தொகுப்பு

Archive for the ‘அல் குர்ஆன்’ Category

அல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர் – கவியன்பன் கலாம்

ஜூலை 1, 2010 1 மறுமொழி

டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.

மருத்துவ விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் மனித உடலில் விடைகாண முடியாத, கண்டறியப்படாத அபூர்வ அம்சங்கள் பல இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.

அந்தவகையில் அன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறியாத கருவியல் தொடர்பான உண்மைகளைக் கூறும் முக்கியமானதொரு அல்குர்ஆனிய வசனம் Dr.கீத்மூரது கண்களில் பட்டது. ஆழமாகப் படித்தார். “படைப்பினங்கைளப் படைத்த உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு ஓதுவிராக! அவன் எத்தகையவனென்றால் அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான்.”

Dr.கீத்மூருக்கு இவ்வசனம் பெரும் வியப்பையூட்டியது. “அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்” என்ற இவ்விடயத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்த அவர் ஆய்வுகூடத்தை அடைந்து அதி சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி மூலம் ஒரு கருவின் ஆரம்பப்படிநிலை வளர்ச்சியை ஆய்வுசெய்யளானார். அக்கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பு நோக்கினார். என்ன அற்புதம். கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரேவிதமாக இருந்தன. ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் Dr.கீத்மூர் அறிந்திருக்கவில்லை. ஆதனை அல்குர்ஆனிய வசனம் அச்சொட்டாகக் கூறியதைப் பார்த்து வியந்தார். இது இத்துறையில் அவரை மேலும் ஆயுவுகள் செய்யத் தூண்டியது.

அதனைத் தொடர்ந்து “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்து அவனே உங்களைப் படைத்தான்.” என்ற வசனத்தை ஆய்வுக்குட்படுத்தினார். எவ்வித மருத்துவத் தொழிநுட்பமோ நவீன கருவிகளோ அற்ற 1400 ஆண்டுகளுக்கு முன்பு கருவரையின் படிமுறைச் செயற்பாடுகளைக் கூறியிருக்கும் இவ்வற்புத வசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார்.  அவரது நீண்ட ஆய்வுக்குப்பின் அம்மூன்று இருள்களின் விளக்கம் என்ன என்பதுபற்றி இவ்வாறு விளக்கிக்காட்டினார்.

1) தாயின் அடிவயிறு (Abdominal wall)

2) கருப்பையின் சுவர் (Uterine wall)

3) குழந்தையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்படலம் (Amniotic Membrane) இதன்பின்பும் அவர் பல அல்குர்ஆனிய வசனங்களை ஆய்வுசெய்து அற்புதத் தகவல்களை மருத்துவ உலகுக்கு வழங்கினார். இவ்வாய்வுகளில் அவர் ஈடுபட முன்பு “The Developing Human – மனித வளர்ச்சி” என்ற ஒரு நூலை எழுதியிருந்தார். எனினும் அல்குர்ஆனின் முளையவியல் பற்றிய இவ்வசனங்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொண்ட உறுதியான முடிவுகளைவைத்து அந்த நூலை மீள்பரிசீலனை செய்து 1982ம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டார். ஒரு தனிநபரால் வெளியிடப்பட்ட சிறந்த மருத்துவ நூல் என்றவகையில் அதற்கு உயர் விருதும் வழங்கப்பட்டது. அந்நூல் பல்வேறு மொழிகளுக்கும் மாற்றப்பட்டு முளையவியல் கற்கையில் முக்கிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆய்வுகள் முடிந்து நூலாக வெளிவரமுன்பு 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற ஏழாவது மருத்துவ மாநாட்டில் Dr.கீத்மூர் கலந்து உரைநிகழ்த்துகையில் பகிரங்கமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“It has been a great pleasure for me to help clarify statements in the Qur’an about human development. It’s clear to me that these statements must have come to Muhammad from god because almost all of this knowledge was not discovered until many centuries. Late this proves to me that Muhammad must have been a messenger of the god.” (Dr. Keith more)


“அல்குர்ஆனில் உள்ள மனித கருவளர்ச்சி பற்றிய தகவல்களை ஆய்வுசெய்து அதனை விள்கிக்கூற என்னால் உதவ முடிந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்கள் யாவும் இறைவனி (அல்லாஹ்வி)டமிருந்துதான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வந்திருக்க முடியும் என்று எனக்குத் தெளிவாகியுள்ளது. ஏனென்றால் கருவியல்பற்றிய அறிவார்ந்த ஆய்வு முடிவுகளில் பெரும்பாலனவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆராய்ச்சியே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவனி (அல்லாஹ்வி)ன் தூதர் என்பதை நிரூபித்துவிட்டுள்ளது.” என்றார்.


