எல்லைக் கோடு – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
எல்லையிலா அருளால் காக்கும்
…..இறையவன் வகுத்த சட்டம்
எல்லைக்கோ டென்று பார்த்து
…..இணங்கிநீ வாழ்தல் திட்டம்
தொல்லைகளும் வரத்தான் செய்யும்
…தொடர்ந்துநீ முன்னே செல்வாய்
இல்லையென்றால் உழைப்பில் தேக்கம்.
…இருப்பதைக் கண்டு கொள்வாய்!
அளவுக்கு மிஞ்சும் போதில்
…அமுதமும் நஞ்சாய்ப் போகும்
பிளவுக்கு வழியைக் காட்டும்
….பிறர்மனம் புண்ணாய்ப் போகும்
அளவுக்கு மேலே காட்டும்
..அக்கறைக் கூடத் தொல்லை
களவில்லாக் கற்பைப் பேண
…காண்பது பண்பின் எல்லை!
நாட்டிலுள்ள எல்லைக் கோடு
…..நல்லவர் மதிக்கும் கோடு
வீட்டிலுள்ள எல்லைக் கோடு
…விரும்புவர் அண்டை வீடு
பாட்டிலுள்ள யாப்பின் கோடு
….பாடலின் அமைப்பைக் காட்டும்
வாட்டிவிடும் வறுமைக் கோடு
…வறுமையின் எல்லைக் கோடு!
ஆட்டத்தில் எல்லைக் கோடு
…..ஆட்டமும் சிறக்கச் செய்யும்
நாட்டத்தில் எல்லைக் கோடு
…நாளையை எண்ணிப் பார்க்கும்
நோட்டத்தில் எல்லைக் கோடு
..நோவினை இல்லாக் கற்பு
கூட்டத்தில் எல்லைக் கோடு
…கூச்சலைத் தடுத்து வைக்கும்!
நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
-
- அணைக்கட்டு
- அப்பா
- அமலால் நிறையும் ரமலான்
- ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??
- இணயதளம் ஓர் இனியதளம்
- இயற்கையெனும் இளையகன்னி
- இறையற்புதம்
- உறவுகள்
- ஊனம்
- எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!!
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பயணம்
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- மவுனம் களைந்தால்…
- முயன்றால் வெல்லலாம்
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- வாழ்க்கை எனும் பாடம்
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
பர்தா – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
சென்றுவா ரமலானே! கொண்டுசேர் அமல்களை!! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
புடமிடு தங்கமென புத்துணர்வை யூட்டி
தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி
நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி
கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்
கடமையைச் செய்ய கருணை வரவாய்
உடனிருந் தாயே உளம்நிறை தோழா
விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து
மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா
பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்
மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்
கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே
கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க் கூறும் சகாத்தின் கொடையையும்
திட்டமிட் டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!
நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்புகள்! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
ஆன்மாவின் உணவாக
ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
நோய்முறிக்கும் ரமலானே!
பாரினிலே குர்ஆனைப்
பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
காதுகளில் சொட்டுந்தேன்!
பகைவனான ஷைத்தானைப்
பசியினாலே முறியடித்தாய்த்
தொகையுடனே வானோரைத்
தொடரவும்தான் நெறியளித்தாய்!
இருளான ஆன்மாவை
இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
அழைத்திடுமுன் வழியாமே!
நூற்களும்தான் நண்பனாம்
நோற்றிடும்நற் பொழுதினிலே
நூற்களிந்தாய் குர்ஆனை
நண்பனாக வழங்கினாயே!
இம்மாதம் மறையோதி
இரட்டிப்பு நன்மைகள்
இம்மைக்கும் மறுமைக்கும்
இனிப்பாகத் தந்தாயே
புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
புத்துணர்வுப் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
தினந்தொழுத தராவிஹூமே!
நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
-
- அணைக்கட்டு
- அமலால் நிறையும் ரமலான்
- ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??
- இணயதளம் ஓர் இனியதளம்
- இயற்கையெனும் இளையகன்னி
- இறையற்புதம்
- உறவுகள்
- எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!!
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பயணம்
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- மவுனம் களைந்தால்…
- முயன்றால் வெல்லலாம்
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- வாழ்க்கை எனும் பாடம்
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
வாழ்க்கை எனும் பாடம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
வெற்றிலையும் சுண்ணாம்பும் சேர்ந்தால் நாக்கு
வெளிக்காட்டும் செந்நிறத்தின் அழகு போல
வெற்றிகளை ஈட்டிவரும் சான்றோர் வாழ்வு
வீரியமாய்த் தந்திரமும் இணைந்த தாலே
சுற்றிவரும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டு
சுழற்றியதை முறியடித்தார் விரைந்து சென்று
கற்றிடுவோம் அவர்வாழ்வில் முன்னேற் பாட்டை!
