தொகுப்பு

Archive for the ‘ஷிர்க் என்றால் என்ன?’ Category

ஷிர்க் என்றால் என்ன?


அஸ்ஸலாமு அலைக்கும். அல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூளிள்ளஹி (ஸல்).  மற்றும் அல்லாஹின் சாந்தியும் சமாதானமும் சஹாபாஹ் (ரலி) பெரு மக்கள் மீதும், தாபியீன்கள், தப’அ THAABIYEENGALUKKUM (ரஹ்), மற்றும் இமாம்கள் (ரஹ்), எனது உஸ்தாது, ஷைகுமார்களின் (ரஹ்) மீதும் உண்டாவதாக.

“வமா தௌபீகீ இல்லா பில்லாஹ்”

இன்றைய நாட்களில், சிலர் அல்லாஹ் உடைய அச்சம் இல்லாமல் சாதாரண முஸ்லிகளை முஷ்ரிக்குகள் என்று வாய் கூசாமல் சொல்லியும் எழுதியும் திரிகிறார்கள். இஸ்லாமும், ஷிர்க்கும் இரு எதிர் எதிரானவைகள் என்பதில் ஐயமில்லை. ஷிர்க்கை நீக்கி மனிதர்களை சுத்தமாக்க வந்தது தான் இஸ்லாம். ஷிர்க் செய்வது கண்டிக்கத்தக்க மேஜர் குற்றம். ஆனால் பொய்யாக வேண்டும் என்று தனது மனம் போன போக்கில் ஒரு முஸ்லிமை முஷ்ரிக் என்று சொல்லுவது கடினமான க்னடிக்கதக்க குற்றம்.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “உண்மையில் உங்களில் ஒரு மனிதனை பற்றி நான் பயப்படுவது என்னவென்றால் யார் அதிகமாக அல்லாஹுடைய கலாமகிய அல்-குர்’ஆணை ஓதுகிறார்களோ, அவருடைய முகம் பிரகாசிக்கும், மேலும் அவர் இஸ்லாத்தின் பவர் உடைய பிரதிநிதியாக வருவார். இது அல்லாஹ் உடைய விருப்பம் இருக்கும் வரை தொடரும். பிறகு இவைகள் எல்லாம் அவரிடமிருந்து எடுக்கப்பட்டுவிடும், எப்பொழுது அவர் தாம் ஓதியவற்றை எல்லாம் தனக்கு பின்னால் போட்டு விட்டு, தனது அண்டையரை “முஷ்ரிக்” என்று குற்றம் சுமத்தி வாளை கொண்டு தாக்குவார். எந்த இரண்டும் ஷிர்க் என்ற கணக்கில்  அமையும், அதாவது தக்குகிரவரா அல்லது தக்கப்படுகிரவரா? என்று ரசூல் (ஸல்) அவர்கள் வினவ பட்டார்கள். அதற்க்கு, தாக்குகிறவர் (அடுத்தவர்களை “முஷிர்க்” என்று சொல்லுபவர்) என்று ரசூல் (ஸல்) அவர்கள் பதில் உரைத்தார்கள். இந்த ஹதீத் JAYYID என்ற வகையில் வருகிறது. (ஆதாரம்: தப்சீர் இப்ன் கதீர், VOL 2 P265, AMJID ACADEMY, LAHORE,PAKISTAN).

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபை கொண்டு, மேலே கூறப்பட்ட ஹதீத், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தங்களுடைய மனோ இச்சைக்கு தக்கவாறு அல் குர்’ஆன் வாக்கியத்திற்கு அர்த்தம் செய்து கொண்டு சுன்னது வல் ஜமாஅத் காரர்களை முஷ்ரிக் என்று ஷைத்தான் தௌஹீத் வாதிகள் குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை நிரூபிக்கிறது.

ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் இணை வைத்தல் என்பது ஏக வல்லவனாகிய இறைவனை போல் “தாத்” திலும், சிபாத்- தன்மையிலும், அப்-ஆல்-செயல்களிலும் (தன்னில் தானாக தனித்து இயங்கும் சக்தியோடு) மற்றொண்டு இருக்கிறது என்று நம்புவது.  மாற்று மதத்தோர் தாங்கள் வணங்கும் கல், மண், சூரியன், சந்திரன், நெருப்பு, அனைத்தும் வணக்கதுகுரியான என நம்ப்கிரார்கள்.  இதுவே இணை வைத்தலாகும். (SHARAH AKAATHUN NASABI)
அல்-குர்’ஆன், அல்-ஹதீத் அடிப்படையில் ஷிர்க் என்றால் என்ன என்று விளக்குவது பொருத்தமாக இருக்கும்.  அதாவது மூன்று வகையான ஷிர்க்குகள் உள்ளது.

1. SHIRK – வணக்கத்தில் (WORSHIP)
2. SHIRK – உள்ளமையில்  (PERSONALITY)
3. SHIRK – குணத்தில்/தன்மையில்  (ATTRIBUTE)

முதல் வகை: அல்லாஹ்வை தவிர்த்து எந்த பொருளையும் அல்லது எந்த மனிதனையும் வணங்க தகுந்தது என்று ஒத்து கொள்வது.

இரண்டாவது வகை: எந்த பொருளையும் அல்லாஹ்வுக்கு சமமாக கருதுவது.

மூன்றாவது வகை: அடுத்தவர்களின் குணங்கள் அல்லாஹ் உடைய குணங்களை போன்று என்று கருதுவது.

அல்லாஹு தஆலா ஷிர்க் ஐ ( WORSHIP) தடுப்பதில்  கீழ் கண்டவாறு எச்சரிக்கிறான்:

1. ஆகவே எவர் தன் இரச்சகனை சந்திக்க ஆதரவுவைக்கிராரோ, அவர் நற்கருமங்களை செய்யவும். தன் இரச்சகனின் வணக்கத்தில் அவர் எவரையும் இணையாகக வேண்டாம். (சூரத்துல் KAHF, VERSE 110)

2. நபியே! நீங்கள் உமது இரச்சகனை தவிர மற்ற யாரையும் வணங்க வேண்டாம். ( SURATHUL BANI ISRAEL VERSE 23)

எதிர் மறையில், உள்ளமையிலும் (PERSONALITY), குணத்திலும் (ATTRIBUTE) SHIRK ஐ பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறான்:

1. மேலும் அவனுக்கு நிகராக ஒன்றும்  இல்லை (SOORTHAUL
IKHLAS VERSE 4).

2. அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் பஹிங்கர வழி கேட்டில் இருந்தோம்,  அகிலத்தாரின் இரச்சகனான இறைவனுக்கு உங்களை (சிலைகளை) இணையாக ஆக்கி வைத்த போது. (SURAH ASHUR’AA VERSE 97 & 98)

மேலே கூறப்பட்ட ஆயத்துகள் வணக்கத்தில், உள்ளமையில், குணத்தில் ஷிர்க் ஐ காட்டுகிறது. இவைகள் மிக பெரிய மோசமான வரம்பு மீறிய குற்றம்.

ஷிர்க் ஒரு இழி செயல் அல்லது வரம்பு மீறிய செயல் என்று இறைவன் கூருஹிறான். “நிச்சயமாக இணைவைத்தல் மிக பெரிய அநியாயம்” (SURATHUL LUKMAAN VERSE 13)

அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் (சுன்னத் வல் ஜமாஅத்) எந்த விதத்திலும் படைத்தவனுக்கு வணக்கத்திலும், உள்ளமையிலும், குணத்திலும் இணை ஒரு காலமும் வைக்கமாட்டோம். அவ்வாறு தவறாக எங்களை எண்ணுபவர்களை அல்லாஹ் பார்த்து கொள்ளுவானாக என்று அல்லாஹ் இடம் பொறுப்பை விட்டு விடுஹிறோம்.

