தொகுப்பு

Archive for the ‘ரமளானை வாஞ்சையோடு வரவேற்போம்’ Category

ரமழானே! ரமளானே!!


ரமளானை வாஞ்சையோடு வரவேற்போம்!

செளகத் அஹமது இபுறாகிம்

ஒவ்வோர் ஆண்டும் காத்திருந்தோம்
ஆண்டில் ஓர் முறை வரும் – இந்த
இனிய ஓர் திங்கள் வசந்த காலத்திற்கு
இனிதே வருக ரமளான்

பிறை கண்ட நாள் முதலாய்
ஸகர் செய்து நோன்பு வைத்து
பேரின்பம் பெற்றுத் தரும் ரமளான்
புனிதமிக்க இரவுகளைத் தந்த ரமளான்

எங்கள் பாவங்களை
கழுவிக் களையும் ரமளான்
ஏழை, பணக்காரன் ஏற்றத் தாழ்வின்றி
எல்லோரும் நோன்பு வைக்கும் ரமளான்

உள்ளங்கள் ஒளி வீசி தூய்மை பெற
ஓர் மாதம் உதிக்கும் இந்த ரமளான்
சைத்தான்கள் பூட்டப்படும் ரமளான்
சத்திய வேதம்தனை இறக்கி வைத்த ரமளான்

குர்ஆன் மாதம் என பேறு பெற்ற ரமளான்
‘இஃப்தார்’ நோன்பு திறக்குமுன் நேரம்
இறைவனிடம் இறைஞ்சி கேட்கப்படும்
எங்கள் துஆக்கள் ஏற்கப்படும் ரமளான்

‘தராவீஹ்’ தொழுகைகளில் சிறப்பாக
நன்மைகளை கூட்டித் தரும் ரமளான்
இரவு நின்று தொழுதவர்க்கு
இன்னும் நன்மையை அள்ளித்தரும் ரமளான்

லட்சிய இரவுகளாய்
‘லைலத்துல் கத்ர்’ என்றும்
பதினேழாம் பிறைநாளில்
பத்ரு யுத்த ஸகாபாக்களின்
நினைவுகளை நெஞ்சினிலே
நெகிழ வைக்கும் ரமளான்

ஸகாத் எனும் புனித வரியை
இருப்போர் தந்து, தேவையுற்றோர் பெற்று
எல்லோரும் இன்புறும் ரமளான்
இருப்போரும் பசித்துணரும் ரமளான்

மாதம் முழுவதும் பெருநாளாய்
மஸ்ஜித்கள் மக்களால் நிறைந்திருக்கும் ரமளான்
நோன்புக் கஞ்சி கூட
நிறைவாய் பள்ளிதோறும் கிட்டும் ரமளான்

தூக்கம் துறந்து இறையை துதிப்போம்
தௌபா செய்து பாவம் களைவோம்
தீமைகளை தவிர்ந்து, நன்மைகளை நாடி
இறையச்சம், மறுமையின் பயம் உணர்ந்து
நாமும் ரமளானை நிறைவு செய்வோம்
நன்மையாய் நிறைவு செய்வோம்
இனிதே வருக ரமளான்

நன்றி:- செளகத் அஹமது இபுறாகிம் Jubail, KSA

நன்றி :  madukkur.com