தொகுப்பு

Posts Tagged ‘முஸ்லிம்’

தராவீஹ் துஆ – TARAWEEH DUA


தராவீஹ் தொழுகைக்கு பிறகு ஓத வேண்டிய துஆ

tarawih_dua_Arabi.jpg

tarawih_dua_Tamil.jpg

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ٭ اَللّٰهُمَّ اجْعَلْنَا بِالْاِيْمَانِ كَامِلِيْنَ وَلِفَرَائِضِكَ مُؤَدِّيْنَ وَلِلصَّلٰوةِ حَافِظِيْنَ، وَلِلزَّكٰوةِ فَاعِلِيْنَ ، وَلِمَا عِنْدَكَ طَالِبِيْنَ ، وَلِعَفْوِكَ رَاجِيْنَ ، وَبِالْهُدٰى مُتَمَسِّكِيْنَ ، وَعَنِ اللَّغْوِ مُغْرِضِيْنَ، وَفِي الدُّنْيَا زَاهِدِيْنَ ، وَفِى الْاٰخِرَةِ رَاغِيْنَ ، وَبِالْقَضَآءِ رَاضِيْنَ وَلِنِّعْمَاءِ شَاكِرِيْنَ ، وَعَلىَ الْبَلَآءِ صَابِرِيْنَ، وَتَحْتَ لِوَآءِ حَبِيْبِكَ وَنَبِيِّكَ وَصَفِيِّكَ وَرَسُوْلِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيٰمَةِ لاَئِذِيْنَ ، وَاِلَى الْحَوْضِ وَارِدِيْنَ ، وَمِنْ سُنْدُسٍ وَاٍسْتَبْرَقٍ مُتَلاَبِسِيْنَ ، وَمِنْ طَعَامِ الْجَنَّةِ اٰكِلِيْنَ ، وَمِنْ لَبَنٍ وَعَسَلٍ مُصَفًّى شَارِبِيْنَ ، بِاَكْوَابِ وَاَبَارِيْقَ وَكَأْسٍ مِنْ مَعِيْنٍ مَعَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِيْنَ ٭ اَللّٰهُمَّ  اَجْعَلْنَا فِى هَذٰالشَّهْرِ الشَّرِيْفِ مِنَ السُّعَدَآءِ الْمَقْبُوْلِيْنَ وَلاَ تَجْعَلْنَا يَااللهُ يَا اَللهُ يَااَللهُ مِنَ الْاَشْقِيَآءِ الْمَرْدُوْدِيْنَ ٭ اَللّٰهُمَّ وَاِنَّ لَكَ فِيْ كُلِّ لَيْلَةٍ مِنْ لَيَالِيْ شَهْرِ رَمَضَانَ عُتَقَآءَ وَطُلَقَآءَ وَاُمَنَاءَ وَخُلَصَاءَ فَاجْعَلْنَا يَارَبَّنَا مِنْ عُتَقَآئِكَ وَطُلَقَآئِكَ وَاُمَنَائِكَ وَخُلَصَآئِكَ مِنَ النَّارِ وَالْعَفْوَ عِنْدَ الْحِسَابِ ٭ وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيَّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ 

 

காலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க


Hadith_Bismilla1

திடீர் சோதனைகள் அணுகாதிருக்க

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். யாரேனும் ஒருவர்

بِسْـمِ اللهِ الَّذِيْ لاَ يَضُـرُّ مَعَ اسْمِـهِ شَيْءٌ فِي الْأًرْضِ وَلاَ فِي السَّمـَاءِ وَهُـوَ السَّمِـيْعُ الْعَلِـيْمُ

பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்.

“யாருடைய பெயர் (கூறுவதால்) வானம், பூமியிலுள்ளவை எந்தப் பொருளும் இடையூறு இழைக்க முடியாதோ அந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன். அவன் யாவற்றையும் கேட்பவன், அறிபவன்.”

