தொகுப்பு

Posts Tagged ‘அஹ்மதுப்னு ஹன்பல்’

பணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்


தொழில் புரட்சியால் தோன்றிய தொழிற்சாலைகளில் தொழிற்சாலை தோன்றிய பகுதிகளில் பிறரைத் தொழுதறியாது உழுது உண்டு உயர்வாய் வாழ்ந்த பழங்குடி மக்களை அடிமைகளாக ஆக்கி அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி தேய்ந்து மாயும்வரை வேலை செய்ய வைத்து கோலூன்றி கொழுத்த கோடீஸ்வர முதலாளிகளின் கொட்டத்தை அடக்க கொதித்து எழுந்து போராடி தொழிலாளர் உரிமை பெற உயிர் நீத்த உத்தம தொழிலாளர்களை நித்தமும் நினைவில் நிறுத்தி பெற்ற உரிமைகளை உலகமய ஏகபோக முதலாளிகள் பறித்திடாது காக்க தொழிலாளர்கள் உறுதி ஏற்கும் ஏற்புடைய நாளே மே முதல் நாளாம்

தொழிலாளர் நாள்.

ஜக்கரியா நபி ஒரு சுவரைக் கட்டி கொண்டு இருந்தார்கள். பகல் உணவு வந்தது. சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில் நபி அவர்களைப் பார்க்க சிலர் வந்தனர். வந்தவர்கள்

கேட்குமுன்னரே ஜக்கரியா நபி கூலி வேலை செய்வதாகவும் கூலிக்கு வந்த உணவை உண்டு முடித்ததால் பகிர்ந்து கொள்ள இயலாததையும் இயம்பினார்கள். உழைத்து உண்டு உழைத்து பிழைக்க வழி காட்டினார்கள் ஜக்கரியா நபி அவர்கள்.

கையிலிருந்த சாட்டை கை நழுவி கீழே விழுந்தால் அதைக் குனிந்து எடுப்பது கௌரவ குறைவு என்று எண்ணி இறுமாந்திருந்த அரபி நாட்டவரை உழைத்து உண்ணவைத்து உழைப்பின் பெருமையை உணர வைத்தார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள். கூலிக்கு ஒருவரை அமர்ந்து அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பவனுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் அறிவிப்பதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எண்ணத்தில் பதித்ததைப் பகர்கிறார்

அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி. உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு வந்த மா நபி (ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி)நூல் – முஸ்ஸிம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கையால் எந்த பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்தது இல்லை என்று

இயம்புகிறார் ஆயிஷா (ரலி) நூல்- முஸ்லிம்.

திருக்கையில் மாவரைப்பது வீட்டைக் கூட்டி பெருக்கி சுத்தப்படுத்துவது துணிகளைத் துவைப்பது தோல் பையில் நீர் கொணர்வது முதலிய வேலைகளை பாச நபி (ஸல்) அவர்களின் நேச மகள் பாத்திமா (ரலி) பணிப்பெண்ணுடன் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பணி பெண்ணை மட்டும் வேலை வாங்காது அவர்களும் அதே வேலையை முறை வைத்து செய்வார்கள். தோல் பையின் கனத்தால் பாத்திமா (ரலி) அவர்களின் உடம்பில் தழும்பு ஏற்படும்.

பாத்திமா (ரலி) அவர்கள் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வரும்பொழுது பணி பெண்ணுக்குத் தனியாக ஏதாவது வாங்கி வந்து கொடுப்பார்கள். பணிபெண்ணின் வேலையில் தவறு கண்டால் பணியாளைச் சுடுசொற்களால் கடுஞ்சொற்களால் கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டர்கள். வேலையை விளக்கிச் சொல்லி துலக்கமாய் செய்யத் தூண்டுவார்கள்.

கிழிந்த ஆடைகளைத் தைப்பது முதுமையான மாமியாருக்கு உதவி செய்வது தணியாத அன்புடன் கணவருக்குப் பணிவிடை புரிவது முதலிட வேலைகளைப் பாத்திமா (ரலி) அவர்கள் மட்டுமே செய்வார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்க மாட்டார்கள். அவர்களை நாடிவரும் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பார்கள். நீதி போதனை செய்வார்கள்.