வணக்கம் (WORSHIP) என்றால் என்ன?

மேலே கூறப்பட்ட மூன்று ஷிர்க் வகைகளிலும் ஏற்படும் சந்தேஹங்களையும், குழப்பங்களையும் அகற்றுவது நல்லது என்று நினைக்கிறோம்:

1.” மிக தாழ்மையோடு தன்னை இறைவனிடம் ஒப்படைப்பது”. – ( BY இமாம் BAGAAWI (RAH) – MUALIM UT-TANZEEL P-22 VOL-1)

2. “THE HIGHEST RANK OF HUMILITY – அதிக பட்ச தாழ்மையுடன் தன்னை ஒப்படைப்பது” – (BY  அல்லாமா அலூசி (RAH) – RUHUL MA’ANI P-86 VOL-1)

3. “வணக்கம் என்பது தாழ்மையின் END LIMIT” – ( BY QAZI BAIDAWI- BAIDAWI – P9 – VOL-1)

4. “கீழ் படிதல் ஒரு வணக்கம்” (IBAADHA) – BY ABU HAYYAN ANDOULISI – AL BAHRUL MUHEET – P23- VOL 1)

மேலும் நிறைய MUFASIRREN கள் இபாதா என்பது மிக தாழ்மையுடன் சிலருக்கு முன்னால் சமர்பிப்பது என்பதை அழுத்தி சொல்வது.

ஆனால் கீழ் கண்ட ஆதாரங்களை கொண்டு வணக்கத்திற்கும், மரியாதைக்கும் வித்தியாசம் உண்டு என்பதை புரிந்து கொள்ளலாம்.

1. சஹாபா (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அதிமான தாழ்மை காட்டியது. சஹாபா (ரலி) பெரு மக்கள் காட்டிய தாழ்மையை கீழ் கண்ட நிகழ்ச்சியின் மூலமாக விளக்கினால் தகும். இது வஹ்ஹபிய உலமா தலைவரில் ஒருவரான SAFEE UR RAHMAN – MUBARAK PURI-அவர்களின் வார்த்தை அல்லது ஆதாரத்தின் வெளிப்பாடு:

“உர்வா அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களுக்கும், சஹாபா (ரலி)  பெரு மக்களுக்கும் இருந்த தொடர்பை ஆராய்ந்த பிறகு, தங்களுடைய மக்களிடம் திரும்பி வந்த பிறகு, மக்களே ரோமின் மன்னர் சீசர்க்கும், மற்றும் மன்னர்  நெகுஸ் (NEGUS) க்கும், ரோமன் மக்கள் மிகுந்த மரியாதையை, முஹம்மது (ஸல்) நபிக்கு அவர்களுடைய தோழர்கள் மரியாதை கொடுத்ததை போன்று, கொடுக்க வில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் தண்ணீரை கொண்டு கழுவும் பொழுது, அந்த தண்ணீரை சஹாபா (ரலி) பெரு மக்கள் கையில் ஏந்தி நிலத்தில் சிந்த விடாமல் தங்கள் கைஹளில் ஏந்தி கொண்டார்கள், பிறகு தங்கள் முகத்திலும், உடலிலும், தலையிலும் தடவி கொண்டார்கள். மேலும் முஹம்மது (ஸல்) நபி அவர்கள் உத்தரவு ப்ரபித்தால் அதை தலையாய கடமையாக ஏற்று செய்கிறார்கள். முஹம்மது (ஸல்) நபி அவர்கள் பேசும் போது, வாய் மூடி மெளனமாக கேட்கிறார்கள். மரியாதைக்காக,சஹாபா (ரலி) பெரு மக்கள் ரசூல் (ஸல்) அவர்களை நேருக்கு நேராக பாக்காமல் மரியாதை செய்தார்கள்.  (ஆதாரம் – AR RAHEEQUL MAKHTOOM PAGE 40 -MAKTABA SALAFIA, LAHORE)