என்று மாலையில் மூன்று முறை கூறினால் அவரைக் காலை வரை திடீர் சோதனைகள் அணுகாது. இவ்வாறே காலையில் கூறினால் அவரை மாலை வரை திடீர் சோதனைகள் அணுகாது. நூல்:- அபூதாவூத் 5090

وعنْ عُثْمَانَ بْنِ عَفَانَ رضيَ اللَّه عنهُ قالَ : قالَ رَسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَا مِنْ عَبْدٍ يَقُولُ في صَبَاحِ كلِّ يَوْمٍ ومَسَاءٍ كلِّ لَيْلَةٍ : بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَع اسْمِهِ شيء في الأرضِ ولا في السماءِ وَهُوَ السَّمِيعُ الْعلِيمُ ، ثلاثَ مَرَّاتٍ ، إِلاَّ لَمْ يَضُرَّهُ شَيءٌ » رواه أبو داود والتِّرمذي

அரிய நீதி – மு.அ. அபுல் அமீன்

பிப்ரவரி 16, 2014 1 மறுமொழி

அரசனின் நிதி, ஆள்வோருக்கு உரியதன்று. ஆளப்படும் மக்களுடையது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சி இது.

தாவூது நபி பனூ இஸ்ரவேலர்களின் அரசர். அவர்கள் மாறுவேடம் பூண்டு மக்களை சந்தித்து அரசரைப் பற்றி மக்களிடம் விசாரித்து மக்கள் கூறும் குறைகளைக் களைந்து நிறைவாய் ஆட்சி செய்தார்கள்.

ஒருநாள் மனித உருவில் உலாவிய மலக்கு (வானவர்) ஒருவரை சந்தித்த தாவூது நபி வழக்கம் போல் அரசரைப் பற்றி அபிப்ராயம் கேட்டார்கள்.

“நற்குணமுடைய அரசரிடம் அரசுப் பணத்தில் வாழும் அற்ப குணம் உள்ளது. அதனை மாற்றிக் கொண்டால் மன்னர் மாட்சியுடைவர்” என்று அந்த வானவர் சாட்சி சொன்னார்.

இதையடுத்து தாவூது நபி தொழில் ஒன்றைக் கற்றிட அருளுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். உள்ளம் உருகிய வேண்டுதலை ஏற்ற இறைவன் உருக்குச் சட்டை உருவாக்கி பொருளைப் பெருக்கி வாழும் பெருந்தொழிலை தாவூது நபிக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

இந்நிகழ்ச்சியை இறைமறை குர்ஆனின் 34-11வது வசனம்,

“பெரிய அங்கிகள் செய்வீராக. இன்னும் துவாரத்தில் அளவாக்கி வைப்பீராக. இன்னும் நற்செயல்களைச் செய்வீராக. நான் நீங்கள் செய்வதைப் பார்க்கிறேன்” என்று அல்லாஹ் தாவூது நபிக்கு நவின்றதைக் கூறுகிறது.

உருக்குச் சட்டை தயாரித்த தாவூது நபி ஒரு நாளைக்கு ஒரு சட்டையை நான்காயிரம் திர்ஹத்திற்கு விற்று இரண்டாயிரம் திர்ஹத்தை குடும்பத்திற்கு செலவிட்டு இரண்டாயிரம் திர்ஹத்தை தானம் செய்வார்கள். குர்ஆன் வசனத்தில் வர்ணித்தபடி உருக்குச் சட்டையின் வளையங்கள் ஒரே அளவாக இருந்தன.

தாவூது நபி இறந்தபொழுது அவர்களிடம் ஆயிரம் உருக்குச் சட்டைகள் இருந்தன என்று லுபாபு என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.

அரசுப் பணத்தை ஆடம்பரமாக அனாவசியமாய் செலவிடும் ஆட்சியாளர்கள் அறிய வேண்டிய அரிய நீதி இது.

நன்றி:- தினமணி 13 February 2014 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- கௌதிய்யா சங்கம், மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

மகனுக்கு புகன்ற நீதி – மு.அ. அபுல்அமீன் நாகூர்


justice

ஹழ்ரத் லுக்மானுல் ஹக்கீம் என்ற பெரியாரிடம் அவரின் மகன் அன்உம், “ஒருவரும் பாராது, அறியாது, தெரியாது ரகசியமாகச் செய்யும் குற்றத்தை அல்லாஹ் எப்படி அறிவான்” என்று கேட்டார்.

லுக்மான் மகனுக்குப் புகன்ற நீதியை திருக்குர்ஆனில்

QURAN 31-16

31-16 ஆவது ஆயத்தில் காணலாம். “மகனே! நிச்சயமாக அது கடுகினும் சிறிதாயினும் அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.

