தொகுப்பு

Posts Tagged ‘மு.அ. அபுல்அமீன்.’

பணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்


தொழில் புரட்சியால் தோன்றிய தொழிற்சாலைகளில் தொழிற்சாலை தோன்றிய பகுதிகளில் பிறரைத் தொழுதறியாது உழுது உண்டு உயர்வாய் வாழ்ந்த பழங்குடி மக்களை அடிமைகளாக ஆக்கி அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி தேய்ந்து மாயும்வரை வேலை செய்ய வைத்து கோலூன்றி கொழுத்த கோடீஸ்வர முதலாளிகளின் கொட்டத்தை அடக்க கொதித்து எழுந்து போராடி தொழிலாளர் உரிமை பெற உயிர் நீத்த உத்தம தொழிலாளர்களை நித்தமும் நினைவில் நிறுத்தி பெற்ற உரிமைகளை உலகமய ஏகபோக முதலாளிகள் பறித்திடாது காக்க தொழிலாளர்கள் உறுதி ஏற்கும் ஏற்புடைய நாளே மே முதல் நாளாம்

தொழிலாளர் நாள்.

ஜக்கரியா நபி ஒரு சுவரைக் கட்டி கொண்டு இருந்தார்கள். பகல் உணவு வந்தது. சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில் நபி அவர்களைப் பார்க்க சிலர் வந்தனர். வந்தவர்கள்

கேட்குமுன்னரே ஜக்கரியா நபி கூலி வேலை செய்வதாகவும் கூலிக்கு வந்த உணவை உண்டு முடித்ததால் பகிர்ந்து கொள்ள இயலாததையும் இயம்பினார்கள். உழைத்து உண்டு உழைத்து பிழைக்க வழி காட்டினார்கள் ஜக்கரியா நபி அவர்கள்.

கையிலிருந்த சாட்டை கை நழுவி கீழே விழுந்தால் அதைக் குனிந்து எடுப்பது கௌரவ குறைவு என்று எண்ணி இறுமாந்திருந்த அரபி நாட்டவரை உழைத்து உண்ணவைத்து உழைப்பின் பெருமையை உணர வைத்தார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள். கூலிக்கு ஒருவரை அமர்ந்து அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பவனுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் அறிவிப்பதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எண்ணத்தில் பதித்ததைப் பகர்கிறார்

அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி. உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு வந்த மா நபி (ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி)நூல் – முஸ்ஸிம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கையால் எந்த பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்தது இல்லை என்று

இயம்புகிறார் ஆயிஷா (ரலி) நூல்- முஸ்லிம்.

திருக்கையில் மாவரைப்பது வீட்டைக் கூட்டி பெருக்கி சுத்தப்படுத்துவது துணிகளைத் துவைப்பது தோல் பையில் நீர் கொணர்வது முதலிய வேலைகளை பாச நபி (ஸல்) அவர்களின் நேச மகள் பாத்திமா (ரலி) பணிப்பெண்ணுடன் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பணி பெண்ணை மட்டும் வேலை வாங்காது அவர்களும் அதே வேலையை முறை வைத்து செய்வார்கள். தோல் பையின் கனத்தால் பாத்திமா (ரலி) அவர்களின் உடம்பில் தழும்பு ஏற்படும்.

பாத்திமா (ரலி) அவர்கள் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வரும்பொழுது பணி பெண்ணுக்குத் தனியாக ஏதாவது வாங்கி வந்து கொடுப்பார்கள். பணிபெண்ணின் வேலையில் தவறு கண்டால் பணியாளைச் சுடுசொற்களால் கடுஞ்சொற்களால் கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டர்கள். வேலையை விளக்கிச் சொல்லி துலக்கமாய் செய்யத் தூண்டுவார்கள்.

கிழிந்த ஆடைகளைத் தைப்பது முதுமையான மாமியாருக்கு உதவி செய்வது தணியாத அன்புடன் கணவருக்குப் பணிவிடை புரிவது முதலிட வேலைகளைப் பாத்திமா (ரலி) அவர்கள் மட்டுமே செய்வார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்க மாட்டார்கள். அவர்களை நாடிவரும் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பார்கள். நீதி போதனை செய்வார்கள்.

அக்காலத்தில் அரபியாவில் பலர் எழுத்துத் தொழிலை விரும்பிச் செய்தார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் என்பவரைச் சந்தித்த இமாம் அஹ்மது பின் ஹன்பல், “” நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் – எழுதிக் கொண்டிருக்கிறேன் பெரியோர்களின் பேருரைகளை எழுத்தோவியங்களை எடுத்து எழுதி நகல் எடுக்கிறேன். இது என் தொழில். அஹ்மத் பின் ஹன்பல் -தூய தொழில் தூய வருவாய். நான் தொழில் செய்ய நாடினால் இத்தொழிலையே மேற்கொள்வேன். “”

எடுத்து எழுதும் பொழுது நீங்கள் நடு நிலையில் நின்று உள்ளது உள்ளபடியே எழுத வேண்டும். கூட்டல் குறைத்தல் கூடாது. இந்த உள்ள உறுதியோடு எழுத வேண்டும்”.

இப்படித்தான் பணியாளரைப் பாராட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த  உரையாடல்.

அப்பாசிய கலீபா மன்சூரின் அரசவையில் செவ்வனே செயலாற்றிய ஓர் ஊழியர் ஒட்டுபோட்ட சட்டை அணிந்து இருப்பதைக் கண்ட அரசர் நல்லாடை அணியாத

காரணத்தைக் கேட்டார். அந்த ஊழியரின் இறந்த தந்தை பாக்கி வைத்த கடனை அடைப்பதாகவும் தந்தையின் இரண்டாவது மனைவியான சிற்றன்னையையும்

சிற்றன்னையின் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் ஊதியத்தின் பெரும்பகுதி செலவாகி விடுகிறது. அதனால் அந்த ஊழியர் சொந்தச் செலவைச் சுருக்கிக்கொள்வதை அறிந்த அரசர் அந்த ஊழியருக்கு ஆயிரம் பொற்காசுகளை வழங்கி உழைப்பிற்கு உயர்வான மதிப்பளித்தார்.

அலாவுத்தீனின் மகன் ஷம்ஸ் தப்ரேஸ் பெரிய அறிஞர். ரோமில் அவரிடம் பல அறிஞர்கள் சீடர்களாக இருந்து சீரான கல்வி கற்றனர். ஷம்ஸ் தப்ரேஸ் மாணவர்களிடம் எவ்வூதியமும் பெறவில்லை. அவர்கள் இடையணி தயாரித்து விற்று வாழ்ந்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைப்படி கருணை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் பணியாளர்களைப் பாசத்தோடு நேசித்து போஷித்து போற்றி தொழிலாளி உயர

உற்றுழி உதவுவோம். உலகம் உய்யும்.

 

நன்றி:- தினமணி 11/10/2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

அரிய நீதி – மு.அ. அபுல் அமீன்

பிப்ரவரி 16, 2014 1 மறுமொழி

அரசனின் நிதி, ஆள்வோருக்கு உரியதன்று. ஆளப்படும் மக்களுடையது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சி இது.

தாவூது நபி பனூ இஸ்ரவேலர்களின் அரசர். அவர்கள் மாறுவேடம் பூண்டு மக்களை சந்தித்து அரசரைப் பற்றி மக்களிடம் விசாரித்து மக்கள் கூறும் குறைகளைக் களைந்து நிறைவாய் ஆட்சி செய்தார்கள்.

ஒருநாள் மனித உருவில் உலாவிய மலக்கு (வானவர்) ஒருவரை சந்தித்த தாவூது நபி வழக்கம் போல் அரசரைப் பற்றி அபிப்ராயம் கேட்டார்கள்.

“நற்குணமுடைய அரசரிடம் அரசுப் பணத்தில் வாழும் அற்ப குணம் உள்ளது. அதனை மாற்றிக் கொண்டால் மன்னர் மாட்சியுடைவர்” என்று அந்த வானவர் சாட்சி சொன்னார்.

இதையடுத்து தாவூது நபி தொழில் ஒன்றைக் கற்றிட அருளுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். உள்ளம் உருகிய வேண்டுதலை ஏற்ற இறைவன் உருக்குச் சட்டை உருவாக்கி பொருளைப் பெருக்கி வாழும் பெருந்தொழிலை தாவூது நபிக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

இந்நிகழ்ச்சியை இறைமறை குர்ஆனின் 34-11வது வசனம்,

“பெரிய அங்கிகள் செய்வீராக. இன்னும் துவாரத்தில் அளவாக்கி வைப்பீராக. இன்னும் நற்செயல்களைச் செய்வீராக. நான் நீங்கள் செய்வதைப் பார்க்கிறேன்” என்று அல்லாஹ் தாவூது நபிக்கு நவின்றதைக் கூறுகிறது.

உருக்குச் சட்டை தயாரித்த தாவூது நபி ஒரு நாளைக்கு ஒரு சட்டையை நான்காயிரம் திர்ஹத்திற்கு விற்று இரண்டாயிரம் திர்ஹத்தை குடும்பத்திற்கு செலவிட்டு இரண்டாயிரம் திர்ஹத்தை தானம் செய்வார்கள். குர்ஆன் வசனத்தில் வர்ணித்தபடி உருக்குச் சட்டையின் வளையங்கள் ஒரே அளவாக இருந்தன.

தாவூது நபி இறந்தபொழுது அவர்களிடம் ஆயிரம் உருக்குச் சட்டைகள் இருந்தன என்று லுபாபு என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.

அரசுப் பணத்தை ஆடம்பரமாக அனாவசியமாய் செலவிடும் ஆட்சியாளர்கள் அறிய வேண்டிய அரிய நீதி இது.

நன்றி:- தினமணி 13 February 2014 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- கௌதிய்யா சங்கம், மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

சுவர்க்கத்தின் வாரிசுகள் – மு.அ. அபுல்அமீன் நாகூர்


அந்த விசுவாசிகள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்” என்று திருக்குர்ஆனின் 23-1வது வசனம் கூறும் உறுதியான வெற்றி பெற்ற அந்த விசுவாசிகள் யார்?

இக்கேள்விக்குரிய விடையை அடுத்து வரும் வசனங்கள் விளக்குகின்றன. “”எவர்கள் தங்களுடைய தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் (23-2)”

தொழுகையை வழக்கமான நிகழ்வாக தொழுதோம் என்று தொழாமல் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான், என்ற உள்ளுணர்வோடு தொழுபவர்.

“எவர்கள் தங்கள் தொழுகையை (விடாமல்) பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-9)”

தொழுகைக்குரிய நேரத்தில் தவறாமல் தாமதிக்காமல் முறையோடு தொழுபவர்கள்.

“எவர்கள் வீணானவற்றை புறக்கணிக்கிறார்களோ அவர்கள்(23-3)”

எதற்கும் உதவாத வீண் பேச்சு பயனற்ற செயல்களைச் செய்து வீண் பொழுது போக்காமல் ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கமுடன் செயல்படுபவர்கள்.

“‘எவர்கள் ஜகாத்தை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள்(23-4)”

கடமையாக்கப்பட்ட ஏழை வரியாம் ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து இணக்கமான சமுதாய சமத்துவத்திற்கு வழி வகுப்பவர்கள்.

“எவர்கள் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் கொள்கிறார்களோ அவர்கள் (23-5)” இழுக்குண்டாக்கும் இழி செயல்களைச் செய்யாது ஒழுக்கம் பேணி உடலின் எந்த அங்கமும் பங்கப்படும் பாவ  காரியங்களில் பங்கு கொள்ளாது காத்துக் கொள்பவர்கள். கண்களால் தீயதைப் பார்ப்பது காதுகளால் தீயதைக் கேட்பது, பிற உறுப்புகளைத் தீயதைத் தீண்டாது பாதுகாப்பவர்கள்.

23-6வது வசனப்படி மனைவியோடு இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்பவர்கள்.

23-7வது வசனப்படி இல்லறத்திற்குப் புறம்பானதைத் தேடி வரம்பு மீறாதவர்கள்.

“எவர்கள் தங்களின் அமானிதங்களையும் உறுதி மொழிகளையும் பேணுகிறார்களோ அவர்கள் (23-8)’. பிறர் அவரிடம் ஒப்படைக்கும் பொருட்களைப் பொறுப்புடன் பாதுகாத்துக் கொடுத்தவர்,  கேட்கும்பொழுது கொடுத்தபடி திரும்பக் கொடுப்பவர். ஒருவரிடம் வாக்குறுதி செய்ததை உண்மையாக, உறுதியாக நிறைவேற்றுபவர்கள். அவ்வாறே அல்லாஹ்விற்கு இணை வைக்காது வணங்கும்  ஈமானின் ஒப்பந்தத்தை தவறாது நடைமுறைப்படுத்துபவர்கள்.

“அவர்கள்தான் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள்

(23-10)”

முன்னர் கூறப்பட்டவற்றை முறையாக செய்தவர்கள் சுவர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் என்று உறுதியளிப்பதோடு “”அவர்கள் பிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கத்தை சொந்தமாக்கிக்கொண்டு அதில் நிரந்தரமாக  இருப்பார்கள்” என்று 23-11வது வசனம் அவர்கள் அங்கே நிரந்தரமாய் நிலைத்திருப்பதை நிச்சயப்படுத்துகிறது. மேலும் “‘எவருடைய (நன்மைகளில்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம்  வெற்றி பெற்றவர்கள் (23-102)” என்று உலகில் வாழும் காலத்தில் நன்மையைச் செய்தவர்களே அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் என்று மீண்டும் நன்மை செய்யும் நற்பலனைப் போதிக்கிறது.

‘எனக்கு பத்து ஆபத்துகள் அருளப்பட்டன. அவற்றின்படி நடப்பவர் சுவர்க்கம் புகுவார்” என்று எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி மேற்குறிப்பிட்ட பத்து ஆயத்துகளை ஓதிக் காட்டியதை  இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள் எடுத்துரைத்து எல்லோரும் ஏற்று நடக்க அறிவுறுத்தினார்கள்.

நாமும் இவ்வாயத்துகளில் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளைப் பேணி இறையருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 24 OCT 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

கலீபாவும் கஜானாவும் – மு.அ. அபுல்அமீன் நாகூர்

நவம்பர் 6, 2013 1 மறுமொழி

கலீபா உமர்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் ஊதிய மின்றி கலீபா உத்யோகம் பார்த்தார்கள். கலீபா பணிச்சுமை, வருவாய் தேடும் வாய்ப்பைக் குறைத்த பொழுது குடும்ப செலவிற்கு ஒருநாளைக்கு இரண்டு  திர்ஹங்கள் பெற்றார்கள்.

சலிக்காத மாவில் ஜைத்தூண் எண்ணெயில் சுட்ட சாதாரண ரொட்டியே அவர்களின் குடும்ப உணவு. கலீபாவை காண வருவோர் அவ்வுணவை சாப்பிட சிரமப்படுவர். ஒருமுறை கலீபா உமர்(ரலி) அவர்கள்  உணவு உண்ணும் பொழுது அஜர்பைஜானின் ஆளுனர் ஹழ்ரத் உத்பா இப்னு பர்கத் (ரலி) அவர்கள் கலீபாவை காண வந்தார். கலீபா, ஆளுநருடன் உணவைப் பகிர்ந்துகொண்டார். ஒரு கவளம் வாயிலிட்ட  ஆளுநர் அல்லல்பட்டு அதோடு உண்பதை நிறுத்தினார். கலீபா காரணம் கேட்டவுடன் “”சலிக்காத மாவை ஜைத்தூண் எண்ணெயில் சுட்டு எப்படி சாப்பிட முடிகிறது? மாவைச் சலித்து மணமுள்ள  எண்ணெயில் சமைத்து சாப்பிடக் கூடாதா?” என்று வினவினார்.

“”சலித்த மாவையும் தரமான எண்ணெயையும் எல்லா மக்களும் உண்ணும்பொழுது நானும் உண்ணலாம். அந்நிலை வரும் வரை ஏழைகள் எதை உண்கிறார்களோ அதையே நானும் உண்பேன்.  மறுமையின் அச்சம் இல்லாது இருந்தால் என் வீட்டில் உயர்ந்த உணவுகளை சமைப்பேன்”

கலீபாவின் பதிலைக் கேட்டு ஆளுநரின் கண்கள் கலங்கின. உமர்(ரலி) அவர்கள் கலீபா ஆன பிறகு சலித்த மாவில் ரொட்டி தயாரித்து உண்டதே இல்லை என்று உரைக்கிறார் ஹழ்ரத் யஸôர் இப்னு  நுமைர்(ரலி) அவர்கள்.

