இல்லம் > அபுல் அமீன் நாகூர், கவிதைகள், ஹிஜ்ரத் > ஹிஜ்ரத் – மு.அ. அபுல் அமீன் நாகூர்

ஹிஜ்ரத் – மு.அ. அபுல் அமீன் நாகூர்


காலம் கணித்து
துவங்கும் பயணம்
துவங்கிய பயணமே
காலத்தைக் கணித்தது

பாதுகாக்க தந்த
பணம் பொருட்களை
ஏதுவான ஏந்தல்
அலியிடம் கொடுத்து
உரியவரிடம் சேர்க்கச்
சொல்லி புறப்பட்டார்

தாய்நாட்டை துறந்து
செல்லும் பொழுதும்
வாய்மை காத்த வாகான பயணம்
யாசீன் சூரா
சீராய் ஓதி
வீசிய மண்ணால்
கண்ணால் காணது

உறக்கமின்றி
உருவிய வாளுடன்
உறைந்து நின்றது

உத்தம நபியைக்
கொல்ல வந்த
குறைஷிக் கூட்டம்

யாசீன் சூராவின்
மகத்துவத்தைக் காட்டும்
மகத்தான பயணம்

இரவின் இருட்டில்
துவங்கிய பயணம்
இவ்வுலகின் இருட்டை
விரட்டி வெளிச்சம்
காட்டியது

அபூபக்கரை அழைத்துச் சென்றார்
அழைப்பின்றியே தொடர்கின்றனர்
ஆயிரமாயிரம் கோடி

இருவரே சென்றனர்
இவ்வுலகே தொடர்கிறது

மூன்று நாட்கள்
தங்கியதால் வந்தது
தெளருக்குக் கெளரவம்

புறா கட்டிய கூடும்
சிலந்தி நூற்ற வலையும்
அரணாய் அமைந்து
குகையைக் கோட்டையாக்கியது

இஸ்லாமியக் கோட்டை
உலகெங்கும் உயர
முன்மாதிரியாய்
தானே கல்சுமந்து
தாஹா நபி கட்டிய
குபா பள்ளி

குவலயம் முழுதும்
கூடித் தொழும் மஸ்ஜிதுக்கு
அமைத்த அடித்தளம்

வழியில் இருந்த
வாதியுர் ரானூனா
முதல் ஜும்ஆவிற்கு
மூல வித்தானது

பாங்கொலி கேட்டு
பாய்ந்தோடுகின்றனர்
பள்ளிக்கு

ஆய்வு செய்வோர்
அதிசயிக்கின்றனர்
தூயோன் அல்லாஹ்
தூய நபி ஹிஜ்ரத்தில்

தோற்றுவித்த மாற்றத்தை

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக