தராவீஹ் துஆ – TARAWEEH DUA
தராவீஹ் தொழுகைக்கு பிறகு ஓத வேண்டிய துஆ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ٭ اَللّٰهُمَّ اجْعَلْنَا بِالْاِيْمَانِ كَامِلِيْنَ وَلِفَرَائِضِكَ مُؤَدِّيْنَ وَلِلصَّلٰوةِ حَافِظِيْنَ، وَلِلزَّكٰوةِ فَاعِلِيْنَ ، وَلِمَا عِنْدَكَ طَالِبِيْنَ ، وَلِعَفْوِكَ رَاجِيْنَ ، وَبِالْهُدٰى مُتَمَسِّكِيْنَ ، وَعَنِ اللَّغْوِ مُغْرِضِيْنَ، وَفِي الدُّنْيَا زَاهِدِيْنَ ، وَفِى الْاٰخِرَةِ رَاغِيْنَ ، وَبِالْقَضَآءِ رَاضِيْنَ وَلِنِّعْمَاءِ شَاكِرِيْنَ ، وَعَلىَ الْبَلَآءِ صَابِرِيْنَ، وَتَحْتَ لِوَآءِ حَبِيْبِكَ وَنَبِيِّكَ وَصَفِيِّكَ وَرَسُوْلِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيٰمَةِ لاَئِذِيْنَ ، وَاِلَى الْحَوْضِ وَارِدِيْنَ ، وَمِنْ سُنْدُسٍ وَاٍسْتَبْرَقٍ مُتَلاَبِسِيْنَ ، وَمِنْ طَعَامِ الْجَنَّةِ اٰكِلِيْنَ ، وَمِنْ لَبَنٍ وَعَسَلٍ مُصَفًّى شَارِبِيْنَ ، بِاَكْوَابِ وَاَبَارِيْقَ وَكَأْسٍ مِنْ مَعِيْنٍ مَعَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِيْنَ ٭ اَللّٰهُمَّ اَجْعَلْنَا فِى هَذٰالشَّهْرِ الشَّرِيْفِ مِنَ السُّعَدَآءِ الْمَقْبُوْلِيْنَ وَلاَ تَجْعَلْنَا يَااللهُ يَا اَللهُ يَااَللهُ مِنَ الْاَشْقِيَآءِ الْمَرْدُوْدِيْنَ ٭ اَللّٰهُمَّ وَاِنَّ لَكَ فِيْ كُلِّ لَيْلَةٍ مِنْ لَيَالِيْ شَهْرِ رَمَضَانَ عُتَقَآءَ وَطُلَقَآءَ وَاُمَنَاءَ وَخُلَصَاءَ فَاجْعَلْنَا يَارَبَّنَا مِنْ عُتَقَآئِكَ وَطُلَقَآئِكَ وَاُمَنَائِكَ وَخُلَصَآئِكَ مِنَ النَّارِ وَالْعَفْوَ عِنْدَ الْحِسَابِ ٭ وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيَّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ
- அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
- அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
- ஆயத்துல் குர்ஸி
- இஃப்தார்துஆ
- இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது
- இறந்தவருக்காகச் செய்யும் துஆ
- என் கேள்விக்கு இறைவனின் பதில்
- கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்
- கடமையான தொழுகைக்குப்பின்
- கப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)
- கவலையின் போது ஓதும் துஆ
- ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ
- தலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)
- திடீர் சோதனைகள் அணுகாதிருக்க
- தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை
- நபியவர்களின் துஆ உஹுத் போரில்
- நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது
- பூரணமான மன்னிப்பைப் பெற
- மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது
- வீட்டிருந்து வெளியே செல்லும் போது
காலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க
بِسْـمِ اللهِ الَّذِيْ لاَ يَضُـرُّ مَعَ اسْمِـهِ شَيْءٌ فِي الْأًرْضِ وَلاَ فِي السَّمـَاءِ وَهُـوَ السَّمِـيْعُ الْعَلِـيْمُ
பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்.
