தொகுப்பு

Archive for the ‘முரண்பாடுகளை முறியடிப்போம்’ Category

முரண்பாடுகளை முறியடிப்போம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்.


உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;

விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;

நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;

பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;

நிரம்ப வசதிகள் உள,
குறைவான நேரங்களே கிடைக்கின்றன;

பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,
பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;

நிறைய அறிந்திருந்தாலும்,
அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;

அறிஞர்கள் அதிகமானதால்,
குழப்பங்களும் கூடி விட்டன;

மருந்துகள் பெருகிவிட்டன,
நிவாரணம் அருகிவிட்டன;

உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,
அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;

அதிகமாகவே பேசுகின்றோம்,
அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;

வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;

ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,
வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;

விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,
மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;

வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,
உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;

காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,
ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;

அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,
அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?

உயர்வான ஊதியம் காணுகின்றோம்,
குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;

அளவையிலே நிறைந்துள்ளோம்,
தரத்தினிலே குறைந்துள்ளோம்;

இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,
உறவுகளை கழித்து விட்டோம்;

“உலக அமைதி”க்கு உச்சி மாநாடு,
கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;

வகைவகையான உணவு பதார்த்தங்கள்,
மிகமிக குறைவான சத்துக்களே– என்பதே யதார்த்தம்;

இருவழிப் பாதையாக வருமானம்,
ஒருவ்ழிப் பாதையாக “விவாகரத்து” பெருகுவதே அவமானம்;

அலங்கார இல்லங்கள்,
அலங்கோல உள்ள்ங்கள்;

காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,
வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;

தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே
அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை…………………..!!!!!