2. தொழுகையில் கையை கட்டி தொழுவதும் (FOLDED ARMS) , ருகுவில் கையை திறந்து தொழுவதும் (OPEN ARMS) ஒரு வகை இபாதத். ஆனால் ரசூல் (ஸல்) அவர்களுக்கு முன்னால், முதலாளிகளுக்கு முன்னால், தாய் தந்தையர்களுக்கு முன்னால் கையை கட்டி (FOLDED ARMS) நிற்பது ஒரு மரியாதையே தவிர வணக்கம் இல்லை. ரசூல் (ஸல்) அவர்களின் முபாரக்கான எச்சிலை முகத்தில் தடவிக்கொள்வது ஒரு அதிகாமாக செலுத்தும் மரியாதையை. அதாவது கையை கட்டி நிற்பதை விட. (சஹாபாக்கள் (ரலி) ரசூல் (ஸல்) காட்டிய மரியாதையை என்ற தலைப்பில் மேற்கூரப்பட்டவற்றை விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்.)

3. மேலும் மக்காஹ் முஷ்ரிகீன்கள் சிலைகளை வணங்கும் பொழுது “நாங்கள் ஏன் சிலைகளை வணங்குஹிறோம் என்றால் அவைகள் எங்களை அல்லாஹ்வின் பக்கத்தில் சேர்த்து வைக்கும் என்பதற்காகவே அன்றி நாங்கள் வணங்கவில்லை. (SURATHUL ZUMAR VERSE – 3)

அதாவது முஷ்ரிகீன்கள் அல்லாஹ்வை வணங்குவதற்கு சிலைகளை தேர்ந்த்டுத்து கொண்டார்கள். ஆனாலும் அவைகளை  (சிலைகளை ) (தாத்தில்) முழுமையாக தன்னாகவே உள்ளமையில் உள்ளது என்று நம்பியதால், அதை வணங்கியவர்கள் வழி கெட்டு போனார்கள். இதை தான் இறைவன் அல் குர்ஆனில் பல இடங்களில் சுட்டி காட்டுகின்றான்.  அவ்வாறு இல்லை என்று வாதிட்டால், கீழ் காணும் ஆயத்துகளுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்: அல் குரான் : 7:117, 3:49, 54:1

திர்மதி (ரஹ்) இமாம் அவர்கள் “கையையும், காலையும் முத்தமிடல்” என்ற பாடத்தில் ஒரு ஹதீதை அறிவிக்கிறார்கள். அவர்கள் சொல்லுகிறார்கள், யூத நாட்டை சேர்ந்த சில மக்கள் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள், ரசூல் (ஸல்) அவர்களிடம் கேள்விகளை கேட்டு விட்ட பிறகு, ரசூல் (ஸல்) அவர்கள் சொல்வதெல்லாம் சரியே என்று ஒப்புக்கொண்டு, ரசூல் (ஸல்) அவர்கள் உண்மையான நபி என்று அறிந்த பிறகு வந்தவர்கள், ரசூல் (ஸல்) அவர்களின் கையையும், காலையும் முத்தமிட்டார்கள். பிறகு ரசூல் (ஸல்) அவர்கள் அல்லாஹ் இன் உண்மையான நபி என்று நற்சாட்சியம் கூறினார்கள்.  இந்த ஹதீத் நசயீ (ரஹ்) இமாம் அவர்களின் “AS-SUNAN”(VOL 7, PAGE 111, HADEETH # 4078), AL IMAAM IBN MAAJAA IN “AS SUNAN” VOL 2 – 1221, HADEEDH # 3705, THIRMADHI IMAAM IN “AS-SUNAN” VOL 5, PAGES 77,305 HADEEDH # 2733, 3144 AND IMAAM AHMED IBN HANBAL IN “AL MUSNAD” VOL 4, PAGE 239,240 AND OTHER MUHADHITHEEN.