وعنْ عُثْمَانَ بْنِ عَفَانَ رضيَ اللَّه عنهُ قالَ : قالَ رَسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَا مِنْ عَبْدٍ يَقُولُ في صَبَاحِ كلِّ يَوْمٍ ومَسَاءٍ كلِّ لَيْلَةٍ : بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَع اسْمِهِ شيء في الأرضِ ولا في السماءِ وَهُوَ السَّمِيعُ الْعلِيمُ ، ثلاثَ مَرَّاتٍ ، إِلاَّ لَمْ يَضُرَّهُ شَيءٌ » رواه أبو داود والتِّرمذي
- ஜும்ஆ
- துஆ
- அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
- அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
- ஆயத்துல் குர்ஸி
- இஃப்தார்துஆ
- இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது
- இறந்தவருக்காகச் செய்யும் துஆ
- என் கேள்விக்கு இறைவனின் பதில்
- கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்
- கடமையான தொழுகைக்குப்பின்
- கப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)
- கவலையின் போது ஓதும் துஆ
- ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ
- தலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)
- தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை
- நபியவர்களின் துஆ உஹுத் போரில்
- நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது
- பூரணமான மன்னிப்பைப் பெற
- மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது
- வீட்டிருந்து வெளியே செல்லும் போது
- தொழுகை
தொழுகையின் சிறப்புக்கள்
தொழுகையைப் பற்றி அல்குர்ஆன் மற்றும் ஹதீதுகளில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்!
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
‘நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை’. அல்குர்ஆன் 74:42,43
-
- இஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்
- உளூ செய்யும் முறை
- குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட
- சுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்
- ஜமாஅத் தொழுகை
- ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை
- தயம்மும்-நோயாளி உளூ செய்வது
- தொழுகை கடமையும் சிறப்பும்
- தொழுகையும் உடல்ஆரோக்கியமும்
- தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்
- பஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்
- நல்லறங்கள்
பஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்.
அதிகாலை ஆண்கள்) அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா?
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை
இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.
“அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)
ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.
படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (அஹ்மத்)
உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்:“இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை..” என்று கூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா..?”
என்று கேட்க, மக்களும் “இல்லை” என்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:
“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.” (புகாரி,முஸ்லிம்)
யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்.” (தபரானி)
அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்:
“எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:“அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு வந்தோம்.” (திர்மிதி)
அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? “ஆம். நாம் அதனை நம்புகின்றோம்.
பலஸ்தீன் எங்களுக்கே என்கிறோம். ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நடத்துகின்றோம். முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என்கிறோம். எப்படிக்
கிடைக்கும்?
அதிகாலைத் தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?
ஹூத் (அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து
அல்லாஹ்கூறுகின்றான்: “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள்வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.” (46:25)
ஸாலிஹ் நபி (அலை) அவர்களின் சமூத் கூட்டத்தைக் குறித்து
இறைவன்குறிப்பிடுகின்றான் : “திடுக்குறச்செய்கின்ற ஒரு நிலநடுக்கம்
அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற(உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (7:91) (இதே கருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும் காணலாம்.)
லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து மிகத்தெளிவாகவே
அல்லாஹ்கூறுகின்றான்: “எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனைதிண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காகநிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமாஇருக்கிறது?” (11: 81)
ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான் :
“இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம்
வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்” (29:37)
இவ்வாறு ஒவ்வொன்றாக நாம் கூறிக்கொண்டே போகலாம். மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்திலேயே அழிக்கப்பட்டுள்ளனர். ஆகவேதான், மக்கத்து சமூகமும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் செய்தியைஏற்றுக்கொள்ளாமல் ஏளனம் செய்தபோது அல்லாஹ்வின் எச்சரிக்கை
இவ்வாறுஇருந்தது: “என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக
அவசரப்படுகின்றார்களா? அதுஅவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின்,
எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாளின் அதிகாலை மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்” (37:176,177)
(இப்போது கூறப்பட்ட அத்தனை வசனங்களிலும் அதிகாலை என்பதற்கு ஸுபுஹ் எனும் அரபிச் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.)
2004-இல் ஏற்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.
துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன.
2009 -இல் ஆப்ரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பமும் அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.
ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும்
அநேகமாகஅதிகாலை 3 முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள்கூறுகின்றன.
