தொகுப்பு

Archive for the ‘கடி(மொக்கை) ஜோக்ஸ்’ Category

கடி(மொக்கை) ஜோக்ஸ்


1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

 ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……

 சீனாவுல தான் பிறந்தது…..ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, ” பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind ‘ல் அல்ல” என்கிறார். இதைத்தான் நாம் “வெட்டி ஸீன்” போடுவது என்கிறோம்….

5) நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

 நபர் – 1: அப்புறம் பாக்கெட்’ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….

6) மூன்று மொக்கைகள்: a) நைட்’ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்’ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

 b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

 c) எல்லா stage’லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage ‘ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…என்ன கொடும சார் இது?….

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி… தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது….

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது… சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்…

10) நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது… சொல்லட்டுமா?

 பெருமாள் கோவில்’ல சுண்டல் போடுறாங்க…ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….

11) True GK Facts:

** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.

** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.

** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.

** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?…..

12) ஜனவரி – 14 க்கும், பிப்ரவரி – 14 க்கும் என்ன வித்தியாசம்?

 ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி – 14 !

 அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி – 14 !!

13) மனைவி: ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…கணவன்: அடி செருப்பால! … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2.அழகு

3.நல்ல டைப்

4.கொழந்த மனசு…

5.இதெல்லாம் பொய்’ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்….

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

 மகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி….முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி….

17) தத்துவம்2010

” லாரி”ல கரும்பு ஏத்துனா “காசு”!

” கரும்பு”ல லாரிய ஏத்துனா “ஜூசு”!!

இதெல்லாம் ஒரு மெசேஜ்’ன்னு படிக்குற நீங்க ஒரு “——-” ஆமாங்க.. அதான்… அதேதான்…

நன்றி & தகவல்:- Ghouse Hafil