அஜர்பைஜான் திரும்பிய ஆளுநர் கலீபாவிற்கு அன்பளிப்பு அனுப்பினார். பொதுநிதி பைத்துல்மாலுக்குப் பொருள் வந்திருப்பதாக பிரித்த கலீபா அதில் அஜர்பைஜானில் தயாரிக்கப்படும் நெய்யுடன் கலந்த  பேரீத்தங்கனி பாத்திரங்களில் இருப்பதைக் கண்டார். ஒன்றை எடுத்து வாயிலிட்ட கலீபா அதன் சுவை மிகுதியை உணர்ந்து, “”அஜர்பைஜானின் அத்தனை மக்களும் அதை சாப்பிடுகிறார்களா?” என்று  கேட்டார். இல்லை என்ற பதில் வந்ததும் பொருள் கொண்டு வந்தவர்களைத் திரும்ப எடுத்துச் செல்ல பணித்தார். கலீபாவின் கடுமையான எச்சரிக்கை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

“”நெய்யில் பொரித்த பேரீத்தங்கனி உங்களுடைய சொந்த உழைப்பால் உங்களுக்குக் கிடைத்ததா? உங்களின் பெற்றோர் விட்டுச் சென்று உங்களுக்குக் கிடைத்த உடமைகளிலிருந்து நீங்கள் பெற்றதா?  அப்படியாயின் அதை நீங்கள் உண்ணலாம். இல்லையேல் எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் எளிய உணவையே நீங்கள் உண்ண வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது”.

மகன் ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உயர்ந்த குதிரை ஒன்றை விற்பனை செய்வதைப் பார்த்த கலீபா உமர்(ரலி) அவர்கள் அக்குதிரையை வாங்கியது, வளர்த்தது பற்றி விசாரித்தார்கள்.  அப்துல்லாஹ்(ரலி) அவர்களின் சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட அந்தக் குதிரை அரசு நிலத்தில் மேய்ந்தது என்றறிந்து, அரசு உணவைத் தின்ற அக்குதிரை அரசுக்குச் சொந்தம் என்று கூறி குதிரையை  அரசிடம் ஒப்படைக்கச் செய்தார்.

கஜானாவில் உள்ள பொது நிதி பொது மக்களுடையதே. ஆளும் அதிபதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்குஉரியதல்ல என்பதை செயல்படுத்திய செம்மல் உமர்(ரலி) அவர்களின் ஆட்சி மிகவும் மதிக்கத்தக்கது.

நன்றி:- தினமணி 18 OCT 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

நல்ல பாடம் – மு.அ. அபுல்அமீன் நாகூர்

செப்ரெம்பர் 25, 2013 1 மறுமொழி

கசடறக் கற்று, கற்றபடி நிற்றலில் வெற்றி உண்டு என்று நிரூபித்தவர் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள். ஒரு நாள் இமாம் அவர்கள் வெளியில் செல்கையில் அவர்களிடம் பொதுக் கல்வி பயின்று உயர் கல்வி பெறவிருந்த மாணவர், மனிதர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பையை கொட்டுவதைக் கண்டார்கள்.LITT

அந்த மாணவரை அழைத்து, “”பொதுச் சொத்தை அபகரிக்கும் உனக்கு உயர்கல்வி கற்றுத் தருவது எனக்குக் கடமையல்ல” என்று கண்டித்து சொன்னார்கள்.

மாணவர், ஆசிரியர் சொன்னதன் பொருள் புரியாது விழித்து நின்றார். அவரை வீதி ஓரத்தில் நிற்க வைத்த இமாம் அவர்கள் “”அசுத்தங்களை வெறுத்து விடுங்கள் என்ற திருக்குர்ஆனின் 74-5வது வசனத்தை மறந்துவிட்டீரா? வெறுத்து விடும் அசுத்தங்களை மனிதர்கள் நடமாடும் சாலையில் கொட்டுவது பொறுத்துக்கொள்ளக் கூடியதா?” என்று கேட்டார். மாணவர் மலைத்து நின்றார்.

இமாம் தொடர்ந்தார்கள், “”செல்லும் வழியில் தீமை பயக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது நன்மை பயக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் அபூபர்ஸத் (ரலி) அவர்களிடம் ஏவியதை முஸ்லிம் நூலில் படித்ததைப் பறிகொடுத்து விட்டீரா? நீர் படித்து என்ன பயன்?”. மாணவர் மௌனமாய் நின்றார்.

LITTT“எவரேனும் ஒரு சாண் அளவு நிலத்தை அபகரிப்பாராயின் அவனுடைய கழுத்தில் அல்லாஹ் (மறுமை நாளில்) ஏழடுக்கு பூமியை வளையமிடுவான்’ என்ற ஏந்தல் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை புகாரி, முஸ்லிம் நூல்கள் அபூஸல்மா இப்னு அப்திற்றஹ்மான் (ரலி) அவர்களின் அறிவிப்பாகக் கூறுவதை அறியாமல் செய்யும் அறிவிலியா? அறிந்தும் அடாவடியாய் செய்யும் அநியாயக்காரரா?”.

“நீர் கொட்டிய குப்பையால், பொது மக்களுக்குப் பொதுவான பாதையில் ஒரு பகுதி மனிதர்கள் நடமுடியாதபடி பயனற்றுப் போகிறது. பொதுப் பாதையை பொது சொத்தை இவ்வாறு பயனிழக்கச் செய்வது அந்தச் சொத்தை அபகரிப்பதற்கு ஒப்பாகும்?”.

