அழகே வா!… அருகே வா! டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
அழகே வா!… அருகே வா!
கண்களின் சிகப்பு, நீர்வடிதல் போன்றவற்றை சரிசெய்ய நாம் சிறுநீர்பையின் சக்தி நிலையை சரிசெய்யவேண்டும்.
முகத்தின் தோற்றம் இத்தனை உறுப்புகள் சம்மந்தப்பட்டிருக்கும் போது இவற்றையெல்லாம சரிசெய்யாமல்
கல்லீரலும் பித்தபையும் சரியில்லை என்றால் அவருடைய உடம்பில் ஊசிபோன (Rancid) வாசம் வீசும் கல்லீரல் பித்தப்பை இயக்கத்தை சரிசெய்து இந்த வாசத்திலிருந்து விடுபடலாம்.
நன்றி:-டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
BLOOD PRESSURE – இரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும் டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD
Blood Pressure-இரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்
டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) (Chinese Traditional Medicine).
இதயம்: இதற்காக மனிதன் எதையும் இழக்க தயாராகின்றான். அதனால் தானே என்னவோ இன்று பார்க்கும் இடமெல்லாம் ஹார்ட் ஸ்பெசலிஸ்டுகளின் போர்டுகள் தென்படுகின்றன. எந்த பத்திரிக்கையைப் பார்த்தாலும் என் மகனுக்கு ஹார்ட் ஆபரேசன் செய்ய 5 லட்சம் தேவை, உதவி செய்யுங்கள். என் கணவருக்கு ஹார்ட் ஆபரேசன் செய்ய வேண்டும் உதவி செய்யுங்கள் என்று விளம்பரங்கள் வருகின்றன. வரும் விளம்பரங்கள் உண்மை தான் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை. அவர்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் ஆபரேசன் தான் தீர்வு என்று சொல்கிறார்களே அது தான் உண்மையா?இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
bp ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்று சொல்லிக் கொள்ள தகுதி உள்ளவன் இறைவன் மட்டுமே. 1942-ல் இந்திய மருத்துவ சட்டம் ஸ்பெசலிஸ்ட் என்று யாரும் போர்டு போட கூடாது என்று தடை விதித்தது. இச் சட்டம் இயற்றிய பிறகும் இவர்கள் ஸ்பெசலிஸ்டுகள் என்று போர்டு போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றுவது மன்னிக்க முடியாத குற்றம். அது மட்டுமல்ல அவர்களுக்கு ஆபரேசன் தான் தீர்வு என்று தவறாக வழி காட்டி அவர்களின் பொருளாதாரத்தை நாசம் செய்து குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டுவருவதை மனசாட்சி உள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஏழ்மை நிலையில் உள்ள பாமரனிடம் கூட இரக்கமில்லாமல் 5 லட்சம் கொண்டு வா, 10 லட்சம் கொண்டு வா இல்லை என்றால் உன் மகன் இறந்து விடுவான் என்ற அச்சத்தை உண்டாக்கி அவன் உடமைகளை நாசம் செய்து அவனை கடன்காரனாகவும் பிச்சைக்காரனாகவும் மாற்றி ஆபரேசன் வெற்றியடைய வேண்டும், நலம் பெற வேண்டும் என்று வந்தவனை நடைபினமாக மாற்றி வாழ்நாளெல்லாம் மருந்து மாத்திரைகளோடு வாழ்வை நாசம் செய்யும் கொடுமை இந்த நவீன மருத்துவத்தில் தான் உள்ளது.
நம் வீட்டிலோ, நம் தெருவிலோ அல்லது நம் ஊர்களிலோ பலரை இது போல் சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆபரேசன் தான் தீர்வு என்ற டாக்டர்களின் தவறான முடிவை கேட்டு பல லட்சம் பணம் திறட்ட முடியாமல் கதி கலங்கி நிற்கும் எத்தனையோ பேரை நாம் தினமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். வாழ வேண்டிய வயதில் இதயத்தைக் காரணம் காட்டி கணவன், மனைவி இருவரையும் சேரவிடாததால் பல குடும்பங்கள் மவுனமாக அழுவது நம் காதுகளுக்கு கேட்காமலில்லை. இவைகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் நம் மணம் தவிக்காமலில்லை. வேறு வழி தெறியாத காரணத்தால் நவீன மருத்துவத்தின் அவலங்களை சகித்துக் கொண்டு வாய் பொத்தி மவுனமாய் நிற்கின்றோம். இனி இந்த நிலை தொடர கூடாது நம் மக்கள் தெளிவடைந்து மாற்று வழிமுறைகளை தெரிந்துக் கொண்டு தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களைப் போன்று நினைக்கும் உங்களில் ஒருவனுடைய முயற்சியே இந்த தொடர். இதய நோயைக் காரணம் காட்டி மோசடி செய்தவர்களின் முகத் திரையை கிழித்து இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களுடைய வாழ்வை வசந்த மாக்கும் முயற்சியே இந்த இதயமே………இதயமே, இன்ஷா அல்லாஹ்.
