தொகுப்பு

Archive for the ‘கவிதைகள்’ Category

பணியாளர்களும் பாசமிகு நேசர்களே – மு.அ. அபுல் அமீன் நாகூர்


தொழில் புரட்சியால் தோன்றிய தொழிற்சாலைகளில் தொழிற்சாலை தோன்றிய பகுதிகளில் பிறரைத் தொழுதறியாது உழுது உண்டு உயர்வாய் வாழ்ந்த பழங்குடி மக்களை அடிமைகளாக ஆக்கி அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி தேய்ந்து மாயும்வரை வேலை செய்ய வைத்து கோலூன்றி கொழுத்த கோடீஸ்வர முதலாளிகளின் கொட்டத்தை அடக்க கொதித்து எழுந்து போராடி தொழிலாளர் உரிமை பெற உயிர் நீத்த உத்தம தொழிலாளர்களை நித்தமும் நினைவில் நிறுத்தி பெற்ற உரிமைகளை உலகமய ஏகபோக முதலாளிகள் பறித்திடாது காக்க தொழிலாளர்கள் உறுதி ஏற்கும் ஏற்புடைய நாளே மே முதல் நாளாம்

தொழிலாளர் நாள்.

ஜக்கரியா நபி ஒரு சுவரைக் கட்டி கொண்டு இருந்தார்கள். பகல் உணவு வந்தது. சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில் நபி அவர்களைப் பார்க்க சிலர் வந்தனர். வந்தவர்கள்

கேட்குமுன்னரே ஜக்கரியா நபி கூலி வேலை செய்வதாகவும் கூலிக்கு வந்த உணவை உண்டு முடித்ததால் பகிர்ந்து கொள்ள இயலாததையும் இயம்பினார்கள். உழைத்து உண்டு உழைத்து பிழைக்க வழி காட்டினார்கள் ஜக்கரியா நபி அவர்கள்.

கையிலிருந்த சாட்டை கை நழுவி கீழே விழுந்தால் அதைக் குனிந்து எடுப்பது கௌரவ குறைவு என்று எண்ணி இறுமாந்திருந்த அரபி நாட்டவரை உழைத்து உண்ணவைத்து உழைப்பின் பெருமையை உணர வைத்தார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள். கூலிக்கு ஒருவரை அமர்ந்து அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பவனுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் அறிவிப்பதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எண்ணத்தில் பதித்ததைப் பகர்கிறார்

அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி. உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு வந்த மா நபி (ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி)நூல் – முஸ்ஸிம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கையால் எந்த பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்தது இல்லை என்று

இயம்புகிறார் ஆயிஷா (ரலி) நூல்- முஸ்லிம்.

திருக்கையில் மாவரைப்பது வீட்டைக் கூட்டி பெருக்கி சுத்தப்படுத்துவது துணிகளைத் துவைப்பது தோல் பையில் நீர் கொணர்வது முதலிய வேலைகளை பாச நபி (ஸல்) அவர்களின் நேச மகள் பாத்திமா (ரலி) பணிப்பெண்ணுடன் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி பணி பெண்ணை மட்டும் வேலை வாங்காது அவர்களும் அதே வேலையை முறை வைத்து செய்வார்கள். தோல் பையின் கனத்தால் பாத்திமா (ரலி) அவர்களின் உடம்பில் தழும்பு ஏற்படும்.

பாத்திமா (ரலி) அவர்கள் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வரும்பொழுது பணி பெண்ணுக்குத் தனியாக ஏதாவது வாங்கி வந்து கொடுப்பார்கள். பணிபெண்ணின் வேலையில் தவறு கண்டால் பணியாளைச் சுடுசொற்களால் கடுஞ்சொற்களால் கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டர்கள். வேலையை விளக்கிச் சொல்லி துலக்கமாய் செய்யத் தூண்டுவார்கள்.

கிழிந்த ஆடைகளைத் தைப்பது முதுமையான மாமியாருக்கு உதவி செய்வது தணியாத அன்புடன் கணவருக்குப் பணிவிடை புரிவது முதலிட வேலைகளைப் பாத்திமா (ரலி) அவர்கள் மட்டுமே செய்வார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்க மாட்டார்கள். அவர்களை நாடிவரும் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பார்கள். நீதி போதனை செய்வார்கள்.

அக்காலத்தில் அரபியாவில் பலர் எழுத்துத் தொழிலை விரும்பிச் செய்தார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் என்பவரைச் சந்தித்த இமாம் அஹ்மது பின் ஹன்பல், “” நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அப்துல் வஹ்ஹாப் வர்ராக் – எழுதிக் கொண்டிருக்கிறேன் பெரியோர்களின் பேருரைகளை எழுத்தோவியங்களை எடுத்து எழுதி நகல் எடுக்கிறேன். இது என் தொழில். அஹ்மத் பின் ஹன்பல் -தூய தொழில் தூய வருவாய். நான் தொழில் செய்ய நாடினால் இத்தொழிலையே மேற்கொள்வேன். “”

எடுத்து எழுதும் பொழுது நீங்கள் நடு நிலையில் நின்று உள்ளது உள்ளபடியே எழுத வேண்டும். கூட்டல் குறைத்தல் கூடாது. இந்த உள்ள உறுதியோடு எழுத வேண்டும்”.