IBN KATHEER அவர்கள் சூரத்துல் மாயிதா 101 ஆயத்துக்கு விளக்க உரை எழுதும் பொழுது ஒரு நிகழ்வை குறிப்பிடுகிறார்கள். அதாவது ரசூல் (ஸல்) அவர்கள் சில வற்றின் மீது கோபமாக இருந்தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் எழும்பி நின்று குனிந்து ரசூல் (ஸல்) அவர்களின் ஆசிர்வதிக்கப்பட்ட பாதங்களை முத்தம் இடுகிறார்கள். பிறகு உமர் (ரலி) கூறுகிறார்கள், யா ரசூலுல்லாஹ் (ஸல்), நாங்கள் அல்லாஹ்வை எங்களுடைய இறைவனாகவும், உங்களை அல்லாஹ் உடைய ரசூலாகவும் (ஸல்), இஸ்லாம் ஐ எங்களுடைய தீனாகவும், அல் குரானை எங்களுடைய வழிகாட்டியாகவும், தலைவராகவும் சந்தோஷத்துடன் பொருந்தி கொண்டோம். அல்லாஹ் மேலும் உங்களுடன் (ஸல்) நன்மை பாராட்டுவானாக என்று உமர் (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்கள் சந்தோசம் அடையும் வரை சொல்லி கொண்டே சென்றார்கள். (தப்சீர் இப்ன் கதீர்) மற்ற விளக்க உரையாளர்களும் மேலே சொன்ன நிகழ்வை சொல்லி காட்டு கிறார்கள்.

இதில் முக்கியம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் உமர் (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களின் பாதத்தை முத்தமிட்டதை ரசூல் (ஸல்) அவர்கள் தடுக்கவும் இல்லை என்பது குறுப்பிடத்தக்கது.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் ஊராகிய ‘நிஷாபூர்” வந்த பொழுது, இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் இமாம் புகாரி (ரஹ்) அவர்களை காண வந்தார்கள். வந்த உடன், இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் புகாரி (ரஹ்) அவர்களின் நெற்றியில் முத்தமிட்டார்கள். பிறகு புகாரி (ரஹ்) அவர்களிடம் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் வேண்டியது என்ன வென்றால் ” ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியரே, ஹதீத் கலையின் தலைவரே, ஹதீத் கலையின் டாக்டரே (தபீப்), உங்களின் பாதங்களை முத்தமிட அனுமதி தாருங்கள். (ஆதாரம்: IBN NUQTA IN AT-TAQYID LI MARIFA RUWAT AS SUNAN WAL MASANID,- VOL 1 PAGE 33, DHAHABI IN SIYAR ALAM AN NUBALA –  VOL 12, PAGE 432, 436, NAWAWI IN TAHDHIB AL ASMA WAL LUGHAT – VOL 1 PAGE 88, IBN HAJAR ASKALAANI , MUQADDIMA FATH AL BARI – PAGE 488 AND NAWAB SIDDIQ HASAN QANOOJI IN AL HITTA FIL DHIKR AS SIHAH AS SITTA – PAGE 339.

குறிப்பு : இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் புகாரி (ரஹ்) இமாமை புகழ்ந்ததை வைத்து பார்க்கும் பொழுது நமக்கு தோன்றுவது “ஷாகுல் ஹமீது” என்று பெயரிடல்லாம்.

(மரியாதையை கருதி கையையும், காலையும் முத்தமிடல் என்னும் தலைப்பில் விரிவாக எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்.
முக்கியம் கவனிக்க வேண்டியது யாருக்கு மரியாதையை செய்தாலும் அவைகள் தானாக தன்னிச்சையாக அல்லாஹ் உடைய சக்திக்கு அப்பாற்பட்டு  இயங்கும் என்று நம்பாமல் இருந்தால், அது மரியாதை என்ற அடிப்படையில் தான் வரும்.

மேலும் விளக்கம் பின்வருமாறு:

பெருமானார் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த எல்லா விஷயங்களிலும் உள்ளத்தில் அறிந்து உண்மையாக்கி வைப்பது தான் ஈமான் ஆகும். இவ்வாறு உண்மை படுத்துவதை விட்டால் அல்லது மறுத்தால் அவன் காபிர்.

