கர்ப்பத்தடை நீக்கும் கல்யாண முருங்கை!
தோட்டத்துக்கு மட்டும் அல்ல… மக்களின் வாட்டம் நீக்கவும் கைகொடுக்கும் மகத்தான மரம் கல்யாண முருங்கை!
-
- ஓஹோ வாழ்க்கை!
- ATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்
- அதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்
- அமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்!
- அள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்
- அழகில் வருதே அசத்தல் வருவாய்
- ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு!
- இ-வேஸ்ட் லாபம்
- இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?
- இஷ்டத்துக்கு செலவழிக்கிறார்கள் இளைஞர்கள்! – ஊதாரித்தனம்.. இலக்கணம்!
- இஸ்லாமிய பங்கு வர்த்தகம்
- உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்!
- உங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்
- எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்?
- எஸ்டேட் பிளானிங்
- ஏலத்தின் வகைகள்
- கடல் கடக்கும் கறுப்புப் பணம்
- கிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க
- கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்
- சிந்தனை மேடை-01
- டாப் 10 ஊழல் (இந்தியா)
- தங்க நகைச் சீட்டு
- துணையுடன் இணைந்து திட்டமிடுங்கள்
- அதிநவீன ரத்த சோதனை
- ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
- உடல் எடையைக் குறைக்க
- உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
- எடையைக் குறைக்கப் போராட்டமா
- எந்தெந்த மருந்து எமனாகும்
- ஒவ்வாமை (அலர்ஜி)
- கணினியும் கண்ணும்
- கர்ப்பிணிகள் செல்போனில் பேசினால்
- குறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்
- குழந்தைகளுக்காக
- கொலஸ்ட்ரால் [கொழுப்புசத்து]
- கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
- கோடை பானங்கள்
- சர்க்கரை நோய் ஒரு பார்வை
மறந்து போன மருத்துவ உணவுகள் பகுதி-2 சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா
மன்னிக்க மாட்டார்களா எனும் சிந்தனை மேலானது. – அதிரை ஏ.எம்.ஃபாரூக்
-
- இஃப்தார் துஆ
- ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல
- நோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்
- யா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே
- யாருக்குப் பெருநாள்?
- ரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி
- ரமழானின் சிறப்புகள்
- ரமழானை வரவேற்போம்!
- ரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்
- ரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்
30 வகை சைவ பிரியாணி!
இந்த ராய்தா, எல்லா பிரியாணிகளுக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.
அரைக்க: இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், பட்டை – 2 துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா 2.
அரைக்க: இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 10 பல், பட்டை – 2 துண்டு, ஏலக்காய், கிராம்பு – தலா 2.
குறிப்பு: விருப்பப்பட்டால் காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு: விருப்பப்பட்டால், காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.
இதை தனியாக சாப்பிட முடியாது. எனவே, காய்கறி குருமா, கடலைக்குழம்பு போன்றவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்.
நன்றி:- சமையல் கலை நிபுணர் உஷாதேவி
- அட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா
- ஆசை ஆசையாய் 30 வகை தோசை
- இறால் மஞ்சள் வாடா
- கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்
- கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்
- செட்டிநாடு புலாவ்
- நண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு
- கொத்து பரோட்டா
- நோன்பு கஞ்சி செய்முறை2
- நோன்புக் கஞ்சி செய்முறை
- பகுதி-01 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-02 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-03 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்
- பகுதி-04 கிராமத்து கைமணம்!
- பேரிச்சை புட்டிங்
- மல்லிகைப்பூ இட்லி
- விறால் மீன் வறுவல்
- விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி
இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க 10 வழிகள்
காலையில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கம், தங்களது அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்தபடிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு, உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும், மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே ரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். இயற்கையாக ரத்த அழுத்தம் குறைக்க, நாம் கடைப்பிடிக்கவேண்டிய 10 வழிமுறைகளைப் பார்ப்போம்.
யோகா மற்றும் பிராணாயாமம்
ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தாலே உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து, ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். தினசரி யோகா, மற்றும் மூச்சுப்பயிற்சிகளைச் செய்வதால், உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தஅழுத்தம் சீராக இருக்கும்.
நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்கவும்!
சாலையோரக் கடைகளில் விற்கப்படும் சமோசா, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த தின்பண்டங்கள் சாப்பிடுவதை, முடிந்த அளவுக்குக் குறைத்துக்கொள்வது நல்லது. இதுபோன்ற கடைகளில் எண்ணெயை ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப சூடாக்குவதால் ‘ட்ரான்ஸ்ஃபேட்’ என்னும் அமில மாற்றம் நடைபெறும். இந்த எண்ணெய் நிறைந்த தின்பண்டங்களைச் சாப்பிடுவதால், ரத்தக்குழாயில் ‘கெட்ட கொலஸ்ட்ரால்’ படியத் தொடங்கிவிடுகிறது. இதனால், இதயக்குழாயில் சீரான ரத்த ஓட்டம் செல்லாமல் பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
கஃபைன், புகை, மது தவிர்க்கவும்!
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவும்!
உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும்!
சத்தான உணவுகளைச் சாப்பிடவும்!
தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் மற்றும் சிறுதானிய உணவு வகைகள் ஆகியவற்றை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக அவகேடோ, பொட்டாசியம் நிறைந்த புரோக்கோலி, வாழைப்பழங்களைச் சாப்பிடுவதால் ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்!
எண்ணெயில் பொரித்த சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். இவற்றைச் சாப்பிடுவதால், ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இது இதய ரத்தக்குழாயின் உட்பகுதியில் படிந்து, நாள்பட நாள்பட இறுக ஆரம்பித்துவிடும். இதனால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். புரதச்சத்து சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், அசைவ உணவுகளில் எண்ணெய், உப்பு, காரம் ஆகியவற்றை அளவாக சேர்த்து சாப்பிடலாம். அசைவம் சாப்பிடாதவர்கள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், பருப்பு – பயறு வகைகளைச் சாப்பிடலாம்.
மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யவும்!
ஒவ்வொருவருக்கும் ஒருவித குழந்தைத்தனம், குறும்புத்தனம் மறைந்திருக்கும். வயதாக ஆக, குடும்பப் பொறுப்புகள் மற்றும் சமூக அந்தஸ்து காரணமாக அவற்றை விட்டு நாம் விலகி வெகுதூரம் வந்திருப்போம். குழந்தைகளுடன் விளையாடுவது, நடனம் ஆடுவது, உற்சாகக் கூச்சலிடுவது, குதிப்பது போன்ற செயல்களால் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோனான செரோடொனின் அதிகம் சுரக்கும். இதனால், மனம் லேசாகி ரத்த அழுத்தம் சீராகும்.
லாஃப்டர் தெரப்பி
மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேலை நாடுகளில் ‘லாஃப்டர் தெரப்பி’ மூலம் சிகிச்சை அளிக்கிறார்கள். இப்போது நம் ஊர்களிலும் இது பிரபலமடையத் தொடங்கிவிட்டது. காலையில் வாக்கிங் முடித்து, பலர் ஒரே இடத்தில் கூடி, சிரித்து தங்கள் மனஅழுத்தத்தைப் போக்கிக்கொள்ளலாம். லாஃப்டர் தெரப்பியோடு, வீட்டில் பிடித்த நகைச்சுவைக் காட்சிகளை கண்டு களிப்பது, புத்தகம் படிப்பது, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பேசிப் பழகுவது எல்லாம் பலன்களைத் தரும். ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் சிரிப்பதால், மனஅழுத்தம் குறைந்து, ரத்த அழுத்தம் சீராகும். சிரிக்கும்போது நமக்குத் தெரியாமலேயே அதிகமாக சுவாசிப்பதுடன், அதிகமான ஆக்ஸிஜனையும் உள்வாங்குகிறோம். இதனால் ரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் உடனடியாகக் குறைகிறது.
நன்றி:- – வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்
- பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மது உள்ளே.. மதி வெளியே..
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மறந்துபோன மருத்துவ உணவுகள்
- மழலையில் மலரும் மொட்டுகள்
- மூட்டு வலி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாய்ப் புண்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
தராவீஹ் துஆ – TARAWEEH DUA
தராவீஹ் தொழுகைக்கு பிறகு ஓத வேண்டிய துஆ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ٭ اَللّٰهُمَّ اجْعَلْنَا بِالْاِيْمَانِ كَامِلِيْنَ وَلِفَرَائِضِكَ مُؤَدِّيْنَ وَلِلصَّلٰوةِ حَافِظِيْنَ، وَلِلزَّكٰوةِ فَاعِلِيْنَ ، وَلِمَا عِنْدَكَ طَالِبِيْنَ ، وَلِعَفْوِكَ رَاجِيْنَ ، وَبِالْهُدٰى مُتَمَسِّكِيْنَ ، وَعَنِ اللَّغْوِ مُغْرِضِيْنَ، وَفِي الدُّنْيَا زَاهِدِيْنَ ، وَفِى الْاٰخِرَةِ رَاغِيْنَ ، وَبِالْقَضَآءِ رَاضِيْنَ وَلِنِّعْمَاءِ شَاكِرِيْنَ ، وَعَلىَ الْبَلَآءِ صَابِرِيْنَ، وَتَحْتَ لِوَآءِ حَبِيْبِكَ وَنَبِيِّكَ وَصَفِيِّكَ وَرَسُوْلِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيٰمَةِ لاَئِذِيْنَ ، وَاِلَى الْحَوْضِ وَارِدِيْنَ ، وَمِنْ سُنْدُسٍ وَاٍسْتَبْرَقٍ مُتَلاَبِسِيْنَ ، وَمِنْ طَعَامِ الْجَنَّةِ اٰكِلِيْنَ ، وَمِنْ لَبَنٍ وَعَسَلٍ مُصَفًّى شَارِبِيْنَ ، بِاَكْوَابِ وَاَبَارِيْقَ وَكَأْسٍ مِنْ مَعِيْنٍ مَعَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِيْنَ ٭ اَللّٰهُمَّ اَجْعَلْنَا فِى هَذٰالشَّهْرِ الشَّرِيْفِ مِنَ السُّعَدَآءِ الْمَقْبُوْلِيْنَ وَلاَ تَجْعَلْنَا يَااللهُ يَا اَللهُ يَااَللهُ مِنَ الْاَشْقِيَآءِ الْمَرْدُوْدِيْنَ ٭ اَللّٰهُمَّ وَاِنَّ لَكَ فِيْ كُلِّ لَيْلَةٍ مِنْ لَيَالِيْ شَهْرِ رَمَضَانَ عُتَقَآءَ وَطُلَقَآءَ وَاُمَنَاءَ وَخُلَصَاءَ فَاجْعَلْنَا يَارَبَّنَا مِنْ عُتَقَآئِكَ وَطُلَقَآئِكَ وَاُمَنَائِكَ وَخُلَصَآئِكَ مِنَ النَّارِ وَالْعَفْوَ عِنْدَ الْحِسَابِ ٭ وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيَّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ
- அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
- அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
- ஆயத்துல் குர்ஸி
- இஃப்தார்துஆ
- இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது
- இறந்தவருக்காகச் செய்யும் துஆ
- என் கேள்விக்கு இறைவனின் பதில்
- கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்
- கடமையான தொழுகைக்குப்பின்
- கப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)
- கவலையின் போது ஓதும் துஆ
- ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ
- தலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)
- திடீர் சோதனைகள் அணுகாதிருக்க
- தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை
- நபியவர்களின் துஆ உஹுத் போரில்
- நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது
- பூரணமான மன்னிப்பைப் பெற
- மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது
- வீட்டிருந்து வெளியே செல்லும் போது
ரமழான் – சலீம் காரைக்கால்
உங்கள் சிந்தனைக்கு…
நோன்பு திறந்தவுடன் நோன்பின் கட்டுப்பாடுகள் அடுத்த நாள் ஸஹர் வரை தளர்ந்து விட்டது என்று நினைத்து…
இன்னும் சிலர் புகை பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.
பெண்களில் சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உட்கார்ந்து விடுகிறார்கள்.
கவனத்தில் கொள்ளுங்கள் .
ஆகவே இறைவனின் கட்டளைக்கு அடிபணிவதால்…
இரண்டு நிலையும் கடைபிடித்து நாள் முழுவதும் நோன்பில்தான் இருந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
- அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்
- இறுதித்தூதரின் இறுதிப் பேருரை
- தவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி
- நபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்
- நபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி!
- யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?
- விந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)
- ஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை!
- ஹவ்ளுல் கவ்ஸர்
வலுவான உடலுக்கு வைட்டமின் சி! – ந.ஆஷிகா
‘நோய் எதிர்ப்பு சக்திக்கும், கொலாஜன் என்ற புரத உற்பத்திக்கும் வைட்டமின்- சி மிகவும் அவசியம். இந்த கொலாஜன்தான் லிகமென்ட் என்று சொல்லக்கூடிய எலும்பு மூட்டு சவ்வுகள், ரத்தக் குழாய்கள், தசைகளுக்கு உதவுகிறது. மேலும், நம் சருமம் மற்றும் இதர உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்கும் காரணமாக இருக்கிறது. இது, மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ‘ என்றவர், இதர காய்கறி – பழங்களில் வைட்டமின் சி எவ்வளவு உள்ளது என்று பட்டியலிட்டார்.
இதில், வைட்டமின் சி இருக்கிறது. இதுதவிர, குடமிளகாயில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். பார்வைத் திறனுக்கு உதவுவதுடன், இளமையிலேயே கண் தொடர்பான பிரச்னைகளை அண்ட விடாமலும் காக்கும். சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும். மேலும் கூந்தலின் ஆரோக்கியத்தைக் காத்து நுனியில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கிறது. காய்கறி சாலட் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.
-
- பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மது உள்ளே.. மதி வெளியே..
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மறந்துபோன மருத்துவ உணவுகள்
- மழலையில் மலரும் மொட்டுகள்
- மூட்டு வலி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாய்ப் புண்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
காக்க காக்க… இளமை காக்க!
தங்களுடைய உண்மையான வயதைக் காட்டிலும் குறைவான வயது உடையவர்களாகத் தோற்றம் அளிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்! ஆனால், நடைமுறையில் பலரும் தங்கள் உண்மையான வயதைக்காட்டிலும் கூடுதலான வயதுடைய தோற்றத்தில் இருப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இளமையான தோற்றத்தோடு இருப்பது கடினமா என்ன? இளமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? வழிகள் என்ன? சித்த மருத்துவர் வேலாயுதம், அழகியல் நிபுணர் கீதா அசோக் மற்றும் யோகா பயிற்சியாளர் அகிலா ஆகியோர் அளித்த ‘யூத்ஃபுல்’ டிப்ஸ்களின் தொகுப்பு இங்கே…
உணவும் இளமையும்!
காலம் முழுவதும் இளமையோடு இருப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், இளமைத் தோற்றத்தை நீட்டித்துக்கொள்ள சில வழிகள் இருக்கின்றன. உண்ணும் உணவுக்கும் இளமையான தோற்றத்துக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய்கள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதிக அளவில் காய்கறி, கீரைகள், பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள். சமச்சீரான உணவுப் பழக்கம் தோற்றத்தில் இளமையைப் பெருமளவு தக்கவைக்கும்.
தவிர்க்க வேண்டியவை!
காபி, டீ ஆகிய பானங்களைக் குறையுங்கள். கோலா போன்ற குளிர்பானங்கள், மதுவைத் தவிர்த்துவிடுங்கள். புகை, மதுப் பழக்கத்தினால் சருமம் மிக விரைவில் முதுமைத் தன்மை அடைந்துவிடும். இதற்குப் பதில், ஆன்டிஆக்சிடென்ட்ஸ் அதிகம் உள்ள உணவைத் தினமும் எடுத்துக் கொள்ளலாம். கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது. இதைத் தினமும் சர்க்கரை, பால் சேர்க்காமல் குடிக்க வேண்டும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொய்யா, ஸ்ட்ராபெரி, அவகோடா (பட்டர் ப்ரூட்) இதில் ஏதேனும் ஒன்றைத் தினமும் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி!
ஒரு நாளைக்குக் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவையும் கூட நல்ல உடற்பயிற்சியே. ஆரோக்கியத்துக்காக உடற்பயிற்சியே கதி என்று இருப்பதும் கூடாது. உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருங்கள். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்ற எலும்பு – மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.
கண்களைச் சுற்றிக் கருவளையம் அது தருவதோ முதுமைத் தோற்றம்!
கண்களைச் சுற்றி உள்ள தோலில் இருக்கும் ஹீமோகுளோபி¬னைச் சில என்ஸைம்கள் சிதைக்கும்போது, சிவப்பு நிறம் போய்க் கருவளையங்கள் உருவாகின்றன. நிறையத் தண்ணீர் குடியுங்கள். குறைந்தது 8 மணி நேரம் தூங்குங்கள். உரிய மருத்துவரின் பரிந்துரையின்பேரில் குறிப்பிட்ட ஜெல்களைத் தடவுங்கள். 60% வரை கருவளையங்கள் காணாமல் போகும். இந்த ஜெல்கள் தோலில் உள்ள எலாஸ்டின் மற்றும் கோலாஜென் ஆகிய வேதிப்பொருட்களின் உருவாக்கத்தை அதிகரித்துக் கருவளையங்கள் தோன்றுவதைத் தடுக்கும். இளமைத் தோற்றத்தையும் கொடுக்கும்.
தோலில் சுருக்கமா? வருத்தம் வேண்டாம்!
வயது அதிகரிக்கும்போது நம் உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய ஆரம்பிக்கும். அதனால், நம் உடலில் இருக்கும் கோலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய இரண்டும் தளர ஆரம்பிக்கும். தோலில் இதனால் சுருக்கம் ஏற்படும். தினசரி இரண்டரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். தோலுக்கு நீர்ச்சத்தை அளித்து சுருக்கம் இல்லாமல் இது பார்த்துக்கொள்ளும். தேவையற்ற பொருட்களை உடலில் இருந்து கழுவி விரட்டும் ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. (சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், டாக்டரின் ஆலோசனைப் பெற்று தண்ணீர் அருந்த வேண்டும்.) வைட்டமின் சி, இ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், கெரட்டினாய்ட்ஸ் உள்ள பழங்களைச் சாப்பிடுவது தோல் இளமையாக இருக்க உதவும்.
நேரடி வெயில் தோலைச் சுருக்கும்!
நேரடியான சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால் தோலில் நீர் வற்றும். சுருக்கங்கள் தோன்றும். வெளியே செல்லும்போது முழுக்கைச் சட்டை, தொப்பி அணிந்து செல்லுங்கள். நண்பகலில் வெளியே சுற்றுவதைத் தவிருங்கள். அப்படியே வெளியே செல்லவேண்டி இருந்தால், அரை மணி நேரத்துக்கு முன்பு சன்ஸ்க்ரீன் க்ரீம் போட்டுக்கொள்ளுங்கள். இந்த க்ரீம்களின் எஸ்.பி.எஃப். அளவு 30-க்கு மேல் இருக்க வேண்டும். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை தொடர்ந்து இந்த க்ரீம் போட்டுக்கொண்டால் சூரியக் கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!
