தொகுப்பு

Posts Tagged ‘கூட்டு’

மறந்து போன மருத்துவ உணவுகள் பகுதி-2 சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா


மருந்து சாதம்

தேவையானவை: சுக்கு – ஒரு துண்டு, வெள்ளை மிளகு – 2 டீஸ்பூன், திப்பிலி – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி. இவை அனைத்தையும் வறுத்து அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் – 2, பூண்டு – 5 பல், உப்பு – தேவையான அளவு, கறி மசாலாத் தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். அத்துடன், ஏற்கெனவே அரைத்துவைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். கூடவே பூண்டு போட்டு நன்றாக வதக்கியதும், உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதை சாதத்துடன் கலந்து பரிமாறலாம்.

மருத்துவப் பயன்: அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், வாரம் ஒருமுறை இதுபோல் சமைத்துச் சாப்பிட்டால், அஜீரணப் பிரச்னையே இருக்காது.

வல்லாரைக் கீரைக் கூட்டு

தேவையானவை: வல்லாரைக் கீரை – ஒரு கட்டு, தோல் நீக்கிய இஞ்சி – 50 கிராம், மிளகு – 5 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்துக் கடைந்து, கீரை, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு, வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து கீரைக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.

மருத்துவப் பயன்: மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும். நினைவாற்றலைத் தூண்டும். காக்காய்வலிப்பு, நரம்புக் கோளாறுகள், இதய நோய், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.

பானகம்

தேவையானவை: எலுமிச்சைச் சாறு – 200 மி.லி., மஞ்சள் வாழைப் பழம் – 10, நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு, சுக்கு – ஒரு துண்டு, ஏலக்காய் – 10.

செய்முறை: வாழைப் பழங்களை நன்றாகப் பிசையவும். சுக்கு, ஏலக்காயை லேசாகத் தட்டிக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறு உள்ளிட்ட எல்லாவற்றையும் போட்டுக் கலக்கவும். சிறிது நேரத்தில் தூசி அடியில் தங்கிவிடும். வடிகட்டிக் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்: தற்காலிகப் பசியைத் தணித்து, அரை மணி நேரத்தில், பசியைத் தூண்டிவிடும். பித்தத்தைத் தணிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். மயக்கம், களைப்பைப் போக்கும்.

அலுப்புக் குழம்பு

தேவையானவை: சுக்கு, சித்தரத்தை, பரங்கிச் சக்கை – தலா ஒரு துண்டு, மிளகு, வால் மிளகு, வெள்ளை மிளகு, மோடிக் குச்சி – தலா 10, திப்பிலி – 5, கடுகு, சீரகம், மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன், கத்தரிக்காய் – அரை கிலோ, மொச்சை – 100 கிராம், புளி – சிறிதளவு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: சுக்கு, சித்தரத்தை, மிளகு, பரங்கிச் சக்கை, வால் மிளகு, வெள்ளை மிளகு, திப்பிலி, மோடிக் குச்சி, சீரகம், மஞ்சள் தூள் இவற்றை லேசாக வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், ஊறவைத்த மொச்சை, அரைத்துவைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

மருத்துவப் பயன்: உடல் வலி, அசதியைப் போக்கும். சளித் தொல்லை நீங்கும். பசியைத் தூண்டும். அடிக்கடி சாப்பிட்டால், ரத்த உற்பத்தியை ஊக்குவிக்கும். குழந்தை பெற்ற பிறகு உடம்பில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளித்தள்ளும். அடிவயிற்றுச் சதையைக் குறைக்கும்.

நன்றி:- சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா 

இஞ்சி – மருத்துவ குணங்கள்

ஜூன் 25, 2013 1 மறுமொழி

ginger_juce

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது

இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
Ginger
தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.
DSC_3316
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.

பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, ‘பைப்ரினோலிடிக்’ செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.

இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.

இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.

எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

நன்றி:-  தமிழும் சித்தர்களும்.

நன்றி:- .

பிரிவுகள்:கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சீதாப்பழம் Custard Apple – மருத்துவக் குணங்கள்


சீதாப்பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard Apple (Sugar Apple) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால் தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.

பழத்தில் உள்ள சத்துக்கள்:-

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:-

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:-

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்:-

விதைகளை பொடியாக்கி, சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர, முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊற வைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்.

எலும்பு பலமடை

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன்,  நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:-

சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மித வெப்பப்பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில் இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப்பயன்படுகிறது.

நன்றி:- இனைய நன்பர்

நன்றி:- முகநூல் நன்பர்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

பிரிவுகள்:சீதாப்பழம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

செட்டிநாடு புலாவ் Chettinad Pulav


தேவையானவை

சீரக சம்பா அரிசி – ஒரு கிலோ
பெரிய வெங்காயம் – 5
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 4
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – ஒன்று
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புதினா – ஒரு கப்
கொத்தமல்லி – ஒரு கப்
பச்சை மிளகாய் – 4
தேங்காய் – அரை முடி

தாளிக்க:

கிராம்பு

பட்டை
பிரிஞ்சி இலை
ஏலக்காய்
செய்முறை 

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் தண்ணீரில்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் அடித்து இரண்டு கப் வருமாறு தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.

அதன் பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பொன்னிறமான பின் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.

பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

எலக்ட்ரிக் ரைஸ் குக்கரி்ல் கொட்டி அதனுடன் அரிசி, தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.

பின்னர் மூடி வைக்கவும். எலக்ட்ரிக் குக்கர் ஆப் ஆனவுடன் சூடாக எடுத்து பரிமாறவும்.

இப்பொழுது சூடான சுவையான செட்டிநாடு புலாவ் ரெடி. இதனுடன் வெங்காய பச்சடி சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

நன்றி:- இனைய நன்பர்

நன்றி:- முகநூல் நன்பர்

 

வாழைப்பூ – நாட்டு வைத்தியம் – மருத்துவக் குணங்கள் – மருத்துவ டிப்ஸ்



உணவில் காட்டாயம் சேர்க்கவேண்டிய வாழைப்பூ !!!

வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவைவாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சு
வையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது 

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இரத்த மூலம்

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல் 

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கைகால் எரிச்சல் நீங்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

நன்றி:- இனைய நன்பர்

நன்றி:- முகநூல் நன்பர்

பிரிவுகள்:கட்டுரைகள், வாழைப்பூ மருத்துவக் குணங்கள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

30 வகை கூட்டு! – வசந்தா விஜயராகவன்


ஜோரா சமைக்கலாம்.. ஜாலியா சுவைக்கலாம்…

.ம்… காய்கறிகளின் விளைச்சல் அதிகமாகிவிட்டதால், விலையும் மெள்ள குறைய ஆரம்பித்துவிட்டது. இனி, காய்கறிகளுடன் தைரியமாகக் கூட்டணி போடலாம் என்கிற சூழலில்… இங்கே 30 வகை கூட்டுகளை மணக்க மணக்கப் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்

.”காய்கறி, பருப்பு, பயறு, கிழங்குனு எல்லாத்தையும் கலந்து கட்டி அசத்தலாம்கிறதுதான் கூட்டுகளோட ஸ்பெஷாலிட்டியே! காய்கறிகளோட விலை, கண்காணாத உசரத்துக்கு எகிறினாலும் கவலைப்படத் தேவையில்ல. காய்கறிகளைக் குறைச்சலாவும், பருப்பு மற்றும் பயறு வகைகளைக் கூடுதலாவும் சேர்த்தா… அமர்க்களமான கூட்டு ரெடி. சப்புக் கொட்டிக்கிட்டே சாப்பிடலாமே!’’ என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார் வசந்தா விஜயராகவன்.

பிறகென்ன… காய்கறிகளோடு கூட்டணி போட்டு ஜமாயுங்க!

சௌசௌ மலபார் கூட்டு

.

தேவையானவை: சௌசௌ துண்டுகள் – 150 கிராம், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் விழுதாக அரைக்கவும். சௌசௌவில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

சேனைக்கிழங்கு மிளகு கூட்டு

தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய சேனைக்கிழங்கு – 150 கிராம், உளுத்தம்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். அரைத்து வைத்துள்ள கலவை, உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

கத்திரிக்காய்-போண்டா புளிக் கூட்டு

தேவையானவை: கத்திரிக்காய் – 4, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

வறுத்து அரைக்க: தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

போண்டா செய்ய: உளுத்தம்பருப்பு – 100 கிராம் (ஊற வைக்கவும்).

செய்முறை: கத்திரிக்காயை நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். ஊறிய உளுத்தம்பருப்புடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, போண்டாவாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். புளியைக் கரைத்து, வேக வைத்த கத்திரிக்காயில் விட்டு, வேக வைத்த துவரம்பருப்பு, கடலைப்பருப்பை போடவும். அரைத்து வைத்திருக்கும் பொடியையும் போட்டு கொதிக்கவிடவும். உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்குவதற்கு முன்பு பொரித்த போண்டாக்களைப் போட்டு ஒரு முறை கிளறி இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

காலிஃப்ளவர் மசாலா கூட்டு

தேவையானவை: காலிஃப்ளவர் – 100 கிராம் (உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்தால், புழுக்கள் நீங்கிவிடும்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய தக்காளி, வெங்காயம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரில் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். வேக வைத்த காலிஃப்ளவரை சிறிது எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். பொரித்து மீதமுள்ள எண்ணெயில் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கி… கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வரும்போது பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை அதில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு

தேவையானவை: நறுக்கிய கேரட், பீன்ஸ், அவரைக்காய், புடலங்காய் சேர்ந்த கலவை – கால் கிலோ, கடுகு, சீரகம், தனியா – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் – தலா 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை உப்பு போட்டு வேக வைக்கவும். தனியா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெந்த காய்கறிகளில் அரைத்த விழுதைக் கொட்டி, நன்றாகக் கொதித்ததும் சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், இஞ்சி தாளித்துக் கொட்டி இறக்கவும்.