-இமாம் அவர்களின் விளக்கத்தால் தெளிவு பெற்ற மாணவர் கொட்டிய குப்பையை அள்ளி எடுத்து மக்கள் நடமாடாத பகுதியில் கொட்டினார்.

பள்ளியில் நடத்திய பாடத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் இந்நிகழ்ச்சி இக்காலத்திலும் தெருவில் குப்பையைக் கொட்டுவோருக்கும், கட்டிடம் கட்ட மணல், செங்கல், கருங்கல், ஜல்லிகளை சாலையில் கொட்டி வைத்து கான்கிரீட் கலவை போடுவோருக்கும், தப்பென்று தெரிந்தும் பொது சொத்துக்களை, பிறரின் சொத்துக்களை அடியோடு அபகரித்து நிலப்பறிப்பு மோசடியில் ஈடுபடுவோருக்கும் சூடுகொடுக்கும் நல்ல பாடம்.

நன்றி:- தினமணி 19 SEP 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

உண்ணலில் உயர்வு! – மு.அ. அபுல்அமீன் நாகூர்

ஜூலை 2, 2013 1 மறுமொழி

f2

உண்ணும் உணவே உடலுக்கு வலிவையும் பொலிவையும் தருகிறது. அதற்கொப்ப நோயின்றி வாழ உடலில் வலிவும் மற்றவர்களிடம் மதிப்போடு வாழ பொலிவும் வேண்டும். அதற்கேற்ற உணவை உண்பது உண்ணலின் உயர்வு.

முதலில் நாம் உண்ணும் உணவு சுத்தமானதாக இருக்க வேண்டும். இன்று கண்ட இடங்களில் துண்டு துண்டாக விற்கப்படும் தூய்மையற்ற உணவுகளை உண்ணக்கூடாது என்பதை அல்குர்ஆனின் 2-172வது வசனம் “நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானதைப் புசியுங்கள்” என்று கூறுகிறது.

பால் ஒரு சுத்தமான இனிய உணவு என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 16-66வது வசனம். “கால்நடைகளின் வயிற்றில் உள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து, அருந்துபவர்களுக்கு இன்பமான தூய பாலை உங்களுக்கு புகட்டுகிறோம்”.

சுத்தத்தின் செயலாக உணவு உண்ணும் முன்னும் உண்ட பின்னும் கை கழுவுவதையும் பாத்திரங்களைக் கழுவி வைப்பதையும் வற்புறுத்தினார்கள் நபி(ஸல்) என்று சல்மான் பார்ஸி(ரலி) அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது.

உண்ணும் உணவு நேரிய வழியில் ஈட்டியதாக இருக்க வேண்டும். புறம்பான வழியில் பெற்றதைப் புசிக்காதீர்கள் என்கிறது திருக்குர்ஆனின் 2-188வது வசனம். “”உங்கள் பொருட்களை உங்கள் மத்தியில் அநீதியாகப் புசிக்காதீர்கள். இன்னும் நீங்கள் அறிந்துகொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியைப் பாவமான முறையில் புசிக்கும் பொருட்டு வழக்காடாதீர்கள்”.

ஒருவரின் பொருளை பலவந்தமாகவோ, கொள்ளையிட்டோ, திருடியோ, சூதாடியோ, பந்தயம் வைத்தோ, பொய் வழக்கு தொடுத்தோ தனக்கு உரிமையாக்கிக்கொண்டு சாப்பிடுவது சாபக் கேடானது என்பதையே மேற்குறிப்பிட்ட குர்ஆனின் வசனம் எடுத்துரைக்கிறது.

எம்பெருமானார் (ஸல்) எவ்வுணவையும் எப்பொழுதும் குறை கூறவில்லை. விரும்பும் உணவை உண்பார்கள். விரும்பாததை உண்ண மாட்டார்கள் என்று அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததை “புகாரி’யில் காணலாம்.

எனினும் ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் பழம், காய்கறிகளை விரும்பி உண்டதை விளம்புகிறார்கள் உளமொத்த நபிகளாரின் உத்தம தோழர்கள். ஒரு தையல்காரர் அளித்த விருந்தில் தொலிக் கோதுமை ரொட்டியும் தொட்டுக்கொள்ள உப்புக்கண்டமும் சுரைக்காயும் கலந்து காய்ச்சிய குழம்பும் இருந்தன. அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பாத்திரத்தின் ஓரத்தில் சுரைக்காயைத் தேடி எடுத்துப் புசித்ததைப் பார்த்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பது புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது.

சீராய் உண்டால் சிலரின் சாப்பாடு பலருக்கும் பயன்படும். இருவரின் உணவு நால்வருக்கும் நால்வரின் உணவு எண்மருக்கும் போதுமானதென்று போதகர் முஹம்மது (ஸல்) அவர்கள் போதித்ததை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பது முஸ்லிம், திர்மிதீ நூல்களில் காணலாம்.

உண்ணத் f1துவங்குகையில் உள்ளத்தில் உறையும் இறைவனை எண்ணித் துதித்து, உண்டபின் உணவளித்த இறைவனுக்கு உளமார நன்றி நவின்று நம்மையும் அவ்வாறே நடந்திட பணித்தார்கள் நபி முஹம்மது(ஸல்) அவர்கள்.

ஏந்தல் நபி எடுத்துக் காட்டியபடி எவ்வுணவையும் எள்ளாது ஏற்று எளிய முறையில் பலருக்கும் பயன்படும்படி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி  27 June 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

ஆடையில் அழகு! – மு.அ. அபுல் அமீன் நாகூர்


SK

உடை உடலை மறைத்து மானத்தைக் காக்கிறது. தோற்றத்தில் பொலிவைத் தருகிறது. விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. ஆடைகள் அணிவது பற்றி அருமறைக் குர்ஆன் கூறுவதையும் அதன்படி ஒழுகிய அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் நாமும் பின்பற்றுவோம்.