 கற்பாறைக்குள், வானத்தில், பூமியின் பாதாளத்தில் கடுகினும் சிறிய தவறைச் செய்தாலும் நுட்பமானதை அறியும் திட்பமுடை அல்லாஹ் அம்பலத்திற்குக் கொண்டு வந்துவிடுவான். இதயங்களில் உள்ள ரகசியங்களையும் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களையும் அறியும் நுண்ணறிவுடையவன் அல்லாஹ் என்பதை உணர்ந்தால் மறைவாகக் குற்றம் செய்து இறைவனிடமிருந்து தப்பிக்கலாம் என்று எந்த மனிதனும் நினைக்க மாட்டான்; குற்றத்தில் திளைக்க மாட்டான்; குறையின்றி நிறைவாக வாழ்வான் என்று மகனுக்கு நல்லுரை புகன்றார் லுக்மான்.

நன்றி:-   தி இந்து  December 26, 2013 

the_hindu_tamil_logo

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- கௌதிய்யா சங்கம், மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

சுவர்க்கத்தின் வாரிசுகள் – மு.அ. அபுல்அமீன் நாகூர்


அந்த விசுவாசிகள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்” என்று திருக்குர்ஆனின் 23-1வது வசனம் கூறும் உறுதியான வெற்றி பெற்ற அந்த விசுவாசிகள் யார்?

இக்கேள்விக்குரிய விடையை அடுத்து வரும் வசனங்கள் விளக்குகின்றன. “”எவர்கள் தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் (23-2)”

தொழுகையை வழக்கமான நிகழ்வாக தொழுதோம் என்று தொழாமல் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான், என்ற உள்ளுணர்வோடு தொழுபவர்.

“எவர்கள் தங்கள் தொழுகையை (விடாமல்) பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-9)”

தொழுகைக்குரிய நேரத்தில் தவறாமல் தாமதிக்காமல் முறையோடு தொழுபவர்கள்.

“எவர்கள் வீணானவற்றை புறக்கணிக்கிறார்களோ அவர்கள்(23-3)”

எதற்கும் உதவாத வீண் பேச்சு பயனற்ற செயல்களைச் செய்து வீண் பொழுது போக்காமல் ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கமுடன் செயல்படுபவர்கள்.

“‘எவர்கள் ஜகாத்தை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள்(23-4)”

கடமையாக்கப்பட்ட ஏழை வரியாம் ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து இணக்கமான சமுதாய சமத்துவத்திற்கு வழி வகுப்பவர்கள்.

“எவர்கள் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-5)” இழுக்குண்டாக்கும் இழி செயல்களைச் செய்யாது ஒழுக்கம் பேணி உடலின் எந்த அங்கமும் பங்கப்படும் பாவ  காரியங்களில் பங்கு கொள்ளாது காத்துக் கொள்பவர்கள். கண்களால் தீயதைப் பார்ப்பது காதுகளால் தீயதைக் கேட்பது, பிற உறுப்புகளைத் தீயதைத் தீண்டாது பாதுகாப்பவர்கள்.

23-6வது வசனப்படி மனைவியோடு இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்பவர்கள்.

23-7வது வசனப்படி இல்லறத்திற்குப் புறம்பானதைத் தேடி வரம்பு மீறாதவர்கள்.

“எவர்கள் தங்களின் அமானிதங்களையும் உறுதி மொழிகளையும் பேணுகிறார்களோ அவர்கள் (23-8)’. பிறர் அவரிடம் ஒப்படைக்கும் பொருட்களைப் பொறுப்புடன் பாதுகாத்துக் கொடுத்தவர்,  கேட்கும்பொழுது கொடுத்தபடி திரும்பக் கொடுப்பவர். ஒருவரிடம் வாக்குறுதி செய்ததை உண்மையாக, உறுதியாக நிறைவேற்றுபவர்கள். அவ்வாறே அல்லாஹ்விற்கு இணை வைக்காது வணங்கும்  ஈமானின் ஒப்பந்தத்தை தவறாது நடைமுறைப்படுத்துபவர்கள்.