கழற்றிடுவோம் நம்வாழ்வில் ஐயப் பாட்டை
பல்லுக்குள் அகப்பட்ட நாக்கைப் போலப்
பக்குவமாய்ச் சுழலுதலே வாழ்க்கை என்போம்
சொல்லுக்கும் செயலுக்கும் வேறு பாடோ
சோதனைகள் கொண்டுவரும் முன்னேற் பாடே
வில்லுக்குள் பூட்டிவைத்த அம்பைப் போல
விவேகத்தைப் பூட்டிவைப்போம் அன்பி னாலே
கல்லுக்குள் மறைந்துள்ளத் தேரை வாழக்
கருணையாளன் உணவளித்துக் காப்பா னன்றோ
வாய்கொண்டு விழுங்குகின்ற முயற்சி போல
வாழ்க்கையிலும் விடாமுயற்சி இருக்க வேண்டும்
நோய்கொண்டு வாடினாலும் மருந்தை நாடி
நோகாமல் சிகிச்சைகள் செய்வோம் தேடி
தாய்கொண்டு வந்தவுடல் அழிவைத் தேடித்
தானாக மாய்வதற்குக் குழியைத் தோண்டித்
தேய்கின்ற நிலைமைக்கு சைத்தான் நம்மைத்
தீண்டுகின்ற சூழ்ச்சிகளை அறிதல் நன்றே!
நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
-
- அணைக்கட்டு
- அப்பா
- அமலால் நிறையும் ரமலான்
- ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??
- இணயதளம் ஓர் இனியதளம்
- இயற்கையெனும் இளையகன்னி
- இறையற்புதம்
- உறவுகள்
- ஊனம்
- எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!!
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பயணம்
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- மவுனம் களைந்தால்…
- முயன்றால் வெல்லலாம்
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- வாழ்க்கை எனும் பாடம்
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
பயணம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
தந்தையின் விந்தும் கருவறை நோக்கித்
தனிமையில் முதன்முதற் பயணம்
முந்தவும் பின்னே இறையருள் கொண்டு
முயற்சியால் வென்றதும் பயணம்
பந்தென உருண்டு பக்குவத் திங்கள்
பத்தினில் கருவறைப் பயணம்
வந்திடும் தருணம் வந்ததும் நலமாய்
வையகம் கண்டதும் பயணம்
கருவறைப் பயண மிருந்ததை மறந்து
கனவினில் மிதந்திடும் நீயும்
ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும்
உறுதியை நம்பியே மரணம்
வருவதும் பயணம்; அதுவரை உலகில்
வாழ்வதும் நிலையிலாப் பயணம்
பருவமும் மாறி வளர்சிதை மாற்றம்
படிப்பினைக் கூறிடும் பயணம்
மடியினில் சாய்ந்து தாயுடன் பயணம்
மகிழ்வுடன் தந்தையின் தோளில்
நடைதனைப் பழக்கும் நண்பனாய் வந்த
நடைபயில் வண்டியில் பயணம்
தடைகளை யுடைத்துப் புரளவும் முயன்று
தவழவும் வாய்த்ததும் பயணம்
விடைகளாய் அறிவும் தெளிந்திடப் பள்ளி
வகுப்பினிற் சேர்ந்ததும் பயணம்
பிழைப்பினை நாடித் தாயகம் விட்டுப்
பிரிந்ததும் சுவையிலாப் பயணம்
உழைப்பினப் பொருத்து ஊரெலாம் மாறி
உலகினில் உழலுதற் பயணம்
தழைத்திடும் இளமைப் பருவமே எமக்குத்
தந்திடும் துணையுடன் பயணம்
அழைத்திடும் காலம் வரும்வரை நாமும்
அவனியில் உலவுதல் பயணம்
மனிதனாய் வாழ நல்வழித் தேடி
மார்க்கமும் பயிலுதல் பயணம்
புனிதமாய்க் கருதும் புகலிடம் தேடி
புறப்படல் அருள்நிறைப் பயணம்
இனிவரும் மறுமை இனியதாய் அமைய
இறைவனை வழிபடும் பயணம்
கனியென நினைத்த வாழ்க்கையிற் பின்னர்
கசந்திடும் பயணமே மரணம்!
(விளம்+மா+விளம்+மா+விளம்+விளம்+மா)
நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)
அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499
வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/
கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- அணைக்கட்டு
- அப்பா
- அமலால் நிறையும் ரமலான்
- ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??
- இணயதளம் ஓர் இனியதளம்
- இறையற்புதம்
- உறவுகள்
- ஊனம்
- எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!!
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- மவுனம் களைந்தால்…
- முயன்றால் வெல்லலாம்
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
இயற்கையெனும் இளையகன்னி – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
புத்தனுக்கு போதிமரம்
குப்பனுக்கு ஏது மரம்?