“ஆதாமுடைய மக்களே! உங்களின் மானத்தை மறைக்கக் கூடியதும் உங்களை அலங்கரிக்கக் கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம்” என்று திருமறைக் குர்ஆனின் 7-26 வசனம் கூறுகிறது. ஆடைகள் ஆண்களின் ஆண்மையையும் பெண்களின் பெண்மைத் தன்மையையும் நன்னயமாய்க் காட்டும். அதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய உடைகளை ஆண்கள் அணிவதையும் ஆண்களுக்குரிய ஆடைகளைப் பெண்கள் அணிவதையும் சபித்ததாக அபூஹீரைரா (ரலி) அவர்கள் சாற்றுவதை அபூதாவூதில் காணலாம்.

பகட்டும் படாடோபமும் பாவத்திற்கு அழைத்துச் செல்பவை. எளிமை என்ற பெயரில் ஏளனத்திற்கு ஆளாகக் கூடாது. அதனால் ஆடம்பரமான ஆடை அணிவதையும் மோசமான உடை உடுத்துவதையும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் உரைப்பது ரஜீனில் காணப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள் தலைப்பாகை கட்டினர். தலைப்பாகை அணிவதால் இரக்க இயல்பு அதிகமாகும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை அபுல் மலீஹ் (ரலி) அவர்கள் கூறியது அபூதாவூதில் குறிப்பிடப்படுகிறது.

whitesilkமணிக்கட்டுவரை நீண்ட கையுடைய சட்டையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அணிந்ததை அஸ்மா பின்து எஜீதுப்னுஸ் கைனி (ரலி) அவர்கள் அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது. இக்காலத்திலும் முழுக்கை சட்டை அணிவது மதிப்பிற்குரியதாய் உள்ளது.

கீழாடையை கணுக்கால் முட்டிகளுக்குக் கீழ் தொங்க விடக்கூடாது என்று ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் கண்டித்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் இயம்பியதும் அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு தொங்க விடுவது தற்பெருமைக்குரியது. தரையைத் தொடும் ஆடைகள் தரையில் உள்ள குப்பை அசுத்தங்களில் தோய்ந்து நோய்க்குக் காரணமாகின்றன.

“பெண்கள் தங்களின் ஆடை அலங்காரங்களை அந்நிய ஆண்களின் கண்களில் படும்படி வெளிப்படுத்த வேண்டாம். பூமியில் கால்களைத் தட்டி நடக்க வேண்டாம்” என்று அல்குர்ஆன் 24-34வது வசனம் கூறுகிறது. தரையைத் தட்டி நடப்பது பிறரின் கவனத்தைக் கவரும். ஆடை, அலங்காரங்களும் பிறரின் கண்களுக்கு கவர்ச்சியாகும். கவர்ச்சி வீழ்ச்சியில் விழ வைக்கும்.

“முதுமையடைந்து நடமாட முடியாது உட்கார்ந்தே இருக்கும் கிழவிகள் மேலாடைகளைத் தளர்த்தி இருப்பது தவறில்லை; எனினும் தளர்த்தலைத் தவிர்ப்பது அவர்களுக்கும் நன்று” என்று நவில்கிறது குர்ஆனின் 24-60வது வசனம். இறைமறைக் குர்ஆன் இயம்பும் முறையில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் ஆடை அணிந்து அல்லாஹ்வின் அருள் பெற்று வாழ்வோம்.

நன்றி:- தினமணி 29 March 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

பிரிவுகள்:ஆடையின் அழகு, ஆடையில் அழகு, கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இணைந்து வாழ்வதே சிறந்தது! மு.அ. அபுல் அமீன்


divorce
இஸ்லாத்தில் விவாகரத்து தவிர்க்க முடியாத நிலைகளில் மட்டுமே பயன்படுத்தும் நிபந்தனைகள் நிறைந்த உரிமை. பொறுப்பைத் தட்டிக் கழித்துத் தப்பித்துப் பதுங்கிக் கொள்ள, ஒதுங்கிக்கொள்ள ஒத்துழைக்கும் சட்டமல்ல. சதி பதிகளைப் பிரிக்கும் சாதாரண சம்பிரதாய சட்டமல்ல. கட்டம் கட்டமாக பல படிகளைக் கடந்து கால அவகாசத்தோடு அவசரமின்றி பின்னுள்ள வாழ்வின் பிரயோசனத்தையும் கருத்தில்கொண்டு பிரயோகிக்கும், பிரிவினையைக் கடுமையாக்கும் கடுஞ்சட்டம்.