“அவர்கள்தான் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள்

(23-10)”

முன்னர் கூறப்பட்டவற்றை முறையாக செய்தவர்கள் சுவர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் என்று உறுதியளிப்பதோடு “”அவர்கள் பிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கத்தை சொந்தமாக்கிக்கொண்டு அதில் நிரந்தரமாக  இருப்பார்கள்” என்று 23-11வது வசனம் அவர்கள் அங்கே நிரந்தரமாய் நிலைத்திருப்பதை நிச்சயப்படுத்துகிறது. மேலும் “‘எவருடைய (நன்மைகளில்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம்  வெற்றி பெற்றவர்கள் (23-102)” என்று உலகில் வாழும் காலத்தில் நன்மையைச் செய்தவர்களே அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் என்று மீண்டும் நன்மை செய்யும் நற்பலனைப் போதிக்கிறது.

‘எனக்கு பத்து ஆபத்துகள் அருளப்பட்டன. அவற்றின்படி நடப்பவர் சுவர்க்கம் புகுவார்” என்று எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி மேற்குறிப்பிட்ட பத்து ஆயத்துகளை ஓதிக் காட்டியதை  இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள் எடுத்துரைத்து எல்லோரும் ஏற்று நடக்க அறிவுறுத்தினார்கள்.

நாமும் இவ்வாயத்துகளில் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளைப் பேணி இறையருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 24 OCT 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

கலீபாவும் கஜானாவும் – மு.அ. அபுல்அமீன் நாகூர்

நவம்பர் 6, 2013 1 மறுமொழி

கலீபா உமர்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் ஊதிய மின்றி கலீபா உத்யோகம் பார்த்தார்கள். கலீபா பணிச்சுமை, வருவாய் தேடும் வாய்ப்பைக் குறைத்த பொழுது குடும்ப செலவிற்கு ஒருநாளைக்கு இரண்டு  திர்ஹங்கள் பெற்றார்கள்.

சலிக்காத மாவில் ஜைத்தூண் எண்ணெயில் சுட்ட சாதாரண ரொட்டியே அவர்களின் குடும்ப உணவு. கலீபாவை காண வருவோர் அவ்வுணவை சாப்பிட சிரமப்படுவர். ஒருமுறை கலீபா உமர்(ரலி) அவர்கள்  உணவு உண்ணும் பொழுது அஜர்பைஜானின் ஆளுனர் ஹழ்ரத் உத்பா இப்னு பர்கத் (ரலி) அவர்கள் கலீபாவை காண வந்தார். கலீபா, ஆளுநருடன் உணவைப் பகிர்ந்துகொண்டார். ஒரு கவளம் வாயிலிட்ட  ஆளுநர் அல்லல்பட்டு அதோடு உண்பதை நிறுத்தினார். கலீபா காரணம் கேட்டவுடன் “”சலிக்காத மாவை ஜைத்தூண் எண்ணெயில் சுட்டு எப்படி சாப்பிட முடிகிறது? மாவைச் சலித்து மணமுள்ள  எண்ணெயில் சமைத்து சாப்பிடக் கூடாதா?” என்று வினவினார்.

“”சலித்த மாவையும் தரமான எண்ணெயையும் எல்லா மக்களும் உண்ணும்பொழுது நானும் உண்ணலாம். அந்நிலை வரும் வரை ஏழைகள் எதை உண்கிறார்களோ அதையே நானும் உண்பேன்.  மறுமையின் அச்சம் இல்லாது இருந்தால் என் வீட்டில் உயர்ந்த உணவுகளை சமைப்பேன்”

கலீபாவின் பதிலைக் கேட்டு ஆளுநரின் கண்கள் கலங்கின. உமர்(ரலி) அவர்கள் கலீபா ஆன பிறகு சலித்த மாவில் ரொட்டி தயாரித்து உண்டதே இல்லை என்று உரைக்கிறார் ஹழ்ரத் யஸôர் இப்னு  நுமைர்(ரலி) அவர்கள்.