சாம்பார் வெங்காயம் புளிக் கூட்டு

தேவையானவை: உரித்த சாம்பார் வெங்காயம் – 150 கிராம், புளி – எலுமிச்சம்பழ அளவு, துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை வதக்கி, புளிக் கரைசல் விட்டு வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

கொத்தவரங்காய் – மிளகு பொரித்த கூட்டு

தேவையானவை: கொத்தவரங்காய் – 150 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்தவரங்காயில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த கொத்தவரங்காயுடன் அரைத்த விழுது சேர்த்து, கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

பரங்கிக்காய் பால் கூட்டு

தேவையானவை: பரங்கிக்காய் – ஒரு கீற்று, பால் – அரை டம்ளர், பச்சை மிளகாய் – 2, சர்க்கரை – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

.

செய்முறை: பரங்கிக்காயைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்துக் குழையாமல் வேக விடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து, வெந்த பரங்கிக்காயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். கடைசியில் பால் விட்டுக் கலக்கவும்.

காரம், தித்திப்பு என கலக்கலாக இருக்கும் இந்தக் கூட்டு.

பாகற்காய் புளிக் கூட்டு

தேவையானவை: நறுக்கிய பாகற்காய் – 100 கிராம், புளி – எலுமிச்சம்பழ அளவு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம் – சிறு துண்டு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாகற்காயுடன் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து… வெந்த பாகற்காய், பருப்புடன் சேர்த்து, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

.தக்காளி பிட்லை

. தேவையானவை: தக்காளித் துண்டுகள் – 100 கிராம் (தக்காளி செங்காயாக இருக்க வேண்டும்), துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.

.வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

.செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். தக்காளித் துண்டுகளுடன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, உப்பு, வேக வைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கூட்டு பதத்தில் வந்ததும், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

. அவரைக்காய் பொரித்த கூட்டு

.தேவையானவை: நறுக்கிய அவரைக்காய் – 100 கிராம், பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், ரசப்பொடி – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: அவரைக்காயுடன் பயத்தம்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும். இதனுடன் உப்பு, ரசப்பொடி சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

. பாகற்காய்-எள்ளு புளிக் கூட்டு

. தேவையானவை: பாகற்காய் துண்டுகள் – 100 கிராம், எள்ளு – 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள், – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயம் – சிறிதளவு, வெல்லம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: சிறிது எண்ணெயில் எள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து… பாகற்காய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பாகற்காய் நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் வறுத்துப் பொடித்த எள்ளு, மிளகாய்த்தூள் சேர்த்து, மேலும் கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து நன்றாக கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

.கொண்டைக் கடலை புளிக் கூட்டு

.தேவையானவை: கொண்டைக் கடலை – 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு – ஒரு டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.

.செய்முறை: முந்தைய நாளே கொண்டைக் கடலையை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் புளிக் கரைசலை விட்டு… உப்பு, சாம்பார் பொடி சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலில் கொட்டவும். வேக வைத்த கொண்டைக் கடலையையும் கொட்டவும். பிறகு, சிறிது தண்ணீரில் கரைத்த கடலை மாவை அதில் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

.வெள்ளைப் பூசணி மோர் கூட்டு

. தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய வெள்ளைப் பூசணி துண்டுகள் – 200 கிராம், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கெட்டி மோர் – ஒரு டம்ளர், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: பூசணிக்காய் துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் வேக வைத்த பூசணிக்காய் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மோர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

.வாழைத்தண்டு புளிக் கூட்டு

.தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன்.

.

.வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – கால் கப்.

.செய்முறை: வாழைத்தண்டில் மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசலை விட்டு வேக விடவும். பருப்புகளை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வறுக்க கொடுத்தவற்றை வறுத்து அரைக்கவும். இந்த விழுதை வேக வைத்த வாழைத்தண்டு, பருப்புகளுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

.மிக்ஸ்டு வெஜிடபிள் புளிக் கூட்டு

.தேவையானவை: நறுக்கிய வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகள் எல்லாம் சேர்த்து – 200 கிராம், கடுகு, மஞ்சள்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, புளி – எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகளுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றி வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வெந்த காய்கறிக் கலவையில் கொட்டி, கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்க்கவும்.

. சேப்பங்கிழங்கு-தக்காளி ரோஸ்டட் கூட்டு

. தேவையானவை: வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்த சேப்பங்கிழங்கு – 150 கிராம், கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம், தக்காளி சாறு – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சாறு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை கடைசியாக சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

.சாதம், சப்பாதிக்கு ஏற்ற சைட் டிஷ் இது!

.பூசணி வடகம் புளிக் கூட்டு

. தேவையானவை: நறுக்கிய பூசணித் துண்டுகள் – 250 கிராம், பூசணி வடகம் – 10, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.பூசணி வடகம் செய்ய: 100 கிராம் உளுத்தம்பருப்பை ஊற வைத்து, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, 50 கிராம் பூசணி துருவலை கலந்து… ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து சிறிய உருண்டையாக செய்து, வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும்.

.செய்முறை: புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பூசணித் துண்டுகளை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் பூசணி வடகத்தை வறுத்து சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

. மரவள்ளிக் கிழங்கு புளிக் கூட்டு

. தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய மரவள்ளிக் கிழங்கு – 200 கிராம், தேங்காய்ப் பால் – ஒன்றரை டம்ளர், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: மரவள்ளிக் கிழங்கு துண்டுகளைத் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து… தக்காளி, வெங்காயம், சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு, வெந்த மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

.சாப்பாடு, டிபன் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் இது!

.சேப்பங்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு

. தேவையானவை: வேக வைத்து தோலுரித்த சேப்பங்கிழங்கு – 150 கிராம், கெட்டியான தேங்காய்ப் பால் – தலா ஒன்றரை டம்ளர், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

.

.செய்முறை: தேங்காய்ப் பாலில் சேப்பங்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி கலக்கவும்.

. பொடி சேர்த்த காய்கறி கூட்டு

.தேவையானவை: மீந்து போன காய்கறிக் கலவை (வீட்டில் மிச்சம் மீதி இருக்கும் எந்த காயையும் சேர்க்கலாம்) – 200 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், வேக வைத்த பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

.

.செய்முறை: காய்கறியில் தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த பயத்தம்பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் போட்டு, வெந்த காய்களையும் போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொட்ட வும்.

. பாகற்காய்-கொண்டைக் கடலை கூட்டு

.தேவையானவை: பொடியாக நறுக்கிய பாகற்காய் – 200 கிராம், வேக வைத்த கொண்டைக் கடலை – 100 கிராம், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3.

.செய்முறை: கொண்டைக் கடலையை வேக வைத்து கரகரப்பாக அரைக்கவும். புளியை தண்ணீர் விட்டு கரைத்து பாகற்காயில் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். புளிக் கரைசல், அரைத்த விழுது, வெந்த பாகற்காய், அரைத்த கொண்டைக் கடலை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து சேர்க்கவும்.

. பீட்ரூட்-தேங்காய் கூட்டு

.தேவையானவை: பொடியாக நறுக்கிய பீட்ரூட் – 150 கிராம், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய பீட்ரூட்டை இதில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி பேஸ்ட், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி… கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

.காராமணி-வேர்க்கடலை புளிக் கூட்டு

.தேவையானவை: காராமணி – ஒரு கப், வேர்க்கடலை – அரை கப் (2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்), புளி – எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3 (சிறிது எண்ணெயில் வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்).

.செய்முறை: காராமணியையும், வேர்க்கடலையையும் ஒன்றாக வேக வைக்கவும். புளியைத் தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்து இதில் ஊற்றி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

. கேரட்-பீன்ஸ்-இஞ்சி கூட்டு

.தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் – தலா 100 கிராம், இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு,

.

.செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

. பரங்கிக்காய் – காராமணி கூட்டு

.தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் – 150 கிராம், ஊற வைத்து, வேக வைத்த காராமணி – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக் காயுடன் வேக வைத்த காராமணியை சேர்த்து தண்ணீர் விட்டு, உப்பு, அரைத்த விழுதைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

.சுட்ட கத்திரி கூட்டு

.தேவையானவை: பெரிய கத்திரிக்காய் – 1, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா 50 கிராம், புளி – சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி, அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சுட்டெடுக்கவும். தோல் நன்றாக சுருங்கியதும் ஆற வைத்து, தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்கி… புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

.

.வாழைக் கச்சல் (பிஞ்சு) கூட்டு

. தேவையானவை: நறுக்கிய கச்சல் வாழைக்காய் – 150 கிராம், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.

.செய்முறை: தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும். வாழைக்காயில் மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

. சேனை புளிச்சேரி

.தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு – 150 கிராம், காய்ந்த மிளகாய் – 2, மிளகு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், கெட்டி மோர் – தலா 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: சிறிதளவு தேங்காய் எண்ணெயில் மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். இறக்கும்போது கெட்டி மோர் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

.உருளைக்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு

.தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய உருளைக்கிழங்கு – 200 கிராம், கடுகு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒரு டம்ளர், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். இஞ்சி – பச்சை மிளகாய் விழுதை சேர்த்துக் கிளறி, கடைசியாக தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

.இந்தக் கூட்டு சப்பாத்தி, அடைக்கு தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும் .