ஆணுக்கு மனைவியை விவாகரத்து (தலாக்) செய்ய எத்துணை உரிமை உள்ளதோ அத்துணை உரிமையும் கணவனை விவகாரத்து செய்ய பெண்ணுக்கும் உண்டு. பெண் பின்னுக்குத் தள்ளப்படவில்லை. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் கடுமையாக இடையூறு செய்வான் என்றோ புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால் இருவரும் சம்மதித்து தங்களுக்குள் ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்வது குற்றமல்ல என்று திருக்குர்ஆன் 4-128 வசனம் கூறுகிறது. மதீனாவில் அப்துல்லாஹ் பின் அபீ அவ்பாவின் மகள் ஜமீலா பேரழகி. இவரின் கணவர் தாபித் பின் கைஸ் அழகற்றவர். அவர் அழகிய மனைவியை உயிரினும் உயர்வாய் நேசித்தார். மனைவியோ கணவனிடம் கடுகளவும்

கருணை காட்டவில்லை. கடுமையாய் வெறுத்தாள். அவர்களிடையே கசப்பு முற்றி இசைவான வாழ்விற்கு வாய்ப்பில்லை என்றானது. ஜமீலா, நபிகள் பெருமானார் அவர்களிடம் அவரின் நிலையை எடுத்துரைத்தார். பெருமானார் அவர்கள் தாபித்தை அழைத்து விசாரித்தார்கள். தாபித் தன் உயிரினும் மேலாய் தனது மனைவி ஜமீலாவை உவப்பதாய் உளமார நேசிப்பதாய் உறுதியாகக் கூறினார். ஜமீலாவோ தாபித் கூறுவது முற்றிலும் உண்மை என்றாலும் என்னால் அவரை நேசிக்க முடியவில்லை. நேசமில்லாமல் பொய் வேஷமிட்டு வாழ விரும்பவில்லை என்றார்.divorce_spells3

தாபித், ஜமீலாவிற்குக் கொடுத்த ஈச்சந் தோட்டத்தைத் திருப்பிக் கேட்டார். ஜமீலாவும் மறுப்பேதுமின்றி திருப்பித் தந்த ஈச்சந் தோட்டத்தைப் பெற்றுக்கொண்ட தாபித் ஜமீலாவை விவாகரத்து செய்தார். இஸ்லாத்தில் நடந்த முதல் குலா இதுவே. எனினும் சிறு பூசல்களைக் காரணமாக்கி மனைவியர் இவ்வுரிமையைப் பயன்படுத்தி விவாகரத்து கோருவது விவேகமல்ல.”எத்தகைய குற்றமும் இன்றி கணவனிடம் குலா கோரும் பெண் மீது சொர்க்கத்தின் வாடை விலக்கப்பட்டுள்ளது” என்று எம்பெருமானார் எடுத்துரைத்தார்கள். இஸ்லாம், கைப்பிடித்த கணவன், மனைவி காலமெல்லாம் – ஞாலத்தில் வாழும் காலமெல்லாம் இணைந்து வாழ்வதே சாலச் சிறந்தது என்று சாற்றுகிறது.

நன்றி:- தினமணி 22 Feb 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பிரிவுகள்:அபுல் அமீன் நாகூர், இணைந்து வாழ்வதே சிறந்தது!, கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அருள் தரும் விளைநிலம்! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்விற்காக நன்றான செயல்களை நாளும் செய்து நாடியோருக்கு நல்லுதவிகள் புரிந்து அல்லாஹ்வின் நல்லருளை அறுவடை செய்யும் விளைநிலம் என்று விவரிக்கிறது இஸ்லாம்.

arabsமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறுமையில் தீயோருக்கு ஏற்படும் தீவினைகள் பற்றி பேசியதைக் கேட்ட பெருமானாரின் தோழர்கள்  இதயங்கள் இளகி அழுதனர். அதன்பின் பத்து தோழர்கள் ஹழ்ரத் உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களின் வீட்டில் கூடி கருத்து பரிமாறி பொருத்தமில்லா முடிவை முன் வைத்தனர். அம்முடிவு “”அவர்கள் அனைவரும் இல்லறத்தை விடுத்து துறவறம் பூண வேண்டும். கம்பள உடைகளையே அணிய வேண்டும். பகல் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இரவில் விரிப்பில் படுத்து உறங்கக் கூடாது. விழித்திருந்து வணங்க வேண்டும். மாமிசம், கொழுப்பு பொருட்களை உண்ணக் கூடாது. நறுமணம் பூசக் கூடாது. நமக்கென ஓரிடம் கூடாது. பூமியில் பரதேசிகளாய் சஞ்சரிக்க வேண்டும்” என்பதாகும்.

இம்முடிவைக் கேள்வியுற்ற மாண்புடைய மாநபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களின் வீட்டிற்கு விசாரிக்க சென்ற பொழுது அவர் வீட்டில் இல்லை.

பின்னர் பெருமான் நபி (ஸல்) அவர்கள் வந்து சென்றதை அறிந்த உஸ்மானும் பத்து தோழர்களும் நபிகள் (ஸல்) அவர்கள் வீட்டிற்கு விரைந்தனர்.

எம்பெருமானார் அவர்கள் பத்து தோழர்களின் மொத்த முடிவைப் பற்றி விசாரித்த பொழுது அல்லாஹ்வின் அருளை நாடியே அவ்வாறு முடிவு செய்ததாக அவர்கள் அறிவித்தனர்.  அவ்வாறு வாழ அல்லாஹ் ஏவவில்லை என்று எடுத்துரைத்த ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் “”இல்லறத்தை நல்லறமாக்கி இனிய மக்களை ஈன்று வளர்த்து நானிலத்தில் நல்வாழ்வு வாழ்ந்து நாயகன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற வேண்டும். காலமெல்லாம் நோன்பு நோற்றல் கூடாது. கடமையான நோன்பைக் கட்டாயம் மேற்கொள்ளுங்கள்.  வசதி, வாய்ப்புகளுக்கு ஏற்ப உபரி நோன்புகளை நோற்கலாம். உபரி நோன்புகளைத் தொடராக நோற்க வேண்டாம்.  இடைவெளி இருக்க வேண்டும். நானும் நபில் (உபரி) நோன்புகளை நோற்கிறேன். நோற்காத நாட்களும் உண்டு” என்றார்கள்.