அஜர்பைஜான் திரும்பிய ஆளுநர் கலீபாவிற்கு அன்பளிப்பு அனுப்பினார். பொதுநிதி பைத்துல்மாலுக்குப் பொருள் வந்திருப்பதாக பிரித்த கலீபா அதில் அஜர்பைஜானில் தயாரிக்கப்படும் நெய்யுடன் கலந்த  பேரீத்தங்கனி பாத்திரங்களில் இருப்பதைக் கண்டார். ஒன்றை எடுத்து வாயிலிட்ட கலீபா அதன் சுவை மிகுதியை உணர்ந்து, “”அஜர்பைஜானின் அத்தனை மக்களும் அதை சாப்பிடுகிறார்களா?” என்று  கேட்டார். இல்லை என்ற பதில் வந்ததும் பொருள் கொண்டு வந்தவர்களைத் திரும்ப எடுத்துச் செல்ல பணித்தார். கலீபாவின் கடுமையான எச்சரிக்கை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

“”நெய்யில் பொரித்த பேரீத்தங்கனி உங்களுடைய சொந்த உழைப்பால் உங்களுக்குக் கிடைத்ததா? உங்களின் பெற்றோர் விட்டுச் சென்று உங்களுக்குக் கிடைத்த உடமைகளிலிருந்து நீங்கள் பெற்றதா?  அப்படியாயின் அதை நீங்கள் உண்ணலாம். இல்லையேல் எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் எளிய உணவையே நீங்கள் உண்ண வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது”.

மகன் ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உயர்ந்த குதிரை ஒன்றை விற்பனை செய்வதைப் பார்த்த கலீபா உமர்(ரலி) அவர்கள் அக்குதிரையை வாங்கியது, வளர்த்தது பற்றி விசாரித்தார்கள்.  அப்துல்லாஹ்(ரலி) அவர்களின் சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட அந்தக் குதிரை அரசு நிலத்தில் மேய்ந்தது என்றறிந்து, அரசு உணவைத் தின்ற அக்குதிரை அரசுக்குச் சொந்தம் என்று கூறி குதிரையை  அரசிடம் ஒப்படைக்கச் செய்தார்.

கஜானாவில் உள்ள பொது நிதி பொது மக்களுடையதே. ஆளும் அதிபதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்குஉரியதல்ல என்பதை செயல்படுத்திய செம்மல் உமர்(ரலி) அவர்களின் ஆட்சி மிகவும் மதிக்கத்தக்கது.

நன்றி:- தினமணி 18 OCT 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

எல்லைக் கோடு – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

எல்லையிலா அருளால் காக்கும்
…..இறையவன் வகுத்த சட்டம்
எல்லைக்கோ டென்று பார்த்து
…..இணங்கிநீ வாழ்தல் திட்டம்
தொல்லைகளும் வரத்தான் செய்யும்
…தொடர்ந்துநீ முன்னே செல்வாய்
இல்லையென்றால் உழைப்பில் தேக்கம்.
…இருப்பதைக் கண்டு கொள்வாய்!

அளவுக்கு மிஞ்சும் போதில்
…அமுதமும் நஞ்சாய்ப் போகும்
பிளவுக்கு வழியைக் காட்டும்
….பிறர்மனம் புண்ணாய்ப் போகும்
அளவுக்கு மேலே காட்டும்
..அக்கறைக் கூடத் தொல்லை
களவில்லாக் கற்பைப் பேண
…காண்பது பண்பின் எல்லை!

நாட்டிலுள்ள எல்லைக் கோடு
…..நல்லவர் மதிக்கும் கோடு
வீட்டிலுள்ள எல்லைக் கோடு
…விரும்புவர் அண்டை வீடு
பாட்டிலுள்ள யாப்பின் கோடு
….பாடலின் அமைப்பைக் காட்டும்
வாட்டிவிடும் வறுமைக் கோடு
…வறுமையின் எல்லைக் கோடு!

bf2
ஆட்டத்தில் எல்லைக் கோடு
…..ஆட்டமும் சிறக்கச் செய்யும்
நாட்டத்தில் எல்லைக் கோடு
…நாளையை எண்ணிப் பார்க்கும்
நோட்டத்தில் எல்லைக் கோடு
..நோவினை இல்லாக் கற்பு
கூட்டத்தில் எல்லைக் கோடு
…கூச்சலைத் தடுத்து வைக்கும்!

நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844

வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

ஆடையில் அழகு! – மு.அ. அபுல் அமீன் நாகூர்


SK

உடை உடலை மறைத்து மானத்தைக் காக்கிறது. தோற்றத்தில் பொலிவைத் தருகிறது. விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. ஆடைகள் அணிவது பற்றி அருமறைக் குர்ஆன் கூறுவதையும் அதன்படி ஒழுகிய அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் நாமும் பின்பற்றுவோம்.