நிச்சயமாக அல்குர்ஆன் தெய்வீகத் தன்மைபொறுந்திய வேத வெளிப்பாடு என்பதை என்றும் உணர்த்தி நிற்கும்……….

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

மணவாழ்வில் மகிழ்வுற.. நஷ்மல் பலாஹி


‘நான்கு விடயங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடியது: ஸாலிஹான மனைவி, போதுமான இருப்பிடம், ஸாலிஹான அண்டை வீட்டான், நல்ல வாகனம் என்பனவையாகும். (அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரழி), நூல்: இப்னுஹிப்பான் 4094, பைஹகீ 9021)

கணவன்மார்கள் பலர் தமது துணைவிகளைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடும்  விமர்சனங்கள் இதோ…

..எனது மணவாழ்விலே நாம் மகிழ்ச்சியை உணர்வதில்லை…..எனது மனைவி என்னோடு அன்பைப் பரிமாறுவதில்லை…எனது மனைவி அதிகம் கோபப்படுகிறாள்…

என் மனைவி என் முன்னால் அழகாக இருப்பதில்லை…என் மனைவியொரு சுயநலவாதி…

என் மனைவி என்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறாள்…என் மனைவி மார்க்கக் கடமைகளில் கவனம் செலுத்துவதில்லை…

என் மனைவிக்கு அறிவு மட்டு…அவள் ஒரு குழப்பக்காரி…அதிகம் சந்தேகிக்கிறாள்…

குழந்தைகளைக் கவனிப்பதில் அலட்சியம் செய்கிறாள்…எனது குடும்பத்தை மதிப்பது கிடையாது…

இவைகள்தான் இக்கணவர்கள் மகிழ்ச்சியில் தோற்றுவிட்டதாகக் கூறும் காரணிகள்..

யதார்த்தத்தை நாம் ஆய்வு செய்கின்ற போது இத்தவறுகளுக்கெல்லாம் கணவன்மார்களே காரணியாக அமைகின்றனர். குறிப்பாக தெரிவு விடயத்தில் இவர்கள் விடுகின்ற தவறுகள் பிரதான காரணமாகும்.

சில சமயங்களில் கணவன்இ மனைவியின் நல்ல பண்புகளை மறந்து தவறுகளைப் பெரிதாகக் கருதுகின்றவனாக இருந்து விடுகின்றான். நபியவர்கள் கோணலும் குறையும் பெண்ணின் இயற்கையோடு ஒட்டியது என்று கூறிச் சென்று விட்டார்கள்.

எனவே அவளோடு நடந்து கொள்ளும் போது இயற்கைத்தன்மையை மறந்துவிடக்கூடாது. இதனையே நபியவர்கள் பெண்களுக்கு நல்லதையே நாடுங்கள்..என்ற முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பிலே

‘பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டுவிட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியதுதான் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2912,2913)

பெண் கோணலான விலா எலும்பில்.. என்கின்ற இந்த ஹதீஸை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் விளக்கும் போது பின்வரும் அம்சங்களைக் குறிப்பிடுகின்றாரகள்.

01.பெண்களோடு மென்மையாக நடத்தல்.

02. அவர்களுக்கு உதவி உபகாரம் செய்தல்.

03.கோணலான  குணங்களுக்காகப் பொறுத்துக் கொள்ளல். (ஷரஹ்:முஸ்லிம்)

அந்த வகையில் மணவாழ்வு மகிழ்வுற சில வழிகாட்டல்கள்:

01.திருமணம் தொடர்பாக தனது இலக்கை வரையறை செய்தல்.
பல சகோதரர்கள் திருமணம் தொடர்பாக கொண்டிருக்கின்ற தவறான குறையான அபிப்பிராயங்கள் பல பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன. இஸ்லாம் எந்த உயரிய நோக்கத்திற்காக இத்திருமணத்தை மார்க்கமாக்கியதோ அம்மாபெரும் மகிமைகளை இவர்கள் புரிந்து கொள்வதில்லை.