நன்றி:- வசந்தா விஜயராகவன்

நன்றி:- அ.வி


பிரிவுகள்:30 வகை கூட்டு! குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி – ராஜேஸ்வரி கிட்டு


நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் என்றாலே… ராக்கெட் வேகத்தில் உயரும் காய்கறி விலை, இந்தத் தடவை ஒளி வேகத்தில் உயர… ‘கறிகாய் சமைக்கறதையே மறந்துட வேண்டியதுதான்’ என கவலைக் குரல்கள் கேட்கின் 

”ஆனா, உடம்புக்குத் தேவையான சத்துக்கள் சரிவர சேராம… புதுவித பிரச்னை வந்துடும்” என குண்டு போடும் மதுரை, ராஜேஸ்வரி கிட்டு,

”கொஞ்சம் யோசனையோட செயல்பட்டீங்கனா… ஆனை விலை, குதிரை விலை காய்கறியைக்கூட அடங்கற விலைக்கு வாங்கின திருப்தி வந்துடும். அதாவது, காய்கறிகளோட தோலை பத்திரப்படுத்தி, அதையும் ஒரு கூட்டு, பொரியல்னு மாத்திடுங்க. தினம் தினம் கறிகாய் வாங்கி, காசை கரைக்கத் தேவைஇருக்காது” என்று சொல்வதோடு, காய்கறித் தோல், பழத்தோல் போன்றவற்றில் சுவையான பதார்த்தம், துவையல், ஜாம் என்று விதம்விதமாக சமைத்துக் காட்டி அசத்துகிறார்.

பின்குறிப்பு: தோலையெல்லாம் பக்குவமாக சீவி எடுத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக அலசி பயன்படுத்துவது முக்கியம்.

முற்றல் முருங்கைக்காய் வடை

தேவையானவை: முற்றிய முருங்கைக்காய் – 10, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப், சோம்புத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் – 2, இஞ்சி விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், அரிசி மாவு, நறுக்கிய பூண்டு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்காய் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியதும், சதையை வழித்தெடுத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல், அரைக்கவும். கடலைப்பருப்பை ஊற வைத்து, மசால் வடை பதத்தில் அரைக்கவும். இதனுடன் முருங்கை விழுது, (எண்ணெய் நீங்கலாக) மற்ற எல்லாவற்றையும் கலந்து சிறு வடைகளாகத் தட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடைகளைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

வெண்டைக்காய் காம்பு தோசை

தேவையானவை: வெண்டைக்காய் காம்பு, இட்லி அரிசி – தலா 2 கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியுடன் உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவிடவும். இதனுடன் நன்றாக சுத்தம் செய்த வெண்டைக்காய் காம்புகளைச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு, உப்பு போட்டுக் கலக்கி, ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயத்தை எண்ணெயில் லேசாக வதக்கி மாவில் கலந்து, தோசைகளாகச் சுட்டெடுக்கவும்.

தர்பூசணிப் பட்டை வற்றல்

தேவையானவை: தர்பூசணி மேல் தோலை நீக்கி, உட்புற வெள்ளைப் பட்டை, கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணியில் பிங்க் நிறத்தில் இருக்கும் சதைப்பகுதியை கத்தியால் வெட்டி தனியாக எடுத்து சாப்பிடவோ… ஜூஸ் செய்யவோ பயன்படுத்தலாம். வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியின் மேல் தோலை நீக்கி, இரண்டு அங்குல நீளமுள்ள துண்டுகளாக நறுக்கி, கொதிநீரில் 10 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து, வெயிலில் உலர்த்தி, நன்றாகக் காய்ந்ததும் பாட்டிலில் சேமிக்கவும். தேவைப்படும்போது, எண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம். மிகுந்த சுவையுடன் இருக்கும்.

தர்பூசணிப் பட்டை கூட்டு

தேவையானவை: தர்பூசணி உட்புற வெள்ளைப் பட்டை (நறுக்கியது) – ஒரு கப், சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு, நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப், தேங்காய் துருவல், கேரட் துண்டுகள் – தலா  கால் கப், தக்காளி – 3, சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன், மாங்காய் துண்டுகள் – அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணியின் உட்புறம் வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியை நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு… சாம்பார் பொடி, மாங்காய், கேரட், வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு, தர்பூசணி பட்டையை சேர்த்து வேகவிடவும். துவரம்பருப்பு, தேங்காய் துருவல், சோம்புத்தூள் போட்டு கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

முள்ளங்கி இலை கூட்டு

தேவையானவை: நறுக்கிய முள்ளங்கி இலை – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவல் – கால் கப், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி – தலா அரை கப், கீறிய பச்சை மிளகாய் – 2, கேரட் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், வடகம், பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கி இலையைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கடாயில் போட்டுச் சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் கேரட் துருவல், உப்பு, தேங்காய் துருவல், வேக வைத்த பருப்பு எல்லாவற்றையும் போட்டுக் கலந்து, கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடகத்தைப் போட்டு பொரித்து, பெருங்காயம் சேர்த்துத் தாளித்துக் கொட்டி இறக்கவும். விருப்பப்பட்டால் கைப்பிடி வறுத்த வேர்க்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்க்கலாம். சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

புடலங்காய் குடல் சட்னி

தேவையானவை: புடலங்காய் குடல் (விதையுடன் உள்ள நடுப்பகுதி) – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை – சிறிதளவு, வறுத்த எள் – ஒரு டேபிள்ஸ்பூன், புளி – கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 1 (நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். எள்ளை வெறும் கடாயில் பொரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, புடலங்காய் நடுப்பகுதியை போட்டு வதக்கி, தக்காளி சேர்த்துப் புரட்டவும். பச்சை வாசனை போனதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டிக் கலக்கவும்.

பீட்ரூட் தோல் உசிலி

தேவையானவை: சிறிது சதையுடன் சீவிய பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், கடலைப்பருப்பு – கால் கப், நறுக்கிய வெங்காயம் – அரை கப், கீறிய பச்சை மிளகாய் – 3, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,  கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கடலைப்பருப்பை போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்து, மிக்ஸியில் உதிர் உதிராகப் பொடிக்கவும். பீட்ரூட் தோலை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் இருபது நிமிடம் போட்டு, மறுபடி புது தண்ணீரில் நன்றாக கழுவி, உப்பு சேர்த்த தண்ணீரில் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கேரட் துருவலையும் சேர்த்து வதக்கவும். உதிர்த்த கடலைப் பருப்பைப் போட்டுக் கிளறி, வெந்த பீட்ரூட் தோல் துண்டுகளை சேர்த்துக் கிளறவும். எல்லாம் கலந்து உதிர் உதிராக வந்ததும் கொத்தமல்லித்தழை கலந்து இறக்கவும்.

சுரைக்காய் பஞ்சு, விதை துவையல்

தேவையானவை: சுரைக்காயின் விதையுடன்கூடிய நடுப்பகுதி – ஒரு கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை தனித்தனியே சிவக்க வறுக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, சுரைக்காய் நடுப்பகுதியைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்துப் புரட்டவும். இதனுடன் வறுத்த பருப்புகள், காய்ந்த மிளகாய், புளி, தக்காளி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுத் தேவையான தண்ணீர் தெளித்து கரகரப்பாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். சட்னியாக வேண்டுமானால்… மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

சௌசௌ தோல் சட்னி

தேவையானவை: ஓரளவு சதையுடன் தடிமனாக சீவிய சௌசௌ தோல் துண்டுகள் – ஒரு கப், தேங்காய் துருவல் – 2 டேபிஸ்ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு.

செய்முறை: சௌசௌ தோலை நன்றாகச் சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், பருப்பு வகைகளைத் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌசௌ தோல், கொத்தமல்லித் தழை, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி… புளி, தேங்காய் துருவல் மற்றும் வறுத்து வைத்துள்ளவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டிக் கலக்கவும்.

முருங்கைப்பூ மசாலா கிரேவி

தேவையானவை: முருங்கைப்பூ – ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி – தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை – கால் கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – 2, ஃபிரெஷ் க்ரீம், புதினா, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைப்பூவை கல், மண் நீக்கி, சுத்தமாகக் கழுவவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து… புதினா, பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, முருங்கைக்கீரை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி சேர்த்துக் கலந்து… முருங்கைப்பூ, உப்பு போட்டு, வெந்ததும் க்ரீம் சேர்க்கவும். தளதளவென கொதித்ததும் இறக்கவும்.

வேப்பம்பூ வற்றல்

தேவையானவை: வேப்பம்பூ – 2 கப், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், புளி பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள் – ஒரு டேபிஸ்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேப்பம்பூவை நன்றாகக் கழுவிப் பிழிந்து, மற்ற பொருட்களுடன் சேர்த்துப் பிசிறி, இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் நன்றாகக் காயும் வரை வெயிலில் உலர்த்தி எடுத்து, பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். தேவைப்படும்போது, இதை ரசத்தில் சிறிது போடலாம். வறுத்துச் சாப்பிடலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

ஆரோக்கியத்துக்கு உகந்த வற்றல் இது.

மா பருப்பு புளிக்குழம்பு

தேவையானவை: மாங்கொட்டையினுள் இருக்கும் பருப்பு – 2, புளி – எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு பல் – 20, வெல்லத்தூள் – சிறிதளவு, எண்ணெய், வடகம், சுண்டைக்காய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பூச்சி அரிக்காத மாங்கொட்டையை உடைத்து, உள்ளே உள்ள பருப்பை நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். புளியைத் தண்ணீர் விட்டுக் கரைத்து… உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… வடகம், சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய மா பருப்பையும் இதனுடன் சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை ஊற்றி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, மூடி போட்டுக் கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாக வந்ததும், வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.