இதயமே இதயமேஇதயம், இதன் அழகிய துடிப்புகளே உயிருக்கு அறிமுகம். துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம், அதுதான் மரணம். இறைவனின் படைப்புகளில், ஓர் அற்புத தொழிற்சாலை. இதை உச்சரிக்காத உயிரும் இல்லை, பாடாத கவிஞனும் இல்லை.
ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், நெஞ்சு வலி மற்றும் படபடப்பு இன்னும் இது போன்ற வியாதிகளின் கதாநாயகனே இந்த இதயம் தான். இதில் ஹார்ட் அட்டாக் பற்றி விரிவாக ஆராய்வோம்.
இதயம் அது தானாக இயங்குவதில்லை, உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்தரவிடுகின்றது. இதயம் தன் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்பிற்கு சக்தி அளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. ஆனால் நவீன மருத்துவம் இதயம் தானாக இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து மாத்திரைகள் கொடுத்து இதயத்தின் இயக்கத்தை கெடுத்துவிடுகின்றனர்.
h உடல் உறுப்புகளில் முக்கியமானவை இதயம், சிறுகுடல், நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர் பை, பித்தப் பை, கல்லீரல் போன்றவை. இவைகள் மிக முக்கியமானவை. மற்றவைகள் எல்லாம் இந்த உறுப்புகளைச் சார்ந்தவையே. இனி இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.நுரையீரல்:நுரையீரல் பாதிப்படைந்து, பாதிப்படைந்த நுரையீரல் அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ, தகவல் கிடைத்து இரத்த ஓட்டத்தை அனுப்பும் போது தடங்கல் ஏற்பட்டாலோ ஏற்படும் அட்டாக் நுரையீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்காகும். இந்த ஹார்ட் அட்டாக் அதிகமாக அதிகாலையிலேயே ஏற்படும். அதுவும் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் ஏற்படும். அதிகாலையில் ஏற்படும் ஹார்ட் அட்டாக் எல்லாம் நுரையீரல் சம்பந்தப்பட்டவைகளாகவே இருக்கும். அதிகாலையில் ஏற்படும் இந்த ஹார்ட் அட்டாக் சில நேரங்களில் வாய் விட்டு சிரிக்கும் போதும், வேகமாக ஓடும் போதும் ஏற்படும். வாய் விட்டு சிரிக்கும் போதும் வேகமாக ஓடும் போதும் நுரையீரலுக்கு அதிகமாக சக்தி தேவைப்படுகின்றது. அதிக சக்தியை இதயத்தால் ஈடு செய்ய முடியாத போது இது போன்ற ஹார்ட் அட்டாக் ஏற்படுகின்றது. நுரையீரல் இதயத்திற்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து அதன் இயக்கத்திற்கு பெரிதும் உதவும் உறுப்பாகும். நுரையீரல் பாதிப்பு பலவிதத்தில் இதயத்தை பாதிக்கவே செய்யும்.
சிகரட் புகைப்பவர்களே ஜாக்கிரதை, சிகரட் புகைப்பவர்கள் நுரையீரலை பாதிக்கச் செய்து, இதயத்தைக் கெடுத்து தன்னைத் தானே அழித்தும் கொள்கின்றார்கள். நுரையீரலும் பெருங்குடலும் ஜோடி உறுப்புகளாகும். அதாவது காற்று சம்பந்தப்பட்டவை. இது போன்று வரும் ஹார்ட் அட்டாக்குகளை ஒரு திறமையான அக்கு பஞ்சர் மருத்துவர் எளிதாக சரியாக்கிவிட முடியும். அதுவும் சில நிமிடங்களில். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா. இதயமும் நுரையீரலும் சந்திக்கும் இடத்தை தேர்வு செய்து சிகிச்சையளிக்கும் போது நோயாளி சில நிமிடங்களில் பூரண நிவாரணம் பெறுவார்.
சிறுநீரகம் சிறுநீர் பை:
நீர் என்னும் மூலப் பொருளோடு சம்பந்தப்பட்ட சிறுநீரகம் பாதிபடைந்து பாதிபடைந்த சிறுநீரகத்தின் தகவலைப் பெற்று சக்தியை சரிப்படுத்த இதயத்தால் இரத்த ஓட்டத்தை அனுப்ப முடியாத போது ஏற்படும் ஹார்ட் அட்டாக் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்காகும். இந்த அட்டாக் சிறுநீர்பை சம்பந்தப்பட்டிருந்தால் மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள்ளும், சிறுநீரகம் சம்பந்தப்பட்டிருந்தால் மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் ஏற்படும். குறிப்பாக மாலை 5 மணிக்கு முன்பும் பின்பும் ஏற்படும். இந்த நேரம் தான் அணைவருக்கும் சிறுநீர் போக தூண்டுதல் அதிகம் உள்ள நேரம். இதயமும் சிறுநீரக சக்தி நாளங்களும் சந்திக்கும் இடத்தை தேர்வு செய்து சிகிச்சையளிக்கும் போது இந்த அட்டாக்கிலிருந்து நோயாளியை உடன் காப்பாற்றிவிடலாம்.
