தொகுப்பு

Posts Tagged ‘ஹராம்’

ஹலால், ஹராம் என்றால் என்ன? ஏன்? எப்படி? – அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.


halal

 

இப்படி எமக்கு மத்தியிலேயே சரியான புரிதலின்றிய ஒரு விடயத்தை மேடை போட்டுப் பேசி அடுத்தவர்களுக்கு விளங்கப்படுத்தி விட முடியுமா என்பது கேள்விக்குறியே!.

இன்று பெரும்பான்மையினருக்கு மத்தியிலும் ஹலால் என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற தோற்றப்பாட்டை ஹலால் ஹராம் பற்றிய சரியான பார்வையைக் கொடுப்பதன் மூலமாக மாற்றியமைக்கலாம்.

அப்படி மாற்றியமைத்து விட்டோமென்றால் பிடிவாதமாக இருக்கும் அதிகார சக்திகள் அழைப்பு விடுத்தாலும் கூட பொது மக்கள் அதன் பின்னால் போக மாட்டார்கள்.
இது அப்படியான ஒரு முயற்சியாகும். இன்று பொதுவாக முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்ற சில கேள்விகளுக்கான பதில்களைத் தேட முயன்றதன் விளைவே இவ்வாக்கமாகும்.

• ஹலால் என்றால் என்ன? ஹராம் என்றால் என்ன?

இவை இரண்டும் இரண்டு அரபுச் சொற்களாகும். ஹலால் என்பது அனுமதிக்கப்பட்டது என்றும் ஹராம் என்பது அனுமதிக்கப்படாதது என்றும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படலாம்.
அதாவது மனித வாழ்க்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய சகல நடவடிக்கைகளிலும் அனுமதிக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்படாதவைகள் என இரு பகுதிகள் காணப்படுகின்றன. இது வெறுமனே உணவு பானங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விடயமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இன்று இந்த ஹலால் ஹராம் என்ற விடயம் வெறுமனே உணவு பானங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாகவே முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் அது தொடர்பான சந்தேகங்களும் சர்ச்சைகளும் நிலவுகின்றன.

halal1

• இந்த ஹலால் ஹராம் என்பன இஸ்லாத்தில் மாத்திரம் தானா காணப்படுகின்றது?

இல்லை உலகிலுள்ள சகல மதங்களிலும் ஹலால் ஹராம் காணப்படுகின்றது. அதாவது அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்படாத விடயங்கள் எல்லா மதங்களிலும் காணப்படுகின்றன. உதாரணமாக பௌத்த மதத்தை எடுத்துக் கொண்டால் அந்த மதத்தின் போதனைகளின் படி மதுபானம் அருந்துவது ஹராமாகும் (தடுக்கப்பட்டதாகும்). அநீதி இழைத்தல் ஹராமாகும், அநியாயமாக கொலை செய்தல் ஹராமாகும். பௌத்த மதத்தலைவர்கள் சுமார் பத்து வகையான இறைச்சிகளை சாப்பிடுவது ஹராமாகும்.

அதே போன்று கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் பன்றி இறைச்சி சாப்பிடுவது அவர்களுக்கு ஹராமாகும்.

இஸ்லாத்திலும் ஏனைய அனைத்து மதங்களையும் போலவே இவ்வாறாக ஹராமான விடயங்கள் காணப்படுகின்றன. அந்த விடயங்களை தவிர்ந்து வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.

• உணவு பானங்களில் மாத்திரம் தானா ஹலால் ஹராம் காணப்படுகின்றது?

நிச்சயமாக இல்லை. ஏற்கனவே மேலே கூறிக்காட்டியது போல வாழ்வின் சகல விவகாரங்களிலும் அனுமதிக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்படாதவைகள் அதாவது ஹலால் ஹராம் என இரு பகுதிகள் காணப்படுகின்றன. உதாரணமாக பார்வையில் கூட ஹலாலான பார்வை ஹராமான பார்வை என இரண்டு வகைகள் உள்ளன. ஹலாலான பார்வை என்பது ஒரு மனிதன் தனக்கு பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டவற்றை மட்டும் பார்ப்பதாகும்.

ஒரு மனிதன் பாதையில் நடந்து செல்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள், பாதையோரத்திலிருக்;கின்ற வீடுகளை எட்டிப் பார்ப்பது அவனுக்கு ஹராமாகும். பாதையில் நடந்து செல்கின்ற பெண்களைப் பார்ப்பது ஹராமாகும். மோசமான காட்சிகளைப் பார்ப்பது ஹராமாகும். இப்படி ஹராமான பார்வையை பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.

Halal (1)

 

அதே நேரம் தடுக்கப்பட்ட பார்வைகள் சிலதைத் தவிர்த்து ஏனைய அனைத்து வகையான பார்வைகளும் ஹலால் ஆகும்.

அதே போன்றுதான் ஆடைகளிலும் ஹலால் ஹராம் காணப்படுகின்றது. ஆனால் இங்கு ஷேர்ட் ஹலால் ட்றவுசர் ஹராம் என்று யாராலும் சொல்ல முடியாது. இங்கு ஹலால் ஹராமைத் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக சில நிபந்தனைகள் காணப்படுகின்றன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒருவன் எந்த ஆடையை அணிந்தாலும் அது ஹலால் ஆகும். ஆந்த நிபந்தனைகளைப் புறக்கணித்து ஒருவன் எந்த ஆடையை அணிந்தாலும் அது ஹராமாகும்.

அந்த நிபந்தனைகளில் முதலாவது மட்டும் தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வௌ;வேறானது. ஏனைய அனைத்து நிபந்தனைகளும் இருவருக்கும் பொதுவானது.

முதலாவது நிபந்தனை உடலில் கட்டாயம் மூட வேண்டிய பகுதிகளை மறைத்ததாக குறித்த ஆடை இருக்க வேண்டும். இதில் ஆண் கட்டாயம் மூட வேண்டிய பகுதி அவனது தொப்புள் முதல் முழங்கால் வரையுள்ள பகுதியாகும். ஒரு பெண் கட்டாயம் அவளது முகம் மற்றும் மணிக்கட்டின் கீழுள்ள கையின் பகுதி ஆகியன தவிர்ந்த ஏனைய பகுதிகளை மறைக்க வேண்டும்.

அதே போன்று ஆடை மெல்லியதாக இருக்கக் கூடாது

உடலமைப்பு வெளியே தெரியும் வகையில் இறுக்கமாக இருக்கக் கூடாது

ஆண் பெண்ணின் ஆடையையும் பெண் ஆணின் ஆடையையும் அணியக் கூடாது

ஏனைய கலாச்சாரங்களை அப்படியே பின்பற்றுவதாக இருக்கக் கூடாது.

இந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுமிடத்து ஒருவன் அணியும் ஆடை எதுவாக இருப்பினும் அது ஹலாலானதாகும். இவற்றில் ஏதாவது ஒரு நிபந்தனையாவது மீறப்பட்டால் அவன் அணியும் ஆடை ஹராமானதாகும்.

அதே போன்று ஆண் பெண் உறவில் ஹலால் ஹராம் இருக்கின்றது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பேசுவதற்கும் பழகுவதற்கும் தனித்திருப்பதற்கும் அனுமதிக்கப்பட்ட ஆண்கள் பெண்களும்; இருக்கின்றனர் தடுக்கப்பட்ட ஆண்கள் பெண்களும் இருக்கின்றனர்.

உதாரணமாக ஓர் ஆண் தனது தாயுடன் மகளுடன் சகோதரியுடன் பேசுவது பழகுவது பயணம் போவது ஹலாலாகும், அதே நேரம் வேறு யாரோ ஓர் அந்நியப் பெண்ணுடன் பயணிப்பது ஹராமாகும்.

ஒருவன் தனது உடல் இச்சையை திருமணத்தின் பின்னர் தனது மனைவியூடாகத் தீர்த்துக் கொள்வது ஹலாலாகும். அதையே திருமணத்துக்கு முன்னரோ பின்னரோ வேறு வகையில் விபச்சாரத்தினூடாக தீர்த்துக் கொள்வது ஹராமாகும்.

இப்படி வாழ்வின் சகல விடயங்களிலும் ஹலாலும் ஹராமும் காணப்படுகின்றன.

• அப்படியானால் ஏன் உணவுப் பண்டங்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது? ஏனைய எல்லா விடயங்களுக்கும் வழங்கலாம் தானே! அதுவும் நபியவர்கள் என்ன ஹலால் சான்றிதழ் வழங்கினார்களா?

நியாயமான கேள்விதான், ஆனால் நிதர்சனமான கேள்வியல்ல. ஒரு மனிதன் பாதையில் செல்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவனுக்கு ஹலாலான பார்வையை மாத்திரம் தான் அவன் பார்க்க வேண்டும். அவனது பார்வை தடுக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பார்த்து விட்டால் அந்தப் பெண் ஹராம் என்று அர்த்தமில்லை. அவள் வேறு யாருக்கோ ஹலாலானவளாக இருப்பாள்.

அதே போன்று விபச்சாரம் செய்வது பிழையானது என்பது வெளிப்படையாகத் தெரியும். எனவே ஒருவன் திருமணம் செய்த பெண்ணுக்கு யாரும் ஹலால் சான்றிதழ் வழங்கத் தேவையில்லை. திருமணம் முடித்த காரணத்தினாலேயே அவள் அவனுக்கும் அவன் அவளுக்கும் ஹலாலாகி விடுவர்.

அவ்வாறே ஆடைகளிலும் குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தியாகினால் அந்த ஆடை ஹலால் இல்லாவிட்டால் அது ஹராம்.

இவற்றிலெல்லாம் யாருக்கும் பார்த்தவுடனே எது ஹலால் எது ஹராம் என்பது தெளிவாக விளங்கி விடும். எனவே அங்கெல்லாம் எது ஹலால் என்று பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகின்றது.

ஆனால்  உணவுப் பொருட்களைப் பொருத்தவரையில் அங்கு நிலைமை வேறாகக் காணப்படுகின்றது. தடுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஹராம் என்பது தெளிவானது. உதாரணமாக பன்றி இறைச்சி விற்பனை செய்யும் கடையில் போய் யாரும் இறைச்சி வாங்க மாட்டார்கள். ஏனெனில் அது தெளிவானது.

ஆனால் நான் வாங்கும் யோகட்டில் பன்றிக் கொழுப்பு கலந்திருக்கின்றதா? என்பதைப் பார்க்கும் ஆற்றல் எனக்கில்லை. ஏனெனில் அதனைப் பரிசோதனை செய்வதற்கு இரசாயனக் கலவைகள் தேவைப்படுகின்றன, இயந்திரங்கள் தேவைப்படுகின்றன, விஷேட தகைமைகள் தேவைப்படுகின்றன. இவையனைத்தையும் ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியாது, அப்படி யாராவது செய்ய நினைத்தால் ஒரு பிஸ்கட் பக்கற் வாங்கக் கடைக்குச் செல்வதாக இருந்தாலும் ஒரு ட்ரக் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு உள்ள இயந்திரங்கள் இரசாயனங்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் அதில் தடுக்கப்பட்டவைகள் கலந்திருக்கின்றதா என்று பார்த்து வாங்க வேண்டும். இது சாத்தியமே இல்லாத விடயமாகும்.

எனவே இதற்குப் பொறுப்பாக ஒரு குழுவினர் இருந்து இவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அவ்வாறு பரிசோதனை செய்த பின்னர் எந்தப் பிரச்சினையுமில்லை என்ற நிலையில் காணப்படுகின்ற பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இது தான் உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதற்கும் ஏனையவற்றுக்கு வழங்கப்படாமலிருப்பதற்குமான காரணமாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஹலால் சான்றிதழ் வழங்கினார்களா? என்ற கேள்வியும் நியாயமானது தான்.
ஆனால் அதுவும் கூட நிதர்சனமான கேள்வியல்ல. ஏனென்றால் நபியவர்களின் காலத்தில் சந்தையில் அனைத்துமே ஹலாலாகத் தான் இருந்தன. அங்கே ஹராமான எதனையும் விற்க யாருக்கும் அனுமதியிருக்கவில்லை. எனவே வாங்குவது ஹலாலா ஹராமா என்ற பிரச்சினையும் யாருக்கும் இருக்கவில்லை. எனவே ஹலால் மட்டுமே இருந்த இடத்தில் ஹலால் சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.

ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல எது ஹலால் எது ஹராம் என்பதை நுகர்வோரினால் பிரித்தறிய முடியாத நிலையே இன்றைய சந்தையில் காணப்படுகின்றது. எனவே இதுதான் ஹலால் என்பதை நுகர்வோருக்குக் காட்டிக்கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை இருப்பதன் காரணமாகத் தான் நபியவர்கள் காலத்தில் வழங்கப்படாத ஹலால் சான்றிதழ் இன்று வழங்கப்படுகின்றது.

• ஏன் ஹலால் அவசியம்? நாம் நினைத்த மாதிரி வாழ்வதற்கு நமக்கு உரிமை இல்லையா?

இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முன்னர் உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் படித்த பாடசாலையில் அல்லது பல்கலைக்கழகத்தில் உங்களது அனுபவம் எப்படி? நீங்கள் நினைத்த மாதிரி அங்கே நடந்து கொள்ளலாமா? நினைத்தால் வகுப்புக்கு போகலாம், நினைத்தால் போகாமல் இருக்கலாம், ஆடை அணிந்தும் போகலாம் ஆடை அணியாமல் அம்மணமாகவும் போகலாம், நினைத்தால் ஒழுக்கமாக இருக்கலாம் நினைத்தால் தறிகெட்டதனமாக நடந்து கொள்ளலாம்… இப்படியெல்லாம் எங்காவது பாடசாலைகளில் ஒழுங்குகள் வரையறைகள் சட்டங்கள் கட்டுப்பாடுகள் செய்ய வேண்டியவைகள் செய்யக் கூடாதவைகள் என எதுவுமே இல்லாத நிலை காணப்படுகின்றதா?

அல்லது ஏதாவது ஒரு நாட்டில் நீ விரும்பிய மாதிரி வாழ்ந்து விட்டுப் போ! உனது விருப்பம் தான் எமது வெற்றி, விரும்பினால் கற்பழி! விரும்பினால் களவெடு! விரும்பினால் கொலை செய்! என்று அனுமதியிருக்கின்றதா?

அல்லது ஏதாவது மதங்களில் ஒருவன் தான் விரும்பியது போல் வாழலாம் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்ற நிலை காணப்படுகின்றதா?

நிச்சயமாக இல்லை, அங்கெல்லாம் சட்டங்கள் ஒழுங்குகள் வரையறைகள் செய்யக் கூடியவைகள் செய்யக் கூடாதவைகள் என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதே போன்றுதான் மனித வாழ்விலும் ஒழுங்குகள் வரையறைகள் காணப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒழுங்குகள் கட்டுப்பாடுகள் வரையறைகள் அற்ற வாழ்வை மனித வாழ்வு என்று யாரும் சொல்வதில்லை. ஒழுங்கு விதிகளை வரையறைகளை மீறுகின்றவர்களை நாம் எப்படி ஏசுகின்றோம் என்பதை ஒரு முறை சிந்தித்துப் பார்த்தால் அத்தகைய வாழ்வுக்கு என்ன சொல்லப்படுகின்றது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.