“ஆதாமுடைய மக்களே! உங்களின் மானத்தை மறைக்கக் கூடியதும் உங்களை அலங்கரிக்கக் கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம்” என்று திருமறைக் குர்ஆனின் 7-26 வசனம் கூறுகிறது. ஆடைகள் ஆண்களின் ஆண்மையையும் பெண்களின் பெண்மைத் தன்மையையும் நன்னயமாய்க் காட்டும். அதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய உடைகளை ஆண்கள் அணிவதையும் ஆண்களுக்குரிய ஆடைகளைப் பெண்கள் அணிவதையும் சபித்ததாக அபூஹீரைரா (ரலி) அவர்கள் சாற்றுவதை அபூதாவூதில் காணலாம்.

பகட்டும் படாடோபமும் பாவத்திற்கு அழைத்துச் செல்பவை. எளிமை என்ற பெயரில் ஏளனத்திற்கு ஆளாகக் கூடாது. அதனால் ஆடம்பரமான ஆடை அணிவதையும் மோசமான உடை உடுத்துவதையும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் உரைப்பது ரஜீனில் காணப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள் தலைப்பாகை கட்டினர். தலைப்பாகை அணிவதால் இரக்க இயல்பு அதிகமாகும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை அபுல் மலீஹ் (ரலி) அவர்கள் கூறியது அபூதாவூதில் குறிப்பிடப்படுகிறது.

whitesilkமணிக்கட்டுவரை நீண்ட கையுடைய சட்டையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அணிந்ததை அஸ்மா பின்து எஜீதுப்னுஸ் கைனி (ரலி) அவர்கள் அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது. இக்காலத்திலும் முழுக்கை சட்டை அணிவது மதிப்பிற்குரியதாய் உள்ளது.

கீழாடையை கணுக்கால் முட்டிகளுக்குக் கீழ் தொங்க விடக்கூடாது என்று ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் கண்டித்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் இயம்பியதும் அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு தொங்க விடுவது தற்பெருமைக்குரியது. தரையைத் தொடும் ஆடைகள் தரையில் உள்ள குப்பை அசுத்தங்களில் தோய்ந்து நோய்க்குக் காரணமாகின்றன.

“பெண்கள் தங்களின் ஆடை அலங்காரங்களை அந்நிய ஆண்களின் கண்களில் படும்படி வெளிப்படுத்த வேண்டாம். பூமியில் கால்களைத் தட்டி நடக்க வேண்டாம்” என்று அல்குர்ஆன் 24-34வது வசனம் கூறுகிறது. தரையைத் தட்டி நடப்பது பிறரின் கவனத்தைக் கவரும். ஆடை, அலங்காரங்களும் பிறரின் கண்களுக்கு கவர்ச்சியாகும். கவர்ச்சி வீழ்ச்சியில் விழ வைக்கும்.

“முதுமையடைந்து நடமாட முடியாது உட்கார்ந்தே இருக்கும் கிழவிகள் மேலாடைகளைத் தளர்த்தி இருப்பது தவறில்லை; எனினும் தளர்த்தலைத் தவிர்ப்பது அவர்களுக்கும் நன்று” என்று நவில்கிறது குர்ஆனின் 24-60வது வசனம். இறைமறைக் குர்ஆன் இயம்பும் முறையில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் ஆடை அணிந்து அல்லாஹ்வின் அருள் பெற்று வாழ்வோம்.

நன்றி:- தினமணி 29 March 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

பிரிவுகள்:ஆடையின் அழகு, ஆடையில் அழகு, கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இணைந்து வாழ்வதே சிறந்தது! மு.அ. அபுல் அமீன்


divorce
இஸ்லாத்தில் விவாகரத்து தவிர்க்க முடியாத நிலைகளில் மட்டுமே பயன்படுத்தும் நிபந்தனைகள் நிறைந்த உரிமை. பொறுப்பைத் தட்டிக் கழித்துத் தப்பித்துப் பதுங்கிக் கொள்ள, ஒதுங்கிக்கொள்ள ஒத்துழைக்கும் சட்டமல்ல. சதி பதிகளைப் பிரிக்கும் சாதாரண சம்பிரதாய சட்டமல்ல. கட்டம் கட்டமாக பல படிகளைக் கடந்து கால அவகாசத்தோடு அவசரமின்றி பின்னுள்ள வாழ்வின் பிரயோசனத்தையும் கருத்தில்கொண்டு பிரயோகிக்கும், பிரிவினையைக் கடுமையாக்கும் கடுஞ்சட்டம்.

