், ஐஸ் துண்டுகள் — சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் — ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும். இதனுடன் ஐஸ் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடித்துக் கொண்டு, ஐஸ் வாட்டர் கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் கிரீமால் அலங்கரித்துப் பரிமாறவும்.
—————————————————————————————————–
மலாய் குல்ஃபி
தேவையான பொருட்கள்: கெட்டியான பால் – ஒரு கப், மில்க் மெய்ட், பால் பவுடர் – தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு.
செய்முறை: எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் நன்றாகக் கலந்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும். ஆறிய பின், சிறிய மண்ணால் ஆன கப் (அல்லது) கடைகளில் கிடைக்கும் குல்ஃபி மோல்டில் மாற்றி, ஃப்ரீஸரில் ஒரு இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் எடுத்து உபயோகிக்கலாம். பரிமாறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், வெளியில் எடுத்து வைத்து விட வேண்டும்.
குறிப்பு: மண் கப்களை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு, தண்ணீரில் ஊற வைத்து, சுத்தமாகக் கழுவ வேண்டும். தண்ணீரில் ஊற வைப்பதால் அதிலிருக்கும் மண் வாசனை போய் விடும். சுடு தண்ணீரில் மறுபடியும் கழுவி எடுப்பது மிகவும் சிறந்தது.
—————————————————————————————————–
கஸ்டர்ட்
தேவையான பொருட்கள்: வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை (இன்னும் வேண்டிய பழங்கள் – துண்டுகளாக நறுக்கியது) – 1 கப், பால் – -150 மி.லி, சர்க்கரை- – 50 கிராம், கஸ்டர்ட் பவுடர் – -2 டீஸ்பூன்
செய்முறை: காய வைத்து ஆற வைத்த நான்கு டீஸ்பூன் பாலில், இரண்டு டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து தனியே வைத்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், கலந்து வைத்துள்ள கஸ்டர்ட்- பால் கலவையை மெதுவாகக் கலந்து, அடி பிடிக்காமல் கிண்டவும். மைதா அல்வா பதத்துக்குக் கலவை வந்ததும், இறக்கி ஆற விடவும். நன்கு ஆறிய பின், பழத் துண்டுகளைப் போட்டு, தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடி தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
குறிப்பு: பழங்களுக்கு பதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். பல வகைப் பழங்களாக இல்லாமல், ஒரே வகைப் பழம் மட்டும் சேர்த்தால், அந்தக் குறிப்பிட்ட ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரைச் சேர்க்கலாம்!
—————————————————————————————————–
எலுமிச்சை ஸ்குவாஷ்
தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு, தண்ணீர் – தலா 1 கப், சர்க்கரை – 2 கப், சிட்ரிக் ஆசிட் – கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரில் சர்க்கரையை நன்றாகக் கரைத்து, கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் (ஒரு நிமிடத்திலிருந்து, இரண்டு நிமிடங்களில் பிசுக்கென்ற பதம் வரும்போது) அடுப்பை நிறுத்தி, இந்தக் கரைசலை வடிகட்டிக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, நன்கு கலக்கி, காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு என்ற விகிதத்தில் கலக்கி, பரிமாறவும்.
குறிப்பு: நிறைய ஸ்குவாஷ் தயாரித்து, ஃப்ரிட்ஜில் பத்திரப்-படுத்தினால், வருடம் முழுவதுக்கும்கூட வைத்துப் பயன்படுத்தலாம்.
—————————————————————————————————–
மேங்கோ ஸ்குவாஷ்
செய்ய தேவையான பொருட்கள்: மாம்பழம் – 5, சர்ககரை – அரை கிலோ, சிட்ரிக் ஆசிட் – 2 டீஸ்பூன், மேங்கோ எசன்ஸ் – சிறிதளவு, தண்ணீர் – மாம்பழச் சாற்றைப் போல 5 பங்கு.
செய்முறை: மாம்பழத் தோல், கொட்டை நீக்கி, மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு மாம்பழச் சாறைத் தயாரிக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து, பின் கொதிக்க வைத்து, அதில் சிட்ரிக் ஆசிட்டைச் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பின் இதை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய பின், மாம்பழச் சாறு, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது 1 கப் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து பரிமாறவும்.
—————————————————————————————————–
திராட்சை ஸ்குவாஷ்
செய்ய தேவையான பொருட்கள்: திராட்சைச் சாறு – 2 கப், சர்க்கரை – 4 கப், க்ரேப் எசன்ஸ் – 1 டீஸ்பூன், தண்ணீர் – 2 கப், சிட்ரிக் ஆசிட் – 1 டீஸ்பூன், ஃபுட் கலர் – கால் டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையைத் தண்ணீரில் நன்கு கரைய விட்டு அடுப்பில் வைக்கவும். இது கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பின் நிறுத்தவும். பின் இதை வடிகட்டி, இதனுடன் திராட்சைச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்க்கவும்.
தயாரான ஸ்குவாஷை சுத்தமான பாட்டிலில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து கலக்கி, பரிமாறவும். விருப்பப்பட்டால் பாரிமாறுகையில் மிளகுத் தூளைத் தூவலாம். சுவை கூடும்.
—————————————————————————————————–
ஆரஞ்சு ஸ்குவாஷ்
தேவையான பொருட்கள்: ஆரஞ்சுச் சாறு – 2 கப், சர்க்கரை – 6 கப், ஆரஞ்சு எசன்ஸ் – அரை டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் – கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் – 1 டீஸ்பூன், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரில் சர்க்கரையைக் கரைய விட்டு, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஸ்டவ்வில் வைத்துக் கொதிக்க விடவும். இதனுடன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடம் ஆன பிறகு இறக்கி, வடிகட்டவும். ஆறியவுடன் ஆரஞ்சுச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஸ்குவாஷ் ரெடி! ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
—————————————————————————————————–
தக்காளி ஸ்குவாஷ்
தேவையான பொருட்கள்: தக்காளி – ஒரு கிலோ, சர்க்கரை – அரை கப், உப்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை: தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறிய பின் தோலை நீக்கி, நன்றாக மசித்து. வடிகட்டவும். இந்தத் தக்காளிச் சாறுடன் சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிய பின் இந்த ஸ்குவாஷை பாட்டிலில் அடைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து நன்கு கலக்கி, தேவைப்பட்டால், புதினா, மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.
நன்றி:-சமையல் கலை நிபுணர் சமந்தகமணி பெங்களூரு
=======================================================================
அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்
30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.
30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்
கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி
30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்
PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்
PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்
PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்
அழகே வா!… அருகே வா! டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
அழகே வா!… அருகே வா!
கண்களின் சிகப்பு, நீர்வடிதல் போன்றவற்றை சரிசெய்ய நாம் சிறுநீர்பையின் சக்தி நிலையை சரிசெய்யவேண்டும்.
முகத்தின் தோற்றம் இத்தனை உறுப்புகள் சம்மந்தப்பட்டிருக்கும் போது இவற்றையெல்லாம சரிசெய்யாமல்
கல்லீரலும் பித்தபையும் சரியில்லை என்றால் அவருடைய உடம்பில் ஊசிபோன (Rancid) வாசம் வீசும் கல்லீரல் பித்தப்பை இயக்கத்தை சரிசெய்து இந்த வாசத்திலிருந்து விடுபடலாம்.
நன்றி:-டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
அண்மைய பின்னூட்டங்கள்