இரவில் நெடுநேரம் விழிக்க வேண்டாம். குறைந்தது 8 மணி நேரம், குறுக்கீடு இல்லாத நிம்மதியான தூக்கம் மறுநாள் முழுக்க உங்களைப் புத்துணர்ச்சியில் ஆழ்த்துவதைக் கண்கூடாக உணரலாம். முகமும் பளிச்சென்று இருக்கும்.
வசீகரிக்கும் இளமை!
சிறிது சர்க்கரையை ஆலிவ் எண்ணெயில் குழைத்துத் தோலில் பூசுங்கள். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்தும். சருமம் வழவழப்பாகும். தோல் பளபளப்பாக இருக்க நல்ல ரத்த ஓட்டம் தேவை. அதற்கு அதிகமான ஆக்சிஜன் வேண்டும். அதிக அளவு ஆக்சிஜனைச் சீரான உடற்பயிற்சி தரும். உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும். சிரிக்கும்போது முகத்தில் கூடுதல் ரத்தம் பாய்கிறது. பல தசைகள் வேலை செய்கின்றன. உற்சாகம் சூழ்கிறது. விளைவு, இளமை அதிக காலம் உங்கள் உடலில் குத்தகை கொள்ளும்!
தியானம் பழகு!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனதின் அமைதி முகத்தில் எதிரொலிக்கும். மனதுக்கு மட்டும் அல்ல, தியானம் செய்வதும் உடலுக்குப் பொலிவூட்டும். இரவு படுக்கச் செல்லும் முன் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி மனதை ஒருமுகப்படுத்திவிட்டுத் தூங்கச் செல்லுங்கள்.
இளமையாக எண்ணுங்கள்!
இளமையாக இருப்பதாகவே எப்போதும் எண்ணிக்கொள்ளுங்கள். தெளிவான சிந்தனை, ஆரோக்கியமான செயல்பாடுகள் போன்றவை உங்கள் ஆயுளை நீடிப்பது மட்டும் அல்ல… உடல் பொலிவையும் கூட்டும்.
இதயம் காப்போம்!
நீண்ட நேரம் கம்ப்யூட்டர், டி.வி. முன்பு அமர்ந்து இருக்காதீர்கள். டி.வி. பார்க்கும்போதோ அல்லது கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போதோ சுவாரஸ்யத்தில் அதிகக் கொழுப்பு உள்ள நொறுக்குத் தீனிகளைப் பலர் சாப்பிடுவது உண்டு. ஆனால், அந்தக் கொழுப்பை எரிக்கும் அளவுக்குத் துடிப்பான உடல் உழைப்பு ஏதும் இல்லாத சூழலில் இதயம் பலவீனப்படும். எனவே, அதிக நேரம் தொலைக்காட்சிப் பெட்டி முன்பு அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பதே முதுமையைத் தள்ளிப்போடுவதற்கான வழி.
முடி கொட்டாமல் இருந்தால் முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும்!
தினந்தோறும் தலையில் எண்ணெய் தேய்க்கும்போது மஸாஜ் செய்துகொள்ளுங்கள். ரத்த ஓட்டம் சீராக இருந்தால் முடியின் வேர்க்கால்களும் உறுதியாக இருக்கும். முடி அதிகம் கொட்டாது. வழுக்கை நெருங்காது. வசீகர இளமை எப்போதும் இருக்கும். தரமான ஷாம்பூகள், சோப்புகள் முடி கொட்டுவதைத் தவிர்க்கும்.