திருமணம் என்பது வெறும் உடலியல் மகிழ்வு, அதிகம் பிள்ளைகள் உள்ளனர் என்று பெருமை பாராட்டுவதற்கான வழிஇ  அதிகாரம் செலுத்தவும் அடக்குமுறை செலுத்தவும் ஒரு சந்தர்ப்பம் மற்றும் வாழையடி வாழையாக நம் முன்னோர் செய்து வந்த வழமை..இப்படியெல்லாம் பலர் நினைக்க சிலரே இது ஒரு தூது, மிகப்பெரும் பொறுப்பு, பரஸ்பர ஒத்துழைப்பு, அழ்ழாஹ்வின் பாதையில் செய்யப்படும் தியாகம் என்பதை உணர்கின்றனர்;

அழ்ழாஹ் தனது திருமறையில் ‘மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.

உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அழ்ழாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அழ்ழாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.’ (அல்குர்ஆன் 49:13)

‘நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.’ (அல்குர்ஆன் 30:21)

02.தீனுள்ளவளைக் கொண்டு வெற்றியடைதல்.

அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளது அழகிற்காக.

4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 5090)

அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது. நல்ல மனைவியே.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரழி), நூல்: முஸ்லிம் 2911)

‘நான்கு விடயங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடியது: ஸாலிஹான மனைவி, போதுமான இருப்பிடம், ஸாலிஹான அண்டை வீட்டான், நல்ல வாகனம் என்பனவையாகும். நான்கு விடயங்கள் துக்கம் தரக்கூடியது: தீய மனைவி, நெருக்கடியான உறைவிடம், தீய அண்டை வீட்டான், பிரச்சினை தரக்கூடிய வாகனம் என்பனவையாகும்.’ (அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரழி), நூல்: இப்னுஹிப்பான் 4094, பைஹகீ 9021)

நன்றி:→ மௌலவி நஷ்மல் (பலாஹி)

நன்றி:→ அல்அதர் மாத இதழ்.

சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு


திருக்குர்ஆனில் மிக முக்கிய அத்தியாயம் சூரத்துல் ஃபாத்திஹாஎனப்படும் அல்ஹம்து   அத்தியாயமாகும்.

ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாயத்தை அறியாத – மனனம் செய்யாத முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது.

ஆனாலும் அதன் மகத்துவத்தை அவர்கள் அறிவதில்லை.

இதன் சிறப்பு குறித்து வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும் முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டும், பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக தொகுத்து வழங்குகிறோம்.

தேள் கடிக்கு மருந்து!


நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்நிலையில் அந்தக் கூட்டத்தின் தலைவனை (தேள்) கொட்டிவிட்டது. உங்களிடம் மருந்தோ அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கு நபித்தோழர்கள், ”நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்என்று கூறினார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள்.

அதன் பின்னர் ஒருவர், ‘அல்ஹம்துசூராவை ஓதி உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்என்று கூறி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டார்கள். இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத் தக்கது என்று உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டு விட்டு எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 2276

இதே ஹதீஸ் புகாரி (5007. 5736. 5749) ஆகிய எண்களிலும், முஸ்லிம் (4428, 4429), திர்மிதி (1989), அபூதாவூத் (3401, 2965), இப்னுமாஜா (2147), அஹ்மத் (11046, 10972, 10648, 10562) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.

திர்மிதியின் மற்றொரு (1989) அறிவிப்பில் முப்பது ஆடுகள் கொடுத்தார்கள் என்றும் பாத்திஹாவை ஏழு தடவை ஓதினார் என்றும் இடம் பெற்றுள்ளது.

அஹ்மத் (10972) என்ற நூலில், தேள் கொட்டிய இடத்தில் ஓதி துப்பினார் என்று இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸிலிருந்து தேள் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டினால் பாத்திஹாவை வைத்து ஓதிப் பார்க்கலாம் என்று நமக்கு தெரிகிறது. என்றாலும் நிவாரணம் கிடைப்பது அவர்களின் இறையச்சத்தைப் பொறுத்தது. மேலும் நபி (ஸல்) அவர்கள் நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள். எனவே மருத்துவம் செய்வதுடன் இறைவனிடமும் நோய் நிவாரணத்திற்கு துஆச் செய்ய வேண்டும்.

மகத்தான அத்தியாயம்!

நான் ஒரு முறை தொழுது கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களுடைய அழைப்புக்குப் பதில் கொடுக்கவில்லை. தொழுது முடித்த பின் அவர்களிடம் சென்றேன். நான் அழைத்தவுடன் வருவதற்கு என்ன தடை?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். அல்லாஹ்வின் தூதரே! தொழுது கொண்டிருந்தேன்என்று நான் கூறினேன்.