இப்படித்தான் பணியாளரைப் பாராட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த  உரையாடல்.

அப்பாசிய கலீபா மன்சூரின் அரசவையில் செவ்வனே செயலாற்றிய ஓர் ஊழியர் ஒட்டுபோட்ட சட்டை அணிந்து இருப்பதைக் கண்ட அரசர் நல்லாடை அணியாத

காரணத்தைக் கேட்டார். அந்த ஊழியரின் இறந்த தந்தை பாக்கி வைத்த கடனை அடைப்பதாகவும் தந்தையின் இரண்டாவது மனைவியான சிற்றன்னையையும்

சிற்றன்னையின் பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் ஊதியத்தின் பெரும்பகுதி செலவாகி விடுகிறது. அதனால் அந்த ஊழியர் சொந்தச் செலவைச் சுருக்கிக்கொள்வதை அறிந்த அரசர் அந்த ஊழியருக்கு ஆயிரம் பொற்காசுகளை வழங்கி உழைப்பிற்கு உயர்வான மதிப்பளித்தார்.

அலாவுத்தீனின் மகன் ஷம்ஸ் தப்ரேஸ் பெரிய அறிஞர். ரோமில் அவரிடம் பல அறிஞர்கள் சீடர்களாக இருந்து சீரான கல்வி கற்றனர். ஷம்ஸ் தப்ரேஸ் மாணவர்களிடம் எவ்வூதியமும் பெறவில்லை. அவர்கள் இடையணி தயாரித்து விற்று வாழ்ந்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைப்படி கருணை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் பணியாளர்களைப் பாசத்தோடு நேசித்து போஷித்து போற்றி தொழிலாளி உயர

உற்றுழி உதவுவோம். உலகம் உய்யும்.

 

நன்றி:- தினமணி 11/10/2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

உண்ணலில் உயர்வு! – மு.அ. அபுல்அமீன் நாகூர்

ஜூலை 2, 2013 1 மறுமொழி

f2

உண்ணும் உணவே உடலுக்கு வலிவையும் பொலிவையும் தருகிறது. அதற்கொப்ப நோயின்றி வாழ உடலில் வலிவும் மற்றவர்களிடம் மதிப்போடு வாழ பொலிவும் வேண்டும். அதற்கேற்ற உணவை உண்பது உண்ணலின் உயர்வு.

முதலில் நாம் உண்ணும் உணவு சுத்தமானதாக இருக்க வேண்டும். இன்று கண்ட இடங்களில் துண்டு துண்டாக விற்கப்படும் தூய்மையற்ற உணவுகளை உண்ணக்கூடாது என்பதை அல்குர்ஆனின் 2-172வது வசனம் “நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானதைப் புசியுங்கள்” என்று கூறுகிறது.

பால் ஒரு சுத்தமான இனிய உணவு என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 16-66வது வசனம். “கால்நடைகளின் வயிற்றில் உள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து, அருந்துபவர்களுக்கு இன்பமான தூய பாலை உங்களுக்கு புகட்டுகிறோம்”.

சுத்தத்தின் செயலாக உணவு உண்ணும் முன்னும் உண்ட பின்னும் கை கழுவுவதையும் பாத்திரங்களைக் கழுவி வைப்பதையும் வற்புறுத்தினார்கள் நபி(ஸல்) என்று சல்மான் பார்ஸி(ரலி) அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது.

உண்ணும் உணவு நேரிய வழியில் ஈட்டியதாக இருக்க வேண்டும். புறம்பான வழியில் பெற்றதைப் புசிக்காதீர்கள் என்கிறது திருக்குர்ஆனின் 2-188வது வசனம். “”உங்கள் பொருட்களை உங்கள் மத்தியில் அநீதியாகப் புசிக்காதீர்கள். இன்னும் நீங்கள் அறிந்துகொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியைப் பாவமான முறையில் புசிக்கும் பொருட்டு வழக்காடாதீர்கள்”.

ஒருவரின் பொருளை பலவந்தமாகவோ, கொள்ளையிட்டோ, திருடியோ, சூதாடியோ, பந்தயம் வைத்தோ, பொய் வழக்கு தொடுத்தோ தனக்கு உரிமையாக்கிக்கொண்டு சாப்பிடுவது சாபக் கேடானது என்பதையே மேற்குறிப்பிட்ட குர்ஆனின் வசனம் எடுத்துரைக்கிறது.