வயிற்று உபாதைகளுக்கு மா பருப்பு நல்ல மருந்து.

வாழைக்காய் தோல் ஸ்டார் ஃப்ரை

தேவையானவை: வாழைக்காய்த் தோல் துண்டுகள் (முழு வாழைக்காயை நன்றாகக் கழுவி, முழுசாக வேக வைத்து, சிறிது சதையுடன் தோல் சீவிய துண்டுகள்) – ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு – 2. நறுக்கிய வெங்காயம் – கால் கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி விழுது, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு பல் – 8, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் வாழைக்காய் தோல் துண்டுகளை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி… மிளகாய்த்தூள், தனியாத்தூள், இஞ்சி விழுது, பூண்டு சேர்த்துப் புரட்டவும். பிசிறி வைத்திருக்கும் வாழைத் தோல், உருளைத் துண்டுகளை இதில் போட்டு வதக்கவும். சிறிது சிறிதாக எண்ணெய் சேர்த்து ரோஸ்ட் ஆகும்வரை வறுக்கவும். மொறுமொறுப்பாக வந்ததும், கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

வாழைப்பூ மடல் கூட்டு

தேவையானவை: வாழை மடல் துண்டுகள்  (வாழைப்பூவின் உள்ளே வெள்ளையாக உள்ள மடலை நறுக்கிய துண்டுகள்) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, குட்டி மாங்காய் துண்டுகள் தலா – அரை கப், சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவல் – தலா கால் கப், ஆம்சூர் பொடி, வெல்லத்தூள் – தலா டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, நீர் மோர் – சிறிதளவு, வடகம், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூ மடலை நறுக்கியவுடன் நீர்மோரில் போடவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைப்பூ மடலை பிழிந்து போட்டு, உப்பு, சாம்பார் பொடி, வெங்காயம், தக்காளி, மாங்காய் சேர்த்துக் கலந்து, மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும், தேங்காய் துருவல், வேக வைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… வடகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி… ஆம்சூர் பொடி, வெல்லத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும்.

உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த கூட்டு இது.

முருங்கை காம்பு சூப்

தேவையானவை: முருங்கைக்கீரை உருவிய பிறகு உள்ள காம்பு, கறிவேப்பிலை உருவிய பிறகு உள்ள காம்பு – தலா 100 கிராம், சுண்டைக்காய் – கால் கப், நறுக்கிய சின்ன வெங்காயம் – 6, எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,  மஞ்சள்தூள், உப்பு – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: காம்புகளை நன்றாகக் கழுவி துண்டுகளாக நறுக்கவும்.  சுண்டைக்காயைத் தட்டி, உடைத்து கடாயில் போட்டு, வெங்காயம் சேர்த்துப் புரட்டி… மஞ்சள்தூள், காம்புகளைப் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். சுண்டைக்காய் வெந்ததும் கடைந்து, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

இதைச் சாப்பிட்டால் வயிற்றில் பூச்சித் தொல்லை இருக்காது.

காய்கறி தோல் சூப்

தேவையானவை: சிறிது சதையுடன்கூடிய கேரட், பீட்ரூட், மாங்காய், உருளைக்கிழங்கின் தோல் துண்டுகள் – தலா அரை கப், காய்கள் வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் – 1, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, ஃப்ரெஷ் க்ரீம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: காய்கறி தோல்களை வெந்நீரில் நன்றாகக் கழுவி, கடாயில் போட்டு வதக்கி, தண்ணீர் விட்டு… உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வேக விடவும். இதை மிக்ஸியில் போட்டு விழுதாக்கி, காய்கள் வேக வைத்த நீரை சேர்த்துக் கொதிக்க விடவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் காய்கறி தோல் கலவையில் சேர்த்துக் கலக்கி, ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கி இறக்கவும்.

விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த பிரெட் துண்டுகளைப் போடலாம்.

கேரட் தோல் ரொட்டி

தேவையானவை: நறுக்கிய கேரட் தோல், அரிசி மாவு – தலா ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை நன்கு சுத்தம் செய்து, தோலை சற்று தடிமனாக சீவிக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு உதிர் உதிராக வரும்வரை அடிக்கவும். இதனுடன், எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லா பொருட்களையும் கலந்து, சுடுநீர் ஊற்றி, ரொட்டி தட்டுவதற்கேற்ப முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். இதிலிருந்து சிறிது மாவை எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து, கனமான ரொட்டியாகத் தட்டி, காயும் தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு முறுகலாகச் சுட்டெடுக்கவும்.

புதினா சட்னி, தேங்காய் சட்னி இதற்கேற்ற சைட்டிஷ்!

நாரத்தங்காய் தோல் பச்சடி

தேவையானவை: நறுக்கிய நாரத்தங்காய் தோல் – 2 கப், கீறிய பச்சை மிளகாய் – 4, பொடித்த வெல்லம் – அரை கப், புளி பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நாரத்தங்காய் தோலைக் கொதி நீரில் போட்டுப் பத்து நிமிடம் மூடி வைத்தால், நிறம் மாறி கசப்புத் தன்மை போய்விடும். பிறகு, தோலை சதுரத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் மூன்று கப் தண்ணீர் விட்டு, நாரத்தங்காய் தோல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் புளி பேஸ்ட், வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, நாரத்தங்காய் கலவையில் கொட்டி இறக்கி, ஆறியதும் பாட்டிலில் சேமித்துப் பயன்படுத்தவும்.

ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். எந்த சாதத்துக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

வாழைக்காய் தோல் சட்னி

தேவையானவை: வாழைக்காய் தோல் துண்டுகள் (சிறிது சதையுடன் இருப்பது போன்று சீவிக் கொள்ளவும்) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: வாழைக்காய் தோலை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து நறுக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, உளுத்தம்பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். அதே கடாயில் வாழைக்காய் தோல் துண்டுகளையும் லேசாக வதக்கி, புளி, இஞ்சி, உப்பு, வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு, கரகரப்பாக அரைக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டிக் கலக்கி பயன்படுத்தவும்.

பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையானவை: நறுக்கிய பீர்க்கங்காய் தோல் – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், புளி – கொட்டைப்பாக்கு அளவு, காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீர்க்கங்காய் தோலை வெந்நீரில் சுத்தமாக அலசிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் பீர்க்கங்காய் தோலை போட்டு வதக்கி, மற்ற பொருட்களுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

பப்பாளித் தோல் ஜாம்

தேவையானவை: பப்பாளித் தோல் துண்டுகள் – 2 கப், பப்பாளிப் பழ விழுது – அரை கப், சர்க்கரை – ஒன்றரை கப், சிட்ரிக் ஆசிட் – ஒரு டீஸ்பூன், ராஸ்பெரிஸ் ரெட் கலர் – அரை டீஸ்பூன், பைனாப்பிள் எசன்ஸ் – 3 டீஸ்பூன்.

செய்முறை: பப்பாளித் தோலை நன்றாக சுத்தம் செய்து, பழ விழுதுடன் சேர்த்து வேக வைத்து அரைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். இந்த விழுதில் சர்க்கரை சேர்த்து, வாய் அகன்ற குழிவான கடாயில் போட்டு, கைவிடாமல் கிளறவும். ஜாம் பதம் வந்ததும் சிட்ரிக் ஆசிட் கலந்து, ஐந்து நிமிடம் கிளறவும். ஒரு தட்டில் ஜாமைப் போட்டால், தண்ணீர் பிரிந்து வராமல் இருந்தால் அது சரியான பதம். கலர், எசன்ஸ் கலந்து உடனே இறக்கவும்.

பாட்டிலை மரப் பலகையின் மேல் வைத்து ஜாமை பாட்டிலில் சேமிக்கவும். ஜாமை முழுவதும் நிரப்பக்கூடாது. ஆறியதும் மூடி வைக்கவும்.

பப்பாளித் தோல் அசோகா

தேவையானவை: சிறிது சதையோடு நறுக்கிய பப்பாளிப் பழத் தோல் துண்டுகள் – 2 கப், இனிப்பில்லாத கோவா – 2 டேபிள்ஸ்பூன், வெந்த பாசிப்பருப்பு – அரை கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம்.

செய்முறை: பப்பாளிப் பழத்தோலை நன்றாக சுத்தம் செய்து, குக்கர் தட்டில் வைத்து தண்ணீர் தெளித்து, 10 நிமிடம் வேகவிடவும். இதை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை கடாயில் போட்டு, கோவா, பாசிப்பருப்பு, பாதி அளவு நெய், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதேபோல் மாம்பழத்தோலிலும் செய்யலாம்.