“”இரவில் விழித்திருந்து வணங்குங்கள். அப்பால் தூங்குங்கள்.  இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டாம். நானும் இரவில் நின்று தொழுகிறேன். நித்திரை கொள்கிறேன். அனுமதிக்கப்பட்ட மாமிசம், கொழுப்பு பொருட்களை உண்கிறேன். நறுமணம் பூசுகிறேன். இல்லற வாழ்வையும் வாழ்கிறேன். இதுவே என் நடைமுறை. என்னைப் பின்பற்றுங்கள்” என்றும் அவர்களுக்கு அருளுரை புரிந்தார்கள்.

இல்லறத்திலிருந்து இறை கட்டளைகளை நிறைவேற்றி வரம்பு மீறாது வாழ வேண்டும் என்று திருக்குர்ஆனின்  5வது அத்தியாயத்தின் 87,88வது வசனங்கள் அறிவிக்கின்றன. “”விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்தவற்றில் மணமானவற்றை நீங்கள் ஆகாதவைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுகிறவர்களை நேசிக்கமாட்டான்”.

“”அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து  மணம் பொருந்திய ஆகுமானதைப் புசியுங்கள். மேலும் நீங்கள் எவனை விசுவாசங் கொண்டிருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்விற்கும் பயந்து கொள்ளுங்கள்”.

நாமும் குர்ஆன் நவிலும் முறையில் நந்நபி வாழ்ந்து காட்டிய வழியில் உலகில் உரிமையானதை உதறித் தள்ளாது உரிய முறையில் துய்த்து உண்மையாய் வாழ்ந்து தூயோன் அல்லாஹ்வின் நேயமான அருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 08 Feb 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

அயலாரிடம் அன்பு! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


அண்டை வீட்டார் உறவினராக இருப்பினும் உறவில்லாதவராக இருப்பினும் முஸ்லிமாக இருப்பினும் முஸ்லிம் அல்லாதவராக இருப்பினும் அண்டை வீட்டாருடன் நல்லுறவும் நட்பும் சகோதரத்துவமும் பேணி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உற்றுழி உதவ வேண்டும்” என்றுரைத்து, உரைத்தபடி உண்மையாய் வாழ்ந்து காட்டியவர்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள்.

சாதாரணமாக சில பெண்கள் சிறிய பொருட்களைக்கூட அண்டை அயலாருக்குக் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். அதனால்தான் நபிகள் நாயகம்,

“”பெண்களே! அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதை அற்பமாகக் கருத வேண்டாம். அது ஆட்டின் குளம்பாயினும் சரியே”

என்று பெண்களுக்கு போதித்த நீதி, புகாரி நூலில் உள்ளது. ஆட்டின் குளம்பு என்பது சிறியது; மதிப்பற்றது என்றாலும் அதனையும் அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். “”அண்டை வீட்டார் பசித்திருக்க தாம் மட்டும் உண்பவர் உண்மையான முஸ்லிமல்ல” என்பதும் நாயக நன்மொழி.

இதனையொட்டியே ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கும் பொழுது, முதலில் அண்டை வீட்டு யூதருக்கு அன்பளிப்பு செய்வார்கள்.

“”அல்லாஹ்வின் பார்வையில் தோழமையில் சிறந்தவர், தம் தோழர்களிடம் சிறந்து விளங்குபவர், சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே” என்ற நபிகளாரின் நன்மொழி திர்மிதி நூலில் காணப்படுகிறது.

“”அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்து நிம்மதியைக் கெடுப்பவன் சுவனம் புக மாட்டான்” என்ற நீதி முஸ்லிம் நூலில் பதியப்பட்டுள்ளது.

இமாம் அபூஹனீபா(ரஹ்) இஸ்லாமிய சமய அறிஞர். அவருடைய மறுபக்க வீட்டில் வாழும் யூதரின் வீட்டில் கொட்டப்படும் நீர், இமாம் அவர்களின் வீட்டு வாயிலில் விழுந்து தேங்கி சேறும் சகதியுமாகி விடும்.

இமாம் அபூஹனீபா அவர்கள் இரவே கொட்டும் நீரைப் பாத்திரத்தில் பிடித்து அப்புறப்படுத்துவதை வழக்கமாக செய்தார். ஒரு நாளிரவு இதனைக் கண்ட யூதர் “”ஒரு வேலையாளை வைத்து கழிவு நீரை அகற்றாமல், வேலையாள் கூலியை மிச்சப்படுத்தி இவ்வேலையை நீங்களே செய்கிறீர்களா?” என்று கேலி செய்தார். இமாம் அவர்கள் எங்கிருந்து நீர் கொட்டுகிறது என்பதைக் கவனிக்குமாறு யூதரிடம் வேண்டினார்கள். அவரின் வீட்டிலிருந்து கழிவு நீர் கொட்டுவதையறிந்த யூதர் மனம் வருந்தி திருந்தி இமாம் பொருந்தும் மாணவராய் அவரின் மதரசாவில் சேர்ந்தார்.

وَاعْبُدُوا اللَّـهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّـهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
“”அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அந்நிய அண்மை வீட்டாருக்கும் அன்பும் நன்றியும் செய்யுங்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-36வது வசனப்படி நாமும் அண்டை அயலாரிடம் அன்பு பாராட்டி சுமுக உறவைப் பேணிக் காப்போம். ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உத்தம நபிகள் வாழ்ந்து காட்டிய சத்திய நெறியில் வாழ்ந்து மறுமையிலும் சுவனத்தல் சுக வாழ்வு வாழ்வோம்.

நன்றி:- தினமணி 04 Oct 2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பிரிவுகள்:அயலாரிடம் அன்பு, அயலாரிடம் அன்பு! குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,