எம்பெருமானார் (ஸல்) எவ்வுணவையும் எப்பொழுதும் குறை கூறவில்லை. விரும்பும் உணவை உண்பார்கள். விரும்பாததை உண்ண மாட்டார்கள் என்று அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததை “புகாரி’யில் காணலாம்.

எனினும் ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் பழம், காய்கறிகளை விரும்பி உண்டதை விளம்புகிறார்கள் உளமொத்த நபிகளாரின் உத்தம தோழர்கள். ஒரு தையல்காரர் அளித்த விருந்தில் தொலிக் கோதுமை ரொட்டியும் தொட்டுக்கொள்ள உப்புக்கண்டமும் சுரைக்காயும் கலந்து காய்ச்சிய குழம்பும் இருந்தன. அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பாத்திரத்தின் ஓரத்தில் சுரைக்காயைத் தேடி எடுத்துப் புசித்ததைப் பார்த்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பது புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது.

சீராய் உண்டால் சிலரின் சாப்பாடு பலருக்கும் பயன்படும். இருவரின் உணவு நால்வருக்கும் நால்வரின் உணவு எண்மருக்கும் போதுமானதென்று போதகர் முஹம்மது (ஸல்) அவர்கள் போதித்ததை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பது முஸ்லிம், திர்மிதீ நூல்களில் காணலாம்.

உண்ணத் f1துவங்குகையில் உள்ளத்தில் உறையும் இறைவனை எண்ணித் துதித்து, உண்டபின் உணவளித்த இறைவனுக்கு உளமார நன்றி நவின்று நம்மையும் அவ்வாறே நடந்திட பணித்தார்கள் நபி முஹம்மது(ஸல்) அவர்கள்.

ஏந்தல் நபி எடுத்துக் காட்டியபடி எவ்வுணவையும் எள்ளாது ஏற்று எளிய முறையில் பலருக்கும் பயன்படும்படி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி  27 June 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

எல்லைக் கோடு – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

எல்லையிலா அருளால் காக்கும்
…..இறையவன் வகுத்த சட்டம்
எல்லைக்கோ டென்று பார்த்து
…..இணங்கிநீ வாழ்தல் திட்டம்
தொல்லைகளும் வரத்தான் செய்யும்
…தொடர்ந்துநீ முன்னே செல்வாய்
இல்லையென்றால் உழைப்பில் தேக்கம்.
…இருப்பதைக் கண்டு கொள்வாய்!

அளவுக்கு மிஞ்சும் போதில்
…அமுதமும் நஞ்சாய்ப் போகும்
பிளவுக்கு வழியைக் காட்டும்
….பிறர்மனம் புண்ணாய்ப் போகும்
அளவுக்கு மேலே காட்டும்
..அக்கறைக் கூடத் தொல்லை
களவில்லாக் கற்பைப் பேண
…காண்பது பண்பின் எல்லை!

நாட்டிலுள்ள எல்லைக் கோடு
…..நல்லவர் மதிக்கும் கோடு
வீட்டிலுள்ள எல்லைக் கோடு
…விரும்புவர் அண்டை வீடு
பாட்டிலுள்ள யாப்பின் கோடு
….பாடலின் அமைப்பைக் காட்டும்
வாட்டிவிடும் வறுமைக் கோடு
…வறுமையின் எல்லைக் கோடு!

bf2
ஆட்டத்தில் எல்லைக் கோடு
…..ஆட்டமும் சிறக்கச் செய்யும்
நாட்டத்தில் எல்லைக் கோடு
…நாளையை எண்ணிப் பார்க்கும்
நோட்டத்தில் எல்லைக் கோடு
..நோவினை இல்லாக் கற்பு
கூட்டத்தில் எல்லைக் கோடு
…கூச்சலைத் தடுத்து வைக்கும்!

நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844

வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

ஆடையில் அழகு! – மு.அ. அபுல் அமீன் நாகூர்


SK

உடை உடலை மறைத்து மானத்தைக் காக்கிறது. தோற்றத்தில் பொலிவைத் தருகிறது. விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. ஆடைகள் அணிவது பற்றி அருமறைக் குர்ஆன் கூறுவதையும் அதன்படி ஒழுகிய அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் நாமும் பின்பற்றுவோம்.

“ஆதாமுடைய மக்களே! உங்களின் மானத்தை மறைக்கக் கூடியதும் உங்களை அலங்கரிக்கக் கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம்” என்று திருமறைக் குர்ஆனின் 7-26 வசனம் கூறுகிறது. ஆடைகள் ஆண்களின் ஆண்மையையும் பெண்களின் பெண்மைத் தன்மையையும் நன்னயமாய்க் காட்டும். அதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய உடைகளை ஆண்கள் அணிவதையும் ஆண்களுக்குரிய ஆடைகளைப் பெண்கள் அணிவதையும் சபித்ததாக அபூஹீரைரா (ரலி) அவர்கள் சாற்றுவதை அபூதாவூதில் காணலாம்.

