தொகுப்பு

Archive for the ‘மனித நேயம்’ Category

மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர்.


மனித நேயம் காண
மாநபி வழியை பேணு

கருப்பு நீக்ரோ பிலாலை
கருத்தோடு முதலில் பாங்கைப்
பொருத்தமாய் முழங்க வைத்து
வருத்தும் நிறவேறி நீக்கிய நெறிமுறை.

தனிமனித பெருமையும் உரிமையும்
இனியும் இல்லை என்று
முன்னால் வருபவரே முதலில்
முன் நின்று தொழும் சமத்துவம்.

அரும்பொருள் உடையார் கணக்கிட்டு
தரும்பொருளைத் தக்கார்க்குக்
தகவழங்கி
இல்லாமை இருளகற்றி எல்லாரும்
எல்லாமும் பெறசெய்யும் ஜகாத்.

உறுபசி உணர்ந்து நலிந்தவர்
பெறுதுயர் துய்த்து பாரில்
பசிபோக்க பக்குவப் படுத்தும்
உசிதமான உன்னத நோன்பு.

பகரும் மொழிபேத மின்றி
பகட்டில்லா இஹ்ராம் உடையில்
பன் னாட்டு மக்களும் இணைந்து
நன் னயம் காணும் சகோதரத்துவம்.

குப்பையைத் தினமும் கொடுரமாய்த்
தப்பாது கொட்டி கொக்கரித்து
நகைத்த பெண்நலமுற உதவிய
பகைவருக் கருளும் பாங்கு.

தேரிடா குறைஷிகள் சீறி வந்து
போரிட்ட பத்ரு களத்தில்
நீரின்ரி தவித்த எதிரிக்கு
நீரளித்த சீரான மேன்மை.

பெண்ணுக்கும் கல்வியைக் கற்பித்து
கண்ணான சொத்திலும் பங்கு தந்து
விதவை மறுமணம் நடத்தி
உதவி காட்டிய மறுமலர்ச்சி.

தனித்துவம் தவிர்த்து சேர்ந்துண்ண

மனிதர்களைச் சேர்த்து வைத்து

இனப்பிரிவை இல்லாமல் ஆக்கியது

இனிய நபி இயம்பிய வழியே.

மனித நேயம் காண

மாநபி வழியை பேணு

இது நீர்மலை பள்ளிவாயில் திறப்புவிழா மலரில் 07/09/2001 பிரசுரமானது

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்