ஆரஞ்சுத் தோல் டூட்டி ஃப்ரூட்டி

தேவையானவை: நன்றாகக் கழுவி, மெல்லிய சிறு துண்டுகளாக்கிய ஆரஞ்சுப்பழத் தோல் – 2 கப், சர்க்கரை – கால் கப், பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஃபுட் கலர் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: ஒரு வாய் அகன்ற பாட்டிலில் ஒரு அடுக்கு சர்க்கரை, ஒரு அடுக்கு தோல் துண்டுகள் என மாற்றி மாற்றி போட்டு மெல்லிய வெள்ளைத் துணியால் பாட்டிலை மூடி ஒருநாள் முழுவதும் வைக்கவும். மறுநாள் காலை பஞ்சு போல் இளகியிருக்கும். சர்க்கரையும் சிரப் போல கரைந்திருக்கும். தோலை தனியே எடுத்து விட்டு, சிரப்பை அடுப்பில் கொதிக்கவிட்டு இறக்கி, பழத் தோல் துண்டுகளைச் சேர்த்துக் குலுக்கவும். ஊறியதும், மறுபடியும் துண்டுகளை தனியே எடுத்து காயவிடவும். தொடர்ந்து மூன்று நாள் இதுபோல் செய்து, சிரப் வற்றி லேசான ஈரம் இருக்கும்போதே மூன்றாகப் பிரித்து பச்சை, சிவப்பு, மஞ்சள் ஃபுட் கலரைப் போட்டுப் பிசிறி காயவிடவும். உலர்ந்தபின் பாட்டிலில் போட்டு மூடிவைத்துக் கொள்ளவும்.

கலர்ஃபுல் டூட்டி ஃப்ரூட்டி ரெடி!

எலுமிச்சம்பழத் தோல் ஊறுகாய்

தேவையானவை: எலுமிச்சைத் தோல் – 20, காய்ந்த மிளகாய் – 50 கிராம், கட்டிப் பெருங்காயம் – ஒரு துண்டு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், வெல்லம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்தைய நாளே, எலுமிச்சைத் தோலில் உப்பு, மஞ்சள் சேர்த்துப் பிசிறி மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை தனித்தனியே போட்டு வாசம் வரை வறுத்துப் பொடிக்கவும். மறுநாள் ஊறிய எலுமிச்சைத் தோலை சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, எலுமிச்சைத் தோல் துண்டுகளைப் போட்டு வதக்கி, பொடித்தவற்றையும் சேர்த்துக் கிளறவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். தோல் நன்றாக வெந்து, கையால் கிள்ளுகிற பதம் வந்ததும், வெல்லம் சேர்த்து இறக்கி, ஆற வைத்து, பாட்டிலில் சேமித்து பயன்படுத்தவும்.

பரங்கி பஞ்சு லட்டு

தேவையானவை: விதைகள் நீக்கப்பட்ட பரங்கிக்காயின் பஞ்சு போன்ற நடுப்பகுதி – ஒரு கப், தேங்காய் விழுது, பாசிப்பருப்பு – தலா கால் கப், பொடித்த வெல்லம் – அரை கப், நெய், பால் பவுடர் தலா – 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், வறுத்த முந்திரித் துருவல் – தேவையான அளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பரங்கி பஞ்சு பகுதியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். கடாயில் கால் கப் தண்ணீர் விட்டு, வெல்லத்தை சேர்க்கவும். அது கரைந்ததும், பரங்கி விழுது, பாசிப்பருப்பு பொடி சேர்த்துக் கிளறவும். இவை நன்றாக சேர்ந்து வந்ததும், பால் பவுடர், தேங்காய் விழுது, நெய் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வெந்து வந்ததும், எசன்ஸ் சேர்த்து இறக்கவும். லேசாக ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி, முந்திரித் துருவலில் புரட்டி எடுக்கவும்.

பீட்ரூட் தோல் ஜாம்

தேவையானவை: நன்றாகக் கழுவி நறுக்கப்பட்ட பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், நறுக்கிய பீட்ரூட் – கால் கப், சர்க்கரை – ஒரு கப், வறுத்த முந்திரி, திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பீட்ரூட் தோலை வெதுவெதுப்பான நீரில் போட்டு, உப்பு சேர்த்து, பதினைந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து புதிய தண்ணீரில் நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, பீட்ரூட் சேர்த்து குக்கர் தட்டில் வைத்து, சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை, உப்பு கலந்து, ஒரு கடாயில் போட்டு, அடுப்பில் வைத்து, கைபடாமல் கிளறவும். தளதளவென்று ஜாம் போல் வந்ததும், நெய், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

சப்பாத்தி, தோசை, சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். ரத்த சோகையைத் தடுக்கும்.

பரங்கி விதை பாயசம்

தேவையானவை: காய வைத்து உரித்த பரங்கி விதை – ஒரு கப், கசகசா – 3 டேபிள்ஸ்பூன், பால் – சிறிதளவு, தேங்காய்ப்பால் – 3 கப் (முழு தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் எடுத்து தனித்தனியே 3 கப்களில் வைக்கவும்), சர்க்கரை – கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம், ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்.

செய்முறை: கசகசாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து, பாலில் ஊற வைத்து, விழுதாக அரைக்கவும். பரங்கி விதைகளைக் காய வைத்து உரித்து (பெரிய கடைகளில் பாலிஷ் செய்து ரெடிமேடாகவும் கிடைக்கும்), சிறிது பாலை விட்டு விழுதாக அரைக்கவும். தேங்காயின் மூன்றாம் பாலை ஒரு கடாயில் ஊற்றி… அரைத்த கசகசா, பரங்கி விதை விழுதுகளைப் போட்டுக் கை விடாமல் கலக்கி, இரண்டாம் பாலையும் சேர்க்கவும். தேவையானால் வெந்நீர் சேர்க்கலாம். நன்றாகக் கொதித்ததும், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு, முதல் பாலைச் சேர்த்து கிளறி, எசன்ஸ் போட்டு இறக்கவும். முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொட்டவும்.

கேரட் தோல் கீர்

தேவையானவை: கேரட் தோல் துண்டுகள் – ஒரு கப், பால் – 2 டம்ளர், பாதாம் மிக்ஸ் – அரை கப், சர்க்கரை – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 30 கிராம்.

செய்முறை: கேரட்டை நன்றாக சுத்தம் செய்து, அதன் தோலை சீவி எடுக்கவும். உப்பு கரைத்த வெந்நீரில் அதை ஊற வைத்து, கழுவி நறுக்கவும். கடாயில் சிறிது பால் ஊற்றி, கேரட் தோலை அதில் வேக வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேறு கடாயில் மீதமுள்ள பாலை ஊற்றி, கேரட் தோல் விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் பாதாம் மிக்ஸை கரைத்து ஊற்றி, சர்க்கரை சேர்த்து, கொதித்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் பாதாம் எசன்ஸ் சில சொட்டுகள் சேர்க்கலாம்.

பீட்ரூட் தோல் அல்வா

தேவையானவை: பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், இனிப்பில்லாத கோவா – அரை கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – கால் கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், பாலில் கரைத்த குங்குமப்பூ – தலா அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம்.

செய்முறை: பீட்ரூட் தோலை வெதுவெதுப்பான நீரில் போட்டு பதினைந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து, புதிய தண்ணீரில் நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, குக்கர் தட்டில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மூன்று விசில் வந்ததும், இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கடாயில் போட்டுக் கிளறவும். நீர் வற்றியதும், பாதி அளவு நெய் விட்டு கோவாவை உதிர்த்துச் சேர்த்துக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வந்ததும்… ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, பாலில் கரைத்த குங்குமப்பூவைக் கலந்து இறக்கவும். வறுத்த முந்திரி, திரட்சை, சாரைப்பருப்பை போட்டு, மீதமுள்ள நெய்யை விட்டு கலக்கவும்.

நெல்லிக்கொட்டை டீ

தேவையானவை: நெல்லிக்கொட்டை – அரை கப், புதினா, துளசி இலை – தலா 15, கருப்பட்டி – தேவையான அளவு, சுக்கு – சிறு துண்டு.

செய்முறை: நெல்லிக்கொட்டைகளை நன்றாக உடைத்துக் கொள்ளவும். கடாயில் இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி நெல்லிக்கொட்டைகளைப் போட்டு கொதிக்கவிடவும். சுக்கை தட்டிப் போட்டு, துளசி இலை, புதினா, கருப்பட்டி சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி வெதுவெதுப்பாக அருந்தவும்.

இந்த டீ, மழை காலத்தில் அருந்த சூப்பராக இருக்கும். சளி, இருமல் வராமலும் தடுக்கும்.

தொகுப்பு: ரேவதி
படங்கள்: எம்.விஜயகுமார்

நன்றி:- மதுரை, ராஜேஸ்வரி கிட்டு

நன்றி:- அ.வி

    பிரிவுகள்:விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

    30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்


    “நாலுபடி ஏறுனதுக்கே இப்படி மூச்சு வாங்குது. ‘வெயிட்டக் குறைங்க, வெயிட்டக் குறைங்க’னு டாக்டர் சொல்றாரு. என்னென்னமோ செஞ்சுப் பாத்துட்டேன்… வெயிட் குறைய மாட்டேங்குது” நம்மில் பலர் இப்படி புலம்பிக் கொண்டும்…

    “இவ மட்டும் எப்பப் பார்த்தாலும் ‘சிக்’னு இருக்காளே… என்ன மாயா ஜாலம் பண்றா?” என்று சிலரைப் பார்த்து ஏங்கிக் கொண்டும் இருக்கிறோம்.

    உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து மற்றும் சில கெமிக்கல்கள் உடம்பில் தங்கி விடுவதுதான் காரணம் என்பது நிபுணர்களின் கருத்து. அதிகப்படியான இந்தச் சத்துக்கள் உடலில் தங்குவதற்குக் காரணம்… நம்முடைய வழக்கமான சாப்பாடு முறைதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரிசியை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் நாம், தானியங்கள், காய்கறி மற்றும் பழங்களை அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை.

    ‘இந்த ரொட்டீன் சாப்பாட்டு முறையை மாற்றி, தினசரி உணவில் வெரைட்டியான உணவுகளை செய்து சாப்பிட்டால் உடல் பருமன் பிரச்னை வராது’ என்பது மருத்துவர்களின் அறிவுரை.