பகட்டும் படாடோபமும் பாவத்திற்கு அழைத்துச் செல்பவை. எளிமை என்ற பெயரில் ஏளனத்திற்கு ஆளாகக் கூடாது. அதனால் ஆடம்பரமான ஆடை அணிவதையும் மோசமான உடை உடுத்துவதையும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் உரைப்பது ரஜீனில் காணப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள் தலைப்பாகை கட்டினர். தலைப்பாகை அணிவதால் இரக்க இயல்பு அதிகமாகும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை அபுல் மலீஹ் (ரலி) அவர்கள் கூறியது அபூதாவூதில் குறிப்பிடப்படுகிறது.

whitesilkமணிக்கட்டுவரை நீண்ட கையுடைய சட்டையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அணிந்ததை அஸ்மா பின்து எஜீதுப்னுஸ் கைனி (ரலி) அவர்கள் அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது. இக்காலத்திலும் முழுக்கை சட்டை அணிவது மதிப்பிற்குரியதாய் உள்ளது.

கீழாடையை கணுக்கால் முட்டிகளுக்குக் கீழ் தொங்க விடக்கூடாது என்று ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் கண்டித்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் இயம்பியதும் அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு தொங்க விடுவது தற்பெருமைக்குரியது. தரையைத் தொடும் ஆடைகள் தரையில் உள்ள குப்பை அசுத்தங்களில் தோய்ந்து நோய்க்குக் காரணமாகின்றன.

“பெண்கள் தங்களின் ஆடை அலங்காரங்களை அந்நிய ஆண்களின் கண்களில் படும்படி வெளிப்படுத்த வேண்டாம். பூமியில் கால்களைத் தட்டி நடக்க வேண்டாம்” என்று அல்குர்ஆன் 24-34வது வசனம் கூறுகிறது. தரையைத் தட்டி நடப்பது பிறரின் கவனத்தைக் கவரும். ஆடை, அலங்காரங்களும் பிறரின் கண்களுக்கு கவர்ச்சியாகும். கவர்ச்சி வீழ்ச்சியில் விழ வைக்கும்.

“முதுமையடைந்து நடமாட முடியாது உட்கார்ந்தே இருக்கும் கிழவிகள் மேலாடைகளைத் தளர்த்தி இருப்பது தவறில்லை; எனினும் தளர்த்தலைத் தவிர்ப்பது அவர்களுக்கும் நன்று” என்று நவில்கிறது குர்ஆனின் 24-60வது வசனம். இறைமறைக் குர்ஆன் இயம்பும் முறையில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் ஆடை அணிந்து அல்லாஹ்வின் அருள் பெற்று வாழ்வோம்.

நன்றி:- தினமணி 29 March 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

பிரிவுகள்:ஆடையின் அழகு, ஆடையில் அழகு, கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இணைந்து வாழ்வதே சிறந்தது! மு.அ. அபுல் அமீன்


divorce
இஸ்லாத்தில் விவாகரத்து தவிர்க்க முடியாத நிலைகளில் மட்டுமே பயன்படுத்தும் நிபந்தனைகள் நிறைந்த உரிமை. பொறுப்பைத் தட்டிக் கழித்துத் தப்பித்துப் பதுங்கிக் கொள்ள, ஒதுங்கிக்கொள்ள ஒத்துழைக்கும் சட்டமல்ல. சதி பதிகளைப் பிரிக்கும் சாதாரண சம்பிரதாய சட்டமல்ல. கட்டம் கட்டமாக பல படிகளைக் கடந்து கால அவகாசத்தோடு அவசரமின்றி பின்னுள்ள வாழ்வின் பிரயோசனத்தையும் கருத்தில்கொண்டு பிரயோகிக்கும், பிரிவினையைக் கடுமையாக்கும் கடுஞ்சட்டம்.

ஆணுக்கு மனைவியை விவாகரத்து (தலாக்) செய்ய எத்துணை உரிமை உள்ளதோ அத்துணை உரிமையும் கணவனை விவகாரத்து செய்ய பெண்ணுக்கும் உண்டு. பெண் பின்னுக்குத் தள்ளப்படவில்லை. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் கடுமையாக இடையூறு செய்வான் என்றோ புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால் இருவரும் சம்மதித்து தங்களுக்குள் ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்வது குற்றமல்ல என்று திருக்குர்ஆன் 4-128 வசனம் கூறுகிறது. மதீனாவில் அப்துல்லாஹ் பின் அபீ அவ்பாவின் மகள் ஜமீலா பேரழகி. இவரின் கணவர் தாபித் பின் கைஸ் அழகற்றவர். அவர் அழகிய மனைவியை உயிரினும் உயர்வாய் நேசித்தார். மனைவியோ கணவனிடம் கடுகளவும்