k சிறுநீரகத்தில் பிரச்சினை உண்டாகும் போதும் சிறுநீரகம் செயல்பட தவறும் போதும் (KIDNEY FAILURE) திழுரென்று இந்த அட்டாக் ஏற்படலாம். அதிகமான மருந்துகளையும், மாத்கிரைகளையும், டானிக் பாட்டில்களையும் கண்ணை மூடி பயன்படுத்தினால் நிச்சயம் சிறுநீரகம் பாதிப்படையும். விரைவாக உணவை உட்கொண்டாலும் சிறுநீரகம் பாதிப்படையும். அக்கு பஞ்சர் மருத்துவம் கிட்னியை மிகவும் பாதுகாக்கின்றது. நவீன மருத்துவம் மருந்து மாத்திரைகளால் சிறுநீரகங்களை மிகவும் பாதிப்படையச் செய்கின்றது. மருந்து மாத்திரை பிரியர்களே எச்சரிக்கை.
கல்லீரல் பித்தப்பை:- சுமார் இரவு 12 மணிக்கு முன்பும் பின்பும் ஏற்படும் ஹார்ட் அட்டாக் அநேகமானவை கல்லீரல் பித்தப்பை சம்பந்தப்பட்டபையாகவே இருக்கும் வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்றவைகளால் இவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இரவில் குளிர்ந்த நீரை குடித்தாலும் இந்த எரிச்சல் நிற்காது. இவைகள் கல்லீரல், பித்தப்பை பாதிக்கப்பட்டதின் முன்னரிவிப்புகள். நாக்கில் வெண்மை படர்ந்திருக்கும். பித்தப் பையும் கல்லீரலும் மரம் என்னும் மூலப் பொருளைச் சார்ந்தவை. இவையிரண்டும் இணை உறுப்புகள். பித்தப்பை பாதிக்கப்பட்டால் வரும் ஹார்ட் அட்டாக் இரவு 11 முதல் 1 மணிக்குள்ளும் கல்லீரல் பாதிக்கப்பட்டால் வரும் ஹார்ட் அட்டாக் இரவு 1 மணி முதல் 3 மணிக்குள்ளும் வரும். சரியான அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்ந்தெடுத்து சக்தியை தூண்டும் போது சில நிமிடங்களில் மாயமாய் மறைந்து விடும்.
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்;;. மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க” – அத்தியாயம் 13:28
நடு இரவில் மட்டும் தான் இந்த ஹார்ட் அட்டாக் வரும் என்றில்லை, தூங்காமல் அடிக்கடி கண் விழித்துக் கொண்டிருந்தாலும், பல நாள் தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கும் வரும். மதிப்பிற்குறிய நமது குடிகாரர்களுக்கும் வரும். மதுவிற்கு அடிமையானவர்களே இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். கண் விழித்து T. V. சீரியல் பார்க்கும் சகோதரிகளே கவணம். விடுமுறை நாட்களில் வீடியோ கேசட்டுகளை விடிய விடிய பார்க்கும் சகோதரர்களே கவனம். நமக்காக குடும்பம் காத்திருக்கின்றது. பித்தப்பை, கல்லீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக் நடு இரவில் தான் வரும் என்றாலும் குடிகாரர்களுக்கும் கண் விழிப்பவர்களுக்கும் எந்த நேரத்திலும் வரலாம்.
அப்படி எந்த நேரத்தில் வந்தாலும் சம்பந்தப்பட்டவர் குடிகாரராகவோ, கண்விழித்தவராகவோ இருந்தால் நிச்சயம் அவர் பித்தப்பை கல்லீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கினாலேயே அவர் பாதிக்கப்ப்டடிருகிகின்றார் என்று உடன் முடிவு செய்து சிகிச்கையளிக்க வேண்டும். உதாரனமாக சொல்ல வேணடுமானால் ஒருவருக்கு மாலை 5 மணிக்கு ஹார்ட் அட்டாக் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். உடனே நாம் மாலை 5 மணி அப்படியானால் இது சிறுநீரக சம்பந்தப்பட்ட ஹார்ட அட்டாக் என்று முடிவு செய்யக் கூடாது. சம்பந்தப்பட்டவரின் குனாதிசயங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் (இது பற்றி விரிவாக வரும் தொடர்களில் பார்ப்போம்).
இதயம் சிறுகுடல்:பிரியமானவர்களுக்காக மிகவும் பிரியமானவர்கள் குளிர்ச்சியாக என் இதயத்தை உனக்கு தருகின்றேன் என்ற வசனங்கள் பேசுவது அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு எதிரானது. இதயம் நெருப்பு என்னும் மூலப் பொருளால் ஆனது. இதன் இனை உறுப்புகளும் சிறுகுடலும் நெருப்பு என்னும் மூலப் பொருளால் ஆனதே. இதயம் தன்னைத் தானே இயக்க சக்தி பெறாமல் போகும் போதும் அல்லது மற்ற உறுப்புகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தினறும் போதும் இதயம் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக் வருகின்றது.
காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் வரும் ஹார்ட் அட்டாக் எல்லாம் இதயம் சம்பந்தப்பட்டவையே (நவீன மருத்துவம் எமர்ஜென்சியை ரெடியாக திறந்து வைத்திருந்து காத்திருக்கும் நேரமும் இது தான்). இதயத்திற்கு சக்தியளிக்கும் புள்ளியை தூண்டும் போது வந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும் இந்த ஹார்ட் அட்டாக்.