    இதையெல்லாம் அலசி ஆராயும் சேலம், சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி முதல்வர் கா.கதிரவன், ”நெகட்டிவ் கலோரி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருக்கும். அதாவது, நாம் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரியைவிட, அதை எரிப்பதற்காக நம் உடல் செலவிடும் கலோரியின் அளவு இருமடங்காக இருக்கவேண்டும். அதுதான் நெகட்டிவ் கலோரி உணவுப் பொருள். இத்தகைய நெகட்டிவ் கலோரி உணவு ரெசிபி என்னிடம் ஏகப்பட்டவை இருக்கின்றன. அவற்றைச் சாப்பிட்டே, 4 மாதத்தில் 18 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன்” என்று தன்னுடைய அனுபவத்தைச் சொல்வதோடு, அத்தகைய உணவுகளில் 30 வகையை இங்கே உங்களுக்காக சமைத்துக் காண்பித்திருக்கிறார்.

    “தினசரி உணவில் இதில் ஏதாவது ஒன்றைக் கட்டாயம் சேர்த்து வாருங்கள், உடல் எடையில் மாற்றம் காண்பீர்கள். ‘சிக்’கென்று இருப்பவர்களிடம், அந்த ரகசியத்தைக் கேட்டுப் பாருங்கள் நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும்” என உறுதியாகச் சொல்கிறார் கதிரவன்.

    ஜஸ்ட் ட்ரை… ஹெவ் எ ஹெல்தி லைஃப்!

    ———————————————————————————————-

    முட்டைகோஸ் சூப்

    தேவையானவை: முட்டைகோஸ் – கால் கிலோ, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும், நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர் விட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து, கால் மணிநேரம் கொதிக்க விடவும். வாசம் வந்ததும், இறக்கி வடிகட்டி, மிதமான சூட்டில் பரிமாறவும்.

    குறிப்பு: காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகி வர, உடல் கொழுப்பு கரையும்.

    ———————————————————————————————————

    ஃப்ரூட்ஸ் அடை

    தேவையானவை: அரிசி – ஒரு கப், உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், அன்னாசி – ஒரு கப், திராட்சைப்பழம் – ஒரு கப், கடலைப்பருப்பு – 100 கிராம். உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, உளுந்தைத் தனித் தனியாக ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும். மூன்றையும் ஒன்றாக்கி அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, நறுக்கிய ஆப்பிள், அன்னாசியையும் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும். இதை தோசைக்கல்லில் அடை களாக வார்த்து, சிறிது எண்ணெயை இருபுறமும் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்க… வாசனையான ஃப்ரூட்ஸ் அடை தயார்.

    குறிப்பு: அடை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். சத்துகள் நிரம்பிய லைட்டான டிபன் இது!

    —————————————————————————————-

    பழ பாயசம்

    தேவையானவை: ஆரஞ்சு (உரித்து கொட்டை நீக்கியது) – 1, நறுக்கிய அன்னாசி – 2 துண்டுகள், மாதுளை முத்துக்கள் – கால் கப், நறுக்கிய சிறிய கொய்யா – 1, திராட்சை – 20, பால் – ஒரு கப், சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு, சேமியா – 100 கிராம்.

    செய்முறை: பழங்களை நன்கு கழுவிக் கொள்ளவும். அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய ஜுஸ§டன் காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும் சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, ஜூஸ§டன் சேர்த்து நன்கு கலந்தால், பழ பாயசம் ரெடி!

    குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படும்போது குறைந்த கலோரிகள் உள்ள இதனைச் செய்து சாப்பிடலாம்.

    —————————————————————————————————

    கம்பு ரொட்டி

    தேவையானவை: கம்பு மாவு – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கம்பு மாவில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை வார்த்து, கனமான ரொட்டிகளாக சுட்டெடுக்கவும். சுட்ட ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி, கம்பு ரொட்டித் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

    குறிப்பு: காலை நேர டிபனுக்கு உகந்தது. அதிக நேரம் பசி தாங்கும் என்பதால் நொறுக்ஸ் சாப்பிடும் எண்ணம் தோன்றாது.

    —————————————————————————————————–

    பட்டாணி கேரட் அடை

    தேவையானவை: பட்டாணி – கால் கிலோ, மெல்லியதாக நறுக்கிய கேரட் – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லி – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: பட்டாணியை ஊற வைத்துக் கழுவி மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அந்த மாவில்… நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும். அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

    குறிப்பு: பட்டாணியில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’ அதிகமுள்ளது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கிறது.

    ———————————————————————————

    பருப்புக் கூட்டு

    தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 1, குடமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4 பல், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும். ஊற வைத்த பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பாத்திரத்தில் போட்டு நன்கு வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி வெந்து கரைந்ததும், வேக வைத்த பருப்பைச் சேர்க்கவும். எல்லாம் கலந்து வாசனை வந்ததும் இறக்கவும்.

    குறிப்பு: சாதம், சப்பாத்திக்கு சரியான ஜோடி. புரோட்டீன் சத்து நிறைந்தது. தினமும் துவரம்பருப்பு சாம்பார் செய்வதற்கு சிறந்த மாற்று முறைக் கூட்டு.

    —————————————————————————————-

    மிளகு தானிய சூப்

    தேவையானவை: ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம், மிளகு – ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை – 2, வெங்காயம் – 2, நறுக்கிய கேரட் – கால் கப், சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பிரியாணி இலை தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

    குறிப்பு: இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.

    ——————————————————————-

    காய்கறி உப்புமா

    தேவையானவை: ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் (நறுக்கியது) – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி போட்டுக் கலந்து, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து அரை பதத்தில் வேக விடவும். இந்தக் காய்கறி கலவையுடன் வறுத்த ரவையைச் சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால், தண்ணீர் விட்டு வேக விடவும். இறக்குவதற்கு முன், தயிர் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.

    குறிப்பு: அனைத்து சத்துகளும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் டிபன் இது! அதிக கலோரி இல்லாததால் டயட்டுக்கும் சத்துக்கும் உகந்தது.

    ———————————————————————

    தினை மாவு அடை

    தேவையானவை: தினை மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), கடுகு-சிறிதளவு, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுந்து – தலா கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

    செய்முறை: கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும். கழுவி, நன்கு அரைத்து, தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அதை அடை மாவில் கொட்டிக் கலக்கவும். தேங்காய் துருவல். உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

    குறிப்பு: இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.

    ———————————————————

    பட்டாணி காலிஃப்ளவர் கூட்டு

    தேவையானவை: பச்சைப் பட்டாணி – ஒரு கப், துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவர் – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவரை தனித்தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

    குறிப்பு: சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் உள்ளதால் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்.

    ——————————————————————

    கொண்டைக்கடலை மசாலா

    தேவையானவை: கொண்டைக்கடலை – 200 கிராம், நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா 2, சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் – முக்கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கொண்டைக்கடலையை ஊற வைத்துக் கழுவி, வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத்தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும். நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

    குறிப்பு: சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ். இதை, காலை நேரத்தில் சாப்பிடுவது உடல் வலுப்பெற உதவும்.

    ————————————————————————–

    புளிப்பு இனிப்பு காளான்

    தேவையானவை: காளான் – அரை கப், நன்கு கழுவி நறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ், காலிஃப்ளவர், உரித்த பட்டாணி கலவை – அரை கப், வெங்காயம் – 1, தக்காளி சாஸ், சர்க்கரை – தேவையான அளவு, கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: சுடுநீரில் காளானைக் கழுவி, தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறி மற்றும் பட்டாணிக் கலவையை வேக வைத்து, ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். காளான் தண்டை நீக்கிவிட்டு, அரைத்த விழுதை அந்த இடத்தில் வைத்து ஸ்டஃப் செய்யவும். தக்காளி சாஸ§டன் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். ஸ்டஃப் செய்த காளன் மேல் தக்காளி சாஸைத் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வறுத்து, சாஸ் தடவிய காளனையும் போட்டு மென்மையாக வதக்கிப் பரிமாறவும்.

    குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், அனைத்து விட்டமின்களும், தாது சத்துக்களும் நிறைந்த இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதைக் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு வரும்.

    ————————————————————————

    முளைகட்டிய தானிய சப்பாத்தி

    தேவையானவை: பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை – தலா ஒரு கப், மைதா – கால் கிலோ, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும். முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மைதா மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும். தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    குறிப்பு: முளைகட்டிய தானியங்களில் அனைத்துச் சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும். இதனை காலை, இரவு நேர டிபனாக அடிக்கடி சாப்பிட்டு வர… சத்துக் குறைபாடுகள் நீங்கி, உற்சாகமாக இருக்க வைக்கும்.

    வாழைப்பூ அடை

    தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப் வெங்காயம் – 3, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும். நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.

    குறிப்பு: வாழைப்பூ வடை, அதிக எண்ணெய் இழுக்கும். ஆனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.

    ————————————————-

    பார்லி  மசாலா சாதம்

    தேவையானவை: பார்லி, பீன்ஸ் – தலா 100 கிராம், வெங்காயம், தக்காளி – தலா 2, பட்டை, கிராம்பு – தலா 1, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: பார்லி, பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இஞ்சி- பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தாளித்துக் கொள்ளவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியதும், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, எல்லாம் ஒன்றாகக் கலந்து வரும் வரை வதக்கவும். வேக வைத்த பார்லி, பீன்ஸை சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

    குறிப்பு: பார்லியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது; உடல் பருமனை குறைக்கும். பார்லியை வெறுமனே சாப்பிடப் பிடிக்காதவர்கள் இவ்வாறு செய்து சாப்பிட… சுவையாக இருக்கும்.