கருணை காட்டவில்லை. கடுமையாய் வெறுத்தாள். அவர்களிடையே கசப்பு முற்றி இசைவான வாழ்விற்கு வாய்ப்பில்லை என்றானது. ஜமீலா, நபிகள் பெருமானார் அவர்களிடம் அவரின் நிலையை எடுத்துரைத்தார். பெருமானார் அவர்கள் தாபித்தை அழைத்து விசாரித்தார்கள். தாபித் தன் உயிரினும் மேலாய் தனது மனைவி ஜமீலாவை உவப்பதாய் உளமார நேசிப்பதாய் உறுதியாகக் கூறினார். ஜமீலாவோ தாபித் கூறுவது முற்றிலும் உண்மை என்றாலும் என்னால் அவரை நேசிக்க முடியவில்லை. நேசமில்லாமல் பொய் வேஷமிட்டு வாழ விரும்பவில்லை என்றார்.divorce_spells3

தாபித், ஜமீலாவிற்குக் கொடுத்த ஈச்சந் தோட்டத்தைத் திருப்பிக் கேட்டார். ஜமீலாவும் மறுப்பேதுமின்றி திருப்பித் தந்த ஈச்சந் தோட்டத்தைப் பெற்றுக்கொண்ட தாபித் ஜமீலாவை விவாகரத்து செய்தார். இஸ்லாத்தில் நடந்த முதல் குலா இதுவே. எனினும் சிறு பூசல்களைக் காரணமாக்கி மனைவியர் இவ்வுரிமையைப் பயன்படுத்தி விவாகரத்து கோருவது விவேகமல்ல.”எத்தகைய குற்றமும் இன்றி கணவனிடம் குலா கோரும் பெண் மீது சொர்க்கத்தின் வாடை விலக்கப்பட்டுள்ளது” என்று எம்பெருமானார் எடுத்துரைத்தார்கள். இஸ்லாம், கைப்பிடித்த கணவன், மனைவி காலமெல்லாம் – ஞாலத்தில் வாழும் காலமெல்லாம் இணைந்து வாழ்வதே சாலச் சிறந்தது என்று சாற்றுகிறது.

நன்றி:- தினமணி 22 Feb 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பிரிவுகள்:அபுல் அமீன் நாகூர், இணைந்து வாழ்வதே சிறந்தது!, கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பர்தா – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்



burka

burga2

நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

வாய்மையான வாக்குறுதி! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


p6

வழங்கும் வாக்குறுதியை வகையாய் முடித்துக் கொடுக்க முடியும் என்ற உறுதி இருந்தால்தான் வாக்குறுதி கொடுக்க வேண்டும். இல்லாதது என்றறிந்தும், முயன்றாலும் முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதி கொடுப்பது வாய்மையன்று. வாக்கு துரோகம், நயவஞ்சகம்.

சத்தியம் செய்து வாக்குறுதி வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்ய வேண்டும். வேறு எவர் மீதும் எப்பொருளின் மீதும் சத்தியம் செய்தல் கூடாது. பிறவற்றின் மீது செய்யும் சத்தியத்தில் உண்மையும் உறுதியும் இருக்காது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை வாகனத்தில் செல்லும்போது ஹழ்ரத் உமர்(ரலி) அவர்கள், அவர்களின் தந்தையின் மீது சத்தியம் செய்வதைப் பார்த்தார்கள். உடனே நபிகளார் அவர்கள்

“”உங்கள் தந்தையின் மீது நீங்கள் சத்தியம் செய்வதை அல்லாஹ் கண்டிப்பாக விலக்கியுள்ளான். சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். அல்லது மௌனமாக இருந்துவிட வேண்டும்” என்று கண்டிப்புடன் கூறியதை ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிப்பது புகாரி 6108ல் காணப்படுகிறது.

சத்தியம் செய்த பின் அந்த சத்தியத்தை இதய சுத்தியோடு சுத்தமாக நிறைவேற்ற வேண்டும்.

இக்காலத்தில் கூட்டங்களில் கூவி முழக்கப்படும் சத்தியங்கள், அறிக்கைகளில் பொறித்திடும் சத்தியங்கள், உடன்படிக்கைகளில் உறுதி செய்யப்பட்ட சத்தியங்கள் முறிக்கப்படுவதை, திரிக்கப்படுவதை தினமும் பார்க்கிறோம். கேட்கிறோம்; படிக்கிறோம். இன்று ஒரு இணைப்பு, நாளை ஒரு முறிப்பு, இன்று ஒரு கூட்டணி, நாளை ஒரு மாற்றணி, அதற்கேற்ற கொள்கை மாற்ற கோமாளித் தனங்கள், நேற்று சொன்னதை இன்று மறுப்பது, இன்று சொன்னதை நாளை மாற்றுவது என்ற நாடகங்கள் வாடிக்கையாகிவிட்டது. வேடிக்கையாகிவிட்டது.