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு உயிர் அளிக்கக் கூடிய ஒரு காரியத்திற்காக இத்தூதர் அழைக்கும் போது இத்தூதருக்கும் அல்லாஹ்வுக்கும் பதிலளியுங்கள்‘ (அல் குர்ஆன் 8:24) என்று கூறவில்லையா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, ”இந்தப் பள்ளியிருந்து நீ புறப்படுவதற்கு முன் குர்ஆனில் உள்ள மகத்தான ஒரு அத்தியாயத்தை உனக்கு நான் கற்றுத் தருகிறேன்என்று கூறி எனது இரு கையையும் பிடித்துக் கொண்டனர்.

அவர்கள் பள்ளியிலிருந்து புறப்படுவதற்குத் தயாரான போது, ”அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனில் உள்ள மகத்தான ஓர் அத்தியாயத்தைக் கற்றுத் தருவதாகக் கூறினீர்களே!என்று நினைவு படுத்தினேன். அவர்கள் ஆம்அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது தான் அந்த அத்தியாயம் என்று கூறினார்கள்.நூல்: புகாரி 4474.

இதே ஹதீஸ் புகாரி (4647, 4703, 5006), நஸயீ (904), அபூதாவூத் (1246), இப்னு மாஜா (3775), அஹ்மத் (15171, 17117), தாரமி (1454, 3237), ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ் திர்மிதீ (2800வது) அறிவிப்பில் தவ்ராத், இன்ஜீல் மற்றும் ஸபூர் ஆகிய வேதங்களில் இல்லாத மகத்தான சூராவை கற்றுத் தரட்டுமா?” என்று கேட்டதாக இடம் பெற்றுள்ளது.

குர்ஆனின் அன்னை!

திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும், மகத்தான குர்ஆனும் ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4704

இறைவனிடம் உரையாடும் அத்தியாயம்!

தொழுகையில் ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்என்று ஒருவன் கூறும் போது என்னை என் அடியான் புகழ்ந்து விட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். அவன் அர்ரஹ்ôனிர் ரஹீம்என்று கூறும் போது என் அடியான் என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில் பாராட்டி விட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். மாலிக்கி யவ்மித்தீன்என்று கூறும் போது என்னைக் கவுரவப்படுத்த வேண்டிய விதத்தில் கவுரவப்படுத்தி விட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தயீன்என்று கூறும் போது இதுதான் எனக்கும் எனது அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்என்று அல்லாஹ் கூறுகிறான். இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்என்று கூறும் போது என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்: முஸ்லிம் 655

ஒளிச்சுடர்!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அமர்திருந்த போது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கண்டார். அப்போது வானத்தை அன்னாந்து பார்த்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள், ”இதோ! வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறதுஎன்று கூறினார். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி வந்தார். அப்போது ஜிப்ரயீல், ”இதோ! இப்போது தான் இந்த வானவர் பூமிக்கு வந்திருக்கிறார். இதற்கு முன் அவர் பூமிக்கு இறங்கியதில்லைஎன்று கூறினார். அவ்வானவர் ஸலாம் கூறிவிட்டு, ”உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப்பட்டிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். அல் ஃபாத்திஹா அத்தியாயமும் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை! அவற்றிலுள்ள எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லைஎன்று கூறினார்.நூல்: முஸ்லிம் 1472, நஸயீ 903.

பைத்தியத்திற்கும் மருந்து!

அலாகா பின் சுகார் (ரலி) அவர்கள் ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அம்மக்கள், ”நீர் இந்த மனித(தூத)ரிடமிருந்து நல்ல செய்தியைக் கொண்டு வந்திருக்கிறீர். எங்களுக்காக இந்த மனிதருக்கு ஓதிப் பார்ப்பீராக!என்று கூறி விட்டு, சங்கலியால் பிணைக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். காலையிலும் மாலையிலும் சூரத்துல் பாத்திஹாவின் மூலம் ஓதிப் பார்த்தர்கள். பின்பு அவர் முடிச்சியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவரைப் போன்று மகிழ்ச்சியில் திளைத்தார். இதற்காக அம்மக்கள் அவருக்கு (ஆடுகளை அன்பளிப்பு) வழங்கினார்கள். இதை அவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் சொன்ன போது, ”நீ அதில் சாப்பிடு! என்னுடைய வாழ்நாள் மீது சத்தியமாக! மக்களில் சிலர் தவறானதன் மூலம் மந்திரித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் நீர் உண்மையைக் கொண்டு சாப்பிடுகிறீர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத் 2966, அஹ்மத் 20833, 20834

மற வேதங்களில் இல்லாத அத்தியாயம்!