    ——————————————

    சௌசௌ தர்பூசணி தோல் துவையல்

    தேவையானவை: சௌசௌ தோல், தர்பூசணி தோல் கலவை – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: சௌசௌ, தர்பூசணி தோலை நன்கு கழுவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுக்கவும். கழுவிய காய்கறித் தோல், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.

    குறிப்பு: காய்கறிகளின் தோலின் அடிப்புறத்தில்தான் அதிகமான விட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றை நாம் சீவி, எறிந்து விடுவதால், முழுமையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இவ்வாறு துவையல் செய்து சாப்பிடுவதால் அந்தச் சத்துக்கள் கிடைக்கும். தோல் துவையலின் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

    ———————————————————

    உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு

    தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – 2, வெங்காயம் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: உருளைக்கிழங்கை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக் கழுவிக் கொள்ளவும். கடலைப்பருப்பைக் கழுவி, இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும். பிறகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து, அது நன்கு கரையும் வரை வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், வேக வைத்தவற்றைச் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

    குறிப்பு: சாதம், சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம். காலை, மதிய நேரங்களில் இதைச் சாப்பிடுவதே உகந்தது.

    ———————————————————————-

    மக்காச்சோள ரொட்டி

    தேவையானவை: சோள மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் காதிகிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), மைதா மாவு – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: சோள மாவு, மைதா மாவை ஒன்றாகக் கலக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிக நேரம் ஊற வைக்கத் தேவையில்லை. பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாகத் தேய்த்துக் கொள்ளவும். சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

    குறிப்பு: மக்காச்சோளத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. ஆனால், உடல் எடை குறைப்புக்கு இது அதிகம் உதவும் என்பதால்தான், கார்ன்ஃப்ளேக்ஸ்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இப்படி ரொட்டி செய்து சாப்பிடும்போது மக்காச்சோளத்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

    ————————————————————————

    வீட் எனர்ஷி டிரிங்க்

    தேவையானவை: கோதுமை, பாசிப்பருப்பு – தலா 100 கிராம், சின்ன வெங்காயம் – 5, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், கொத்தமல்லி – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கோதுமை, பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதனைக் கழுவி, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, வெந்த கோதுமை-பாசிப்பருப்பை வெளியே எடுக்கவும். இதை ஆற வைத்து, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    குறிப்பு: கோதுமையை வழக்கமான முறையில் இல்லாமல் இப்படி வித்தியாசமாக செய்து சாப்பிடும்போது, அதிலுள்ள முழுச் சத்தும் கிடைக்கிறது. மற்ற பானங்களைவிட, இது அதிக நேரம் பசி தாங்கும்.

    —————————————————-

    துவரம்பருப்பு சூப்

    தேவையானவை: துவரம்பருப்பு – 100 கிராம், இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு, கொத்துமல்லி – சிறிதளவு, வெங்காயம் – 1.

    செய்முறை: துவரம்பருப்பைக் கழுவி நன்றாக வேகவிடவும். வெந்ததும், வடிகட்டவும். வடிகட்டிய நீரில் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒருமுறை கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கியதும் பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கலந்து பரிமாறும்.

    குறிப்பு: பசியைத் தூண்டும் தன்மையுள்ள, புரோட்டீன் சத்து நிறைந்த சூப் இது. உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் இதனைச் சாப்பிடலாம்.

    ——————————————————

    வெஜ்  ஃபிஷ்  ஃப்ரை

    தேவையானவை: நன்கு கழுவி, நீளமாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், மைதா, கோதுமை மாவு – தலா கால் கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: கடாயில், எண்ணெய் விட்டு நறுக்கிய காய்களைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியதும், மைதா, கோது மாவை அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, காய்கறி கலந்த மாவு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போதே, மீன் வடிவத்தில் உருட்டவும். இதனை, தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

    குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், இப்படி செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன் மூலம் அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும்.

    —————————————————-

    கீரை  கோஃப்தா கறி

    தேவையானவை: ஆய்ந்து, நன்கு அலசி, நறுக்கிய கீரை – ஒரு கட்டு, பனீர் (துருவியது) – 100 கிராம், உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 1, முந்திரி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், வெங்காய விழுது – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தயிர் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: கீரையை வேக வைக்கவும். துருவிய பனீர், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், உப்பு ஆகியவற்றை கீரையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அதில் கீரை உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயில், எண்ணெய் விட்டு அதில் முந்திரி பேஸ்ட், வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி தயிர் சேர்த்துக் கலக்கவும். அதில் பொரித்த கோஃப்தா உருண்டைகளை சேர்த்து வதக்கி, எடுத்துப் பரிமாறவும்.

    குறிப்பு: அதிக கலோரியும் சத்தும் நிறைந்த இந்த உணவை எப்போதாவது ஒருமுறை செய்து உண்ணலாம். இதை உண்ட பிறகு, அடுத்த வேளை உண்ணும் உணவு லைட்டாக இருத்தல் நலம்.

    ———————————————–

    கீரை ரொட்டி

    தேவையானவை: அரிசி மாவு – கால் கிலோ, ஆய்ந்த கீரை – ஒரு கப், வெங்காயம் – 1, மைதா – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: ஆய்ந்த கீரையையும் வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு, மைதா, நறுக்கிய கீரை, வெங்காயம், உப்புடன் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுக்கவும்.

    குறிப்பு: கீரையை எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், இதே போல் செய்து சாப்பிடலாம். காலை, மாலை டிபனுக்கு உகந்த உணவு!

    ————————————————–

    மிக்ஸட் ரொட்டி காய்கறி சட்னி

    தேவையானவை: சோயா மாவு, மைதா மாவு, கம்பு மாவு, சோள மாவு – தலா 100 கிராம், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃப்ளவர் கலவை – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: எல்லா மாவையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு நன்கு பிசையவும். சிறிது நேரம் கழித்து ரொட்டிகளாக சப்பாத்திக் கல்லில் தேய்க்கவும், ரொட்டிகளை தவாவில் இட்டு, எண்ணெய் விடாமல் சுட்டு எடுத்தால், பலவித சத்துக்கள் நிறைந்த மாவுகள் கொண்ட மிக்ஸட் ரொட்டி தயார்.

    கடாயில் எண்ணெய் விட்டு, கொடுத்துள்ள காய்கறிகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை மிக்ஸட் ரொட்டிக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.

    குறிப்பு: இந்த காம்பினேஷனில் அனைத்து விட்டமின்களும் சத்துக்களும் சரியாகக் கலந்துள்ளன. டயட்டில் இருப்பவர்கள், சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து சாப்பிட்டு வர, பலன் கிடைக்கும்.

    ———————————————————

    நூல்கோல் சப்பாத்தி

    தேவையானவை: நன்கு கழுவி மெல்லியதாக நறுக்கிய நூல்கோல் – ஒரு கப், கோதுமை மாவு – அரை கிலோ, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: நூல்கோலை வேக வைக்கவும். கோதுமை மாவில் உப்பு, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து, ஈரத் துணியால் 15 நிமிடம் மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேக வைத்த நூல்கோல் சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் சுருள வதக்கவும். பிசைந்த மாவில் கொஞ்சம் எடுத்து கிண்ணம் போல் செய்து, அதற்குள் வதக்கிய நூல்கோலை கொஞ்சம் வைத்து சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் விடாமல் சுட்டு எடுக்கவும்.

    குறிப்பு: நூல்கோல் காயை அதிகம் விரும்பிச் சாப்பிடாதவர்கள், இதேபோல் செய்து சாப்பிடலாம். உடல் எடையைக் குறைப்பதில் நூல்கோலுக்கு முக்கிய இடம் உண்டு.

    ———————————————–

    நவரத்தின புலாவ்

    தேவையானவை: சாமை அரிசி (பெரிய மளிகைக் கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் – தலா 1, நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, குடமிளகாய், பீன்ஸ் கலவை – ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: சுத்தம் செய்த சாமை அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த சாமை அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து, இதனுடன் சேர்க்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் வைத்து மூடவும். மிதமான தீயில் வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை வதக்கவும். குக்கரில் ஆவி போனதும், மூடியைத் திறந்து வதக்கிய காய்கறிகளை சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

    குறிப்பு: பாசுமதி அரிசியில் செய்யப்படும் புலாவுக்கு இணையான சுவையுடன் கூடிய இந்த புலாவ், குறைந்த கலோரிகளில் அதிக சத்து நிறைந்தது.

    ———————————————————————-

    கலர்ஃபுல் புட்டு

    தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் துருவல், கேரட் துருவல், ஆய்ந்து நறுக்கிய கீரை – தலா அரை கப், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: அரிசி மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு புட்டு மாவு பதத்தில் பிசறிக் கொள்ளவும். புட்டுக்குழாயில் பிசறிய அரிசி மாவை முதலில் வைத்து, அதன் மேல் தேங்காய் துருவலை வைக்கவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவுடன் கேரட்டை சேர்த்துக் கலந்து வைக்கவும். அதன் மேல் தேங்காய் துருவலைத் தூவவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவில் போட்டுப் பிசறிய கீரையை வைக்கவும். அதன்மேல் கொஞ்சம் தேங்காய்த் துருவலை தூவவும். இதனை ஆவியில் வேக வைத்து, வெந்ததும் கம்பியால் புட்டை வெளியே எடுத்துப் பரிமாறவும்.