Hஇதனைக் குர்ஆனின் 16-92 வது வசனம் “”ஒருத்தியைப் போல் நீங்களும் ஆகி விடாதீர்கள். அவள் உறுதியாக தான் நூற்ற நூலைத் துண்டு துண்டாக முறித்து விடுகிறாள். ஒரு கூட்டத்தினரைவிட மற்றொரு கூட்டம் மிக்க வளர்ச்சியுற்று இருப்பதற்காக உங்களுக்கிடையில் உங்களுடைய சத்தியத்தைத் தந்திரப் பொருளாக ஆக்குகின்றீர்கள். இதனைக் கொண்டு அல்லாஹ் உங்களை நிச்சயம் சோதிப்பான். நீங்கள் எதில் வேற்றுமைப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதனை மறுமை நாளில் அவன் நிச்சயமாக உங்களுக்கு விளக்கிக் கண்டிப்பான்“” என்று எச்சரிக்கிறது.

இந்த வசனத்தில் கூறப்படும் ஒருத்தி முன்னொரு காலத்தில் அரபு நாட்டில் குறைஷி குலத்தில் வாழ்ந்த ரப்தா பின்து அம்ரு. அவள் மூடப்பெண். சந்தேகங்களின் சொந்தக்காரி.

அவள் ஒவ்வொரு நாளும் ஒரு முழ நீளம், ஒரு விரல் கனம் உடைய உரோமம், கம்பளி முதலிய பொருட்களில் கயிறு திரிப்பாள்.

p5அவளுடைய வேலைக்காரிகளையும் அவ்வாறே திரிக்கச் சொல்வாள். காலையிலிருந்து நண்பகல் வரை இவ்வேலை நடக்கும். பிற்பகலில் திரித்த அத்தனை கயிறுகளையும் அவளும் பிரித்து முறித்து வேலைக்காரர்களையும் அவ்வாறே செய்யச் சொல்வாள். சத்தியத்தை முறிப்போரை வாக்குறுதி மாறுவோரை எடுத்துக்காட்டுடன் எடுத்துரைக்கும் வசனம் இது.

“”நீங்கள் உள்ள உறுதியுடன் செய்யும் சத்தியங்ளை நிறைவேற்றவில்லை எனில் அல்லா உங்களைக் குற்றம் பிடிப்பான்“”‘ என்ற திருக்குர்ஆனின் 2-225வது வசனப்படி நிதானித்து, நிறைவேற்ற முடியும் என்பதை நிச்சயப்படுத்திக் கொடுத்த வாக்குறுதியைக் குறைவின்றி நிறைவேற்றுவோம். இறைவனின் அருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 02 Nov 2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


பற்றி எரிகிறது 

…..பாலஸ்தீன் காசாவில்

வெற்றிக் கிடைத்திடவே

…வேண்டும்தீன் நேசர்காள்!

 

காலமும் காணாக்

…காட்சித்தான் பின்ன 

பாலகர் செய்த

… பாவம்தான் என்ன?

 

கொடுமையிலும் கொடுமை

…கொலைசெயுமிவ் வன்மை

கடுமையுடன் தடுத்தால்

…களைந்துவிடும் தீமை

 

இறைவனின் கோபம்

….இஸ்ரவேலர் அடைவர்

விரைவுடன் தீர்ப்பு

…வந்திடவும்; மடிவர்

 

இறுதிநாள் வருகைக்கு

….இக்கொடுமை ஒருசான்றா?

உறுதியாய்க் கொடுமைக்கு

…உள்ளமெலாம் உருகாதா?

 

கொத்துக் கொலைகண்டு

…குழந்தைகள் நிலைகண்டு

கத்தும் கடல்கூட

…கதறுமே பழிதீர்க்க

 

தீர்ப்புநாள் வராதென்று

….தீதைச் செய்தாயோ?

யார்க்குமே அடங்காத

…யூத ஷைத்தானே!

 

அர்ஷில் எட்டும்

….அலறல் சத்தம்

குர்ஸி தட்டும்

…குழந்தை ரத்தம்

 

பாதிக்கப் பட்ட

…பாலஸ்தீன் மக்கள்

நீதிக்கு முன்பு

…நிற்கின்ற வேளை

 

கூட்டுச் சதியால்

..கூடிக் குலாவி

வேட்டு வெடித்தல்

..வேடிக் கையே!

 

பொய்நாக் கூட்டம்

…புரிய வில்லையா?

ஐநா சபையோர்

…அறிய வில்லையா?

நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844

வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

அயலாரிடம் அன்பு! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


அண்டை வீட்டார் உறவினராக இருப்பினும் உறவில்லாதவராக இருப்பினும் முஸ்லிமாக இருப்பினும் முஸ்லிம் அல்லாதவராக இருப்பினும் அண்டை வீட்டாருடன் நல்லுறவும் நட்பும் சகோதரத்துவமும் பேணி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உற்றுழி உதவ வேண்டும்” என்றுரைத்து, உரைத்தபடி உண்மையாய் வாழ்ந்து காட்டியவர்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள்.