எனவே இப்படியாக மனிதர்களுக்கே சட்டங்களை வரையறைகளை வகுக்க முடியுமாக இருந்தால் மனிதர்களையெல்லாம் படைத்த இறைவனுக்கு வரையறைகளை வகுக்க முடியாதா?! ஆனால் சட்டங்கள் வரையறைகள் அனைத்திலும் பின்பற்றப்படுவதற்கு அதிகம் தகுதியானது இறைவன் வகுத்த சட்டங்களும் வரையறைகளுமே. நாங்கள் மனிதர்களை மதிக்கின்றோம், ஆனால் அதனை விட அதிகமாக மனிதர்களைப் படைத்த இறைவனையும் அவனது சட்டங்களையும் மதிpக்கின்றோம்.

• இப்படி எல்லாமே ஹராம் என்றால் எப்படி மனிதன் இந்த உலகில் வாழ்வது?

உங்களது ஆதங்கம் புரிகின்றது. ஆனால் ஹராத்தைத் தவிர்ந்து வாழ்கின்ற முஸ்லிம்கள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தானே வாழ்கின்றனர்.

ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும், ஹலாலானவற்றையும் ஹராமானவற்றையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் ஹராமானவைகள் ஹலாலானவற்றை விட மிகவும் சொற்பமானதே! அதே நேரம் வேறு எந்தக் கொள்கையிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் இஸ்லாத்தின் ஹலால் ஹராம் நடைமுறையில் காணப்படுகின்றது.

இஸ்லாத்தில் ஏதாவது ஒன்று ஹராமாக்கப் பட்டிருக்குமாயின் அதற்கு ஈடாக வேறு ஒன்று நிச்சயமாக ஹலாலாக இருக்கும். உதாரணமாக விபச்சாரம் ஹராமாக்கப்பட்டுள்ளது திருமணம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. எனவே மனிதனின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்ட வழிமுறையொன்று ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

வட்டி ஹராமாக்கப்பட்டுள்ளது, வியாபாரம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. எனவே சம்பாதிக்க விரும்பும் எவரும் ஆகுமான வழியில் வியாபாரம் செய்து பொருளீட்டலாம்.

பன்றி இறைச்சி ஹராமாக்கப்பட்டுள்ளது இன்னும் பல வகையான இறைச்சிகள் ஹலாலாக்கப்பட்டுள்ளன. மாமிசம் உண்ண வேண்டும் என்ற மனிதனது ஆசைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.

அது மட்டுமல்ல இந்த ஹலால் ஹராம் தொடர்பாக ஓர் அடிப்படையான விதியே இஸ்லாத்தில் காணப்படுகின்றது. ‘இந்த உலகத்தில் இருக்கின்ற அத்தனையும் அனுமதிக்கப்பட்டதாகும் படைத்த இறைவனால் தடுக்கப்பட்டவற்றைத் தவிர’ என்பதே அந்த விதியாகும். இதன் மூலம் ஹலாலானவற்றின் எல்லை எந்தளவு விரிவானது என்பதையும் ஹராமானவற்றின் எல்லை எந்தளவு சுருங்கியது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் அப்படி ஹலாலின் எல்லை விரிவானதாக இருந்தாலும் இன்று இருக்கின்ற கொஞ்சம் ஹராத்தை எல்லா ஹலால்களுடனும் கலக்கின்ற வேலையை பலர் தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகின்றனர். எனவே தான் ஹலால் ஹராம் போன்ற சொற்கள் முன்பில்லாத அளவு மக்களுக்கு மத்தியில் பரிச்சயமாகின்ற அளவுக்கு அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

அத்தோடு இது யாரின் மீதும் எதனையும் திணிக்கின்ற செயற்பாடும் அல்ல. முஸ்லிம்கள் தமது பேணுதலுக்காக செய்கின்ற விடயமே இது. ஆனால் இது அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடிய விடயம் என்பதில் சந்தேகமில்லை. அதையும் தாண்டி யாராவது இது தமக்குத் தேவையில்லை என்று கருதினால் அவர் தாராளமாக அவர் விரும்பியது போல் ‘சுதந்திரமாக’ வாழ்ந்து விட்டுப் போகலாம். அது அவருக்கும் அவரைப் படைத்தவனுக்கும் இடையில் உள்ள விவகாரம். ஆனால் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டிய கடமைப்பாடு ஹலால் தேவையில்லை என்று சொல்கின்ற சகோதரர்களுக்கு இருக்கின்றது. எப்படி எங்கள் மீது ஹலாலைத் திணிக்காதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கின்றதோ அதே போன்று ஹலால் தேவையில்லை என்பதை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று சொல்லும் உரிமை எங்களுக்கும் இருக்கின்றது.

நன்றி:- அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம். 

ரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி


அஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே…..

வ அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன்…. ஏதோ இருக்கேண்டீ…. நீ சொல்லு….

என்ன நஸீம்… ரமலான் மாசம்… கையில் பிடிக்க முடியாத குறையா பிஸியா இருப்பே… இப்ப என்ன சுரத்தே இல்லாம பேசறே??

இல்லடீ…. ரெண்டு நாளா நோன்பில்லை… அதான் டல்லா இருக்கேன்…. நோன்பில்லைன்னா என்னதான் செய்யறதுன்னு தெரியலை…. போரடிக்குது….

நஸீமாவின் இடத்தை நம்மில் பலரும் கடக்க வேண்டி இருக்கிறது. மாதம்தோறும் வரும் உதிரப்போக்கினாலோ அல்லது பிரசவத்திற்கு பின் வரும் உதிரப்போக்கினாலோ ரமலானை, அந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும், வேகத்துடனும் கடக்க இயலாமல் போகிறது. ஆனால் வருத்தப்பட்டு இந்த மாதத்தை நாம் விட்டு விடலாமா? அதன் ரஹ்மத்தை1, பரக்கத்தை2, அதில் கிடைக்கும் அளவிலா நன்மைகளை?????????????? தொழுக முடியாத நிலையில் என்ன இபாதத்3 செய்து விட முடியும் என்று நினைக்கும் சகோதரிகளுக்காகவே இந்தக் கட்டுரை. இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் பல சகோதரிகள் பயன் பெறக்கூடும் என்னும் நிய்யத்துடன், பிஸ்மில்லாஹ்…. 🙂

முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே… எப்படி அல்லாஹ் கட்டளையிட்ட ஐவேளைத் தொழுகையை தொழுவதிலும், நோன்பு நோற்பதிலும், ஸகாத்4 தருவதிலும் நமக்கு கூலிகள் உண்டோ… அதே போன்றுதான், அல்லாஹ்வின் கட்டளையை மதித்து இந்த உதிரப்போக்கு காலங்களில் நாம் தொழுகாமல் இருப்பதற்கும் கூலி கிடைக்கிறது. ஆம், அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றித்தான் நம் தொழுகையை விட்டிருக்கிறோம் அல்லவா…. எனவே அதுவும் ஓர் இபாதத்தே…. எனவே முதலில் அந்தக் கவலையிலிருந்து மீண்டெழுங்கள்.

இரண்டாவது, இது தீண்டாமை போன்றதொரு கொடிய நோயோ, தீட்டோ அல்ல. மாறாக, தஹாரா என்னும் தூய நிலையை வராத ஒரு இயற்கை/நிலை மட்டுமே. எவ்வாறு ‘ஜனாபா5’ நிலையை அடைந்தால் ஆண், பெண் இருவருக்குமே ‘தூய்மை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதே போல் இந்த நிலையும் வெளிப்புற அசுத்தமே தவிர அல்லாஹ்வின் முன் நிற்கக்கூடியவரின் அகத்தூய்மையை கேள்விக்குறியாக்கும் தீட்டல்ல. இதனையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஓர் ஹதீஸ்6சில் குறிப்பிட்டுள்ளார்.
‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவி த்தார். (புகாரி 1:6:297)

தீட்டாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தகைய நிலையில் அன்னையின் மடியில் தலை வைத்து குர்’ஆன் ஓத செய்திருப்பார்களா?

உடலாலும் மனதாலும் தளர்ந்து போயிருக்கும் நம்மை கஷ்டப்படுத்தாமல் இபாதத்தை இலகுவாக்கவே அல்லாஹ் தந்த பரிசு என்பதை நினைவில் வையுங்கள். அதுவும் விட்டுப்போயிருக்கும் நோன்பை மட்டுமே நமக்கு மீண்டும் பிடிக்க கட்டளையுள்ளது. விட்டுப்போன தொழுகைகளையல்ல. அதையும் யோசித்துப் பாருங்கள். மார்க்கத்தை நமக்காக எத்தனை இலகுவாக்கி தந்துள்ளான் நம் இறைவன் என்பது புரியும். அல்லாஹு அக்பர்.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் கூறி இருப்பது போல, அனைத்து பொருட்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை உண்டு, ஒரு ஒழுங்கு உண்டு, அது போல நமக்கும் வைத்துள்ளான். எப்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் அததற்கான ஆர்பிட் / வழி உள்ளதோ அதே போல பெண்களுக்கும் இந்த குறிப்பிட்ட காலத்தை ஒரு ஒழுங்காக அமைத்துள்ளான்.
(உஹதுப் போரில்) உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால் அதே போன்று அக்கூட்டத்தினருக்கும் (பத்ரு போரில்) காயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச்செய்கிறோம். இதற்குக்காரணம் நம்பிக்கை கொன்டோரை அல்லாஹ் அறிவதற்கும் உங்களில் உயிர்தியாகம் செய்வோரை உருவாக்குவதற்குமே ஆகும். அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.(ஆலெ இம்ரான்:140)

இன்னும் ஒரு விஷயம் உற்று நோக்கினால் புரிபடும். அது ரமதானை நாம் தராவீஹ்7 + தொழுகை + குர்’ஆன் என்னும் மூன்று விஷயங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதை. தொழுகை இல்லாதபோதுதான் மற்ற விஷயங்களைப் பற்றி நமக்கு தெரியவும் வருகிறது, அதன் மேலும் நம் ஃபோகஸை கொண்டு போக முடிகிறது. உதாரணத்திற்கு
“என்மீது அதிகமாக ஸலவாத்தை ஓதுபவர் கியாமத்து நாளில் என்னை அதிகம் நெருங்கியிருப்பார்! என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அறிவித்துள்ளார்.”
என்னும் ஹதீஸ்சை நினைத்துப் பாருங்கள். எந்தளவிற்கு நாம் ஸலவாத்8தை நினைக்கிறோம் அல்லது ஓதுகின்றோம்?? தொழுகையில் அத்தஹியாத்9திற்கு பிறகு ஓதுவதோடு பலர் நிறுத்திக் கொள்கிறோம். அதன் மகத்தான கூலியை மேலே படித்துப் பாருங்கள்…….
அதே போல்தான் நோன்பாளிகளுக்கு உணவளிப்பதும், திக்ரு செய்வதும், து’ஆ செய்வதும்.
‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)
“து’ஆ என்பது வணக்க வழிபாட்டின் சாராம்சமாகும்.” (அஹ்மத், திர்மிதி, ஹஸன் ஸஹீஹ்)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (பகரா 2:185)
அல்லாஹ் எந்த இபாதத்தின் கூலியையும் குறைத்துக் கொடுப்பவனல்ல. ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த நன்மைக்கான கூலியை வழங்குவேன் என்று வாக்களித்துள்ளான். அதுவும் அணுவளவும் குறையாமல். இன்னும் குர்’ஆனை திலாவத்தாக மட்டும் அல்லாமல் மனனம் செய்யவோ, கற்கவோ, கற்றுக்கொடுக்கவோ கூட செய்யலாம். வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு புதிதாக ஒரு சூறா / குர்’ஆனின் அத்தியாயம் கற்றுக்கொடுக்கலாம். அல்லது நீங்களே மனனம் செய்யலாம்.

இன்னும் ஈஈஈஈஸியான வழி, அவரவர் செல்ஃபோன் மூலமாகவோ, மடிக்கணிணி மூலமாகவோ, அல்லது டேப் ரிக்கார்டர், ஆடியோ சிஸ்டம் கொண்டோ எத்தனை முறை வேண்டுமானாலும் கேளுங்கள், மகிழுங்கள், மனனம் செய்யுங்கள். அல்லது மனனம் செய்து மறந்து போன சூறா எனில் அதை மீண்டும் சரி செய்து கொள்ளுங்கள். மாஷா அல்லாஹ்…. நினைத்துப் பாருங்கள், தொழும் நிலையில் இருக்கும்போது இத்தனை விதத்தையும் நாம் எண்ணிப்பார்க்கிறோமா??
தஃப்ஸீர்10 படிப்பதற்கும், படித்ததை பகிர்வதற்கும், அதற்கான கூலிகளும் உண்டு. எத்தனை விதமான தஃப்ஸீர்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் எத்தனை படிப்பினைகள் உள்ளன… எத்தனை எத்தனை புதிய செய்திகளை / ஹதீத்துக்களை / ரிவாயத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது??? அதை பகிர்வதிலும் கிடைக்கும் நன்மையை நானோ நீங்களோ அளக்க முடியுமா??

எனவே இந்த காலத்தை (ஹைல் / நிஃபாஸ்) துவண்டு போகும் காலமாக அன்றி, நமக்கு ஒரு இடைவேளை தரப்பட்டுள்ளது, அதுவும் அல்லாஹ்விடமிருந்து, அதை மனதார ஏற்றுக்கொள்வதிலும் நமக்கு கூலியுண்டு என்பதை நினைவில் வையுங்கள். தொழுகையும், குர்’ஆன் ஓதுவதும் மட்டுமே இபாதத்தல்ல என்பதை புரிந்து கொள்ளவும் ஏனைய அமல்களிலும் திக்ரையும், இறையச்சத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவும் இந்த காலத்தை ஒதுக்குங்கள்.
இன்ஷா அல்லாஹ், இனி நடைமுறையில் செய்யக்கூடிய, நற்கூலியை பெற்றுத்தரும் செயல்களை ஒரு சேர பார்ப்போம்.