அக்காலத்தில் அரபியாவில் பலர் எழுத்துத் தொழிலை விரும்பிச் செய்தார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் என்பவரைச் சந்தித்த இமாம் அஹ்மது பின் ஹன்பல், “” நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் – எழுதிக் கொண்டிருக்கிறேன் பெரியோர்களின் பேருரைகளை எழுத்தோவியங்களை எடுத்து எழுதி நகல் எடுக்கிறேன். இது என் தொழில். அஹ்மத் பின் ஹன்பல் -தூய தொழில் தூய வருவாய். நான் தொழில் செய்ய நாடினால் இத்தொழிலையே மேற்கொள்வேன். “”

எடுத்து எழுதும் பொழுது நீங்கள் நடு நிலையில் நின்று உள்ளது உள்ளபடியே எழுத வேண்டும். கூட்டல் குறைத்தல் கூடாது. இந்த உள்ள உறுதியோடு எழுத வேண்டும்”.

இப்படித்தான் பணியாளரைப் பாராட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த  உரையாடல்.

அப்பாசிய கலீபா மன்சூரின் அரசவையில் செவ்வனே செயலாற்றிய ஓர் ஊழியர் ஒட்டுபோட்ட சட்டை அணிந்து இருப்பதைக் கண்ட அரசர் நல்லாடை அணியாத

காரணத்தைக் கேட்டார். அந்த ஊழியரின் இறந்த தந்தை பாக்கி வைத்த கடனை அடைப்பதாகவும் தந்தையின் இரண்டாவது மனைவியான சிற்றன்னையையும்

சிற்றன்னையின் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் ஊதியத்தின் பெரும்பகுதி செலவாகி விடுகிறது. அதனால் அந்த ஊழியர் சொந்தச் செலவைச் சுருக்கிக்கொள்வதை அறிந்த அரசர் அந்த ஊழியருக்கு ஆயிரம் பொற்காசுகளை வழங்கி உழைப்பிற்கு உயர்வான மதிப்பளித்தார்.

அலாவுத்தீனின் மகன் ஷம்ஸ் தப்ரேஸ் பெரிய அறிஞர். ரோமில் அவரிடம் பல அறிஞர்கள் சீடர்களாக இருந்து சீரான கல்வி கற்றனர். ஷம்ஸ் தப்ரேஸ் மாணவர்களிடம் எவ்வூதியமும் பெறவில்லை. அவர்கள் இடையணி தயாரித்து விற்று வாழ்ந்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைப்படி கருணை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் பணியாளர்களைப் பாசத்தோடு நேசித்து போஷித்து போற்றி தொழிலாளி உயர

உற்றுழி உதவுவோம். உலகம் உய்யும்.

 

நன்றி:- தினமணி 11/10/2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

அரிய நீதி – மு.அ. அபுல் அமீன்

பிப்ரவரி 16, 2014 1 மறுமொழி

அரசனின் நிதி, ஆள்வோருக்கு உரியதன்று. ஆளப்படும் மக்களுடையது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சி இது.

தாவூது நபி பனூ இஸ்ரவேலர்களின் அரசர். அவர்கள் மாறுவேடம் பூண்டு மக்களை சந்தித்து அரசரைப் பற்றி மக்களிடம் விசாரித்து மக்கள் கூறும் குறைகளைக் களைந்து நிறைவாய் ஆட்சி செய்தார்கள்.

ஒருநாள் மனித உருவில் உலாவிய மலக்கு (வானவர்) ஒருவரை சந்தித்த தாவூது நபி வழக்கம் போல் அரசரைப் பற்றி அபிப்ராயம் கேட்டார்கள்.

“நற்குணமுடைய அரசரிடம் அரசுப் பணத்தில் வாழும் அற்ப குணம் உள்ளது. அதனை மாற்றிக் கொண்டால் மன்னர் மாட்சியுடைவர்” என்று அந்த வானவர் சாட்சி சொன்னார்.

இதையடுத்து தாவூது நபி தொழில் ஒன்றைக் கற்றிட அருளுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். உள்ளம் உருகிய வேண்டுதலை ஏற்ற இறைவன் உருக்குச் சட்டை உருவாக்கி பொருளைப் பெருக்கி வாழும் பெருந்தொழிலை தாவூது நபிக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

இந்நிகழ்ச்சியை இறைமறை குர்ஆனின் 34-11வது வசனம்,

“பெரிய அங்கிகள் செய்வீராக. இன்னும் துவாரத்தில் அளவாக்கி வைப்பீராக. இன்னும் நற்செயல்களைச் செய்வீராக. நான் நீங்கள் செய்வதைப் பார்க்கிறேன்” என்று அல்லாஹ் தாவூது நபிக்கு நவின்றதைக் கூறுகிறது.

உருக்குச் சட்டை தயாரித்த தாவூது நபி ஒரு நாளைக்கு ஒரு சட்டையை நான்காயிரம் திர்ஹத்திற்கு விற்று இரண்டாயிரம் திர்ஹத்தை குடும்பத்திற்கு செலவிட்டு இரண்டாயிரம் திர்ஹத்தை தானம் செய்வார்கள். குர்ஆன் வசனத்தில் வர்ணித்தபடி உருக்குச் சட்டையின் வளையங்கள் ஒரே அளவாக இருந்தன.