மரணம் என்பது அல்லாஹ்வின் விதி. அது வந்தே தீரும். அதில் எந்த
ஐயமும்எவருக்கும் இருக்க முடியாதுதான். ஆனால், துர் மரணம் என்பது…?
“யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின்
பாதுகாப்பில்இருக்கின்றார்” என்று நாம் மேலே கூறிய ஹதீஸின் முழுமையான பொருள் இப்போதாவது புரிகின்றதா..?
1) தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழுவேன் (இன்ஷா அல்லாஹ்)
என்றஉறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக்
கொள்ளலாம் என்றல்ல!)
2) படுக்கும் முன் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.
3) தவறிய தொழுகைகளுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள்.
4) நாம் தொழுதால்தான் நமது பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்
5) அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.
6) சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவதே நபிவழி என்பதை நினைவில் வையுங்கள்
7) கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரண-மாக அமைந்துவிடக்கூடாது என்பதாக உறுதி எடுங்கள்.
வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.
9) ஒளுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.
10) தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத்
தண்ணீர்தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள்
அதில்தான்அடங்கியுள்ளது.
ரமழானின் சிறப்புகள்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ரமழானின் சிறப்புகள்
ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.
அருள் வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: புஹாரீ(1899), முஸ்லீம்(1957) மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.
நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பு.
“ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். முஸ்லீம் (2119) இது நோன்புக்கே உள்ள தனிச் சிறப்பாகும்.
நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரத்தில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமை மிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி
எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி (ரழி) நூல் : பைஹகி
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ◊ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ◊ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
நிச்சயமாக நாம் குர்ஆனை கண்ணியமிக்க லைலத்துல் கத்ர் என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அல்குர்ஆன் 972:1-3
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் மேலும் இம்மாதம் சிறப்பும், கண்ணியமும் மிக்க மாதமாகிறது.
லைலத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட, இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
நோன்பாளிகளுக்கு சுவர்க்கத்தில் தனி வாசல்
மறுமை நாளில் சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது. நூல்: புஹாரீ (1896), முஸ்-ம் (2121)
அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்
“நோன்பு நரகத்தி-ருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரீ (1904)
கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்
ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரீ, முஸ்லிம்
எனவே சிறப்பும், கண்ணியமும் மிக்க இந்த ரமழான் மாதத்தை அடைந்து நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நல் அமல்கள் செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக! அமீன்! அமீன்! யாரப்பல் ஆலமின்.
ரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி
அஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே…..
வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன்…. ஏதோ இருக்கேண்டீ…. நீ சொல்லு….
என்ன நஸீம்… ரமலான் மாசம்… கையில் பிடிக்க முடியாத குறையா பிஸியா இருப்பே… இப்ப என்ன சுரத்தே இல்லாம பேசறே??
இல்லடீ…. ரெண்டு நாளா நோன்பில்லை… அதான் டல்லா இருக்கேன்…. நோன்பில்லைன்னா என்னதான் செய்யறதுன்னு தெரியலை…. போரடிக்குது….
நஸீமாவின் இடத்தை நம்மில் பலரும் கடக்க வேண்டி இருக்கிறது. மாதம்தோறும் வரும் உதிரப்போக்கினாலோ அல்லது பிரசவத்திற்கு பின் வரும் உதிரப்போக்கினாலோ ரமலானை, அந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும், வேகத்துடனும் கடக்க இயலாமல் போகிறது. ஆனால் வருத்தப்பட்டு இந்த மாதத்தை நாம் விட்டு விடலாமா? அதன் ரஹ்மத்தை1, பரக்கத்தை2, அதில் கிடைக்கும் அளவிலா நன்மைகளை?????????????? தொழுக முடியாத நிலையில் என்ன இபாதத்3 செய்து விட முடியும் என்று நினைக்கும் சகோதரிகளுக்காகவே இந்தக் கட்டுரை. இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் பல சகோதரிகள் பயன் பெறக்கூடும் என்னும் நிய்யத்துடன், பிஸ்மில்லாஹ்…. 🙂
முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே… எப்படி அல்லாஹ் கட்டளையிட்ட ஐவேளைத் தொழுகையை தொழுவதிலும், நோன்பு நோற்பதிலும், ஸகாத்4 தருவதிலும் நமக்கு கூலிகள் உண்டோ… அதே போன்றுதான், அல்லாஹ்வின் கட்டளையை மதித்து இந்த உதிரப்போக்கு காலங்களில் நாம் தொழுகாமல் இருப்பதற்கும் கூலி கிடைக்கிறது. ஆம், அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றித்தான் நம் தொழுகையை விட்டிருக்கிறோம் அல்லவா…. எனவே அதுவும் ஓர் இபாதத்தே…. எனவே முதலில் அந்தக் கவலையிலிருந்து மீண்டெழுங்கள்.