    குறிப்பு: கார்போஹைட்ரேட், விட்டமின், தாது உப்புக்கள் அதிகம் அடங்கிய, எண்ணெய் கலக்காத உணவு இது. எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.

    ————————————————————-

    தர்பூசணி மசாலா

    தேவையானவை: தர்பூசணி – கால் கிலோ, தக்காளி – 3, வெங்காயம் – 2, பட்டை, கிராம்பு – தலா 2, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, தேன் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தர்பூசணியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், அரைத்த வெங்காயம்-தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், நறுக்கிய தர்பூசணியைச் சேர்த்துக் கலந்து, வெந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன், தேன் கலந்து பரிமாறவும்.

    குறிப்பு: தர்பூசணியை பழமாக மட்டும் சாப்பிடாமல், இப்படி மசாலாவாகவும் செய்து சாப்பிடலாம். தேன் கலப்பதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

    ———————————————————————-

    முளைகட்டிய பயறு சாலட்

    தேவையானவை: பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, கம்பு, கொள்ளு கலவை – ஒரு கப், எலுமிச்சம் பழம் – 1, வெங்காயம் – 1, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: எல்லா பயறுகளையும் தண்ணீரில் ஊற வைக்கவும். அவற்றைக் கழுவி, முதல் நாள் இரவே ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில் அவை முளை விட்டிருக்கும். முளைவிட்ட பயிர்களுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.

    குறிப்பு: புரோட்டீன், விட்டமின் சத்து நிறைந்த, கொழுப்பு சத்து இல்லாத இயற்கை வழி உணவு. காலை, மாலை நேர உணவாக இதை சாப்பிடலாம். நொறுக்குத் தீனி அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை உபாதை ஏற்பட்டு அவதிப்படுபவர்கள், இதை சாப்பிடலாம்.

    ——————————————————

    பாகற்காய் அல்வா

    தேவையானவை: பாகற்காய் – கால் கிலோ, காய்ச்சிய பால் – ஒரு கப், முந்திரி, உலர்ந்த திராட்சை – தலா 10, சுகர் ஃப்ரீ சர்க்கரை, நெய் – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.

    செய்முறை: பாகற்காயை மெல்லியதாக நறுக்கி, கொட்டை நீக்கி கழுவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து வேக விடவும். நன்கு வெந்தவுடன் வடிகட்டவும் (வடிகட்டிய நீரை சூப்பாகப் பயன்படுத்தலாம்). வெந்த பாகற்காயுடன் பால் சேர்த்து மீண்டும் குழைய வேக வைக்கவும். பாகற்காயும் பாலும் ஒன்றாகக் கலந்து நன்கு சுண்டியவுடன், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

    குறிப்பு: பாகற்காயின் கசப்புக்கு அஞ்சி அதனைத் தொடாதவர்களுக்கு இப்படி செய்து கொடுக்கலாம். கசப்புத் தன்மையுள்ள காய்கறிகள் கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டவை.

    நன்றி:- சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி முதல்வர் கா.கதிரவன்

    நன்றி:-அ.வி

    மற்ற சமையல் படைப்புக்கள்

    அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

    30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

    30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

    கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

    30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

    PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

    PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

    PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

    PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

    PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

    பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

    பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

    பிரிவுகள்:30 வகை டயட் சமையல், சமையல், மகளீர் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

    ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம் – செஃப் ஜேக்கப்


    பெண்களை மிக அதிகமாகத் தாக்கும் ரத்தசோகையை  நூற்றுக்கு நூறு உணவுப் பழக்கத்தின் மூலமே விரட்டி அடித்துவிடக் கூடிய ஒன்றுதான்” என்று நம்பிக்கையோடு பேசும் ‘டயட்டீஷியன்’ கிருஷ்ணமூர்த்தி,

    ”இந்திய அளவில் 60 முதல் 70 சதவிகிதத்தினர் ரத்தசோகையால் பாதிப்புக்குள்ளாகின்றனர். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது, ரத்தசோகை ஏற்படுகிறது. உடம்பில் இரும்புச்சத்து குறைந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும். குழந்தைகள், பெண்கள், கருவுற்ற தாய்மார்கள்’தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முதல் காரணமே… சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாததுதான். மருந்து, மாத்திரைகளை அதிக அளவு உட்கொள்பவர்களுக்கும் ரத்தசோகை வரலாம். மரபு வழியி’லும் இந்தப் பிரச்னை வரலாம்.

    உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உற்பத்தி செய்ய புரதம், இரும்புச்சத்து மிகவும் அவசியம். புரதச்சத்து உணவு’களான பால், பருப்பு, பயறு வகைகள், பழங்கள், பேரீச்சம்பழம், கீரை வகைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது, அந்தச் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள, வைட்ட’மின்-சி, தாது உப்புகள், பி-12, அமிலத்தன்மை, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவு’களையும் கூடவே சேர்த்துக் கொள்ள’வேண்டும். முட்டை’யின் மஞ்சள் கருவில் இரும்பு, புரதம், ஃபோலிக் ஆசிட், பி.12 போன்ற எல்லாச்’சத்துக்களும் அடங்கியிருக்”கின்றன. சிக்கன், மீன், முட்டை, ஈரல் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்’களுக்கு ரத்தசோகை வருவதற்’கான வாய்ப்புகள் குறைவு” என்று சொன்ன டயட்டீஷி’யன்,

    “மூச்சுத் திணறல், அசதி, நடக்கவே முடி’யா’மல் போதல், முகம், கண், விரல், கைகள் வெளுத்துப் போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது ரத்தசோகையாக இருக்’கலாம். உடனடி’யாக உணவு விஷயத்’தில் கவனத்தை செலுத்துங்’கள்” என்று அட்வைஸ் கொடுத்தார்.

    இதைக் கேட்டதுமே… ”உணவுதான் உற்சாக’மாக வாழ்வதற்கு ஒரே மருந்து. சத்துள்ள உணவுகளை சரிவி’கிதத்தில் சாப்பிட்டால் போதும். ‘ரத்த சோகையா? அப்படினா என்ன..?’னு கேட்பீர்கள். இதோ, ரத்தசோகையை விரட்டியடிக்கவும்… வரவிடா’மல் தடுக்கவும் கூடிய உணவுகள்” என்றபடியே ரெசிபிகளை அள்ளி வழங்கினார் செஃப் ஜேக்கப்…

    பூசணி விதை பாயசம்!

    தேவையானவை: பூசணி விதை – 150 கிராம், பால் – 250 மில்லி, சர்க்கரை – 75 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி -‘ 10 கிராம், திராட்சை – 5 கிராம், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

    செய்முறை: பூசணி விதையை, சிறிதளவு பாலில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சவும். அதில் அரை டம்ளர் பாலை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள பாலில் அரைத்த விழுதைப் போட்டு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போட்டு இறக்கவும். தனியாக உள்ள அரை டம்ளர் பாலை குளிர வைத்து, பாயசத்துடன் கலந்து, ஏலக்காய்தூள் தூவி, ‘ஜில்’லென்று பரிமாறவும்.

    காலை சாப்பாட்டுக்கு முன்பு ‘சூப்’ போல் இந்தப் பாயசத்தை பருகலாம்.

    பருப்பு-பீன்ஸ் கூட்டு!

    தேவையானவை: பீன்ஸ் – 100 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 50 கிராம், பூண்டு – 2 பல், சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு.

    செய்முறை: பாசிப்பருப்பு, துவரம்பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு, சீரகம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பீன்ஸ், உப்பு போட்டு வேக விடவும். இதனுடன், வெந்த பருப்பை சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். பொடித்த எள்ளை மேலாகத் தூவி பரிமாறவும்.

    இதை சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

    ”சபாஷ்… சரியான ரெசிபிகள்!”

    ரெசிபிகளை கையில் எடுத்த ‘டயட்டீஷி’யன்’ கிருஷ்ணமூர்த்தி, ”பூசணி விதையில் அதிக அளவு இரும்புச் சத்து இருக்கிறது. கண்ணுக்குத் தேவையான பீட்டா கரோட்டின், நல்ல கொழுப்பு, தாது உப்புக்களும் இதன்’மூலம் கிடைக்கின்றன. ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய புரதச்சத்தில் மூன்றில் ஒரு பங்கு, இந்த பாயசத்திலேயே கிடைத்துவிடுகிறது. எண்ணெய் பசை அதிகம் இருப்பதால் சருமத்தையும் பாதுகாக்கும்.

    கூட்டில் சேர்த்துள்ள பீன்ஸ் மற்றும் எள் ஆகியவற்’றில் இரும்புச்சத்தும், பருப்பில் புரதமும் இருப்பதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணி பெண்கள், தினமும் 300 மைக்ரோ கிராம் அளவுக்கு ஃபோலிக் ஆசிட் இருக்கும் உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தக் கூட்டில் 170 மைக்ரோ கிராம் அளவுக்கு ஃபோலிக் ஆசிட் கிடைத்து விடுகிறது. உடம்புக்குத் தேவையான கார்போஹைட்ரேட், அதிக அளவு புரதம், எனர்ஜி ஆகியவையும் கிடைத்துவிடுவதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.

    மொத்தத்தில் இந்த ரெசிபிகளில், ரத்தசோகை வராமல் தடுக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் அடங்கி’இருக்கின்றன. சபாஷ்… சரியான ரெசிபி!’ என்றார்.

    படங்கள்: ‘ப்ரீத்தி’ கார்த்திக்

    நன்றி:-அவள்விகடன்
    _________________________________________________