தாவூது நபி இறந்தபொழுது அவர்களிடம் ஆயிரம் உருக்குச் சட்டைகள் இருந்தன என்று லுபாபு என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.

அரசுப் பணத்தை ஆடம்பரமாக அனாவசியமாய் செலவிடும் ஆட்சியாளர்கள் அறிய வேண்டிய அரிய நீதி இது.

நன்றி:- தினமணி 13 February 2014 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- கௌதிய்யா சங்கம், மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

நல்ல பாடம் – மு.அ. அபுல்அமீன் நாகூர்

செப்ரெம்பர் 25, 2013 1 மறுமொழி

கசடறக் கற்று, கற்றபடி நிற்றலில் வெற்றி உண்டு என்று நிரூபித்தவர் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள். ஒரு நாள் இமாம் அவர்கள் வெளியில் செல்கையில் அவர்களிடம் பொதுக் கல்வி பயின்று உயர் கல்வி பெறவிருந்த மாணவர், மனிதர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பையை கொட்டுவதைக் கண்டார்கள்.LITT

அந்த மாணவரை அழைத்து, “”பொதுச் சொத்தை அபகரிக்கும் உனக்கு உயர்கல்வி கற்றுத் தருவது எனக்குக் கடமையல்ல” என்று கண்டித்து சொன்னார்கள்.

மாணவர், ஆசிரியர் சொன்னதன் பொருள் புரியாது விழித்து நின்றார். அவரை வீதி ஓரத்தில் நிற்க வைத்த இமாம் அவர்கள் “”அசுத்தங்களை வெறுத்து விடுங்கள் என்ற திருக்குர்ஆனின் 74-5வது வசனத்தை மறந்துவிட்டீரா? வெறுத்து விடும் அசுத்தங்களை மனிதர்கள் நடமாடும் சாலையில் கொட்டுவது பொறுத்துக்கொள்ளக் கூடியதா?” என்று கேட்டார். மாணவர் மலைத்து நின்றார்.

இமாம் தொடர்ந்தார்கள், “”செல்லும் வழியில் தீமை பயக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது நன்மை பயக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் அபூபர்ஸத் (ரலி) அவர்களிடம் ஏவியதை முஸ்லிம் நூலில் படித்ததைப் பறிகொடுத்து விட்டீரா? நீர் படித்து என்ன பயன்?”. மாணவர் மௌனமாய் நின்றார்.

LITTT“எவரேனும் ஒரு சாண் அளவு நிலத்தை அபகரிப்பாராயின் அவனுடைய கழுத்தில் அல்லாஹ் (மறுமை நாளில்) ஏழடுக்கு பூமியை வளையமிடுவான்’ என்ற ஏந்தல் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை புகாரி, முஸ்லிம் நூல்கள் அபூஸல்மா இப்னு அப்திற்றஹ்மான் (ரலி) அவர்களின் அறிவிப்பாகக் கூறுவதை அறியாமல் செய்யும் அறிவிலியா? அறிந்தும் அடாவடியாய் செய்யும் அநியாயக்காரரா?”.

“நீர் கொட்டிய குப்பையால், பொது மக்களுக்குப் பொதுவான பாதையில் ஒரு பகுதி மனிதர்கள் நடமுடியாதபடி பயனற்றுப் போகிறது. பொதுப் பாதையை பொது சொத்தை இவ்வாறு பயனிழக்கச் செய்வது அந்தச் சொத்தை அபகரிப்பதற்கு ஒப்பாகும்?”.

-இமாம் அவர்களின் விளக்கத்தால் தெளிவு பெற்ற மாணவர் கொட்டிய குப்பையை அள்ளி எடுத்து மக்கள் நடமாடாத பகுதியில் கொட்டினார்.

பள்ளியில் நடத்திய பாடத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் இந்நிகழ்ச்சி இக்காலத்திலும் தெருவில் குப்பையைக் கொட்டுவோருக்கும், கட்டிடம் கட்ட மணல், செங்கல், கருங்கல், ஜல்லிகளை சாலையில் கொட்டி வைத்து கான்கிரீட் கலவை போடுவோருக்கும், தப்பென்று தெரிந்தும் பொது சொத்துக்களை, பிறரின் சொத்துக்களை அடியோடு அபகரித்து நிலப்பறிப்பு மோசடியில் ஈடுபடுவோருக்கும் சூடுகொடுக்கும் நல்ல பாடம்.

நன்றி:- தினமணி 19 SEP 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.