வயிறு மண்ணீரல்:சாப்பிட்டுக் கொண்டிருந்தார், திழுரென்று இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டிருப்போம். சாப்பிடும் போது வரும் ஹார்ட் அட்டாக் வயிறு மண்ணீரல் சம்பந்தப்பட்டவையே. காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் வருவது வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக். காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் வருவது மண்ணீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்காகும். பொதுவாக காலை 9 மணிக்கு முன்பும் பின்பும் வருபவை வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கே. வயிறு போதுமான சக்தியோடு இயங்கினால் இந்த அட்டாக் வராது. காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடியுங்கள். காலையில் அதிகம் சாப்பிடுங்கள், இரவு சாப்பாட்டை குறையுங்கள். நன்றாக மென்று சாப்பிடுங்கள். காலையில் பட்டினி கிடக்காதீர்கள். காலை உணவே நாள் முழுவதும் உழைப்பதற்கு தேவையான சக்தியை தருகின்றது. எனவே காலை உணவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இரவு உறங்குவதற்கு நமக்கு சக்தி தேவையில்லை. அந்த நேரத்தில் அதிகம் சாப்பிடாதீர்கள். வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கும் போது தான் பெட்ரோல்ஃழுசல் தேவை. பயணம் முடிந்து வாகனத்தை நிறுத்தும் போது பெட்ரோல்ஃழுசல் தேவையில்லை. இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது போன்று கவனத்தை செலுத்தினால் வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கை தவிர்க்கலாம்.
இதுவரை:இதுவரை நாம் ஹார்ட் அட்டடாக் எப்படியெல்லாம் வரும், எப்படிப்பட்டவருக்கு வரும், எந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டால் வரும். எந்தெந்த நேரத்தில் வரும் என்பதையெல்லாம் சுருக்கமாக பார்த்தோம். ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வருகின்றது என்றால் ஓர் உண்மையான அக்குபஞ்சர்
மருத்துவரின் மிக விரைவான நாடி பரிசோதனை மூலம் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை தெரிந்துக் கொண்டு, நபரின் குனாதிசயங்கள் (குடிகாரரா, கண் விழித்தவரா), அப்போதைய சுழ்நிலையை (ஓடிவந்தவரா, சாப்பிட்டுக் கொண்டிருந்தவரா) கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட நேரத்தையும் மனதில் கொண்டு சிகிச்சையளித்தால் விலை மதிக்க முடியாத பல உயிர்களை காப்பாற்றுவதுடன் (இன்ஷா அல்லாஹ்) பல குடும்பங்களை சந்தோரூத்தில் வாழ வைக்கலாம்.
இதில் எதையுமே கவனத்தில் கொள்ளாமல் உடனே E.C.G. எடுத்து I.C.U. வைத்துவிட்டு நிற்கும் டாக்டரிடம் நோயாளியின் நிலையை குடும்பத்தினர் கேட்கும் போது அந்த பொறுப்புள்ள டாக்டர் சொல்லும் பதில் என்ன தெரியுமா?எங்களால் தற்போது ஒன்றும் சொல்ல முடியாது 1 நாள் போக வேண்டும் அல்லது 48 மணி நேரம் கழித்து தான் எதையுமே சொல்ல முடியும். என்ன அறிவு பூர்வமான பதில்? 48 மணி நேரம் கழித்து இவர் என்னத்தை சொல்வது?நாங்களே தெரிந்துக் கொள்கிறோம். உயிரோடு இருக்கின்றார் என்று, இல்லையென்றால், இறந்து விட்டார் என்று.
என்று நாம் ஆங்கிலம் படித்தவன் எல்லாம் அறிவாளி என்று நினைத்தோமே அன்றே நமது சுய சிந்தனையை இழந்து விட்டோம். அதோடு அறிவு பூர்வமான பல நமது சொந்த மருத்துவத்தையும் நாம் மறந்து விட்டோம்.
உண்மையைச் சொன்னால் நவீன மருத்துவத்திற்கு ஹார்ட் அட்டாக்கிற்கான காரணம் எதுவும் தெரியாது. அப்படியானால் சிலர் எப்படி பிழைத்துக் கொள்கிறார்கள் என்கிறீர்களா?அது இவர்கள் செய்யும் டிரீட்மென்டால் அல்ல. உடலே தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ளும் போது சிலர் இறையருளால் பிழைத்துக் கொள்கிறார்கள். மற்றபடி சிறப்பாக செய்வதெல்லாம் I.C.U-வில் வைத்துவிட்டு அழகாக பில் போடுவது தான்.
வாய்வு தொல்லையால் பாதிக்கப்பட்ட பலருக்கு மூச்சு தினறல், நெஞ்சு எரிச்சல் வரும். E.C.G. எடுத்துப் பார்த்தால் ஹார்ட்டில் பிரச்சினைப் போல் காட்டும். உடனே I.C.U.-வில் சேர்த்துவிடுவார்கள். வாய்வு தொல்லையா (GAS TROUBLE), ஹார்ட் அட்டாக்கா?என்று பகுத்தறிந்து பார்க்கத் தெரியாத ஒரு மருத்துவம் தான் நவீன மருத்துவம்.