ஒஸான் படலம்
ஓட்டையால் துன்பப் படலம்
வீசுமாக் காற்றும்; மரங்கள்
வீழ்ந்திடும் போழ்தும்
”ஏசி”க் காற்றும் இனி
ஏழைக்கு எட்டாக் கனி
மரங்கள்
பூமித்தாயின்
பூர்விக சேய்கள்
வளர்த்தால் நேயமாய்த்
தீர்க்கும் நோய்கள்
வளர விடாமல்
வாளால் அறுப்பவர்கள்
வஞ்சக மனிதப் பேய்கள்
மரமெனும் தாயை அழிக்க
மரத்தினாலான கோடரியை
மனிதனும் துணைக்கு அழைக்க
வளர்த்த கிடா மார்பினில் பாயென
வளர்த்து விட்டோம் துரோகச் சேயினை
நிழலில் அன்னையாய்
தென்றலில் கன்னியாய்
மூலிகையில் மருத்துவனாய்
ஓயாமல் உழைக்கும் மரங்களை
ஓயாமல் அழிக்கும் மர மண்டைகளே
சாபமும் கோபமும் சுனாமியாகி
சாய்க்கின்றன மரத்தண்டுகளை
அலையாத்திக் காடுகளே
அலைகளோடுப் போராடுதே
அரண்களாய்க் காக்கும்
மரங்களைப் போக்கும்
மனங்களை என்னென்பேன்?!
குணங்களில் புண்ணென்பேன்
ஈரக்குலை களைப்போன்ற ஈரப்பத நிலங்களையும்
எழிலார்ந்து வளர்ந்துவரும் இயற்கைதரும் வளங்களையும்
வேரருக்கும் தீயகுணம் வேண்டாமெம் நாட்டினிலே
வேண்டுகோளை உங்களிடம் விடுக்கின்றேன் பாட்டினிலே
பிழையினைச் செய்தாய் பொறுப்பிலா மனிதா
மழையினை எப்படி மேகந்தரும் எளிதாய்?
சுரண்டும் மணலால் சும்மா தங்குமா
திரண்டு வருகின்றத் தண்ணீர் எங்குமே?
கறந்த பாலும் கனமடி புகாதே
வறண்ட நிலமும் வளத்தினைத் தராதே
கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் மரக்கட்டை
கட்டையாகிப் போனபின்பும் மரக்கட்டை
மட்டில்லாச் சேவைகளைச் மரங்களுந்தான்
மனிதனுக்குச் செய்துவந்தும் மறந்துபோனான்
இயற்கையெனும் இளையகன்னி மரமென்போம்
இறைவனளித்த ஈடில்லா வரமென்போம்
செயற்கையாய்க் காண்பதெலாம் வெறுந்தோற்றம்
செழுமையினைத் தந்திடுமே பெருந்தோட்டம்
வாழவைப்போம் வளர்த்தோங்கும் மரங்களைத்தான்
வதைத்திடுவோம் அழிக்கும் கரங்களைத்தான்
சூழவைப்போம் சுற்றுப்புற உரங்களைத்தான்
சொல்லிவைப்போம் சந்ததிக்கும் தரங்களைத்தான்
நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)
அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499
வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/
கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
- அணைக்கட்டு
- அப்பா
- அமலால் நிறையும் ரமலான்
- ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??
- இணயதளம் ஓர் இனியதளம்
- இறையற்புதம்
- உறவுகள்
- ஊனம்
- எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!!
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- மவுனம் களைந்தால்…
- முயன்றால் வெல்லலாம்
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
அணைக்கட்டு – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
அணைக்கட்டு அன்பை அணைக்கட்டும்
’முல்லைப் பெரியாறு’
சொல்லிப் பாரு
நற்றமிழ்ப் பேரு
நம்மை ஏய்ப்பது யாரு?
உடைப்பதில் தான்
இடைத்தேர்தல் வெற்றி
கிடைப்பதென்பது
மடையர்களின் சூழ்ச்சி
தமிழின் உதிரமாய்
உன்றன் மொழியும்
தமிழனின் உதிரமும்
தட்டிப் பறிக்கின்றாய்
உன்றன் பூமியில்
உள்ள சாமியைத் தேடி
உன்றன் பூமிக்கு வந்தவன்
உதிரம் குடிக்கும் நீயும்
உலக மகா அறிவிலி
அணை கட்டாதே
அன்பால் எம்மை
அணைக்கட்டு
அனைத்துக் கட்சிகளும் அரவணைத்து “அணையுங்கள்”
நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)
அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499
எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும்
வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும்
நம்பி இறங்கு நலமே கிடைத்திடும்
வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்
நோக்கம் இருந்தால் நெருங்குமே சக்திதான்
ஊக்கம் குறைந்தால் உடையுமே யுக்திகள்
நல்ல மனத்தில் நலங்களே தங்கிடும்
பொல்லாப் பகையால் பிளவுகள் பொங்கிடும்
ஐயம் களைதல் அவசியத் தேவையாம்
பொய்யும் புறமும் பொசுக்கிடும் சேவையை
எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்
புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்
நன்றி மறப்பதால் நன்மை அழிந்திடும்
என்றும் துரோகமே இன்பம் ஒழித்திடும்
நட்பின் வளையம் நமக்கு வரம்தரும்
தப்பு வராமல் தடுக்கும் அரண்பெறும்
யாப்பிலக்கணம்: குறள் வெண்செந்துறை.
நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)
அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499
வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/
- அப்பா
- ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??
- இணயதளம் ஓர் இனியதளம்
- இறையற்புதம்
- உறவுகள்
- ஊனம்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!!
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- மவுனம் களைந்தால்…
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
அண்மைய பின்னூட்டங்கள்