இரண்டாவது, இது தீண்டாமை போன்றதொரு கொடிய நோயோ, தீட்டோ அல்ல. மாறாக, தஹாரா என்னும் தூய நிலையை வராத ஒரு இயற்கை/நிலை மட்டுமே. எவ்வாறு ‘ஜனாபா5’ நிலையை அடைந்தால் ஆண், பெண் இருவருக்குமே ‘தூய்மை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதே போல் இந்த நிலையும் வெளிப்புற அசுத்தமே தவிர அல்லாஹ்வின் முன் நிற்கக்கூடியவரின் அகத்தூய்மையை கேள்விக்குறியாக்கும் தீட்டல்ல. இதனையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஓர் ஹதீஸ்6சில் குறிப்பிட்டுள்ளார்.
‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவி த்தார். (புகாரி 1:6:297)
தீட்டாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தகைய நிலையில் அன்னையின் மடியில் தலை வைத்து குர்’ஆன் ஓத செய்திருப்பார்களா?
உடலாலும் மனதாலும் தளர்ந்து போயிருக்கும் நம்மை கஷ்டப்படுத்தாமல் இபாதத்தை இலகுவாக்கவே அல்லாஹ் தந்த பரிசு என்பதை நினைவில் வையுங்கள். அதுவும் விட்டுப்போயிருக்கும் நோன்பை மட்டுமே நமக்கு மீண்டும் பிடிக்க கட்டளையுள்ளது. விட்டுப்போன தொழுகைகளையல்ல. அதையும் யோசித்துப் பாருங்கள். மார்க்கத்தை நமக்காக எத்தனை இலகுவாக்கி தந்துள்ளான் நம் இறைவன் என்பது புரியும். அல்லாஹு அக்பர்.
எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் கூறி இருப்பது போல, அனைத்து பொருட்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை உண்டு, ஒரு ஒழுங்கு உண்டு, அது போல நமக்கும் வைத்துள்ளான். எப்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் அததற்கான ஆர்பிட் / வழி உள்ளதோ அதே போல பெண்களுக்கும் இந்த குறிப்பிட்ட காலத்தை ஒரு ஒழுங்காக அமைத்துள்ளான்.
(உஹதுப் போரில்) உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால் அதே போன்று அக்கூட்டத்தினருக்கும் (பத்ரு போரில்) காயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச்செய்கிறோம். இதற்குக்காரணம் நம்பிக்கை கொன்டோரை அல்லாஹ் அறிவதற்கும் உங்களில் உயிர்தியாகம் செய்வோரை உருவாக்குவதற்குமே ஆகும். அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.(ஆலெ இம்ரான்:140)
இன்னும் ஒரு விஷயம் உற்று நோக்கினால் புரிபடும். அது ரமதானை நாம் தராவீஹ்7 + தொழுகை + குர்’ஆன் என்னும் மூன்று விஷயங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதை. தொழுகை இல்லாதபோதுதான் மற்ற விஷயங்களைப் பற்றி நமக்கு தெரியவும் வருகிறது, அதன் மேலும் நம் ஃபோகஸை கொண்டு போக முடிகிறது. உதாரணத்திற்கு
“என்மீது அதிகமாக ஸலவாத்தை ஓதுபவர் கியாமத்து நாளில் என்னை அதிகம் நெருங்கியிருப்பார்! என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அறிவித்துள்ளார்.”
என்னும் ஹதீஸ்சை நினைத்துப் பாருங்கள். எந்தளவிற்கு நாம் ஸலவாத்8தை நினைக்கிறோம் அல்லது ஓதுகின்றோம்?? தொழுகையில் அத்தஹியாத்9திற்கு பிறகு ஓதுவதோடு பலர் நிறுத்திக் கொள்கிறோம். அதன் மகத்தான கூலியை மேலே படித்துப் பாருங்கள்…….