பெரும் பாவம் முமினான அடியானை ஈமானை விட்டும் அப்புரப்படுதாது, ஏனென்றால் ஈமானின் எதார்த்த நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. (SHARAH AQAAIDUN NASABI)

அடுத்து முற்றாக வணக்கங்களை விட்டு விட்டு இருப்பதுவும், பாவங்களை செய்வதுவும், முமினான அடியானை ஈமானை விட்டும் போக்கி விடாது. உதாரணமாக தொழுகையை விட்டால் அவன் காபிறல்ல. ஆனால் கடமையை செய்யாது விட்ட பாவி. அதே நேரத்தில், தொழுவதே கடமை இல்லை என மறுத்தால் அவன் காபிர் என்பதில் சந்தேகமில்லை.  (SHARH FIKHUL AKBAR).

“கடமைகள் புரிவது சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கை படி ஈமானின் பூர்ணதுவதிற்கு ஷரத்து. அமலை விட்டால் முஸ்லிம் தான், ஆனால் சம்பூரந்தை (முழுமையை) விட்டு விட்டான். (துஹ்பாதுள் முரீத்)

ஷிர்க் இணை வைத்தல் என்பது ஏக வல்லவனாகிய இறைவனை போல் “தாத்” திலும், சிபாத்- தன்மையிலும், அப்-ஆல்-செயல்களிலும் (தன்னில் தானாக தனித்து இயங்கும் சக்தியோடு) மற்றொண்டு இருக்கிறது என்று நம்புவது.  மாற்று மதத்தோர் தாங்கள் வணங்கும் கல், மண், சூரியன், சந்திரன், நெருப்பு, அனைத்தும் வணக்கதுகுரியான என நம்ப்கிரார்கள்.  இதுவே இணை வைத்தலாகும். (SHARAH AKAATHUN NASABI)

“இணை வைத்தல் என்பது தெய்வீகத் தன்மைகளில் இறைவனக்கு கூட்டானவன் இருப்பதாக தரிபடுதுவது.” (SHARAH AKAATHUN NASABI).

“அவர்கள் (இணை வைப்பவர்கள்) அவற்றை வணக்கத்துக்கு உரியவை என்று நம்புவது தான் அவர்களை ஷிர்க் இல் சேர்த்தது.” (SHAHIDHUL HAQ)

மேலும் இவர்களின் விபரீதமான கருத்தை பாருங்கள்:

1. தூரமான இடத்தில இருந்து ஒருவரை அழைக்கும் பொழுது  அழைத்தவன் காபிராகி விடுஹிறான், அழைப்புக்கு செவி ஏற்றவேனும் காபிர்.  (யா சாரிய (ரலி) அல் ஜபல் என்று கூறிய உமர் (ரலி)) (நவூது பில்லாஹி மின்ஹா).

2. அல்லாஹ் ஐ தவிர்த்து பிறரிடம் உதவி கோரக்கூடாது, அவ்வாறு கோரினால் அது ஷிர்காம்.  இப்பூஉலகில் நமது தேவைகளை பிறரிடம் கேட்டு பெறாமல் யாரிருக்க முடியும்?. எந்த தனி மனிதனும் தத்தம் தேவைகளை நிறைவு செய்திட பிறர் ஒருவரது உதவியை நாடித்தானாக வேண்டும். இப்படி உபகாரம் கேட்பவர்கள் எல்லாம் காபிர் என்றால் யார் தான் முஸ்லிம்?

3. அருள் மறை குர்ஆனில் : ஆதம் (அலை) அவர்களுக்கு சஜதாஹ் செய்ய – அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான். இப்படி மரியாதை செய்ய எண்ணி செய்யும் சஜதாஹ் இணை வைத்தல் என்றால் அல்லாஹ் மலாயக்கதுமார்களை (அலை) இணை வைக்க ஏவினான? ஏவி இருந்தால் கட்டளை இட்ட காவலன் அல்லாஹும், சஜ்தா செய்த மலக்குமார்களும் (அலை) காபிர்களா? (நவூது பில்லாஹி மின்ஹா).