நோன்பாளிகளுக்கு உணவு தயார் செய்யவும், பரிமாறவும், இஃப்தார் குழுக்களிலும் பங்கு பெறுங்கள்.
இஃப்தார் முடிந்த பின் மஸ்ஜிதில் சுத்தப்படுத்தும் வேலையில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
தராவீஹ் தொழுக வரும் தாய்மார்களின் குழந்தைகளை (Baby Care) கவனித்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு நன்மை யோசியுங்கள். குழந்தையின் தாய்மார் மட்டுமல்ல. இன்னும் மற்றவர்களும் சிரமம் இன்றி தொழுகையில் ஒன்றி தொழுக முடியும். அதற்கான கூலியும்….மாஷா அல்லாஹ் :))
இது வரை மனனம் செய்யாத சூறாக்கள், து’ஆக்களை மனனம் செய்யுங்கள்.
வீட்டிலுள்ள வயதானோருக்கு (எழுத படிக்க இயலாமல் இருப்பவர்களுக்கு) மற்றும் குழந்தைகளுக்கு சூறாக்களையும், து’ஆக்களையும் கற்றுக் கொடுங்கள். தஃப்சீர் உரக்க படித்துக் காட்டுங்கள்.
உங்கள் வீட்டிலுள்ள / தெருவில் / அணுகக் கூடிய அருகாமையில் உள்ள நோன்பு வைக்கும் வயதானோருக்கு / ஏழைகளுக்கு / சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு / புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உணவுக்கும் / மற்ற தேவைகளுக்கும் உதவுங்கள்.
“யார் தன் சகோதரனின்தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.”  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி). நூல்: புகாரீ 2262, முஸ்லிம்

(உங்களின் வீட்டுக்கு இஃப்தாருக்கு அழைத்துப்பாருங்களேன்… இன்னும் அதிகமான மகிழ்ச்சி, கூலி மாஷா அல்லாஹ்)
நிஃபாஸில் இருக்கும் தாய்மார்களே… உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் ஒவ்வொரு முறையும்(மற்ற எல்லா வேளைகளிலும் கூட:) ) ஒரு சூறாவோ/து’ஆவோ/திக்ரோ அதிகமதிகம் ஓதுங்கள். பக்கத்தில் ஒரு ஆடியோ பிளேயர் வைத்து குர்’ஆனோ / தஃப்ஸீரோ ஒலிக்க வையுங்கள். உங்கள் மேலும், இன்ஷாஅல்லாஹ் உங்களின் குழந்தை மேலும் அதன் எஃபெக்ட்டை உணர முடியும் (இது சொந்த அனுபவமே….)
அதிகமதிகம் திக்ரு செய்யுங்கள். இதுவரை மனனம் செய்யாத காலை மற்றும் மாலை திக்ருக்களை மனனம் செய்யுங்கள். ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் மற்றவர்கள் தொழும்போது நீங்களும் அமர்ந்து அந்தந்த வேளைகளுக்கான திக்ருக்களை ஓதுங்கள்.
இரவில் தஹஜ்ஜுத் நேரத்தில் எழுந்து, உள்ளம் ஒன்றி, கண்ணீர் மல்க து’ஆ கேளுங்கள். து’ஆவிற்கு முன்னும் பின்னும் திக்ரையும், ஸலவாத்தையும் அதிகப்படுத்துங்கள்.
வீட்டில் பிரிண்டர் / சிடி ரைட்டர் இருந்தால் இலவசமாக து’ஆக்கள் / திக்ருக்களை பிரிண்ட் செய்தோ / சிடியில் காப்பி செய்தோ எத்தனை பேருக்கு இயலுமோ பகிருங்கள். (இதை அச்சிட்டது / காப்பி செய்தது…ஜனாப் / ஹாஜி/இன்னாரின் ஹக்கில் து’ஆ—- என்னும் போஸ்டரெல்லாம் அடிக்காமல் இன்ஷா அல்லாஹ்…. :)) )
தஜ்வீத் சரி செய்து கொள்ளவும், அதன் சட்டங்களை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும், தகவல்களை / பாடங்களை பகிர்ந்து கொள்ளவும் நேரம் ஒதுக்குங்கள்.
அஸ்மா உல் ஹுஸ்னாவை மனனம் செய்யுங்கள். அதற்கான கூலியும் உண்டு…கூடவே உங்களின் து’ஆக்களின் போது அல்லாஹ்வின் எந்தப்பெயரை உபயோகிக்கலாம் என்பது தெள்ளென விளங்கும்….
“அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. யார் அவற்றை மனனமிட்டுக்கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6410, முஸ்லிம் 2677) இன்னும் அதிகமாகவும் து’ஆவில் ஒன்ற வைக்கும்.

ஈத் பெருநாளைக்கான ஷாப்பிங்கையெல்லாம் இந்த நேரங்களில் வைத்துக் கொண்டால் தொழும் நிலை கிடைக்கும்போது அதைப்பற்றிய கவலை இருக்காது.
இன்னும் வேறு எந்த விதத்தில் நற்கூலி பெறலாம் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள்…. அதுவே உங்களுக்கு இன்னும் பல வழிகளைக் காட்டும் இன்ஷா அல்லாஹ். மனித மனம் எப்படிப்பட்டதெனில், ஒரு கதவு மூடப்படும்போதுதான் மற்ற வழிகளை தேட ஆரம்பிக்கும் 🙂
மிக முக்கியமாக, ஹலால்11-ஆன அமல்களை செய்வதை விடவும், ஹராம்12-ஆன செய்கைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வதே மிக மிக முக்கியமானது, மேன்மையானது. எனவே புறம் பேசுவதை விட்டும், அவதூறு சொல்வதை விட்டும், பொய்யிலிருந்தும், வீண் பேச்சுக்களிலிருந்தும், நேரத்தை வீணாக்கும் செயல்களிலிருந்தும் காத்துக்கொள்ளுங்கள். இந்த காலமானது உங்களை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்குவதில்லை, உங்களின் அமல்களில் குறை வைப்பதில்லை என்பதையும் ஆனால் வீண் செயல்களால் குறையேற்படக்கூடும் என்பதையும் நினைவில் வையுங்கள்.

இன்ஷா அல்லாஹ் இந்த இடைவெளியானது இன்னும் அதிக ஈர்ப்புடனும், சக்தியுடனும், பலமான ஈமானுடனும் உங்களை தயார் செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே மகிழ்ச்சியுடனும், ஒவ்வொரு அமலுக்கும் கூலி இருப்பதில் நம்பிக்கை கொண்டும் களத்தில் இறங்குங்கள்.

…அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)… (2:185)

அகராதி:

1. ரஹ்மத்- பேரளுள்
2. பரக்கத்- அபிவிருத்தி
3. இபாதத்- இறைவணக்க வழிபாடு
4. ஜகாத் – ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கான வரி / தூய்மையாக்குதல் என்னும் பொருளும் உண்டு
5. ஜனாபா- பெருந்தொடக்கு-சிறு தொடக்கு உடையவர்
6. ஹதீஸ் – நபிமொழி
7. தராவீஹ் – ரமதான் மாதத்தில் மஸ்ஜிதில் தொழும் இரவு நேர தொழுகை
8. ஸலவாத்– நபிகள் நாயகம் அவர்களின் மீது அல்லாஹ்வின் ரஹ்மத்தும், பரக்கத்தும் இறங்க வேண்டி ஓதப்படுவது
9. அத்தஹியாத்து – தொழுகையின் கடைசி ரக்’அத்தில் ‘இருத்தல்’ நிலையில் ஓதுவது
10. தஃப்ஸீர் – திருக் குர்’ஆனின் பொருளுரை
11. ஹலால் – இஸ்லாமிய சட்டப்படி ஆகுமாக்கப்பட்டது.
12. ஹராம் — இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்படாதது.

நன்றி:- இஸ்லாமிய பெண்மணி
நன்றி:-சகோதரிகள். ஷாஸியா நவாஸ், அஸ்மா பின்த் ஷமீம், ஹாஃபிதா. ரைஹானா ஒமர் 

 


பிரிவுகள்:ரமலானும் அந்த நாட்களும் - இஸ்லாமிய பெண்மணி குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

உழைத்துப் பிழைப்போம்! – மு.அ. அபுல்அமீன், நாகூர்.


உழைக்கும் உடலுறுதி உடையோர் உழைக்காது பிழைக்க எண்ணி பிச்சை கேட்பது ஹராம் (விலக்கப்பட்டது). இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் மேற்குறித்தபடி பிச்சை கேட்போரை சவுக்கால் அடித்து, தண்டித்து, கண்டித்து உழைத்துண்ண ஊக்கப்படுத்துவார்கள். ஆக்க வழியையும் காட்டுவார்கள். சம்பாதித்து உண்ணும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவார்கள்.

உடலுரமுடையோருக்கு உழைக்காமல் வாழ உதவுவது அவர்களை சோம்பேறிகளாக்கி வழிகேட்டில் வீழ்த்திவிடும். நாட்டின் மனித வளம் பயன்படுத்தப்படாமல் பாழாகி நாடும் நாசமடையும்.

“உயர்ந்த கை தாழ்ந்த கையை விட சிறந்தது. உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியது. தாழ்ந்த கை என்பது யாசிப்பது” என்று நபிகள் நாயகம்(ஸல்) புகன்றது புகாரியில் 1429ஆம் எண்ணில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் “தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் பொருளைப் பெற்றிருப்பவன் பிறரிடம் யாசித்தால் மறுமையில் முகத்தில் சதையின்றி வருவான்” என்று எம்பெருமானார் இயம்பியதை இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிப்பது திர்மிதீ, நஸஈ கிதாபுகளில் காணப்படுகிறது.

தன்னிடம் பொருளிருக்க அப்பொருளை மறைத்து, பதுக்கி, பாதுகாத்து யாதுமறியாதோரிடம் நோதலின்றி தோதுவாக ஆதரவு நாடி சாதாரணமாய் பொருளைக் கேட்பதால் மறுமையில் அருளைப் பெறாமல் அவதியுற நேரும் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் திண்ணமாய்த் தெரிவிக்கிறார். இதை எண்ணிப் பார்த்து ஏற்பது என்னும் இகழ்ச்சியில் எவரும் ஈடுபடுதல் கூடாது.

“”பொருளைப் பெருக்க யாசிப்பவன் நரக நெருப்புத் துண்டையே யாசிக்கிறான்” என்று நேசர் நபிகளார் நவின்றதை ஹஜ்ரத் அபூஹீரைரா(ரலி) அறிவிப்பது முஸ்லீம் நூலில் பதியப்பட்டுள்ளது.

தற்காலத்தில் குடும்பத்தினர் பெயரில் அல்லது குடும்பப் பெயரில் அறக்கட்டளைகள் அமைத்து வணிக நோக்கில் தொண்டு நிறுவனங்களைத் துவக்கி துலாக்கோலில் நிறுக்க முடியாத அளவிற்கு ஆதாயம் அடைவோர் மக்களிடம், மாணவர்களிடம் நிதிகேட்பது நீதிக்குப் புறம்பானது என்பது இக்கூற்றிலிருந்து பெறப்படும் உண்மை. ஈயென இரத்தல் தீயினும் தீய தீமை என்று தெரிந்து, தெளிந்து ஏற்பது இகழ்ச்சி என்பதை ஏற்று இலவசங்களில் இன்பம் காணாது உழைத்துப் பிழைப்போம். உயர்வாய் வாழ்வோம்.

நன்றி:- தினமணி 22-June-2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

சாட்சி!

ஒற்றுமையாய் வாழ்வோம்!

கணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க 

தினை விதைத்தவன்! 

தினை விதைத்தவன்! 

பிரிவுகள்:கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-04 இரா. முருகன்


முஷாரகா  (Musharakah) என்னன்னு கேட்கறீங்களா? நிதி முதலீடு செஞ்சு தொழில் நடத்தி லாபத்தைப் பங்கு பிரிச்சுக்கறது.

அட போப்பா, இதான் முதரபான்னு முன்னாடி சொன்னியே.

இல்லீங்க. ஒரு வித்தியாசம் இருக்குது. முதரபாவிலே, பேங்குக்காரங்க தான் முழுசு முச்சூடும் காசு முதலீடு செய்வாங்க. நீங்க உங்க தெறமையை, ஒழைப்பை முதலீடு செய்வீங்க. ரெண்டு பேரும் பங்காளி.

சரி முஷாரகாவிலே?

முஷாரகாவிலே ரெண்டுக்கு மேல்பட்ட பங்குதாரங்க இருக்கலாம். ஒவ்வொருத்தரும் ஆளுக்குக் கொஞ்சம் காசு கொண்டாந்து தொழில்லே முடக்கணும்.

இது நாம இங்கனக்குள்ள செய்யறதுதானே.

கொஞ்சம் பொறுமையாத்தான் கேளுங்களேன். தொழில் தொடங்க முந்தி,  முதரபா மாதிரியே, முஷாரகாவிலேயும் லாபத்தை என்ன விகிதத்திலே பங்கு பிரிச்சுக்கலாம்கிறதை பங்காளிங்க முடிவு செய்வாங்க. இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு.

‘என்ன பெரிசா சொல்லப்போறே. நானு ஒரு லட்சம் ரூபாய் முதல் போட்டிருக்கேன். நீ  ஐம்பதாயிரம் போட்டிருக்கே. தம்பி இன்னொரு ஐம்பதாயிரம் போட்டிருக்காரு. ஆக, என் பங்கு 50%, உன் பங்கு 25%, தம்பி இன்னொரு 25%. லாபம் வந்துச்சுன்னா, வராம விட்டுடுவோமா என்ன, வந்துடும் மாப்ளே.. வந்ததும் இதே விகிதத்திலே அதை பங்கு பிரிச்சுக்குவோம், சரிதானே?’

சரிதான் ஆனா சரியில்லை.

என்னத்தக் கன்னையா மாதிரி சொல்றியேப்பா.

லாபம் வந்துச்சுன்னா அதை என்ன விகிதத்தில் பங்கு போட்டுக்கலாம் என்கிறதுக்கு முதலீட்டு விகிதம் அடிப்படையா இருக்கணும்னு கட்டாயம் இல்லே. அது வேறே விகிதத்திலே கூட இருக்கலாம்.

சரி வேணாம் மாப்ளே, அமோகமாத் தொழில் நடத்தி, எனக்கு மாசா மாசம் ஐயாயிரம் ரூபா கொடுத்திடு. அதுக்கு மேலே ஒரு காசு வேணாம்.

இது சரியில்லே. இம்புட்டுப் பணம் எனக்குத் திருப்பி வரணும்னு முன்கூட்டியே முடிவு பண்ணி ஒப்பந்தம் போட்டுக்க முடியாது. அதான் சொன்னேனே, வர்ற லாபத்தை வச்சுத்தான் பங்கு பிரிச்சுக்கறது அமையணும். மத்த எதுவும் சரிப்படாது.

லாபம் சரி, நஷ்டம் வந்துச்சுன்னா? போகுது போ. லாபத்தை பங்கு வைச்சுக்க என்ன விகிதமோ அதே படிக்கு நட்டத்தையும் சுமந்துப்போம். ஆண்டவன் கைவிட்டுடுவாரா என்ன?

நிச்சயம் மாட்டார். இது ஷரியா படி சரிதான்.