அதே போல்தான் நோன்பாளிகளுக்கு உணவளிப்பதும், திக்ரு செய்வதும், து’ஆ செய்வதும்.
‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)
“து’ஆ என்பது வணக்க வழிபாட்டின் சாராம்சமாகும்.” (அஹ்மத், திர்மிதி, ஹஸன் ஸஹீஹ்)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (பகரா 2:185)
அல்லாஹ் எந்த இபாதத்தின் கூலியையும் குறைத்துக் கொடுப்பவனல்ல. ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த நன்மைக்கான கூலியை வழங்குவேன் என்று வாக்களித்துள்ளான். அதுவும் அணுவளவும் குறையாமல். இன்னும் குர்’ஆனை திலாவத்தாக மட்டும் அல்லாமல் மனனம் செய்யவோ, கற்கவோ, கற்றுக்கொடுக்கவோ கூட செய்யலாம். வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு புதிதாக ஒரு சூறா / குர்’ஆனின் அத்தியாயம் கற்றுக்கொடுக்கலாம். அல்லது நீங்களே மனனம் செய்யலாம்.
இன்னும் ஈஈஈஈஸியான வழி, அவரவர் செல்ஃபோன் மூலமாகவோ, மடிக்கணிணி மூலமாகவோ, அல்லது டேப் ரிக்கார்டர், ஆடியோ சிஸ்டம் கொண்டோ எத்தனை முறை வேண்டுமானாலும் கேளுங்கள், மகிழுங்கள், மனனம் செய்யுங்கள். அல்லது மனனம் செய்து மறந்து போன சூறா எனில் அதை மீண்டும் சரி செய்து கொள்ளுங்கள். மாஷா அல்லாஹ்…. நினைத்துப் பாருங்கள், தொழும் நிலையில் இருக்கும்போது இத்தனை விதத்தையும் நாம் எண்ணிப்பார்க்கிறோமா??
தஃப்ஸீர்10 படிப்பதற்கும், படித்ததை பகிர்வதற்கும், அதற்கான கூலிகளும் உண்டு. எத்தனை விதமான தஃப்ஸீர்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் எத்தனை படிப்பினைகள் உள்ளன… எத்தனை எத்தனை புதிய செய்திகளை / ஹதீத்துக்களை / ரிவாயத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது??? அதை பகிர்வதிலும் கிடைக்கும் நன்மையை நானோ நீங்களோ அளக்க முடியுமா??
எனவே இந்த காலத்தை (ஹைல் / நிஃபாஸ்) துவண்டு போகும் காலமாக அன்றி, நமக்கு ஒரு இடைவேளை தரப்பட்டுள்ளது, அதுவும் அல்லாஹ்விடமிருந்து, அதை மனதார ஏற்றுக்கொள்வதிலும் நமக்கு கூலியுண்டு என்பதை நினைவில் வையுங்கள். தொழுகையும், குர்’ஆன் ஓதுவதும் மட்டுமே இபாதத்தல்ல என்பதை புரிந்து கொள்ளவும் ஏனைய அமல்களிலும் திக்ரையும், இறையச்சத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவும் இந்த காலத்தை ஒதுக்குங்கள்.
இன்ஷா அல்லாஹ், இனி நடைமுறையில் செய்யக்கூடிய, நற்கூலியை பெற்றுத்தரும் செயல்களை ஒரு சேர பார்ப்போம்.
நோன்பாளிகளுக்கு உணவு தயார் செய்யவும், பரிமாறவும், இஃப்தார் குழுக்களிலும் பங்கு பெறுங்கள்.
இஃப்தார் முடிந்த பின் மஸ்ஜிதில் சுத்தப்படுத்தும் வேலையில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
தராவீஹ் தொழுக வரும் தாய்மார்களின் குழந்தைகளை (Baby Care) கவனித்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு நன்மை யோசியுங்கள். குழந்தையின் தாய்மார் மட்டுமல்ல. இன்னும் மற்றவர்களும் சிரமம் இன்றி தொழுகையில் ஒன்றி தொழுக முடியும். அதற்கான கூலியும்….மாஷா அல்லாஹ் :))
இது வரை மனனம் செய்யாத சூறாக்கள், து’ஆக்களை மனனம் செய்யுங்கள்.