3. யூசுப் (அலை) அவர்களுக்கு அவர் தம் பெற்றோர் சகோதரர்களும் சஜ்தா செய்தனரே! ஆக சஜ்தா செய்த யாகூப் நபி (அலை) மற்றும் அவர்களின் சகோதரர் களும் காபிர்களா? (நவூது பில்லாஹி மின்ஹா)

இறைவன் ஏதேனும் சமூகத்தை தனக்கு இணை வைக்கும் படி எவுவானா? மார்க்க வல்லுநேர்களே தீர்பளியுங்கள்.

இவ்வாறாக இக்கொள்கை குருடர்கள் கொஞ்சம் கூட இறை அச்சமின்றி நபிமார்களை, அமரர்களை முஷ்ரிக்குகளாக ஆக்கி வந்து இருக்கின்றனர்.

ஆகவே, கீழ் கண்ட ஹதீதை பதிவு செய்து அடுத்த நமது கட்டுரையாகிய “தௌஹீத்’ என்றால் என்ன ? என்பது பற்றி எழுத இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

“கடைசி காலத்தில் ஒரு கூட்டம் உண்டாகும், அவர்கள் சிறியவர்களாகவும் அறிவில் அற்பமானவர்களாகவும் இருப்பார்கள், ஹதீதுகளை, பெரியோர்களின் பேச்சுக்களை பேசுவார்கள். குரானை ஓதுவார்கள். ஆனால் அவர்களுடைய ஈமான் அவர்களது தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது, வில்லில் இருந்து அம்பு வெளியே பாய்ந்து செல்வது போல் அவர்கள் சன்மார்க்கத்தில் இருந்து அகன்று போய் கிடப்பார்கள். (ராவி: அலி (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

மேலும் அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக: ” எனது பிற்கால உம்மத்துகளில் சிலர் ஏற்படுவார்கள் (மற்றொரு ரிவாயது திர்மதி ஷரீபில் வருகிறது) அதிகமாக பொய்யர்களும், எமாற்றுக்காரர்களும் ஏற்பெடுவார்கள் என்பதாக) நீங்களோ உங்களின் மூதாதையர்களோ கேள்விப்பட்டு இராத செய்திகளை அவர்கள் கூறுவார்கள். கிட்டே நெருங்க விடாமல் ஜாக்கிரதையாக அவர்களை விட்டும் நீங்கள் விலகி அகன்று விடுங்கள், இல்லாவிடில் அவர்கள் உங்களை வழி கெடுத்து பித்னா குழப்பத்தில் ஆக்கி விடுவார்கள். (ஆதாரம் முஸ்லிம்)

இவர்களின் கொள்கைக்கும் முஹ்தஜிலா, காரிஜியா களின் கொள்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ” காபிர்கள் அளவில் இறங்கிய ஆயத்துகளை முஸ்லிம் அளவில் காரிஜியாக்கள் மாற்றி சாற்றியதின் காரணமாக அப்துல்லாஹ் இப்ன் உமர் (ரலி) அவர்கள், ஆண்டவனுடைய சிருஷ்டிகளில் எல்லாம் மிக கெட்ட சிருஷ்டியாக காரிஜியாக்களை கணித்தார்கள். (ஆதாரம் புகாரி)

“AAKHIRU THA’WAANAA ANIL HAMDHU LILLAHI RABBIL AALAMEEN.
“சல்லல்லாஹு அலா முஹம்மது, சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்”
“நல்லதை பின் பற்றுவோம், தீயதை விட்டு விலகுவோம்.

“சத்தியம் நிலைக்கட்டும், அசத்தியம் அழியட்டும்”.

—————————————————————-

நன்றி:-இனைய நன்பர்

################################################################

நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2