ஏம்பா, என்னாலே காசு தரமுடியும். ஆனா, நானும் உன் கூட வந்து ஒர்க் ஷாப்புலே ஸ்பானர் பிடிச்சு வேலை பார்க்கணும்னா முடியாதே. குத்த வச்சா வவுத்துலே வலிக்குது எளவு. வாயுப் பிடிப்பு.

முடக்கத்தான் கீரை கறி வெச்சுச் சாப்பிடுங்க, வாயுப் பிடிப்பு எல்லாம் துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடிடும். இல்லாட்டாலும் முஷாரகாவிலே எல்லா பங்காளிங்களும் தொழில்லே ஈடுபடணும்னு கட்டாயம் ஒண்ணும் இல்லே. நிதியை மட்டும் முதலீடு செஞ்சுட்டு அக்கடான்னு இருக்கலாம். sleeping partner. என்ன, லாபத்தில் குறைந்த பட்ச விகிதம் தான் அப்போ உங்களுக்கு வரும். நிச்சயம் உங்க முதலீட்டு விகிதத்துக்கு குறைஞ்சதா இருக்காது அது.

சரி, முஷாரகாவிலே பேங்குக்காரங்க எப்படி உள்ளாற புகுந்தாங்க?

ஏழெட்டு பங்காளியிலே அவங்களும் ஒரு பங்காளி. அம்புட்டுத்தான். பேங்குக்காரங்க மொத்தமா இருக்கப்பட்ட நிதியை நாலஞ்சு முதரபாவிலே முடக்காம, சின்னதும் பெரிசுமா நூறு முஷாரகாவிலே முடக்கினா நிறையப் பேர் முன்னேறி வர முடியுமில்லியா?

முஷாரகா கூட்டணி எம்புட்டு நாள் வச்ச்சிருக்கலாம்னு ஷரியாவிலே ஏதாச்சும் சொல்லி இருக்கா?

அப்படி கால அளவுல்லாம் கிடையாதுங்க. வருஷக் கணக்கா நிதானமா நடத்தி லாபத்துக்கு மேலே லாபம் பார்க்கிற ஸ்டடியான முஷாரகா – permanent musharakah ஒரு வகை. வருஷா வருஷம் லாபத்தோட கூட, முதலீட்டிலே இருந்தும் லாபத்தைப் பொறுத்து திரும்ப வாங்கிக்கிட்டு சீக்கிரம் கூட்டணியை கலாஸ் பண்ணிக்கற diminishing musharakah இன்னொரு வகை.

நாலு பேர் கூட்டு முயற்சியிலே முஷாரகா ஏற்படுத்தி ரெண்டு வருஷம் நடக்குது. அஞ்சாவதா ஒருத்தர் நானும் புதுசா கூட்டு சேரட்டுமான்னு கேட்கறார். ஷரியா என்ன சொல்லுது? அவரையும் ஆட்டத்துலே சேர்த்துக்கலாமா?

தாராளமா சேர்த்துக்கலாம். இருக்கப்பட்ட எல்லா பங்குதாரங்களும் முழு மனசோடு ஒப்புக்கிட்டா போதும்.

லாபத்தை பங்கு போடறது பத்தி சொன்னே. அதெல்லாம் சரிதான். நாலுலே ஒரு பாகஸ்தர் நாள் முச்சூடும் உழைக்கறார். மத்தவங்க அப்பப்ப கௌரவ நடிகர் மாதிரி வந்து போறாங்க. மெயின் ஆக்டருக்கு எக்ஸ்ட்ராவா சம்பளம், பேட்டான்னு ஏதாச்சும் அதிக வருமானம் வருமா?

கிடைக்க வழி இருக்கு. முஷாரகா ஒப்பந்தம் போடும்போதே இந்த விஷயத்தையும் அதில் போட்டு வச்சுக்கணும். அவ்வளவுதான்.

எல்லா முஷாரகா ஒப்பந்தமும் எந்திரன் கடைசியிலே  ஏகப்பட்ட  ரஜனி வருவாரே, அது மாதிரி அச்சு அசலா ஒரே போலதானே?

இங்கே மூணு விதம் இருக்குங்க. நாம் இதுவரை சொல்லிட்டு வந்தோமே, பொதுவா நடப்பிலே இருக்கற இதை ஷிர்கத் உல் அம்வல் முஷாரகா Shirkat-ul-amwal  அப்படீன்னு சொல்வாங்க. நாலஞ்சு பேர் முதலீடு செஞ்சு கம்ப்யூட்டர், டிவி, வாஷிங் மிஷின் ரிப்பேர் செய்யற சர்வீசிங் தொழில் நடத்தறாங்கன்னு வச்சுக்குங்க. ஒவ்வொரு முறை இப்படி சர்வீஸ் செஞ்சு கிடைக்கற ஃபீஸை ஒப்பந்த விகிதத்துலே பங்கு பிரிச்சுக்கறது ஷிர்கத் உல் அமல் முஷாரகா Shirkat-ul-Amal . நிதி முதலீடு இல்லாம வேறே யாரோ உற்பத்தி செஞ்ச பொருளை வித்துக் கொடுக்கற கமிஷன் ஏஜன்சி நடத்தி, வரவை பங்கு போடறது ஷிர்கத் உல் ஊஜா Shirkat-ul-wujooh.

முஷாரகா கூட்டணியிலே இருந்து வெளியே வரணும்னா?

ஏங்க, இதென்ன தேர்தல் கூட்டணியா, நினைச்ச போது வெளியே வர்றதுக்கும் உள்ளே போறதுக்கும். முன்னறிவிப்போட, மத்த பார்ட்னர்களுக்குப் போதுமான அவகாசம் கொடுத்து அப்புறம் வெளியே வர வழி இருக்கு. வெளியே வர்றவரோட பங்கை அவர் போட்ட முதலுக்கு மேலே கொடுத்தோ குறைச்சுக் கொடுத்தோ மத்தவங்க வாங்கிக்கலாம். இல்லே, முஷாரகாவையே முடிவுக்குக் கொண்டு வரலாம். பொதுவா கோடி கோடியா நிதி முடக்கி தொடங்கின தொழில்லே திடீர்னு ஒருத்தர் அம்போன்னு விட்டுட்டுப் போனா கஷ்டமாச்சே. அதுக்காக ஒப்பந்தம் போடற போதே இதைப் பத்தி யோசிச்சு, விலகறது எப்படீன்னு பதிஞ்சு வச்சுக்கிட்டா பிரச்சனை இல்லே.

யாராவது ஒரு பாகஸ்தர் திடீர்னு மூச்சு விட மறந்து போய்ட்டார்னா?

இதுவும் பிரச்சனை இல்லே. அவரோட வாரிசுகள் கூட்டணியை தொடரலாம். இல்லே அவங்களுக்கு உண்டான தொகையை வாங்கிக்கிட்டு வெளியே வரலாம்.

மத்தபடிக்கு முஷாரகா அதும்பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும் போல.

ஆமா. ஒரு சின்ன விஷயம். யாராவது ஒரு பார்ட்னர் திடீர்னு மனநோய் கண்டு சுத்தி இருக்கறது, நடக்கறது யார் என்னன்னே தெரியாத அளவு பரிதாபமா ஆகிட்டார்னா, முஷாரகா நின்னு போயிடும்.

இன்ஷா அல்லாஹ், நமக்கு அப்படி எதுவும் நடக்காது. வாங்க, காய்கறி, கடல் வாழைக்காய் ஹோல்சேல் பிசினஸ் நடத்த ஒரு முஷாரகா ஆரம்பிக்கலாம்.

இருப்பா. வீட்டுலே காய்வெட்டா ரெண்டு கிலோ தக்காளி வாங்கிட்டு வரச் சொன்னா. வாங்கிக் கொடுத்துட்டு மீதிக் காசு தேறிச்சுன்னா வரேன்.

நன்றி:- இரா. முருகன்

நன்றி:-http://www.tamilpaper.net/?category_name=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

நன்றி:- http://onameen.blogspot.com/

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-04 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-05 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-06 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-07 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-08 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்


முதரபா (Mudarabah) என்பது கடன் இல்லை, சமூக நோக்கு கொண்ட உதவி என்று சொன்னோமே, அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

எந்த நேர்மையான தொழிலுக்கும் நிதியும் உழைப்பும் அவசியம். நிதியை மேல்படியில் மெத்தை போட்டு உட்கார்த்தி, உழைப்பை வாசலில் கூனிக் குறுகி நிற்கவைப்பது அநீதி. ஆக, ஒருவர் தொழில் திறமையையும் உழைப்பையும் மூலதனமாகப் போட, இன்னொருவர் பணத்தை மூலதனமாக முடக்கவேண்டும்.

நஷ்டம் வரலாம் என்ற சவாலை எதிர்பார்த்து உழைப்பாளரின் திறமையில் நம்பிக்கை வைத்து பண முதலீடு செய்வதாலேயே முதலாளிக்கு லாபத்தில் பங்குபெற கன கம்பீரமான உரிமை ஏற்படுகிறது.

உழைப்பு சரிவர இருந்தும், லாபம் வராமல் போனால், உழைப்பாளி பண நஷ்டத்துக்குப்  பொறுப்பாக மாட்டார். முதலாளி தொழிலில் முதலீடு செய்த பணம் நஷ்டத் தொகையின் அளவுக்குக் குறைக்கப்படும். உழைப்பாளி பெற உரிமை உள்ள, ஆனால் கிடைக்காமல் போன உழைப்பின் ஊதியம் இந்தப் பண நஷ்டத்துக்கு ஈடாகும்.

ஏன் வழமையான கடன் வழங்குதல்–வாங்குதல் உறவை விட முதரபா மேலானது என்பதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

1)    தொழில் தொடங்கும் முன்பே முதலாளியும் உழைப்பாளியும் லாபம் வரும்போது எந்த விகிதத்தில் அதைப் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். இந்த லாபப் பிரிவினை, பண முதல் தரும் வருமானத்தை (return on capital) அடிப்படையாகக் கொண்டதில்லை. முழுக்க முழுக்கத் தொழிலில் கிட்டும் லாபத்தைச் சார்ந்தது (profit sharing agreement).

‘நான் இவ்வளவு பணம் தருவேன். நீங்கள் இவ்வளவு உழைப்பீர்கள். நிர்வகிப்பீர்கள். தொழில் முன்னேற்றம், பிரச்சனைகள் பற்றி என்னோடு தகவல் பகிர்ந்து கொள்வீர்கள். நான் அதிகம் பணம் உதவவேண்டி வந்தாலோ, நீங்கள் இன்னும் திறமையாக, இன்னும் கடுமையாக உழைக்கவேண்டி வந்தாலோ, மனமுவந்து அதைச் செய்வோம்’ என்று அந்த ஒப்பந்தம் தெளிவாக்கும்.

முதலீடு செய்பவருக்கு நிர்வாகத்தில் குறுக்கிட உரிமை இல்லை. அதேபோல் தேவையில்லாமல், பணம் கொடுங்க என்று விடாப்பிடியாக அதிக நிதி கேட்டு நச்சரிக்க மற்றவருக்கு உரிமை இல்லை.

2)    இப்படி ஒருவருக்கு ஒருவர் இணக்கமான அக்கறையோடும் முழு முனைப்போடும் தேவையான நிதி அடிப்படையோடும் நடக்கும் தொழிலில் நஷ்டம் வந்தால் இருவருமே பாகுபாடு இன்றி வெவ்வேறு வடிவத்தில் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்கிறார்கள். இழப்பையும் கடந்து முன்சென்று ஒப்பந்தப்படி வெற்றி கண்டு லாபத்தைப் பங்கு வைப்பது என்ற லட்சியம் தொடர சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.

நேர்மையான உழைப்புக்கும், பொறுப்பான நிதியுதவிக்கும், திறமையான நிர்வாகத்துக்கும், தர்ம நியாயத்துக்கு உட்பட்ட தொழில் நடப்புக்கும் கிடைக்கும் வெகுமதியே லாபம். அந்த லாபத்துக்கு வானமே எல்லை. அதைப் பங்கு வைக்கும் விகிதத்தையும் ஷரியா இவ்வளவு என்று கட்டுப்படுத்தவில்லை.

3)    முதரபா ஒப்பந்தத்தை இருவரில் எவர் மீறினாலும்,  இஸ்லாமிய வங்கிச் சட்டத்தின் கண்களில் ஒரே மாதிரி நடத்தப்படுகிறார். அவர் மற்றவருக்குத் தரவேண்டிய நஷ்ட ஈடு விவரமும் ஒப்பந்தத்தில் இருக்கும்.

உழைக்கவேண்டியவர் உழைக்காமல் அல்லது தவறாகச் செயல்பட்டு நஷ்டத்தை உண்டாக்கினால், முதல் போட்டவருக்கு அவர் முடக்கிய தொகையை கேள்வி கேட்காமல் இவர் கொடுத்துவிடவேண்டும்.

முதலாளி திடீரென்று பண உதவியை நிறுத்தினாலோ, ஒப்பந்ததுக்கு மாறாக, போட்ட பணத்தை உடனே திரும்பக் கேட்டாலோ, அல்லது ஒப்பந்தப்படி பணம் தர மறுத்தாலோ நஷ்டம் ஏற்படலாம். அப்போது அந்த உழைப்பாளி இதே தொழிலை வேறு யாருடனாவது ஒப்பந்தம் செய்துகொண்டு வெற்றிகரமாக நடத்தி இருந்தால் குறைந்தபட்சமாக என்ன லாபம் பெற்றிருப்பாரோ அதை நிதியாளர் கட்டாயம் செலுத்தியாகவேண்டும்.

நிதியை முதலீடு செய்பவர் ராப்-உல்-மால் ( rabb-ul-maal.) என்று அழைக்கப்படுவார். உழைப்பை முதலீடு செய்கிறவர் முதரிப் (mudarib) எனப்படுகிறார்.

முதரபாவில் இரண்டு வகை உண்டு. நிதி கொடுக்கிற தொழில் பங்காளியான ராப்-உல்-மால், அந்த நிதியைப் பயன்படுத்தி எந்தத் தொழில் செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம். உழைக்கும் பங்காளி முதரிப் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். நிபந்தனையோடு கூடிய முதரபா என்ற பொருள் தரும் ‘அல்-முதரபா அல்-முகய்யதா’ (al-mudarabah al-muqayyadah) எனப்படும் இது.

நிதியாளர் எந்தத் தொழில் என்று நிபந்தனை விதிக்காதபோது, உழைக்கும் பங்காளி அந்த முதலை நிதி மூலதனமாக வைத்து விரும்பிய தொழிலில் ஈடுபடலாம். இது நிபந்தனையற்ற முதரபா – ‘அல்-முதரபா அல்-முதலகா’ (al-mudarabah al-mutalaqah) எனப்படும்.

இரண்டு பங்காளிகளில் யார் விரும்பினாலும் மேலே தொடராமல் முதரபாவை விலக்கிக்கொள்ளலாம். ஒப்பந்த முறிவுக்கான முன்னறிவிப்புக் காலம், வழிமுறை இரண்டும் ஒப்பந்தத்திலேயே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். அதைக் கடைப்பிடித்து முதரபாவிலிருந்து விலகிக்கொள்ளத் தடை ஏதும் இல்லை.