வீட்டிலுள்ள வயதானோருக்கு (எழுத படிக்க இயலாமல் இருப்பவர்களுக்கு) மற்றும் குழந்தைகளுக்கு சூறாக்களையும், து’ஆக்களையும் கற்றுக் கொடுங்கள். தஃப்சீர் உரக்க படித்துக் காட்டுங்கள்.
உங்கள் வீட்டிலுள்ள / தெருவில் / அணுகக் கூடிய அருகாமையில் உள்ள நோன்பு வைக்கும் வயதானோருக்கு / ஏழைகளுக்கு / சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு / புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உணவுக்கும் / மற்ற தேவைகளுக்கும் உதவுங்கள்.
“யார் தன் சகோதரனின்தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.” அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி). நூல்: புகாரீ 2262, முஸ்லிம்
(உங்களின் வீட்டுக்கு இஃப்தாருக்கு அழைத்துப்பாருங்களேன்… இன்னும் அதிகமான மகிழ்ச்சி, கூலி மாஷா அல்லாஹ்)
நிஃபாஸில் இருக்கும் தாய்மார்களே… உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் ஒவ்வொரு முறையும்(மற்ற எல்லா வேளைகளிலும் கூட:) ) ஒரு சூறாவோ/து’ஆவோ/திக்ரோ அதிகமதிகம் ஓதுங்கள். பக்கத்தில் ஒரு ஆடியோ பிளேயர் வைத்து குர்’ஆனோ / தஃப்ஸீரோ ஒலிக்க வையுங்கள். உங்கள் மேலும், இன்ஷாஅல்லாஹ் உங்களின் குழந்தை மேலும் அதன் எஃபெக்ட்டை உணர முடியும் (இது சொந்த அனுபவமே….)
அதிகமதிகம் திக்ரு செய்யுங்கள். இதுவரை மனனம் செய்யாத காலை மற்றும் மாலை திக்ருக்களை மனனம் செய்யுங்கள். ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் மற்றவர்கள் தொழும்போது நீங்களும் அமர்ந்து அந்தந்த வேளைகளுக்கான திக்ருக்களை ஓதுங்கள்.
இரவில் தஹஜ்ஜுத் நேரத்தில் எழுந்து, உள்ளம் ஒன்றி, கண்ணீர் மல்க து’ஆ கேளுங்கள். து’ஆவிற்கு முன்னும் பின்னும் திக்ரையும், ஸலவாத்தையும் அதிகப்படுத்துங்கள்.
வீட்டில் பிரிண்டர் / சிடி ரைட்டர் இருந்தால் இலவசமாக து’ஆக்கள் / திக்ருக்களை பிரிண்ட் செய்தோ / சிடியில் காப்பி செய்தோ எத்தனை பேருக்கு இயலுமோ பகிருங்கள். (இதை அச்சிட்டது / காப்பி செய்தது…ஜனாப் / ஹாஜி/இன்னாரின் ஹக்கில் து’ஆ—- என்னும் போஸ்டரெல்லாம் அடிக்காமல் இன்ஷா அல்லாஹ்…. :)) )
தஜ்வீத் சரி செய்து கொள்ளவும், அதன் சட்டங்களை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும், தகவல்களை / பாடங்களை பகிர்ந்து கொள்ளவும் நேரம் ஒதுக்குங்கள்.
அஸ்மா உல் ஹுஸ்னாவை மனனம் செய்யுங்கள். அதற்கான கூலியும் உண்டு…கூடவே உங்களின் து’ஆக்களின் போது அல்லாஹ்வின் எந்தப்பெயரை உபயோகிக்கலாம் என்பது தெள்ளென விளங்கும்….
“அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. யார் அவற்றை மனனமிட்டுக்கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6410, முஸ்லிம் 2677) இன்னும் அதிகமாகவும் து’ஆவில் ஒன்ற வைக்கும்.
ஈத் பெருநாளைக்கான ஷாப்பிங்கையெல்லாம் இந்த நேரங்களில் வைத்துக் கொண்டால் தொழும் நிலை கிடைக்கும்போது அதைப்பற்றிய கவலை இருக்காது.