ஆணுக்கு மனைவியை விவாகரத்து (தலாக்) செய்ய எத்துணை உரிமை உள்ளதோ அத்துணை உரிமையும் கணவனை விவகாரத்து செய்ய பெண்ணுக்கும் உண்டு. பெண் பின்னுக்குத் தள்ளப்படவில்லை. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் கடுமையாக இடையூறு செய்வான் என்றோ புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால் இருவரும் சம்மதித்து தங்களுக்குள் ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்வது குற்றமல்ல என்று திருக்குர்ஆன் 4-128 வசனம் கூறுகிறது. மதீனாவில் அப்துல்லாஹ் பின் அபீ அவ்பாவின் மகள் ஜமீலா பேரழகி. இவரின் கணவர் தாபித் பின் கைஸ் அழகற்றவர். அவர் அழகிய மனைவியை உயிரினும் உயர்வாய் நேசித்தார். மனைவியோ கணவனிடம் கடுகளவும்

கருணை காட்டவில்லை. கடுமையாய் வெறுத்தாள். அவர்களிடையே கசப்பு முற்றி இசைவான வாழ்விற்கு வாய்ப்பில்லை என்றானது. ஜமீலா, நபிகள் பெருமானார் அவர்களிடம் அவரின் நிலையை எடுத்துரைத்தார். பெருமானார் அவர்கள் தாபித்தை அழைத்து விசாரித்தார்கள். தாபித் தன் உயிரினும் மேலாய் தனது மனைவி ஜமீலாவை உவப்பதாய் உளமார நேசிப்பதாய் உறுதியாகக் கூறினார். ஜமீலாவோ தாபித் கூறுவது முற்றிலும் உண்மை என்றாலும் என்னால் அவரை நேசிக்க முடியவில்லை. நேசமில்லாமல் பொய் வேஷமிட்டு வாழ விரும்பவில்லை என்றார்.divorce_spells3

தாபித், ஜமீலாவிற்குக் கொடுத்த ஈச்சந் தோட்டத்தைத் திருப்பிக் கேட்டார். ஜமீலாவும் மறுப்பேதுமின்றி திருப்பித் தந்த ஈச்சந் தோட்டத்தைப் பெற்றுக்கொண்ட தாபித் ஜமீலாவை விவாகரத்து செய்தார். இஸ்லாத்தில் நடந்த முதல் குலா இதுவே. எனினும் சிறு பூசல்களைக் காரணமாக்கி மனைவியர் இவ்வுரிமையைப் பயன்படுத்தி விவாகரத்து கோருவது விவேகமல்ல.”எத்தகைய குற்றமும் இன்றி கணவனிடம் குலா கோரும் பெண் மீது சொர்க்கத்தின் வாடை விலக்கப்பட்டுள்ளது” என்று எம்பெருமானார் எடுத்துரைத்தார்கள். இஸ்லாம், கைப்பிடித்த கணவன், மனைவி காலமெல்லாம் – ஞாலத்தில் வாழும் காலமெல்லாம் இணைந்து வாழ்வதே சாலச் சிறந்தது என்று சாற்றுகிறது.

நன்றி:- தினமணி 22 Feb 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பிரிவுகள்:அபுல் அமீன் நாகூர், இணைந்து வாழ்வதே சிறந்தது!, கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அருள் தரும் விளைநிலம்! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்விற்காக நன்றான செயல்களை நாளும் செய்து நாடியோருக்கு நல்லுதவிகள் புரிந்து அல்லாஹ்வின் நல்லருளை அறுவடை செய்யும் விளைநிலம் என்று விவரிக்கிறது இஸ்லாம்.

arabsமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறுமையில் தீயோருக்கு ஏற்படும் தீவினைகள் பற்றி பேசியதைக் கேட்ட பெருமானாரின் தோழர்கள்  இதயங்கள் இளகி அழுதனர். அதன்பின் பத்து தோழர்கள் ஹழ்ரத் உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களின் வீட்டில் கூடி கருத்து பரிமாறி பொருத்தமில்லா முடிவை முன் வைத்தனர். அம்முடிவு “”அவர்கள் அனைவரும் இல்லறத்தை விடுத்து துறவறம் பூண வேண்டும். கம்பள உடைகளையே அணிய வேண்டும். பகல் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இரவில் விரிப்பில் படுத்து உறங்கக் கூடாது. விழித்திருந்து வணங்க வேண்டும். மாமிசம், கொழுப்பு பொருட்களை உண்ணக் கூடாது. நறுமணம் பூசக் கூடாது. நமக்கென ஓரிடம் கூடாது. பூமியில் பரதேசிகளாய் சஞ்சரிக்க வேண்டும்” என்பதாகும்.

இம்முடிவைக் கேள்வியுற்ற மாண்புடைய மாநபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களின் வீட்டிற்கு விசாரிக்க சென்ற பொழுது அவர் வீட்டில் இல்லை.

பின்னர் பெருமான் நபி (ஸல்) அவர்கள் வந்து சென்றதை அறிந்த உஸ்மானும் பத்து தோழர்களும் நபிகள் (ஸல்) அவர்கள் வீட்டிற்கு விரைந்தனர்.

எம்பெருமானார் அவர்கள் பத்து தோழர்களின் மொத்த முடிவைப் பற்றி விசாரித்த பொழுது அல்லாஹ்வின் அருளை நாடியே அவ்வாறு முடிவு செய்ததாக அவர்கள் அறிவித்தனர்.  அவ்வாறு வாழ அல்லாஹ் ஏவவில்லை என்று எடுத்துரைத்த ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் “”இல்லறத்தை நல்லறமாக்கி இனிய மக்களை ஈன்று வளர்த்து நானிலத்தில் நல்வாழ்வு வாழ்ந்து நாயகன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற வேண்டும். காலமெல்லாம் நோன்பு நோற்றல் கூடாது. கடமையான நோன்பைக் கட்டாயம் மேற்கொள்ளுங்கள்.  வசதி, வாய்ப்புகளுக்கு ஏற்ப உபரி நோன்புகளை நோற்கலாம். உபரி நோன்புகளைத் தொடராக நோற்க வேண்டாம்.  இடைவெளி இருக்க வேண்டும். நானும் நபில் (உபரி) நோன்புகளை நோற்கிறேன். நோற்காத நாட்களும் உண்டு” என்றார்கள்.

“”இரவில் விழித்திருந்து வணங்குங்கள். அப்பால் தூங்குங்கள்.  இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டாம். நானும் இரவில் நின்று தொழுகிறேன். நித்திரை கொள்கிறேன். அனுமதிக்கப்பட்ட மாமிசம், கொழுப்பு பொருட்களை உண்கிறேன். நறுமணம் பூசுகிறேன். இல்லற வாழ்வையும் வாழ்கிறேன். இதுவே என் நடைமுறை. என்னைப் பின்பற்றுங்கள்” என்றும் அவர்களுக்கு அருளுரை புரிந்தார்கள்.

இல்லறத்திலிருந்து இறை கட்டளைகளை நிறைவேற்றி வரம்பு மீறாது வாழ வேண்டும் என்று திருக்குர்ஆனின்  5வது அத்தியாயத்தின் 87,88வது வசனங்கள் அறிவிக்கின்றன. “”விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்தவற்றில் மணமானவற்றை நீங்கள் ஆகாதவைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுகிறவர்களை நேசிக்கமாட்டான்”.

“”அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து  மணம் பொருந்திய ஆகுமானதைப் புசியுங்கள். மேலும் நீங்கள் எவனை விசுவாசங் கொண்டிருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்விற்கும் பயந்து கொள்ளுங்கள்”.

நாமும் குர்ஆன் நவிலும் முறையில் நந்நபி வாழ்ந்து காட்டிய வழியில் உலகில் உரிமையானதை உதறித் தள்ளாது உரிய முறையில் துய்த்து உண்மையாய் வாழ்ந்து தூயோன் அல்லாஹ்வின் நேயமான அருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 08 Feb 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.