எத்தனை வருடம் முதரபா செயல்படலாம் என்று ஒப்பந்தத்திலேயே இருப்பதும் உண்டு. அதற்குப்பிறகு தானாகவே ஒப்பந்தம் ரத்தாகிவிடும். இது ஒரு பிரிவு இஸ்லாமிய வங்கியியல் அறிஞர்களின் கருத்து. அப்படி அதிக பட்சக் காலத்தை நிர்ணயிக்க முடியாது என்று இன்னொரு பகுதியினர் கருதுகிறார்கள். இருவரும் ஒன்றுபடுவது ஒரு விஷயத்தில் – முதரபாவுக்கு குறைந்தபட்ச நடப்புக் காலம் என்று எதையும் நிர்ணயம் செய்ய முடியாது.

இஸ்லாமிய வங்கியியலில் முதரபா இரண்டு கட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக, வங்கியில் பணம் போடுகிற வாடிக்கையாளர்கள் (depositor customers) செலுத்திய பணம் வங்கியின் முதலீட்டுக் கணக்கில் (Investment Account) வரவாகிறது. இந்த முதலீடு ஈட்டும் லாபத்தில் பங்குபெற அந்த வாடிக்கையாளர்கள் உடன்படுகிறார்கள். முதலீட்டு நிதியைத் திறமையாக நிர்வகிக்கும் ஒரு நிர்வாகியாக (Manager of funds) வங்கி செயல்படுகிறது.

முதரபாவின் இரண்டாவது கட்டம் வங்கியின் தொழில்முனைவர்களான வாடிக்கையாளர்கள் (Entrepreneurial customers) பங்குபெறுவது. தொழில் தெரியாமல் ஆர்வக் கோளாறு காரணமாக வெற்று உற்சாகத்தோடு   இப்படியானவர்களில் சிலர் நிதி உதவிக்காக வந்து நிற்கலாம். வங்கி, இவர்களை ஜாக்கிரதையாக அலசி ஆராய்ந்து, வேண்டுமென்றால் நிராகரித்து, ‘தொழில் கத்துக்கிட்டு வாங்கப்பா’ என்று அனுப்பி விடும்.

நிதித்துறை பரிபாஷையில் வட்டியை மூலதனத்தின் விலை (cost of capital) என்பார்கள். இந்த வட்டி சர்வதேச, உள்நாட்டுப் பணச்சந்தை (money market) நிலவரங்களால் தீர்மானிக்கப்படுகிறது.

வழமையான தொழில் கடன் வழங்கும் வங்கி, அந்தத் தொழிலில் என்ன லாபம் வந்தாலும் இப்படிச் சந்தை நிர்ணயித்த அடிப்படையில் வட்டியை வசூலித்து வருமானம் ஈட்டுகிறது. பெரும்பாலும் அது நிலையான வட்டி விகிதத்தில் (fixed interest rate) இருக்கும். ‘மிதக்கும் வட்டி’யை (floating interest rate) சாவகாசமாகப் பார்ப்போம்.

வட்டியை விலக்கிய இஸ்லாமிய வங்கியோ, முதரபா ஒப்பந்தம்மூலம் தகுதியான தொழில் முனைவர்களுக்கு நிதி உதவி செய்து, லாபத்தில் கணிசமான பங்கை அவர்களின் முழு ஒப்புதலோடு பெற்றுக்கொள்கிறது. வட்டி மூலம் பெறக்கூடிய வருமானத்தைவிட இது அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

முதரபா போல் முக்கியமான இன்னொரு நிதி, உழைப்பு முதலீட்டு முறையான முஷாரகா (Musharakah). இது என்ன என்று அடுத்து அறிமுகப்படுத்திக் கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

நன்றி:- இரா. முருகன்

நன்றி:-http://www.tamilpaper.net/?category_name=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

நன்றி:- http://onameen.blogspot.com/

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02 இரா. முருகன்


வட்டி (ரிபா) பற்றிய இஸ்லாமிய நோக்கை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். கோடி கோடியாகப் பணம் புரளும் சர்வதேச வங்கித் துறையையே புரட்டிப் போடும் கோட்பாடு அது. மாற்றம் நல்லதுக்குத்தான் வழிவகுக்கும்.

பணம் என்பது ஒரு சொத்து என்று நினைத்தால் மகா தப்பு. அது ஒரு மதிப்பீடுதான் (value). வீடு, நிலம், நகை, படி அரிசி என்று உலகத்தில் விற்பனைக்குக் கிடைக்கிற எத்தனையோ பொருட்களை மதிப்பிடப் பணம் ஓர் அளவுகோல்.

ஒரு பவுன் தங்கத்தின் விலை மதிப்பு (இதை எழுதும்போதே இன்னும் கொஞ்சம் எகிறி இருக்கும்) நிச்சயம் ஒரு பிளேட் இட்லி சாம்பாரின் விலை மதிப்புக்கு ஈடாக இருக்காது.

ஒரு நானோ காரின் மதிப்பு பணமாகச் சொன்னால் ஒண்ணே கால் லட்சம் ரூபாய். ஒரு முர்ரா எருமையின் பண மதிப்பும் அவ்வளவே. முர்ரா எருமை முப்பது லிட்டர் பால் தரும். நானோ லிட்டருக்கு பதினைந்து கிலோமீட்டர் ஓடும்.  ஒரே பண மதிப்புள்ள ரெண்டு பொருட்களின் சாதக பாதகங்களை ஒப்பு நோக்கி, காரா, எருமையா என்று தீர்மானிப்பது உங்க வீட்டுக்காரம்மா விருப்பம்.

உங்களிடம் ஒரு  கார் இருந்தால் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அதே மதிப்பில் (சரி, எருமை வேண்டாம்) எது வாங்கலாம் என்று தீர்மானிக்க பணமதிப்பு வழி செய்கிறது. பொருட்களைப் பரிமாறிக் கொள்ள (exchange) உதவுகிறது.

ஆக உருண்டோடிடும் பணம் காசென்னும் உருவமான பொருளுக்கு என்று தனியாக ஒரு மதிப்பு கிடையாது. அமிதாப் பச்சனை ஆறடி என்று இஞ்ச் டேப்பில் அளக்கலாம். அதனால் இஞ்ச் டேப்புக்கு என்று தனி மதிப்பு கிடைக்குமா என்ன?

பணத்துக்கே சொந்த மதிப்பு இல்லாதபோது, அதைக் கடன் கொடுத்து அதுக்குக் கூலியாக வட்டி வாங்கினால், அந்த ரிபாவுக்கு மதிப்பு? ஒரு சுக்கும் இல்லை. அது மட்டுமா? வட்டி சுரண்டலுக்கும் சமூக ஏற்றத்தாழ்வுக்கும்கூட வழி வகுக்கிறது. வியாபாரம் செய்தால் பொருட்கள் கை மாறும். மதிப்பில்லாத பணத்தை வட்டிக்கு விட்டால் ஹராம்தான் (பாவம்) உருவாகும். ரிபா விலக்கப்பட்டது. ஏனெனில் அது அநியாயமானது (ஸுல்ம் – Zulm) என்று சொல்கிறது திருக்குரான் (வசனம் 2:279).

‘நிதி சால சுகமா’ என்று கல்யாணி ராகத்தில் கேட்டார் தியாக ப்ரம்மம். லேது என்கிறது ஷரியா. நிதியைவிட முக்கியமானவை மனித உழைப்பு, முனைந்து செயல்படுதல் (initiative), செய்யும் தொழிலில் சவால்களைச் சமாளித்து வெற்றிக்கு வழி வகுத்தல்  (risk management) ஆகிய மூன்றும். ஷரியா தரும் விளக்கம் இது.

‘அது சரி, சும்மா நிதியை வச்சு அழகு பார்த்துக்கிட்டு இருந்தா அது, தானே உதயநிதி, தயாநிதி, கலாநிதின்னு வளருமா? கைமாற்று கொடுத்து, வட்டிக்கு விட்டு சம்பாதிச்சாத்தானே அது பெருகும்?’ன்னு கேட்டால், ஒற்றை வாக்கியத்தில் பதில் – ‘இஸ்லாமில் கடன் கொடுப்பது என்ற ஒரு வழக்கமே கிடையாது!’

‘இங்கே கடன் கொடுக்கப்படும்’ என்று நியான் விளக்கு போட்டு நிதி நிறுவனம் எதையும் ஷரியாவின்படி திறக்க முடியாது. நீங்கள் பண உதவி செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நண்பரின் தொழிலிலே பணம் முடக்கி இருக்கிறீர்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். சரிதான்.

ஆக, உழைப்பை முதலீடு செய்யும் உங்கள் நண்பரும், பணத்தை முதலீடு செய்யும் நீங்களும் பங்காளிகள். லாபத்தில் பங்கு பெறத் தகுதி உள்ளவர்கள். உங்கள் முதலீடு ஈட்டித் தரும் லாபம் விலக்கப்பட்டது இல்லை. அதை ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும் முழுமையாக ஆமோதித்து வரவேற்கின்றன.

வட்டி வாங்குவதையும், சமுதாயத்துக்குத் தீமை ஏற்படுத்தும் தொழில்களில் நிதி முதலீடு செய்வதையும் ஷரியா தடை செய்திருக்கிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இவை மட்டுமில்லை, முழுக்க முழுக்க நிச்சயமில்லாத விளைவுகள் கொண்ட தொழில், வியாபாரத்தில் (கரார் – garar) ஈடுபடுவது,  பந்தயங்களில் முதலீடு (மைசீர் –Maysir) இதெல்லாம் கூட ஹராம்தான்.

சரி, வாங்க, வங்கிக்குப் போகலாம். இது நம்ம ஊர் வங்கி.

‘என்ன வேணும்?’ சிரத்தை இல்லாமல் கேட்கிறார் அதிகாரி. நாலு கிளார்க் லீவு. அத்தனை வேலையும் அண்ணாத்தை தலையில் கட்டிவிட்டு மேனேஜர் ரீஜனல் ஆபீசுக்கு பெர்பார்மென்ஸ் ரிவ்யூ மீட்டிங்குன்னு எஸ்கேப் ஆகிட்டார். அங்கே அவரை, செயல்பாடு போதாதுன்னு மேலதிகாரிகள் லாடம் கட்டிட்டு இருப்பாங்க என்பது வேறு விஷயம்.

‘சார், லோன் வேணும்’.

‘என்ன லோன்?’

‘சிறு தொழில் கடன்’.

‘என்ன வேணும்?’  என்ன-வில் ஒரு சின்ன அழுத்தம்.

‘ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி லோன்’ என்று ஈசியான தமிழில் சொல்கிறோம். ஆபீசர் சார் நிமிர்ந்து உட்கார்கிறார்.

ரிசர்வ் பேங்க்காரனும் ரீஜனல் மேனேஜர் தாதாவும் உயிரை எடுக்கறாங்க. பேங்க் பிராஞ்ச் கொடுக்கற மொத்தக் கடனில் நாற்பது சதவிகிதம் அதி முக்கியமான துறைகளுக்கு (priority sector) கொடுத்தாகணும். சிறு தொழில், விவசாயம், கல்விக் கடன் இதெல்லாம் ப்ரியாரிட்டி செக்டர்லே வர்ற சமாசாரம்.

ஆக, கடன் விண்ணப்பக் காகிதம் கைமாறுகிறது. அதைப் பூர்த்தி செய்ய உங்க பெயர், முகவரி, வயது, கல்வித் தகுதி, செய்யற தொழில் விவரம், உங்ககிட்ட இருக்கப்பட்ட அசையும் பொருள், அசையாப் பொருள் (அதாங்க, movabale property, immovable property) சொத்து விவரம் எல்லாம் பொறுமையா எழுதறீங்க.

நான் அதிகாரியாக இருந்த ஒரு பேங்க் பிராஞ்சில் லோன் அப்ளிகேஷன் இப்படி இருந்தது. சொத்து விவரம் : அசையும் பொருள் – கணவரிடம் உள்ளது. அந்தம்மாவை விசாரிக்க, வீட்டுக்காரரின் பஜாஜ் ஸ்கூட்டரைக் காட்டினார்.

சொத்து பத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை. யாராவது கியாரண்டி கொடுப்பாங்களா? அதாவது நீங்க கடனைத் திருப்பிக் கட்டுவீங்கன்னு உத்திரவாதம்?

விவரம் கொடுக்கறீங்க. நடையா நடந்து ஒரு வழியா லோன் சாங்ஷன் ஆகுது.

‘இருபத்து நாலு மாசத்திலே பணத்தைத் திருப்பிக் கட்டணும். பிரதி மாதம் அடைக்க வேண்டிய தொகை இது. தவிர மூணு மாசத்துக்கு ஒரு தடவை வட்டி கட்டணும். எட்டரை சதவிகிதம் கூட்டு வட்டி’ – இதுக்கெல்லாம் சம்மதிச்சுக் கையெழுத்து போடறீங்க. தொழில் நல்லா நடந்தா கட்டாம இருப்போமா என்ன?

ஒரு வருஷம் ஒழுங்காப் போகுது எல்லாம். திடீர்னு ரெண்டு மாசம் தொழிலைக் கவனிக்க முடியாதபடி உடம்பு சுகவீனம். ஆஸ்பத்திரி, அலைச்சல். செலவு.

‘சார், இன்ஸ்டால்மெண்ட், வட்டி ரெண்டையும் கட்ட முடியலே இந்த ரெண்டு மாசமாக. கொஞ்சம் பொறுத்துக்க முடியுமா?’

அதிகாரி நரசிம்மாவதாரம் எடுக்கிறார்.

‘உங்க தொழில்லே, ஆரோக்கியத்துலே, குடும்பத்துலே பிரச்சனைன்னா அதை பேங்குக்கு சொல்லிப் புண்ணியம் இல்லை. பணத்தைக் கட்டலேன்னா என்.பி.ஏ ஆக்கிடுவோம். அப்புறம் எங்களைக் குத்தம் சொல்லாதீங்க.’

அவர் பேங்குமொழி பேசுகிறார். அதாவது உங்க கடனை வராக் கடன் (Non Performing Asset – NPA) முத்திரை குத்தி மேல் நடவடிக்கை எடுப்பாராம். இதுவே தனியார் வங்கியாக இருந்தால், வராக் கடனை வசூலிக்க வீட்டு வாசலுக்கு ஆட்டோகூட வரலாம்.