உடல் எந்த அளவுக்கு இளமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே அளவுக்கு நம்முடைய மூளையும் இருக்க வேண்டும் என்பது அவசியம். உடலை ‘சிக்’கென வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வதுபோல, மனதுக்கும் மூளைக்கும் கூடப் பயிற்சிகள் உள்ளன. சுடோகு, குறுக்கெழுத்துப் புதிர்ப் போட்டிகள் போன்றவற்றில் மனதைச் செலுத்தலாம். நினைவாற்றலை அதிகரிக்க உதவும் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்துசெய்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டே இருங்கள். நேர்மறையான சிந்தனையுடன் இருங்கள்.
ஆண் அல்லது பெண் இருவருக்கும் வயதாவதற்கான முதல் அறிகுறி தாடை மற்றும் கழுத்தில் தெரியும். தடித்த தலையணை பயன்படுத்துவோர்க்கு விரைவில் கழுத்தில் தொய்வு ஏற்பட்டுவிடும். தலையணையைத் தவிர்ப்பது அல்லது மெல்லிய தலையணையைப் பயன்படுத்துவதன்மூலம் இத்தகைய தொய்வுப் பிரச்னையை 10 வருடமாவது தள்ளிப்போடலாம்.
காலையில் பல் விளக்கும்போது கடைசிவாய் தண்ணீரை வெளியே கொப்பளித்துவிடாமல், கன்னம் நன்றாக உப்பும்படியாக வைத்து சிறிது நேரம் அந்த நிலையிலே இருக்கவும். அதன் பின் துப்பினால் உடலில் உள்ள நச்சுத்தன்மை (டாக்சின்) வெளியேறிவிடும். உடல் சூடு தணியும். கன்னம் தொய்வு அடையாமல் இருக்க இந்தப் பயிற்சி உதவும்.
உடலுக்கு மட்டும்தான் வயது, மனதுக்குக் கிடையாது. எனவே, வாழ்க்கையை இனிமையாகக் கொண்டாடுங்கள்.
– லதானந்த், உமா ஷக்தி
படம்: எஸ்.நாகராஜ்
நன்றி:- டாக்டர் விகடன்.
- அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத
- காய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்
- கூந்தலின் ஜீவன்
- தலைக்கு ஷாம்பு போடுகிறீர்களா? (கூந்தல் பராமரிப்பு)
- புருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே
- பொடுகுத் தொல்லை போயே போச்சு!
- மஞ்சள் மஞ்சக் கெழங்கே
- மருதாணி அழகில் ஒரு ஆபத்து!
- விட்டுக்கொடு வெற்றி பெறு!
- வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு
பணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தொழில் புரட்சியால் தோன்றிய தொழிற்சாலைகளில் தொழிற்சாலை தோன்றிய பகுதிகளில் பிறரைத் தொழுதறியாது உழுது உண்டு உயர்வாய் வாழ்ந்த பழங்குடி மக்களை அடிமைகளாக ஆக்கி அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி தேய்ந்து மாயும்வரை வேலை செய்ய வைத்து கோலூன்றி கொழுத்த கோடீஸ்வர முதலாளிகளின் கொட்டத்தை அடக்க கொதித்து எழுந்து போராடி தொழிலாளர் உரிமை பெற உயிர் நீத்த உத்தம தொழிலாளர்களை நித்தமும் நினைவில் நிறுத்தி பெற்ற உரிமைகளை உலகமய ஏகபோக முதலாளிகள் பறித்திடாது காக்க தொழிலாளர்கள் உறுதி ஏற்கும் ஏற்புடைய நாளே மே முதல் நாளாம்
இயம்புகிறார் ஆயிஷா (ரலி) நூல்- முஸ்லிம்.
இப்படித்தான் பணியாளரைப் பாராட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த உரையாடல்.
உற்றுழி உதவுவோம். உலகம் உய்யும்.
நன்றி:- தினமணி 11/10/2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
அண்மைய பின்னூட்டங்கள்