சாதாரணமாக சில பெண்கள் சிறிய பொருட்களைக்கூட அண்டை அயலாருக்குக் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். அதனால்தான் நபிகள் நாயகம்,

“”பெண்களே! அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதை அற்பமாகக் கருத வேண்டாம். அது ஆட்டின் குளம்பாயினும் சரியே”

என்று பெண்களுக்கு போதித்த நீதி, புகாரி நூலில் உள்ளது. ஆட்டின் குளம்பு என்பது சிறியது; மதிப்பற்றது என்றாலும் அதனையும் அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். “”அண்டை வீட்டார் பசித்திருக்க தாம் மட்டும் உண்பவர் உண்மையான முஸ்லிமல்ல” என்பதும் நாயக நன்மொழி.

இதனையொட்டியே ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கும் பொழுது, முதலில் அண்டை வீட்டு யூதருக்கு அன்பளிப்பு செய்வார்கள்.

“”அல்லாஹ்வின் பார்வையில் தோழமையில் சிறந்தவர், தம் தோழர்களிடம் சிறந்து விளங்குபவர், சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே” என்ற நபிகளாரின் நன்மொழி திர்மிதி நூலில் காணப்படுகிறது.

“”அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்து நிம்மதியைக் கெடுப்பவன் சுவனம் புக மாட்டான்” என்ற நீதி முஸ்லிம் நூலில் பதியப்பட்டுள்ளது.

இமாம் அபூஹனீபா(ரஹ்) இஸ்லாமிய சமய அறிஞர். அவருடைய மறுபக்க வீட்டில் வாழும் யூதரின் வீட்டில் கொட்டப்படும் நீர், இமாம் அவர்களின் வீட்டு வாயிலில் விழுந்து தேங்கி சேறும் சகதியுமாகி விடும்.

இமாம் அபூஹனீபா அவர்கள் இரவே கொட்டும் நீரைப் பாத்திரத்தில் பிடித்து அப்புறப்படுத்துவதை வழக்கமாக செய்தார். ஒரு நாளிரவு இதனைக் கண்ட யூதர் “”ஒரு வேலையாளை வைத்து கழிவு நீரை அகற்றாமல், வேலையாள் கூலியை மிச்சப்படுத்தி இவ்வேலையை நீங்களே செய்கிறீர்களா?” என்று கேலி செய்தார். இமாம் அவர்கள் எங்கிருந்து நீர் கொட்டுகிறது என்பதைக் கவனிக்குமாறு யூதரிடம் வேண்டினார்கள். அவரின் வீட்டிலிருந்து கழிவு நீர் கொட்டுவதையறிந்த யூதர் மனம் வருந்தி திருந்தி இமாம் பொருந்தும் மாணவராய் அவரின் மதரசாவில் சேர்ந்தார்.

وَاعْبُدُوا اللَّـهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّـهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
“”அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அந்நிய அண்மை வீட்டாருக்கும் அன்பும் நன்றியும் செய்யுங்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-36வது வசனப்படி நாமும் அண்டை அயலாரிடம் அன்பு பாராட்டி சுமுக உறவைப் பேணிக் காப்போம். ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உத்தம நபிகள் வாழ்ந்து காட்டிய சத்திய நெறியில் வாழ்ந்து மறுமையிலும் சுவனத்தல் சுக வாழ்வு வாழ்வோம்.

நன்றி:- தினமணி 04 Oct 2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பிரிவுகள்:அயலாரிடம் அன்பு, அயலாரிடம் அன்பு! குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மக்களாட்சியின் மாண்பு – மு.அ. அபுல்அமீன் நாகூர்


பொது வாழ்வில் தலைமைப் பொறுப்பில் இருப்போர் தன்னலம் மறுத்து பிறர் நலம் பேணும் பேராண்மை உடையவர்களாக இருக்க வேண்டும்.

இறை வேதமாம் திருக்குர்ஆனை இவ்வுலகோருக்கு இயம்பிய இனிய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னதை சொன்னபடி செயல்படுத்தி செம்மையாய் வாழ்ந்து வழிகாட்டினார்கள். ““நீங்கள் செய்யாதவற்றைப் பிறருக்குச் சொல்லாதீர்கள்” என்று குர் ஆனும் கூறுகிறது.

நன்மையை நாடிய நபியின் தோழர்களும் நபி வழியை நழுவாது பின்பற்றி வழுவாது வாழ்ந்தனர். அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்கு படிப்பினைகள். கிழிந்து தைத்த ஆடைகளை அணிந்து கொண்டிருந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களுக்கு எழுபதாயிரம் திர்ஹம் அன்பளிப்பு வந்தது. அந்த அன்பளிப்பில் ஒரு திர்ஹத்தை கூட தனக்காக எடுத்துக் கொள்ளாது அன்னை ஆயிஷா(ரலி) எழுபதாயிரம் திர்ஹம்களையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்ட நிகழ்ச்சியை உர்வா(ரலி) அறிவிக்கிறார்.