ஆக, மேலே சொன்னதில் இருந்து பெறப்படும் செய்தி யாதெனில்

  1. வழமையான வங்கித் தொழிலிலோ, தனியார் கொடுக்கல் வாங்கலிலோ, பணத்தை வழங்குகிறவருக்கு (lender) கடன் வாங்கியவர் (borrower) வாங்கிய பணத்தையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டவர்.
  2. வழங்குகிறவருக்கு, வாங்குகிறவர் அந்தப் பணத்தை வைத்துச் செய்யும் தொழில்மீது ஈடுபாடு இல்லை. அவர் பணத்தை திருப்பித் தருவாரா, தராவிட்டால் என்ன செய்யலாம் என்பதில்தான் அக்கறை.
  3. தொழில் கையைக் கடித்தாலோ, ஷட்டரை இழுத்து மூடவேண்டி வந்தாலோ, வழங்குகிறவருக்கு ‘முடியே போச்சு போய்யா’. சட்டம் இருக்கு. கையெழுத்து வாங்கின டாக்குமெண்ட் இருக்கு. வீட்டை அடமானம் வச்சு லோன் எடுத்துக் கட்டலையா? வீட்டையே ஜப்தி செய்யலாம். சட்டம் வழி செஞ்சிருக்கு.

நேர்மையாக இருந்தாலும், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கட்டவேணும் என்று பொறுப்பு உணர்ச்சி இருந்தாலும், அதைச் செய்ய முடியாமல் போனால், கடன் கொடுத்த வங்கிக்குக் கரிசனம் வேண்டியதில்லை. வங்கித் தொழிலில் கருணை, கரிசனம் இதுக்கெல்லாம் இடம் இல்லை. இதுதான் நாம் பார்க்கிற வங்கி.

இஸ்லாமிய வங்கி?

‘வாங்க, முதரபா (Mudarabah) தரோம்’ என்கிறது.

கடனில்லை. உங்க மேல் அக்கறை உள்ள, சுக துக்கத்திலே பங்கு எடுத்துக்கற, சமூக நோக்கு கொண்ட உதவி.

முதரபா அப்படின்னா? அடுத்த வாரம் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்!

நன்றி:- இரா. முருகன்

நன்றி:-http://www.tamilpaper.net/?category_name=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

நன்றி:- http://onameen.blogspot.com/

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-04 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-05 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-06 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-07 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்



நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக உங்களுக்கு முருகனைத் தெரிந்திருக்கும். வங்கியியல் வல்லுநராக ஒரு புதிய அறிமுகத்தை இப்போது செய்துகொள்ளுங்கள். உலகெங்கும் இன்று பிரபலமாகப் பேசப்படும் இஸ்லாமிக் பேங்கிங்கை இக்குறுந்தொடரில் அறிமுகப்படுத்துகிறார் இரா. முருகன்.

அமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் கவர்மெண்ட் செலவில் தேசிய அளவு பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான்.

கான், ஹசன், முஸ்தபா இப்படிப் பெயரை பாஸ்போர்ட்டில் பார்த்தாலே மேற்படி நாடுகளில் ஏர்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளின் பிளட் பிரஷர் எகிறிப்போகிறது. காது மடல் சிவக்க பாஸ்போர்ட்டை விரித்து பெஸ்ட் செல்லர் லிஸ்ட் புத்தகம்போல் ஒரு பக்கம் விடாமல், ஒரு வரி விடாமல் படிக்கிறார்கள்.

பல சந்தர்ப்பங்களில் உள்ளே தனியறையில் மணிக்கணக்காக விசாரணை செய்து பின் லேடனுக்கு ஒண்ணு விட்ட, எட்டு, எண்பது விட்ட தம்பிக்கு மச்சினன் சம்சாரத்துக்கு மாமா பிள்ளை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கடனே என்று கதவைத் திறக்கிறார்கள்.

ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட, ‘இஸ்லாமிய வங்கி’ என்றால் இருகரம் நீட்டி வரவேற்று ‘வாங்க, கோக் சாப்பிடுங்க’ என்று உபசரிக்கின்றன.

அப்படி என்ன மந்திரச் சொல் இந்த இஸ்லாமிய வங்கியியல் (Islamic Banking) என்பது?

இட்லிக் கடை வைப்பதுபோல், இம்பாலா கார் கம்பெனி நடத்துவதுபோல், வங்கித்தொழிலும் லாபத்தைக் குறிக்கோளாக வைத்துத்தான் நடத்தப்படுவது. நேர்மையாக, தெய்வத்துக்கு, மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வங்கித்தொழிலை சமூக நோக்கில் நடத்த வழி சொல்வது இஸ்லாமிய வங்கியியல். லாபத்தையும் இழப்பையும் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் ஒரு சமுதாயவியல்  அது.

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் கௌதம புத்தர். வட்டியே வங்கித் துறையில் நேர்மையின்மைக்குக் காரணம் என்கிறது இஸ்லாமிய வங்கியியல். ஆக, இஸ்லாமிக் பேங்கிங்கின் ஆத்திசூடி ‘வட்டி வாங்காதே வழங்காதே’ என்று தொடங்குகிறது. இந்த அரிச்சுவடியை எட்டாம் நூற்றாண்டிலேயே எழுதிவிட்டார்கள் என்பது விசேஷம். ஆமா சார், இஸ்லாமிய வங்கியியல் உலகம் முழுக்கக் கடைப்பிடிக்கப்படுகிற ஐரோப்பிய பேங்கிங்குக்கு மிக மிக மூத்தது.

இஸ்லாமிய வங்கியியலின் ஆதார சுருதி ஷரியா. அல்-ஷரியா என்று புனிதச் சட்டமாகப் போற்றப்படுவது இது.

மனிதன் எப்படி நடக்கவேண்டும் என்ற இறைவனின் விருப்பம்தான் ஷரியா.  பல கோடி இஸ்லாமியர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள். காசு கொடுத்து வாங்கும் வங்கித் தொழிலா, கையில் ஆயுதம் எடுத்து யுத்தம் புரியும் போர்த் தொழிலா, சுற்றுச் சூழலா, சமுதாய முன்னேற்றமா, ஷரியா தொடாத துறையே இல்லை.

ஷரியாவில் காணப்படும் வர்த்தகம் பற்றிய விதிகள் இஸ்லாமிய வங்கியியலில் முழுமையாகக் கையாளப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள் ஃபிக் அல்-முவாமலத் (Fiqh al-Muamalat) அதாவது, கொடுக்கல் வாங்கல் பற்றிய இஸ்லாம் மார்க்க விதிகள் என்று அழைக்கப்படும்.  இந்த விதிகளில் ஏதாவது ஒண்ணு ரெண்டை சாய்ஸில் விட்டாலும் அது இஸ்லாமிக் பேங்கிங் இல்லை, இல்லை இல்லவே இல்லை.

சரி, ஷரியா எங்கே இருந்து வந்தது?

இஸ்லாமிய மதநூல் புனித குரான் ஷரியாவுக்கு ஊற்றுக்கண். ஷரியாவின் இன்னொரு கண்ணாக விளங்குவது நபிகள் நாயகம் அவர்களின் முழு வாழ்க்கையுமேதான். அவர் பேசியது, போதித்தது, வாழ்ந்து காட்டியது இவை எல்லாவற்றையும் சித்திரிக்கும் ஹடித் (Hadith) என்ற வாழ்க்கைக் குறிப்புகள் இவை.

ஷரியா என்றால், ‘தாகம் தீர்க்கும் குளிர்நீர் ஊற்றுக்கு இட்டுச் செல்லும் பாதை’ என்று வெண்தாடியைத் தடவிக்கொண்டு நீண்ட சொல் விளக்கம் தருவார்கள் மார்க்க அறிஞர்கள். மரபு சார்ந்த… என்ன மரபு சார்ந்த வேண்டிக் கிடக்கு… ஐரோப்பிய தொழில் தர்மம்தான் நம் மரபாச்சே, ஐரோப்பிய  வங்கியியல் அண்மைக் காலத்தில், அதாவது கி.பி. 2008-ல் உலக அளவிலே பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்தபோது, எத்தைத் தின்னால் பித்தம் தீரும், இந்த நிதிநிலை முடக்குவாதம் குணப்படும் என்று உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத் தாகத்தோடு அலைந்தார்கள். அப்போது அவர்களுக்குக் ‘குளிர்நீர் ஊற்றாக’ தட்டுப்பட்டது ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும்தான். நெஞ்சில் கையை வைத்துச் சொல்லச் சொன்னால் ஜார்ஜ் புஷ்கூட இதை மறுக்காமல், மறக்காமல் சொல்வார். எதுக்கும் இங்கிலீஷில் கேட்டுப் பார்க்கவும்.

ஷரியாவை நாம் புரிந்துகொள்ளும் சௌகரியத்துக்காக ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1)    மதம் சார்ந்த வழிபாட்டு நெரிமுறைகள் பற்றிய இபாதா (ibadah)

2)    (ஏற்கனவே பார்த்த) முவாமலத் – கொடுக்கல் வாங்கல் விதிகள் (mu’amalat)

3)    நீதி, பண்பாடு பற்றிச் சொல்லும் ஆதாப் (adab)

4)    நம்பிக்கைகள் பற்றிய லிதிகாதத் (i’tiqadat)

5)    ஷரியாவைக் கடைப்பிடிக்காவிட்டால் விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் பற்றிய உகுபத் (uqubat)

ஒரு நொடியில் இருந்து ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து முடித்து அடங்குகிறது வரையான காலத்துக்குத் தேவையான சகல விதிமுறைகளும் ஷரியாவில் உண்டு. இதில் சொல்லப்படாத ஏதாவது சம்பந்தமாக வழிகாட்டுதல் வேண்டியிருந்தால் இஸ்லாம் மூன்று விதங்களில் அதற்குத் தீர்வு காணலாம் என்று வகுத்திருக்கிறது.

1)    அறிஞர்கள் கூடி ஆலோசித்து வழங்கும் பெரும்பான்மைத் தீர்வு

2)    ஒற்றை இஸ்லாமியப் பேரறிஞர் அலசி ஆராய்ந்து வழங்கும் தீர்ப்பு

3)    பழக்க வழக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வு

தீர்வு வழங்கும்போது ஒன்றே ஒன்றை மனத்தில் இருத்திக்கொண்டால் போதும் – புனித குரானில் சொல்லியிருப்பதற்கு மாறாக அது இருக்கக்கூடாது.

ஷரியாவில் இருந்து பெறப்பட்ட இஸ்லாமிய வங்கியியல் விதிமுறைகள் பற்றி சிறு குறிப்பு வரைக என்றால் அடுத்த ஆறு பாராவையும் கனகம்பீரமாகச் சொல்லலாம்.

பணத்தைக் கொடுத்து வாங்கி, அதாவது ‘வாடகைக்கு விடும்போது’ (renting of money) அதற்குக் கூலி வாங்குவது பாவம். அந்தக் கூலிதான் வட்டி. இஸ்லாம் மொழிநடையில் வட்டி என்பது ‘ரிபா’ (Riba). பாவம் என்பது ‘ஹராம்’ (Haram).

ரிபா …சாரி’பா, அது ஹராம் நெம்பர் ஒன்.

ஷரியா தடைவிதித்த தொழில்களில் பணத்தை முடக்குவதும், அவற்றை எடுத்து நடத்தி லாபம் பார்ப்பதும்கூட ஹராம். போதைப் பொருள்கள், மது, சூது இப்படி எத்தனையோ இந்த ஹராம் பட்டியலில் உண்டு. அரசியல் இல்லை.

புனித குரான் சொல்கிறது, ‘இறைவன் வணிகம் நடத்த அனுமதித்துள்ளான். ஆனால் ரிபாவுக்குத் தடை விதித்திருக்கிறான்.’

சவாலைச் சமாளிக்காமல் சம்பாத்தியம் இல்லை (There is no reward without taking any risk) – இதுவும் இஸ்லாமிய வங்கியியலின் இன்னொரு அம்சம்தான்.

இந்தச் சவாலும் சம்பாத்தியமும் உழைப்பு, முதலீடு ரெண்டுக்கும் பொருந்தும். உழைத்து, உழைப்பின் வெற்றியை அடைகிற சவாலைச் சந்திக்கும் தொழிலாளியும், நேர்மையாக முதலீடு செய்து லாபம் ஈட்டும் முதலாளியும் ஷரியாவின் கண்களில்  ஒரேபோல!

இன்ஷா அல்லா, அடுத்த வாரம் தொடரலாம்.

நன்றி:- இரா. முருகன்

நன்றி:-http://www.tamilpaper.net/?category_name=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

நன்றி:- http://onameen.blogspot.com/

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-04 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-05 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-06 இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-07 இரா. முருகன்

முஸ்லிம்களும் ஊடகங்களும் – மாலிக் கான்


விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம் எனப் பலதுறைகளிலும் மனிதன் உச்சத்தை அடைந்து கொண்டே செல்கின்றான். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமெனில் மீடியா என்ற ஊடகத்துறை உலகில் அதிவேகமாகப் பரவியும் முன்னேறிக்கொண்டும் இருக்கின்றது. உலகளாவிய (Mass-Media) ஊடகங்களில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் குறிவைத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இது போன்ற சூழலில் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மீடியா என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? அதில் முஸ்லிம்களின் நிலை என்ன? மீடியாவில் எவ்வாறு நாம் தாக்கத்தை ஏற்படுத்தலாம்? என்று எடுத்துரைத்து துயில் கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை விழிப்படையச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

மீடியா ?
உலகத்தில் பரந்து இருக்கும் இதழியல்கள், தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படம், வீடியோ கான்ஃபிரன்சிங், இணையம், தனிநபர் பிரச்சாரம், வானொலி மற்றும் அலைவரிசைகள் எனப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் செய்திகள் மற்றும் இதற்குப் பயன்படும் தகவல் தொடர்புக் கருவிகள், ஜனசக்தி ஆகிய அனைத்தும் ஊடகம் (Media) என்ற கருத்தாக்கத்தில் அடக்கிவிடலாம்.

ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள், இஸ்லாம் எவ்வாறெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லிமாளாது. மீடியாவில் இவ்வாறான தீயசக்திகளை அறிந்து ஈடுகட்ட வேண்டிய நிர்பந்தத்தில்தான் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

1) மீடியாக்களின் அவசியம்?
மீடியா ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. அதன் மூலம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது. சில சம்பவங்களை எடுத்து அலசி, ஆராய்ந்துப் பார்த்தோமானால் மீடியாவின் அவசியம் என்ன என்பதை அனுமானித்துவிடலாம்.

சமீபத்திய ஈராக் போரை எடுத்துக்கொள்வோம், ஈராக்கின் பெட்ரோல் வளத்திற்கு ஆசைப்பட்டது அமெரிக்கா. அதை அபகரிக்க ஈராக்கை பயங்கரவாத நாடு என்று தன் ஆதரவு செய்தி ஊடகங்களான பி.பி.ஸி மற்றும் சி.என்.என் வழியாக உலகநாடுகள் மத்தியில் சித்தரித்தது. அணுஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்திருக்கின்றதா? என ஐ.நா நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அவ்வாறு இல்லை என்று உறுதிபடக் கூறியது. எனினும் ஐ.நா’வின் சொல்லையும் மீறி அமெரிக்கா தன் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி (Veto-Power) ஈராக் மீது போர் தொடுத்தது. அப்போது ஈராக்கை பலஹீனப்படுத்த முதன் முதலில் அமெரிக்கா தன் ஏவுகனைகளை ஈராக்கின் தகவல்தொடர்புக் கட்டிடத்தின் மீது வீசி அதை முற்றிலுமாக அழித்தது. காரணம், ஈராக்கினுள் தான் நடத்தப்போகும் அராஜக மனித மீறல்கள் உலகத்திற்குத் தெரிந்து விடக்கூடாது என்று மீடியாக்களின் வாசல்கள் அனைத்தையும் அடைத்தது.