Blood Pressure and Body Parts
இரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும
உடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகுமுறைப்படி இரத்த அழுத்தம் என்று நம்பி மாத்திரைகள் சாப்பிடுவதால் எந்த அளவுக்கு உடல் மோசமாகின்றது என்பதை இதற்கு முன்புள்ள தொடர்களில் பார்த்தோம். அப்படி உடல் உறுப்புக்கள் பாதிப்படையும் போது எந்தெந்த உறுப்புக்கள் பாதிப்படைந்தால் என்னென்ன வியாதிகள் வரும் என்பதை சுருக்கமான இந்தத் தொடர்களில் காண்போம். இன்ஷா அல்லாஹ்!
நுரையீரல் (LUNG)
மூச்சுத் திணறல், இருமல், சளி, ஆஸ்துமா, கைகளில் கட்டை விரல் ஆரம்பித்து மார்பு மேல் முடியும் வலி, Frozen Shoulder என்னும் கைகளை அசைக்க முடியாத நிலை (பெண்களுக்கு அதிகம் வரும்), உடம்பில் உள்ள மூடி கொட்டுதல் (தாடி, மீசை, புருவம் உள் உறுப்புக்கள் மார்பகம் அடைத்தது போல் பாரமாக இருப்பது, தொண்டை காய்ந்து போதல், பேச முடியாத நிலை, டான்சில் கோளாறுகள், தோள்பட்டை வலிகள், தோல் வியாதிகள், அலர்ஜி, அக்குள், கழுத்து, தொடை பகுதிகளில் வியர்வை, 3 மணிக்கு வழிப்பு வந்து விடும், தூக்கத்தில் நெஞ்சை அடைப்பது போன்று மூச்சு முட்டுவது போல் இருக்கும், உட்கார்ந்து சாய்ந்தபடி தூங்குவார்கள், கைகளை அகற்றி வைத்து குப்புறப்படுத்துக் கொண்டு தூங்குதல்.
பெருங்குடல் (Large Intentine)
அடிவயிற்றுவலி, மலச்சிக்கல், வயிற்றுப் பொறுமல், பல்வலி, வயிற்றுப் போக்கு, உதடு வறட்சி, நாக்கு வறட்சி, மூச்சுவிடச் சிரமம், தொப்புளைச் சுற்றிலும் வலி, தோல் வியாதிகள், இருமல், மூக்கு வழியாக இரத்தம் கசிதல், முகவாதம், தோள்பட்டை வலி, இடுப்புவலி, சைனஸ், நெஞ்சு எரிச்சல், புட்டமும் இடுப்பும் சேருமிடத்தில் சதை ஏற்படும் இன்னும் பல..
வயிறு (Stomach)
அல்சர், வாய்வுத் தொல்லை, நாக்கு மஞ்சளாக மாறும், பற்களில் இரத்தக் கசிவு, கால் வலி, வாந்தி, முகவாதம், தொண்டை வறட்சி, இரத்தக் கசிவு நோய், கண் கீழ் இமை துடிப்பு, முகத்தில் தோன்றும் நரம்புவலி, வயிற்றுப் பொறுமல், பசியின்மை, கெட்ட கனவுகள், உணவிருந்தும் சாப்பிட முடியாமல் போவது போலவும் கனவுகள் உண்டாகும் இன்னும் பல..
மண்ணீரல் (Spleen)
உடம்பில் அதிக எடை கூடுதல், அடிவயிற்று வலி, நாக்கில் ஏற்படும் விறைப்பு, மற்றும் வலி, வாய்வுகளால் ஏற்படும் வலி, மஞ்சள் காமாலை, வாந்தி, உடல் பலவீனம், உடல் பாரமாகத் தெரிதல், கால் பகுதிகளில் ஏற்படும் வீக்கம், வலி, காலை 10 மணிக்கு தூக்கம் வந்து அசத்தும், சாப்பிட்டவுடன் தூங்கச் சொல்லும் சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும், தூக்கத்தில் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும், இடுப்பில் பக்க வாட்டில் மடிப்புகளுடன் சதை உண்டாகும் இன்னும் பல..
இதயத்தின் மேலுறை (Pericardium)
இதயத்தை தனியாகவும் அதன் மேலுறையை தனியாகவும் கணக்கிட்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவம் உலகில் ஒன்று தான் இருக்கின்றதென்றால், அது 5000 வருடங்களுக்கு முற்பட்ட அக்குபஞ்சர் மருத்துவமே. அதனால் தான் இதய நோய்களை அக்குபஞ்சர் எளிதாகத் தீர்க்க முடிகின்றது. பைபாஸ் சிகிச்சையைக் கூடத் தேவையற்றதாக்கி விடுகின்றது.