அல்ஃபாத்திஹா அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைப் போன்று வேறு எந்த வேதத்திலும் குறிப்பிடப்படவில்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடத்தில் உபை (ரலி) அவர்கள் உம்முல் குர்ஆன் (ஃபாத்திஹா) அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். தவ்ராத், இன்ஜீல், ஸபூர், புர்கான் ஆகிய வேதங்களில் இது போன்று அருளப்படவில்லை. இதுதான் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்டதும், மகத்துவம் மிக்க குர்ஆனும் ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்:அஹ்மத் 8328.

இதே ஹதீஸ் திர்மிதி (2800, 3049, 3050) நஸயீ (905), அபூதாவூத் (1245), தாரமி (3238) ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக வைத்திருக்கும் அஜரத்துமார்கள் இந்த ஆதாரங்களைத்தான் காட்டுகின்றனர்.எனவே ஓதிப்பார்ப்பது பற்றிய முழு விபரங்களையும் விரிவாக எழுதினால் பாமர மக்கள் தெளிவு பெறுவார்கள்.மந்திரித்தல் என்பது மார்க்கத்தின் அடிப்படையில் எவ்வகையில் கூடும் எவ்வகையில் கூடாது என்பதை தெளிலாக விளக்கவும்.உதாரணமாக தேள்கடி போன்ற வற்றுக்கு இவ்விதம் மந்திரித்தால் சரியாகுமா? இது போன்ற பிரச்சினைகளில் ‘நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள்’ என்னும் கருத்துப்பட வந்துள்ள நபி மொழிக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் சற்று குறைவது போல் தோன்றுகின்றதே இவை பற்றியெல்லாம் சற்று விரிவாக ஒரு கட்டுரை வெளியிட்டால் அனைவருக்கும் பயனாக இருக்கும்.


உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். ஓதிப் பார்த்தலை இஸ்லாம் முற்றிலும் தடுக்கவில்லை என்றாலும் இன்றைக்கு நடைமுறையில் உள்ள ஓதிபார்த்தல் என்ற ஏமாற்று வேலைக்கும் இஸ்லாம் சொல்லும் ஓதி பார்த்தலுக்கும் தொடர்பில்லை. இது குறித்து விரைவில் விளக்கமான கட்டுரை வரும் இன்ஷா அல்லாஹ்.

மருத்துவம் செய்யுங்கள் என்று வந்துள்ள நபிமொழிகள் ஓதிபார்த்தலுக்கு எதிரானதல்ல.

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاء لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِين

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது😉 மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.(10:57)

குர்ஆனில் நோய்க்கு மருத்துவம் இருக்கின்றது என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகின்றது.

நன்றி:- அத்திகடையான்


بسم الله الرحمن الرحيم

In the name of Allah , the Entirely Merciful, the Especially Merciful.

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.



الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ

Praise be to Allah, Lord of the Worlds,

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.



الرَّحمٰنِ الرَّحيمِ

The Beneficent, the Merciful:

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).


مٰلِكِ يَومِ الدّينِ

Owner of the Day of Judgment,

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.



إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ

Thee (alone) we worship; Thee alone we ask for help.

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!



اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ

Show us the straight path,

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.



صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ

The path of those whom Thou hast favored; Not (the path) of those who earn Thine anger nor of those who go astray.

(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.