இன்னும் வேறு எந்த விதத்தில் நற்கூலி பெறலாம் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள்…. அதுவே உங்களுக்கு இன்னும் பல வழிகளைக் காட்டும் இன்ஷா அல்லாஹ். மனித மனம் எப்படிப்பட்டதெனில், ஒரு கதவு மூடப்படும்போதுதான் மற்ற வழிகளை தேட ஆரம்பிக்கும் 🙂
மிக முக்கியமாக, ஹலால்11-ஆன அமல்களை செய்வதை விடவும், ஹராம்12-ஆன செய்கைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வதே மிக மிக முக்கியமானது, மேன்மையானது. எனவே புறம் பேசுவதை விட்டும், அவதூறு சொல்வதை விட்டும், பொய்யிலிருந்தும், வீண் பேச்சுக்களிலிருந்தும், நேரத்தை வீணாக்கும் செயல்களிலிருந்தும் காத்துக்கொள்ளுங்கள். இந்த காலமானது உங்களை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்குவதில்லை, உங்களின் அமல்களில் குறை வைப்பதில்லை என்பதையும் ஆனால் வீண் செயல்களால் குறையேற்படக்கூடும் என்பதையும் நினைவில் வையுங்கள்.
இன்ஷா அல்லாஹ் இந்த இடைவெளியானது இன்னும் அதிக ஈர்ப்புடனும், சக்தியுடனும், பலமான ஈமானுடனும் உங்களை தயார் செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே மகிழ்ச்சியுடனும், ஒவ்வொரு அமலுக்கும் கூலி இருப்பதில் நம்பிக்கை கொண்டும் களத்தில் இறங்குங்கள்.
…அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)… (2:185)
அகராதி:
1. ரஹ்மத்- பேரளுள்
2. பரக்கத்- அபிவிருத்தி
3. இபாதத்- இறைவணக்க வழிபாடு
4. ஜகாத் – ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கான வரி / தூய்மையாக்குதல் என்னும் பொருளும் உண்டு
5. ஜனாபா- பெருந்தொடக்கு-சிறு தொடக்கு உடையவர்
6. ஹதீஸ் – நபிமொழி
7. தராவீஹ் – ரமதான் மாதத்தில் மஸ்ஜிதில் தொழும் இரவு நேர தொழுகை
8. ஸலவாத்– நபிகள் நாயகம் அவர்களின் மீது அல்லாஹ்வின் ரஹ்மத்தும், பரக்கத்தும் இறங்க வேண்டி ஓதப்படுவது
9. அத்தஹியாத்து – தொழுகையின் கடைசி ரக்’அத்தில் ‘இருத்தல்’ நிலையில் ஓதுவது
10. தஃப்ஸீர் – திருக் குர்’ஆனின் பொருளுரை
11. ஹலால் – இஸ்லாமிய சட்டப்படி ஆகுமாக்கப்பட்டது.
12. ஹராம் — இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்படாதது.
பதற்றம் தவிர்! வெற்றி நிச்சயம்!
ஏனெனில் – பதற்றம் – நமது செயல் திறனை பாதிக்கும் (performance).
பதற்றம் – நமது முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் (interferes decision making).
பதற்றம் – எந்த ஒன்றிலும் நமது கவனத்தைக் குவித்திட இயலாமல் தடுக்கும் (shatters concentration).
இதோ பதற்றம் வரவழைக்கும் சூழல்களில் சில:
மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு.
ஏதேனும் அவசியமான பொருள் ஒன்று அவசியமான நேரத்தில் தொலைந்து விட்டால்.
அவசிய வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது Traffic jam ஏற்பட்டால்.
புதிதாக ஒரு இடத்துக்குச் சென்றிருக்கும் போது.
முற்றிலும் புதிதான மனிதர்கள் (strangers) இருக்கும் இடத்தில்.
நேர்முகத் தேர்வுக்கு முன்னர் – நேர்முகத் தேர்வின் போது.
சரி, இப்படிப்பட்ட தருணங்களில் பதற்றம் தவிர்க்க என்ன வழி?
ஆசுவாசப் படுத்துதல் – Relaxation!
நன்றாக மூச்சை இழுத்து விடுதல்.
நகைச்சுவை உணர்வை வரவழைத்துக் கொள்ளுதல்.