இதயத்தில் மேல்உறை பாதிப்புக்கு உள்ளாகும் போது நெஞ்சுவலி, படபடப்பு, மார்பு நெஞ்சுப் பகுதி அடைத்தது போலிருத்தல், மன அமைதியின்மை, முழங்கையில் ஏற்படும் வலி, உள்ளங்கையில் சூடு பரவுதல், கைகளில் ஏற்படும் தசைவலி, கடுமையான நெஞ்சுவலி, (இதயத் தசைகளில் இரத்தக் கசிவினால் ஏற்படும் நெஞ்சுவலி வலது முழங்கை வரை கடுமையாக இருக்கும்.) தலைவலி, தூங்கும் போது நெஞ்சு பாரமாக இருப்பது போல் உணர்வு, யாரோ அமுக்குவது போன்று உணர்வு இதனால் தூக்கத்தில் எழுந்து விடுதல் இன்னும்பல..
இதயம் (Heart)
நெஞ்சுவலி, இதயத்திற்கு மேல் பகுதி தோள்பட்டை பகுதியில் ஏற்படும் வலி, மாரடைப்பு, போலியோ, அதிகமாக தாகம் எடுத்தல், சிறுநீர் மஞ்சள் நிறம், கை சுண்டு விரலில் உள்பக்க சைடில் ஆரம்பித்து அக்குள் வரை செல்லும் வலி, மஞ்சள் காமாலை, உள்ளங் கையில் சூடு அதிகமாகுதல், மனதில் பயம், நாக்கின் மேல் பகுதி சிகப்பு நிறமாகுதல், ஞாபக சக்தி குறைவு, மார்பு பகுதியில் தோன்றும் புண், மூச்சுவிட சிரமம், திடீர் வியர்வை, தூக்கமின்மை படபடப்பு, மணிக்கட்டு வலி, விரைவாகக் களைப்புத் தோன்றுதல், தூக்கத்தில் தொடர் கனவுகள், தூங்க ஆரம்பித்தவுடன் கனவும் ஆரம்பித்து விடும், நெருப்பு சம்பந்தப்பட்ட கனவுகள் தான் அதிகம் வரும் இன்னும் பல..
மூவெப்ப மண்டலம் (Triple Warmer)
உடம்பில் சில பகுதிகள் சூடாகவும் சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு இந்த தான் காரணம். உடம்பு முழுவதும் வெப்பத்தை சீர்படுத்தும் உறுப்பு. இது பாதிப்படைந்தால், காது மந்தம், காது செவிடு, காது இரைச்சல், கண்ணத்தில் வீக்கம், காதுகளில் வலி, முழங்கை வலி, தொண்டை வறட்சி, உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை அல்லது அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி ஏற்படுதல், தலை மிகவும் சூடாக இருப்பது. ஆடை மூடிய பகுதிகள் சூடாக இருப்பது, வயிறு உப்புதல், காற்று அடைத்தது போல் தசைகளில் வீக்கம், (விரல் கொண்டு அழுத்தினால் பள்ளம் ஏற்படும்), சிறுநீரை அடக்க முடியாமை, தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், நீர் கடுப்பு, வெளிச்சத்தில் தூங்க இவர்களுக்கு மிகவும் பிடிக்கும், சிறு வெளிச்சம் இவர்களுக்குத் தேவை.
சிறுகுடல (Small Intenstine)
அடிவயிற்று வலி, காது பிரச்னைகள், கன்னம் வீக்கம், தொண்டைப் புண், மலச்சிக்கல், மலத்துடன் இரத்தம், கழுத்தில் சுளுக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொந்தரவு, அடிக்கடி ஏப்பம், வயிறு மந்தம், நெஞ்செரிச்சல், வாயில் புண்கள், வயிறு பெறுத்தல், சிறு குடலில் ஏற்படும் அஜீரணமே கெட்ட வாய்வுக்கு மூலகாரணம். மதியம் சாப்பிட்டவுடன் தூங்க நினைப்பவர்கள், சிறிது நேரமாவது மதியம் சாப்பிட்டவுடன் தூங்கியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சிறுகுடல் பாதிக்கப்பட்டவர்களே. அக்குள், அக்குள் மடிப்புகளிலும் மார்புப் பக்கவாட்டிலும் இவர்களுக்கு சதை விழும், இன்னும்பல..
பித்தப்பை (Gall Bladder)
அதிகமாகக் கோபம் வரும், ஒரு பக்கத்தலைவலி, கண்களில் எரிச்சல், பித்தப்பையில் கல், வாய்வுப் புண், வாந்தி, வாய் நாற்றம், காதுவலி, அடிக்கடி ஏற்படும் ஜுரம், தொடையில் வெளிப்பக்கத்தில் ஆரம்பித்து கால் சுண்டு விரல் வரை வரும் வலி அதனால் நடக்க இயலாமை, வாயில் கசப்புச் சுவை, கிறுகிறுப்பு, காது அடைத்தல், மசலா அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்புண்டு, உடம்பில் ஏற்படும் எரிச்சலோடு கூடிய வலி, துணி உடம்பில் பட்டால் கூட எரிச்சல் உண்டாகும். கால் கைகளை படுக்கைக்கு வெளியே நீட்டி விட்டுக் கொண்டு தூங்குவார்கள் இன்னும் பல..