*********************************

Facts about Holy QURAN


Facts about Holy Quran
1. How many Sura are in Holy Quran ? 114
2. How many Verses are in Holy Quran ? 6666.
3. How many dots are in Holy Quran ? 1015030.
4. How many over bar (zaber) are in Holy Quran ? 93243
5. How many under bar ( Zaer ) are in Holy Quran ? 39586
6. How many Raque are in Holy Quran ? 1000.
7. How many stop ( Waqf ) are in Holy Quran ? 5098.
8. How many Thashdeed are in Holy Quran ? 19253.
9. How many letters are in Holy Quran ? 323671
10 How many pash are in Holy Quran ? 4808.
11 How many Madd are in Holy Quran ? 1771
12 How many words are in Holy Quran ? 77701.
13 How many parts are in the Holy Quran? 30.
14 How many times is Bismillah Al-Rahmaan Al-Raheem repeated ? 114.
15 How many Sura start with Bismillah Al-Rahmaan Al-Raheem ? 113.
16 How many times is the word ‘Quran’ repeated in Holy Quran ? 70.
17 Which is the longest Sura of Holy Quran ? Al-Baqarah.
18 What is the best drink mentioned in Holy Quran ? Milk.
19 The best eatable thing in the Quran? Honey.
20 Which is the shortest Sura of Holy Quran ? Qauthar
21 The longest verse of Holy Quran is in which Sura? Al-Baqarah No.282
22 The most disliked thing by the Allah that is Halal is? Divorce
23 Which letter is used the most in Holy Quran? Alaph
24 Which letter is used the least in Holy Quran ? Zaa.
25 Which is the best night mentioned in Holy Quran ? Night of Qadar.
26 Which is the best month mentioned in Holy Quran ? Ramadan.
27 Which is the biggest animal mentioned in Holy Quran ? Elephant.
28 Which is the smallest animal mentioned in Holy Quran ? Mosquito
29 How many words are in the longest Sura of Holy Quran ? 25500.
30 How many words are in the smallest Sura of Holy Quran ? 42
31 Which Sura of Holy Quran is called the mother of Quran ? Sura Alfatiha
32 How many Sura start with Alhamduallah? 5- Fatiha,Inaam, Kahf, Saba & Fatr.
33 Which Sura has the same number of verses as the number of the Holy Quran ? Taqveer, 114 verses.
34 How many Sura’s name is only one letter ? Three, Qaf, Sad & Noon.
35 How many Sura’s start with word ” Inna ” ? Four sura – Fatha, Nuh,Qadr, Qausar.
36 Which Sura has the number of its verses equal to the number of Masumeen ? Saf, 14 verses.
37 Which sura are called Musabbahat ? Esra, Hadeed, Hsar, Juma, Taghabun & Aala.
38 How many sura are Makkahi and how many are Madani? Macci 86, Madni 28.
39 Which sura is the name of the tribe of the Holy Prophet ? Quresh
40 Which sura is called the heart of Holy Quran ? Yaseen.
41 In which sura is the name of Allah repeated five times ? Sura al-Haj.
42 Which sura are named Azaiam ? Sajdah, Fusselat, Najum & Alaq.
43 Which sura is the name of one Holy war ? Sura Ahzaab.
44 Which sura is on the name of metal ? Sura Hadeed
45 Which sura does not start with Bismellah ? Sura Tauba.
46 Which sura is called ‘ Aroos-ul-Quran ? Sura Rahman.
47 Which sura is considered as 1/3 of holy Quran ? Sura Ikhlas
48 The names of how many sura are with out dot ? Hamd, Raad, Toor, Room, Masad.
49 Which sura did Besmillah come twice ? Sura Naml.
50 How many sura start with the Initials ( Mukette’at ) 29 Sura.
51 Which Sura was revealed twice ? Sura Hamd.
52 In which Sura is the back biter condemed? Sura Humzah.
53 In which Sura is the name of Allah repeated in every verse ? Sura Mujadala.
54 In which Sura is the letter ‘Fa’ not it? Hamd.
55 Which Sura are called Mo3wethatan Falk & Nas.
56 Which Sura if their name sare reversed remain the same ? Lael & Tabbat.
57 Which Sura if its first letter is removed becomes the name of a city in Saudi Arabia? Sajdah
58 Which Sura start with word ‘ Tabarak Allthey Mulk & Furkan
59 Macci Sura were revealed in how many years ? 13 years
60 Madani Sura were revealed in how many years ? 10 years.
61 Which sura start with word Kad ? Mujadala & Momenoon.
62 Which Sura is related to Hazrat Ali ? Sura Adiat..
63 How many Suras are in the 30th. Chapter ? 37.
64 Which sura does every verse end with letter ‘Dal ‘ ? Tauheed.
65 Which Sura is revealed in respect of Ahllelbayet ? Sura Dahr.
66 In Which sura does every verse end with letter ‘ Ra ‘ Qather
67 In which surais the creation of human being mentioned ? Sura Hijr V-26.
68 In which sura is the regulations for prisoner of war mentioned ? Sura Nesa
69 Which sura has the laws about marriage ? Sura Nesa.
70 Which sura if its name is reversed becomes the name of one bird ? Sura Room.
71 In which sura is the story of the worship of cow of Bani Esra’iel mentioned ? Sura Taha.
72 In which sura is the law of inheritance mentioned? Sura Nesa.
73 In which sura is the Hegira of Holy Prophet mentioned ? Sura Infall.
74 In which Sura are the 27 Attributes of God mentioned ? Sura Hadeed.