ஈராக்கில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்தது அமெரிக்கா. இச்செய்திகளை அல்-ஜஸீரா மற்றும் சில இணைய ஊடகங்கள் வெளியுலகிற்குக் கொண்டு வந்தபோது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மக்கள் கூட மனிதநேய அடிப்படையில் அமெரிக்காவை எதிர்த்துப் போர் நிறுத்தம் செய்யக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் அப்பாவி முஸ்லிம்களை கைதிகளாக்கி சிறையில் அடைத்தனர். அவர்களை நிர்வாணப்படுத்தி ஒருவரோடு ஒருவராகப் பிணைத்துப் போட்டனர். ஈராக் முஸ்லிம்கள் மீது மின்சார அதிர்வுகள் கொடுத்தும், கற்பழிப்புகள் நடத்தியும் கொடுமைப்படுத்தினர். இவையெல்லாம் இணைய ஊடகங்கள் வாயிலாகக் கடந்த ஏப்ரல் 2004-ல் புகைப்படங்களாக வெளிவந்த போது, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ் பெல்ட் இத்தகைய இராணுவ வரம்புமீறல்களுக்கு மன்னிப்புக் கோரினார். இழந்த உடமைகளும், உயிர்களும் இவரின் மன்னிப்பின் மூலம் மீட்டிட முடியுமா? இல்லை!

இதே போன்று பாலஸ்தீனிய முஸ்லிம்கள் தங்கள் சொந்த மண்ணில் இஸ்ரேலிய யூத மக்களால் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் என்ற இல்லாத ஒரு நாட்டை யூதர்கள் திட்டமிட்டு பாலஸ்தீனில் உருவாக்கிவிட்டார்கள். இவ்விஷயத்திலும் ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இன்றளவும் செயல்பட்டு வருகின்றன. வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான போர்கள் அரங்கேறியே வருகின்றன.

சமீபத்திய குஜராத் கலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், மோடி அரசின்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், முஸ்லிம்களின் சொத்துக்கள் மதவெறி பிடித்தவர்களால் சூரையாடப்பட்டன.

குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் அநியாயமான முறையில் தடாக் கைதிகளாகவும், பொடாக் கைதிகளாகவும் கைது செய்யப்பட்டு விசாரணை மரபு மீறலையும் தாண்டி மயக்கமருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்தனர். விசாரணை என்ற பெயரில் சித்தரவதை செய்யப்பட்டனர். இச்செய்திகளை மீடியாக்கள் வெளியுலகத்திற்குக் கொண்டுவந்த போது உலகநாடுகள் குஜராத் சம்பவத்தை விமர்சித்தன. இந்தியாவிற்கு ஏற்பட்ட தலைகுனிவு குஜராத் சம்பவம் என எல்லோரும் கூறினர். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் எந்த முகம் கொண்டு இனி நான் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வேன் என்று கூறினார். மீடியாவின் மூலமாக இச்சம்பவங்கள் வெளிவராமலிருப்பின் இன்னும் முஸ்லிம் சமுதாயம் நசுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

மாற்று மதத்தில் ஒருவன் தவறு செய்தால் அதை அவனளவிலும், முஸ்லிம் ஒருவன் தவறு செய்துவிட்டால் அதை இஸ்லாத்தோடு இணைத்தும் செய்திகளை வெளியிடுவது முஸ்லிம்களுக்கு எதிரான மீடியாக்களுக்கு கைவந்த கலை. முஸ்லிம்கள் என்றால் வன்முறைகளைத் தூண்டுபவர்கள், தீவிரவாதிகள் என்று மாற்றார்கள் கூறும் மனோநிலைக்கு மீடியாக்கள் மக்களை மாற்றியிருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகளும், வன்முறைகளும் ஒருபுறம் என்றால் ஊடகங்களின் வாயிலாக இஸ்லாத்தின் மீது நடத்தப்படும் அவதூறான பிரச்சாரங்கள் மற்றொருபுறம். குர்ஆன், ஹதீஸ்களை திரிப்பதும், இஸ்லாமிய ஷரீயத் சட்டங்கள் நடைமுறைக்கு ஒவ்வாது, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, பர்தா முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது என்றெல்லாம் போலிப்பிரச்சாரங்கள் ஊடகங்களின் மூலமாக நடத்தப்படுகின்றன.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, திருமணங்கள், போர்கள் ஆகியவைகளை தவறானமுறையில் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. எந்த அளவிற்கு என்று சொன்னால் அவர்களின் சூசகமான கருத்துக்களின் மூலம் பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் கூட நாத்திகவாதியாக மாறிவிடுமளவிற்கு அவர்களின் மொழிப்புலமை கொண்டும், வாதத் திறன் கொண்டும் இஸ்லாத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள்.

உலக அளவில் முஸ்லிகள் பொட்டுப் பூச்சிகளைப் போல அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் வரலாறுகள், தியாகங்கள் எல்லாம் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது. பள்ளிகளில் பயில வரும் பிஞ்சுகளின் உள்ளங்களிலும் முஸ்லிம்கள் தீயவர்கள் என்ற நஞ்சை விதைக்கின்றனர். பாடதிட்டங்களில் தங்கள் மதக் கொள்கைகளைத் திணிக்கின்றனர். காவல் துறை, இராணுவம், அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றார்கள். மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களில் வகுப்பு வெறி ஊடுறுவிவிட்டது. முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை மீடியாக்கள் மூலம் மக்கள் சக்தியை உருவாக்கி முஸ்லிம்கள்பால் சுமத்துகின்றன. நாம் மீடியாவில் அவசியத்தை உணராமலிருப்பதன் விளைவுதான் இத்தகைய தீய பலன்களை அடைய வேண்டியுள்ளது.

2) மீடியாவில் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதன் காரணங்கள்?
இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க ஆங்கிலம் கற்பது ஹராம் என்று கல்வி கற்க மறந்துவிட்டனர். ஆரம்பகாலத்தில் அரபி மொழி அறிந்தோர் பிறமொழியை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டாதது, இன்றளவும் அரபியர்களிடத்தில் இவ்வழக்கம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. பிற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு நிலை.

ஒவ்வொரு நவீனக் கண்டுபிடிப்புகள் வந்தபோதெல்லாம் அதைத் தீய வழியில் பலர் பயன்படுத்துவதைக் கண்டு அஞ்சி முற்றிலுமாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இன்றளவும் டி.வி இல்லாத பல இஸ்லாமிய இல்லங்கள் இருக்கத்தான் செய்கின்றன. டி.வி’யை எவ்வாறெல்லாம் நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்பதை அறிய முற்படாமல் டி.வி பார்ப்பது ஹராம் என்ற மார்க்கத் தீர்ப்பையும் வழங்கினர். வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது ஹராம் என்றும் கூறினர். அதை எவ்வாறு சமுதாய வளர்ச்சிக்கும், மார்க்க வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் என்று ஆமை வேகத்தில் அறிந்துகொண்டதன் பின்தான் ஆடியோ, வீடியோ, சி.டி, டி.வி.டி என பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

திருக்குர்ஆனையும், நபிகளாரின் போதனைகளும் ஆரம்பகாலத்திலேயே மொழியாக்கம் செய்ய மறந்துவிட்டனர். மாறாக முன்னோர்களின் கட்டுக்கதைகளை கையிலெடுத்துக்கொண்டு இதுதான் மார்க்கம் என்று பிரச்சாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டதால் இஸ்லாம் அதன் தூயவடிவில் பலருக்கு கிடைக்காமல் சென்றுவிட்டது. இவ்வகையான முன்னோர்களின் திரிபு பெற்ற நூல்கள், பிரச்சாரங்கள் மீடியாவில் சரிகட்டவியலாத பின்னடைவை ஏற்படுத்திவிட்டன.

முஸ்லிம்கள் கல்வியில் ஆர்வம் காட்டாதது, புதிய கண்டுபிடிப்புகளை உடனே ஏற்க மறுத்தது, குர்ஆன், ஹதீஸ்களை தெளிவுபடுத்த மறந்தது, மார்க்கப் பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் பாதியேனும் சமுதாய வளர்ச்சிக்குக் கொடுக்காதது, தான் உண்டு தன் வேலையுண்டு என்ற பிற்போக்கு மனப்பான்மை என்று முஸ்லிம்கள் மீடியாவில் பின்தங்கிப்போனதன் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பொதுவாக முஸ்லிம்கள் ஊடகங்களில் பின் தங்கியிருப்பது அனைவரும் ஏற்றாக வேண்டிய கூற்று. எனவே இதை விரிவாக அலசுவதை விடுத்து ஊடகங்களில் நாம் எவ்வாறு முன்னேறலாம் என்பதை ஆய்வு செய்வோம்.

3) முஸ்லிம்கள் மீடியாக்களை எவ்வாறு பயன்படுத்தலாம்?
நவீன கண்டுபிடிப்புக்களைத் தூரநோக்கு பார்வை கொண்டு அங்கீகரிக்கவேண்டும். அதன் மூலம் முஸ்லிம்களுக்கு ஆதரவான மக்கள் சக்தியை உருவாக்க முஸ்லிம்கள் பாடுபடவேண்டும். மீயாக்களில் முஸ்லிம்கள் தாக்கத்தை ஏற்படுத்த பலவழிகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட்டுப் பார்ப்போம்.

கல்வியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சிக்கு அடிகோலிடும்.
கல்வி கற்பதில் முஸ்லிம்கள் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டாத நிலை. மனித அறிவின் பிறப்பிடம் கல்வி என்பதை ஏனோ முஸ்லிம்கள் மறந்துவிட்டார்கள். எழுத்தறிவில் மிகவும் பின்தங்கிய சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில் கற்றறிந்த மாற்றார்கள் முஸ்லிம் சமுதாயத்தை ஊடகங்களின் வாயிலாக நசுக்குகிறார்கள். ஊடகங்களை எதிர்கொள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியில் முன்னேற்றமடையச் செய்யவேண்டும். வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் ஆன்லைனில் கல்விகற்கும் நிலை நிலவிவருகின்ற சூழலில் முஸ்லிம்களுக்கு என்று எத்தனை கல்வி நிலையங்கள் இருக்கின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் கல்விக்கூடங்களை நாம் வைத்திருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். பணம்படைத்த முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் அதற்கான வாய்புகளும் வசதிகளையும் ஏற்படுத்திட முன்வர வேண்டும். கற்றறிந்தவர்கள் அனைவரும் இதற்காகப் பாடுபடவேண்டும்.

கல்வியை மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று பிரிக்காமல் இரண்டும் இணைந்து கிடைக்கப் பாடுபடவேண்டும். கல்வியில் பின்தங்கியதால் மீடியாவில் மட்மல்லாது அரசு வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றிலும் நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். மீடியாவில் முஸ்லிம்கள் முன்னேறுவதற்கு கல்வியில் முன்னேற்றம் மிகஅவசியம்.

இதழியல் மற்றும் மொழியியல் முன்னேற்றம்.
இதழியல்(Journalism) என்பது வாரஇதழ்கள், மாதஇதழ்கள், தினசரி செய்திப் பத்திரிக்கைகள் மற்றும் எழுத்து வடிவில் மக்களைச் சென்றடையும் அனைத்து ஊடகங்களும் இதில் அடங்கும். எந்த ஒரு உலகச் செய்தியை நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனினும் மாற்றார்களிடத்தில் உள்ள ஊடகங்களைத்தானே அணுகவேண்டிய சூழல் நிலவிவருகிறது. உதாரணத்திற்கு தமிழில் முஸ்லிம்களால் நடத்தப்படும் தினசரிச் செய்தித்தாள் ஏதேனும் உண்டா? வேதனைக்குரிய விஷயம் முஸ்லிம்களில் திறமையான எழுத்தாளர்கள் மிகமிகக் குறைவு. பத்திரிக்கைத் துறையில் நமது சமுதாயம் முன்னேற்றம் காணவேண்டும். கருத்துக்கள் என்னவாக இருந்தாலும் அதைச் சீரிய முறையில் எடுத்துரைக்க மொழி என்ற ஊடகம் அவசியமாகிறது. எனவே மொழியை அதன் இலக்கிய, இலக்கண அறிவோடு அறிதல் வேண்டும். ஆங்கிலம் என்பது உலகில் அதிகமானோரால் பேசப்பட்டு வரும் மொழி, எனவே அவற்றையும் நாம் கற்றறிய வேண்டும்.

பட்டப் படிப்புகளில் இதழியலும் ஒரு பிரிவு. இதில் முஸ்லிம்கள் ஆர்வம் செலுத்திப் படித்து திறமையான எழுத்தாளர்களாக மாறவேண்டும். மீடியாவில் நம் சமுதாயம் முன்னேற திறமையான எழுத்தாளர்கள் பலர் உருவாக (உருவாக்க) வேண்டும். அதன் மூலமாக கணிசமான முறையில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் ஊடகங்களில் வெற்றியைக் காணும்.

தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலி அலைவரிசைகள்.
எந்த ஒரு செய்தியும் எழுத்துவடிவில் மக்களைச் சென்றடைவதை விட காட்சி ஊடகமான (Visual-Media) தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படங்கள், குறும்படங்கள் (Documentery – Films) போன்றவற்றின் மூலமாக விரைவாகச் சென்றடைந்துவிடும். காட்சியோடு செய்திகள் மக்களைச் சென்றடையும் போது மக்கள் மனதில் அச்செய்திகள் பதியும். இவ்வகையான ஊடகங்களில் முஸ்லிம்கள் இப்போதுதான் தலைகாட்டியுள்ளார்கள். உலக அளவில் முஸ்லிம்களுக்கு சில அரபி சேனல்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு சேனல் உண்டா எனில் இல்லை.

பி.பி.ஸி மற்றும் சி.என்.என் போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்கள் உலக அரங்கில் அதிகமானோரால் முஸ்லிம்கள் உட்பட கவரப்படுவதற்குக் காரணம் அவை அறிவியல் செய்திகளை ஆய்வுசெய்து தருகின்றன, மருத்துவச் செய்திகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதேயாகும்.