கல்லீரல (Liver)
கண் நோய்கள், பசியின்மை, தலைவலி, கோபம், மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, மலச்சிக்கல், குழந்தைகளின் வளர்ச்சி பாதித்தல், வாந்தி, மன அழுத்தம், முதுகுவலி, சிறுநீர் பிரியாமை, ஹெரனியா, அடிவயிற்று வலி, இரவு 1 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு பிறகு 3 மணிக்கு மீண்டும் தூங்க ஆரம்பித்தல், தூக்கத்தில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி இன்னும் பல..
சிறுநீர்ப்பை (Urinary Bladder)
சிறுநீர் பிரியாமை, சிறுநீர் அடக்க முடியாமை, இரு கண்களுக்கு நேர்மேல் பக்கமாக ஏற்பட்டு பின்னால் போகும் தலைவலிகள், கண் நோய்கள், இடுப்புவலி, முதுகுவலி, கழுத்துவலி, வேட்கையான மன வலி, சிறுநீர்ப் பையில் கல், முழங்கை வலி, குதிகால் வலி, உடம்பு அசதி, பய உணர்ச்சி, இரண்டு புட்டங்களிலும் அதிகமான சதை போடுதல், தொடைகளின் பின்புறம் அதிக சதை போடுதல், அடிக்கடி மலம் கழித்தல், தூக்கத்தில் மாறி மாறி புரண்டு கொண்டிருத்தல், இவர்களின் கழுத்துக்குப் பின்புறம்சதை போடும் இன்னும் பல..
சிறுநீரகம (Kidney)
பயம், சிறுநீரகக் கல், மூட்டு வலி, கால்களில் வீக்கம், முகத்தில் வீக்கம், முகம் கருப்பாக மாறுதல், பிறப்பு உறுப்பில் வலி, பல் வலி, கால் பாதங்கள் சூடாக இருப்பது, முதுகு வலி, நாக்கு உலர்ந்து விடுதல், தொண்டைப் புண், வீக்கம், மலச்சிக்கல், மூச்சுத் திணறல், தசைகள் சுருங்குதல், சிறுநீரகங்களில் ஏற்படும் வலி, தலைமுடி கொட்டுதல், மாதவிடாய்ப் பிரச்னைகள், ஆண்மைக் குறைவு, மனநோய், இரவில் வியர்த்தல், விதைகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம், கர்ப்பப்பை இறங்குதல், டான்சில், மார்பக அழற்சி, கழுத்தில் முன்புறம் சதை போடுதல், மாலை நேரத்தில் 5 மணிக்கு மேல் உடல் சோர்ந்து விடுதல், உடல் மிகவும் பலவீனமாய் மாறுதல், கைகள் நடுக்கம், இவர்கள் குப்புறப்படுத்துத் தான் தூங்குவார்கள். அப்போது தான் இவர்களுக்கு தூக்கம் வரும்.
மேற்குறிப்பிட்ட நோய்கள் மட்டும் தான் ஒவ்வொரு உறுப்பிலும் வரும் ஒன்றில்லை. அதற்க மேலும் உண்டு இருந்தாலும் முக்கியமானவைகள் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால் சில நோய்கள் வரும், அதே வேளையில் அந்த உறுப்போடு மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டால் இருக்கும் நோய் தீவிரமாவதுடன் மேலும் பல புதிய நோய்கள் வரவும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். சில நேரங்களில் நோய் என்னவென்றே கண்டுபிடிக்க முடியாமல் ஆங்கில மருத்துவம் திண்டாடுவது இது போன்ற நேரங்களில் தான்.
பெருங்குடல் பாதிப்பால் இடுப்பு வலி
பெருங்குடல் பாதிப்படையும் போது சில வியாதிகள் வரும். அதே வேளையில் சிறுநீர்ப் பையும் பாதிக்கப்பட்டால் 99 சதவீதம் இடுப்பு வலி வர வாய்ப்பு இருக்கின்றது. இந்த இடுப்பு வலி சிறுகச் சிறுக ஆரம்பித்து இறுதியில் உட்கார முடியாத அளவுக்கு வேதனையைக் கொடுக்கும். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் டிஸ்க் டிஸ்லோகஷன் அதாவது, டிஸ்க் விலகியதாகக் கூறி அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்வார்கள். ஆனால் அக்குபஞ்சர் மருத்துவத்தில் பெருங்குடலையும் சிறுநீர்ப்பையையும் சில சிகிச்சை முறைகளில் சரி செய்து, அறுவைச் சிகிச்சைக்கு அவசியமில்லாமல் செய்து விடலாம்.
நுரையீரல் பாதிப்படைந்தால் ஆஸ்துமா
நுரையீரல் பாதிப்படைந்து ஆஸ்துமா உருவாகலாம். இப்படி ஒரே ஒரு ஆஸ்துமா மட்டும் தான் இருக்கின்றது என்று ஆங்கில மருத்துவம் நினைத்து, ஒருவரைக் கூட நலமாக்க இயலாமல் நோயை மட்டுப்படுத்துவதாகக் கூறி பலரின் வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அக்குபஞ்சர் ஆஸ்துமாவை அணுகும் விதமே மிகவும் அழகானது. ஒருவருக்கு.
* மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் ஆஸ்துமா ஆரம்பித்தாலோ அதிகரித்தாலோ அது சிறுநீரகத்தின் சக்தியின்மை காரணத்தினால் ஏற்படும் ஆண்துமாவாகும்.
* காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் ஆஸ்துமா ஆரம்பித்தாலோ அல்லது அதிகரித்தாலோ அது மண்ணீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமாவாகும்.
* அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் ஆரம்பித்தாலோ அல்லது அதிகரித்தாலோ அது நுரையீரல் செயல்பாட்டில் ஏற்பட்ட பாதிப்பால் உண்டான ஆஸ்துமாவாகும்.
இவ்வாறு ஆஸ்துமா எந்த உறுப்பு செயல்பாட்டின் பாதிப்பால் உருவாகின்றது என்பதை நாடி மூலம் கண்டறிந்து சம்பந்தப்பட்ட உறுப்பின் பாதிப்பை சரி செய்வதன் மூலம் ஆஸ்துமாவை நிரந்தரமாக குணப்படுத்த முடிகின்றது. இந்த அணுகுமுறை இல்லாத காரணத்தால் ஆங்கில மருத்துவம் ஆஸ்துமாவை குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று சொல்லிக் கொண்டு காலம் காலமாய் அத்துடன் போராடி பல உயிர்களை வீணடிக்கின்றது. ஆஸ்துமா நோயாளிகளின் சந்தோஷத்தை ஸ்டிராய்டு போன்ற பக்க விளைவுகள் அதிகமுள்ள மருந்துகளை கொடுத்து சாகடிக்கின்றது.நோயின் பெயரை கேட்டு நாம் அச்சப்பட தேவையில்லை. நோய்க்கு பெயர் வைத்தது, யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். வல்லரசு நாடுகள் என்று சொல்லிக் கொண்டு அநியாயங்களை செய்பவர்கள் வைத்த பெயராகக் கூட இருந்து விட்டுப் போகட்டும். அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நோய்க்குக் காரணமான உறுப்பை நாடி மூலம் கண்டறிந்து அதை சரி செய்வதன் மூலம் நோயை நிரந்தரமாக குணமாக்கி மக்களை வாழ வைக்கலாம். இல்லையென்றால் அந்நிய மருத்துவத்தின் அடிப்படையில் உறுப்பைப் பற்றிக் கவலைப்படாமல் நோயைச் சரி செய்வதாகச் சொல்லி அவர்களை நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றி, வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வைத்து மக்களை வீணடிக்கலாம்.5000 வருடங்களுக்கு மேலாக அக்குபஞ்சர் மருத்துவம் கம்பீரமாக நிற்பதின் காரணம் தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரம் நோய்களுக்கும் இனி கண்டுபிடிக்கப் போகும் பல ஆயிரம் நோய்களுக்கும் தீர்வு இப்போதே தயார் என்று அடக்கத்துடன் ஆர்ப்பாட்டமில்லாமல் கூறும்; அழகிய மருத்துவம் தான் அக்குபஞ்சர். இறைவன் மனித குலத்துக்கு வழங்கிய மாபெரும் பொக்கிஷம் தான் அக்குபஞ்சர்.
உங்களோடு ஒரு நிமிஷம்
உங்களோடு ஒரு நிமிஷம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
நன்றி:-டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
.
வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD
Pain & symptoms of disease – வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.
டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA) Zhejiang University, Hangzhou, (China) (Chinese Traditional Medicine).
Vitamin Pills: Good or Bad? – விட்டமின் மாத்திரைகளின் மறுபக்கம் டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து (உமிழ் நீர்கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும். உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது.
கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும்.
விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின்றோம். இப்போது யோசனை செய்து பாருங்கள்?
நன்றி:-டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
CESAREAN DELIVERY – சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
சம்பவம் 1:தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார். |
||||||||||||||||||||||||||||||||||||||||||
சம்பவம் 2:தஞ்சையிலுள்ள எனது ‘தி ஹெல்த் ரிசோட்’ மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர். நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும், மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று, மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும். |
||||||||||||||||||||||||||||||||||||||||||
சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்? | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன. | ||||||||||||||||||||||||||||||||||||||||||
தேவையில்லாத இரசாயன பொருட்கள்:கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை. |
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
சவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண் டாக்டர் 3 பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார். | ||||||||||||||||||||||||||||||||||||||||||
தேவையற்ற கட்டுபாடுகள்:கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா? |
||||||||||||||||||||||||||||||||||||||||||
திட்டமிட்ட சதியா?பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள். |
||||||||||||||||||||||||||||||||||||||||||
சிசேரியன் மோசடிகள்அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?. உண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார், இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை. |
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
தேவையில்லாத மருத்துவ செயல்கள்: விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது. உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.
சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்: சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும். தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல். தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது. சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது. சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?: கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள். கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான். ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது. இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல. வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும். பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் . கர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க: |
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;..இன்ஷா அல்லாஹ்..
– ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ – |
அண்மைய பின்னூட்டங்கள்