“நல்லதே நடக்கும்” என்ற சிந்தனையை வலிந்து நினைத்தல்.
எது நம் கைகளில் இல்லையோ அது குறித்து கவலைப் படுவதைத் தவிர்த்தல்.
எது நம் கைகளில் உள்ளதோ அது குறித்து ஆகக் கூடிய காரியத்தில் இறங்குதல்.
இறைவன் மீது நம்பிக்கை (தவக்குல்) வைத்தல். துஆ செய்தல்.
சரி, பதற்றமான சூழல்களில் அண்ணலார் (ஸல்) அவர்களின் முன்மாதிரி எப்படி என்று பார்ப்போமா?
அதுவெல்லாம் சரி! நாம் எப்படி நிதானத்தைக் கற்றுக் கொள்வது?
தினமும் அதற்குப் பயிற்சி அளிக்கின்றானே அல்லாஹு த ஆலா!
ஐந்து வேளை தொழுகையைத் தான் சொல்கின்றேன். அவசரப்படாமல் நிதானமாகத் தொழுங்கள்!
இன்னும் சொல்லப்போனால் – உளூவை நிதானமாகச் செய்யுங்கள்.
பள்ளிக்கு நிதானமாக கம்பீரத்துடன் நடந்து வாருங்கள். ஓடி வர வேண்டாம் என்பது நபிமொழி.
தொழுகையில் நிதானமாக குர் ஆனை நிறுத்தி நிறுத்தி ஓதுங்கள்.
மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக. (73: 4)
தொழுகையின் ஒவ்வொரு நிலையிலிருந்து மறு நிலைக்குச் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்கவும்.
நாம் தான் இரண்டு ரக்அத் தொழுகையை இரண்டு நிமிடங்களில் முடிப்பவர்கள் ஆயிற்றே!
அவசரம் அவசரமாக தொழுது முடிக்கப் படும் தொழுகையும் நமக்கு எப்படி பயிற்சியாக அமையும்?
இன்றிலிருந்து நிதானமாகத் தொழுவோம் தானே!
பதற்றம் தவிர்க்க இதுவே சிறந்த வழி! வெற்றிக்கான வழியும் கூட!
நமது பாங்கொலியே இதற்குச் சான்று!
தொழுகை – யாசர் அரஃபாத்
தோடுத்
தோளைக்கொண்டு;
நொறுக்கித் தள்ளு;
தீண்டாமை இன்று!
பயிற்சிப் பெற்ற
இராணுவமும்
மிரட்சிக் கொள்ளும்;
நம் ஒழுங்கைக் கண்டு!
தக்பீர் சொன்னக்
குரலைக்கேட்டு;
சப்தம் குலையும் நம்
அமைதிக்கண்டு!
தொழுகை என்றக்
கவசம் கொண்டு;
தீமையைக் கொல்வாய்
உடனே இன்று!
தொழுகாத உனக்கு;
தொழுகை வைக்குமுன்னே;
தொழுது விடுவது நன்று;
இல்லை;
நரகம் திண்றுவிடும்
உன்னை மென்று!
கட்டிப்பிடிக்கும்
கஃபன் உனக்குண்டு
மறக்காதே;
இறைவனை மறந்துவிட்டு
இறக்காதே!
பூரணமான மன்னிப்பைப் பெற….!
ஹம்ஸா ரழி
(… அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (89:27-30)
நன்றி:- http://www.ottrumai.net/
- அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
- அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
- ஆயத்துல் குர்ஸி
- இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது
- இறந்தவருக்காகச் செய்யும் துஆ
- கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்
- கடமையான தொழுகைக்குப்பின்
- கப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)
- கவலையின் போது ஓதும் துஆ
- ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ
- தலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)
- தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை
- நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது
- மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது
- வீட்டிருந்து வெளியே செல்லும் போது
- இஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்
- உளூ செய்யும் முறை
- குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட
- சுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்
- ஜமாஅத் தொழுகை
- ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை
- தயம்மும்-நோயாளி உளூ செய்வது
- தொழுகை கடமையும் சிறப்பும்
- தொழுகையும் உடல்ஆரோக்கியமும்
- தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்
அண்மைய பின்னூட்டங்கள்