இத்தனை காலம் கழிந்து டாண் மியூசிக் சேனலில் தமிழில் இஸ்லாமியர்களின் நிகழ்ச்சி தினமும் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகின்றது என்பது வியப்புக்குரிய செய்தி. அத்தகைய சேனல்களும் முஸ்லிம்களுக்குச் சொந்தமா? எனில் அதுவும் இல்லை. ஆடல், பாடல், இசை, பொழுதுபோக்கு என்று எடுத்துக்கொண்டால் எண்ணற்ற தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள்.

இத்தகைய ஊடகத்தை முஸ்லிம்கள் பயன்படுத்த முன்வரவேண்டும். இஸ்லாத்தை எத்திவைப்பதோடல்லாமல் முஸ்லிம் சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள், சமுதாய வளர்ச்சி, சேவை போன்ற நல்ல நோக்கங்களுக்கு இத்தகைய ஊடகங்களில் சரித்திரம் படைக்கவேண்டும். தொலைக்காட்சி, திரைப்படம், குறும்படம் (Documentery) என்று போனால் இசை, ஆடல், பாடல், கவர்ச்சி மற்றும் கமர்ஷியல் இல்லாமல் முடியுமா? என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருக்காமல் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் இருந்துகொண்டு இத்தகைய ஊடகங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைச் சிந்தித்துப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

தனிநபர் பிரச்சாரங்கள் , மேடை நாடகங்கள், கருத்தரங்குகள், ஜும்மாப் பேருரைகள்.
இவையாவும் மக்களைச் சென்றடையும் ஊடகங்களே! இவற்றின் மூலமாகவும் மக்கள் சக்தியை உருவாக்கிட முடியும். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை மட்டும் போதித்துச் சென்றுவிடாமல் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அம்சங்களும் கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். காலத்திற்குத் தகுந்தாற்போல் அவர்கள் வெள்ளிமேடைகளில் (குத்பாப் பேருரைகள்) பிரச்சாரங்கள் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம் நாடுகளில் பெருவாரியான முஸ்லிம்கள் ஒன்று குழுமக் கூடிய வெள்ளிக்கிழமை பேருரைகள் அரபி மொழியிலேயே சடங்குக்காக நடந்து வருகின்றன. நம்மில் பலரும் அதைப் பக்தியோடு கேட்டு துயில் கொண்டு செல்கிறோம். இன்றைய முஸ்லிம் சமுதாயம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது, சமுதாயத்தில் படர்ந்துவிட்ட களங்கங்கள் என்ன? மார்க்கத்தை எவ்வாறு நிலைநாட்டலாம் என உணர்ந்து இந்த குத்பாப் பேருரைகள் அமைந்தால் அதுவும் மீடியாவில் மகத்தான வெற்றிதான்.

பொழுதுபோக்கிற்காக எத்தனையோ அம்சங்கள் வந்துவிட்டன. ஆனால் பொழுதுபோக்கிலும் உபயோகமுள்ள ஒரு கருத்தை வலியுறுத்தி பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள் நடத்துதல் அவசியம். இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலமாகவும் மீடியாவின் கவனத்தை திசைதிருப்ப முடியும். மார்க்கப் பிரச்சாரங்கள், தொழுகை, இபாதத் போன்றவற்றிற்கு மட்டும் முஸ்லிம்கள் ஒன்று திரளக்கூடியவர்களாக இருந்த நிலை மாறி பாபர் மசூதி பிரச்சனை, வாழ்வுரிமை மாநாடுகள், அரசியல் மேடைகள், மதமாற்ற தடைச் சட்டம், லாட்டரி ஒழிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் தற்போது ஒன்று குழுமக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எனினும் மீடியாவில் நாம் சொல்லக்கூடிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை. எனவே நவீன மீடியாக்களைப் பயன்படுத்தி காலத்திற்கேற்றாற் போல செய்திகளை மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

இணையம் ( Internet).
இணையம் என்பது உலகத்தின் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இணைத்துவிடுகிறது. டாட்காம், வெப்காம், பிளாக், இ-மெயில், சாட்டிங், டேட்டிங், ஃபாரம், ஆன்லைன் என்று உலக மீடியாக்களில் இணையம் இமாலய முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்றது. நம் சமுதாய மக்களோ இன்னும் கம்ப்யூட்டர் என்றால் என்ன? சாஃப்ட்வேர் என்றால் என்ன? ஹார்ட் வேர் என்றால் என்ன? என்று கணினி பற்றிய உபயோகம் குறித்து அறியாமலே இருக்கிறார்கள். கணிப்பொறி மற்றும் இணையத்தின் பயன்பாடுகளைக் கொண்டு முஸ்லிம்கள் ஊடகங்களை வலுவடையச் செய்யலாம். கணினி மற்றும் இணையத்தின் எல்லாப் பயன்பாடுகளும் தமிழிலேயே அறிந்துகொள்ள மென்பெருட்கள் வந்துவிட்டன. கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் என்ற ஊடகங்களின் பயன்பாடுகள் அறிந்து முஸ்லிம்கள் இவ்வாறான மீடியாக்களைப் பயன்படுத்த முன்வருதல் வேண்டும்.

ஒற்றுமை என்ற பண்பு மீடியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
முஸ்லிம்கள் மீடியாவில் தாக்குப்பிடித்து மேற்கண்ட வழிகளில் முன்னேற ஒற்றுமை என்ற பண்பை முன்நிறுத்தியாக வேண்டும். உலக அளவில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் ஒருமித்த கருத்தில் இருந்தால் அமெரிக்காவை எதிர்கொள்ள முடியாதா? ஊரளவில் முஸ்லிம்கள் ஜமாஅத்களாகவும், அமைப்புகளாகவும் பிரியாமல் ஒன்றுபட்டால் பெரிய மக்கள் சக்தியை உருவாக்க முடியாதா? கண்டிப்பாக முடியும். அப்போதுதான் மீடியாவின் மூலமாக சிறந்த செயல் திட்டங்கள் உருவாக்கமுடியும். பொருளாதாரத்தைச் சரிகட்டி நடைமுறைப்படுத்தவும் முடியும். இதை முஸ்லிம் சமுதாய மக்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.

எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை – நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 8:53)

எல்லாம் வல்ல அல்லாஹ் தூய இஸ்லாத்தையும், அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் மீடியாவில் மட்டுமல்லாது எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடையச் செய்வானாக. – ஆமீன்.

 

நன்றி:- மாலிக் கான்

நன்றி:- இஸ்லாம் கல்வி.காம்

பிரிவுகள்:முஸ்லிம்களும் ஊடகங்களும் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

கணவரை மகிழ்விப்பது எப்படி?


(அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் – ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்)

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

மனைவியின் அழகிய வரவேற்பு

• பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் muslim_wedding_handsவரவேற்று உபசரியுங்கள்.

• முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

• உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்ளுங்கள்.

• சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

• அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

• கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

இனிய குரலும் தேவையான கனிவும்

• உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாக பேசுங்கள். மேலும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து பேசக் கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம்.

• உங்கள் கணவரிடத்தில் உம்!! இல்லை!! என்று சொல்லி அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.

நறுமணமும் அலங்கரிப்பும்

• உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்)

• உங்கள் கணவருக்கு அருகில் (மட்டும்) மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.

• தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறைச் செலுத்துங்கள்.

• வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)

• தடுக்கப்பட்ட முறையில் அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை வழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்)

• கணவனுக்கு பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

• முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். இது போன்ற விஷயங்கள் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன் செய்வது ஹராம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

• நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது: ‘எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?” நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: ‘எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்”. ( நஸயீ)

இனிய வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே

• திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்த்தினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ)

• கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும் வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).

• நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக்கினார்கள்: கணவன் ஊரிலிருக்கும் போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (ரமளான் அல்லாத நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது. (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தாரமி).

• உங்கள் கணவனுக்கு தாம்பத்திய உறவு அவசியம் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை முதன்மைப் படுத்துங்கள். (பிறர் தவறாக எண்ணுவார்கள் என்றோ ஏதாவது பேசுவார்கள் என்றோ தள்ளிப்போடாதீர்கள்).

• உங்களுடைய உடலை சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

• கணவருடன் இனிய மொழியில் காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். (குடும்பத்தின் பிரச்சினைகளை மறந்துகூட அப்பொழுது வெளிப்படுத்தாதீர்கள். இல்லையென்றால் சந்தோஷமான சூழ்நிலையை சங்கடமான சூழ்நிலையாக அது மாற்றிவிடக்கூடும்).

• உங்கள் கணவர் திருப்தி அடையும்வரை ஒத்துழையுங்கள்.

• தோதான நல்ல சூழ்நிலைகளில் உங்கள் கணவரை தாம்பத்தியத்திற்கு ஊக்குவியுங்கள் (உதாரணமாக வெளியூர் பயணத்திலிருந்து திரும்பியபோது அல்லது கணவருக்கு அமைதி தேவை
என்னும் பட்சத்தில்).

அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டு திருப்தி கொள்வது

• உங்களுடைய கணவன் ஏழையாகவோ அல்லது சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள் போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு வெறுப்பை உருவாக்கும்).

• ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களை பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

• தன்னம்பிக்கையும் மற்றும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உலக விஷயத்திலேயே மூழ்கிவிடவேண்டாம்

• இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.

• இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல, மறுமையின் சுகவாழ்வுக்கு எதிரான விஷயங்களை கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும்.

• உங்கள் கணவரின் செலவை குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும், ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு கொடுக்கவும் ஆர்வம் ஊட்டுங்கள்.

• அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர்கள் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46)

கணவனின் உதவியை வரவேற்றல் நன்றி செலுத்துதல்

• நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்” என்பதாக. எனவே கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

• உங்கள் கணவரின் உதவிகளுக்கு நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களை பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்.

• உங்கள் கணவரின் நன்றியை மறக்கும்போது, உங்கள் கணவர் ‘ஏன் இவளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்”.உறுதுணையும் உதவியும்

• உங்கள் கணவர் ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்கு ‘தோள்” கொடுங்கள்.

கட்டுப்படுதல்

• ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக) தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், ‘நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்” என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (தப்ரானி, முஸ்னத் அஹ்மத்)

• ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென நான் கட்டளையிட நாடியிருந்தால் மனைவியை கணவனுக்கு தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன். (ஆனால் அதுவும் தவறே! எனவே அதனை அனுமதிக்கவில்லை) என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, பைஹகி)

• கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது.

• ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் தலைவன் என்பதையும் மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

அமைதிப்படுத்துங்கள் (கோபமாக இருக்கும் போது)

• முதலாவதாக கணவரை எது கோபப்படுத்துமோ அதை தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.

• நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் ‘உப்பு சப்பு” பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).

• கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும் வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

• வெளி விஷயத்தின் காரணமாக கோபம் இருந்தால், கோபம் குறையும் வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்)

• அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.

• ‘என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்;” என்றோ அல்லது எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்! என்றோ அல்லது நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது! என்றோ கேள்வி கணைகளை எழுப்பி எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள்.

பாதுகாப்பது (அவர் வீட்டில் இல்லாத போது)

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:31)

அல்லாஹ் கூறுகிறான்: நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)

• தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள்.

• குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். (முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்)

• வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

• கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.

• கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.

• அப்படியே உங்கள் கணவர் அனுமதித்தாலும் முழு ஹிஜாபுடனும் பாதுகாப்புடனும் வெளிச் செல்லுங்கள்.

• உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.

• மஹரம் இல்லாத ஆண்களை நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில் அனுமதிக்காதீர்கள். (கணவனுடைய சகோதரர்கள், தாயின் சகோதரி மகன்கள், தந்தையின் சகோதரனின் மகன்கள் – போன்றவர்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்)

• கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்.

பொறுமையும் பாதுகாப்பளித்தலும்

• கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.• வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு…) ஏற்படும்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து பொறுமை கொள்வது அவசியம். (உதாரணமாக : நோய், விபத்துகள், இறப்புகள்…)

• அழைப்புப்பணியில் துன்பங்கள் ஏற்படும்போது (சிறைபிடிக்கப்படுதல், ஊனமாக்கப்படுதல் …) பொறுமையுடன் இருந்து கணவரை மீண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் சுவர்க்கத்தை வேண்டி தியாகம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.

• உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொண்டால்கூட அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும் போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).

இறைவனுக்கு அடிபணிவதிலும், அழைப்புப்பணி, தியாகம் ஆகியவற்றிலும் உதவியாக இருத்தல்

• உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.

• இரவு தொழுகை தொழ அவருக்கு ஆர்வமூட்டுங்கள்.

• அல்குர்ஆனை கேட்பதிலும் படிப்பதிலும் தனித்தும் கணவருடன் சேர்ந்தும் ஈடுபடுங்கள்.

• இஸ்லாமிய பயான் கேஸட்டுகளை தனியாகவும் கணவருடனும் சேர்ந்தும் கேளுங்கள் (இருவரும் புரிந்து கொண்ட முக்கிய கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்).

• சுப்ஹ{தொழுகைக்குப் பின்னரும், மஃரிப் தொழுகைக்கு முன்னரும் திக்ருகளில் (இறைநினைவு) ஈடுபடுங்கள்.

• பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்யப்படும் அழைப்புப்பணிகளில் உங்களையும் உட்படுத்திக் கொள்ளுங்கள்.

• இஸ்லாமிய சட்டங்களையும் பெண்களுக்குரிய நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு செயல்படுத்துங்கள்.

• உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

• உங்களுடைய பகுதி நேரத்தை ஒதுக்கி கணவருடன் சேர்ந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்.

• அவசியமான நேரத்தில் அனைத்து தியாகங்களையும் செய்ய உங்கள் கணவருக்கு ஆர்வமூட்டி நீங்களும் உங்கள் குழந்தைகளும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருப்பதை நினைவுபடுத்துங்கள்.

அழகிய வீட்டு பராமரிப்பு

• வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

• பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).

• தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

• அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

• குழந்தைகளை எப்படி இஸ்லாமிய வழியில் வளர்ப்பது, பராமரிப்பது என்பதை கற்றுக்கொண்டு செயல்வடிவத்தில் வெளிப்படுத்துங்கள்.

குடும்பத்தையும் சொத்துக்களையும் பராமரித்தல்

• கணவனுடைய பணத்தை அவருடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் இதற்கு உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்)

• வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

• குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகள், இஸ்லாமிய அறிவு, நபிமார்களின் சரித்திரங்கள் நபித்தோழர்களின் தியாகங்கள் ஆகியவற்றையும் போதியுங்கள்.

நல்ல மனைவி சுவர்க்கத்தின் துணைவி

• நல்ல பெண்களுக்கு முன்மாதிரியாக நபித்தோழியர் கதீஜா, ஆயிஷா, உம்மு ஸலமா, உம்முசுலைம் ரளியல்லாஹூ  அன்ஹூ ம்
போன்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

• கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

• கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்)

• கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.

• ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா)

நன்றி:- nidur.info