யமன் நாட்டை நீண்ட காலம் ஆண்ட ஹமீரி என்ற அரசர் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை தலையில் தரித்து மினுக்கும் ஜரிகை பட்டு ஆடைகள் அணிந்து இடுப்பிலே தங்கப்பட்டை பளபளக்க முதல் கலீபா அமீருல் முஃப்மினீன் அபூபக்கர்(ரலி) அவர்களை சந்தித்தார். கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் ஒரு கம்பளி ஆடையை உடுத்தி இன்னொரு கம்பளி போர்வையைப் போர்த்தியிருந்தார்.

இக்காட்சியைக் கண்டு வியந்த ஹமீரி ஆடம்பரத்தையும், படாடோபத்தையும் களைந்தார். இவ்வாறு தலைமைப் பொறுப்பில் இருப்போர் தன்னலம் விடுத்து பொதுநலம் பேணிப் புகழ் பெற வேண்டும்.

“”மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து காரியம் ஆற்றுவது என் வழிமுறை” என்று ஏந்தல் நபி எடுத்துரைத்தபடி உமர்(ரலி) அவர்கள் தனிக்குழு, பொதுக்குழு என்று ஈரடுக்கு ஆலோசனை குழுக்களிடம் கலந்தாலோசித்து எந்த முடிவையும் மக்களுக்கு அறிவிப்பார்கள்.

திருமணம் புரிய விரும்பும் ஆண்கள் மணமகளுக்கு தரும் மஹர் தொகை அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனால் ஆண்களின் திருமணம் தடைபட்டது. உமர்(ரலி) அவர்கள் இப்பிரச்னையை ஈரடுக்கு குழுவில் விவாதித்து முடிவெடுத்து பொதுமக்களைப் பள்ளி வாசலில் கூட்டினார்கள். மேடையேறிய கலீபா, நபிகள் நாயகம் வழங்கிய மஹரை விட அதிக மஹரை யாரும் வழங்கக் கூடாது. இந்த ஆணையை மீறி வழங்கப்படும் மஹர் பறிமுதல் செய்யப்பட்டு பைத்துல்மால் பொதுநிதியில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்கள். உடனே ஒரு மூதாட்டி, “”உமரே! நீர் மேடையிலிருந்து இறங்கிவிடும்” என்று கூறினார். கீழே இறங்கிய உமர் (ரலி) அவர்கள் அம்மூதாட்டி அருகே சென்று காரணம் கேட்டார்கள்.

அம்மூதாட்டி “”மனைவிக்கு நீங்கள் ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து நீங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-20 வது வசனத்தை நினைவூட்டினார்கள்.

கலீபா அவர்களுக்கு நல்வழி காட்டியதாக அம்மூதாட்டியைப் பாராட்டினார். மூதாட்டி நினைவுபடுத்தியபடி அதிக மஹர் பெற மகளிருக்கு உரிமை உண்டு என்றும் பிரகடனப்படுத்தினார். மக்களாட்சியின் மாண்பை உயர்த்தினார்.

 

இக்காட்சியைக் கண்டு வியந்த ஹமீரி ஆடம்பரத்தையும், படாடோபத்தையும் களைந்தார். இவ்வாறு தலைமைப் பொறுப்பில் இருப்போர் தன்னலம் விடுத்து பொதுநலம் பேணிப் புகழ் பெற வேண்டும்.

 

“”மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து காரியம் ஆற்றுவது என் வழிமுறை” என்று ஏந்தல் நபி எடுத்துரைத்தபடி உமர்(ரலி) அவர்கள் தனிக்குழு, பொதுக்குழு என்று ஈரடுக்கு ஆலோசனை குழுக்களிடம் கலந்தாலோசித்து எந்த முடிவையும் மக்களுக்கு அறிவிப்பார்கள்.

 

திருமணம் புரிய விரும்பும் ஆண்கள் மணமகளுக்கு தரும் மஹர் தொகை அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனால் ஆண்களின் திருமணம் தடைபட்டது. உமர்(ரலி) அவர்கள் இப்பிரச்னையை ஈரடுக்கு குழுவில் விவாதித்து முடிவெடுத்து பொதுமக்களைப் பள்ளி வாசலில் கூட்டினார்கள். மேடையேறிய கலீபா, நபிகள் நாயகம் வழங்கிய மஹரை விட அதிக மஹரை யாரும் வழங்கக் கூடாது. இந்த ஆணையை மீறி வழங்கப்படும் மஹர் பறிமுதல் செய்யப்பட்டு பைத்துல்மால் பொதுநிதியில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்கள். உடனே ஒரு மூதாட்டி, “”உமரே! நீர் மேடையிலிருந்து இறங்கிவிடும்” என்று கூறினார். கீழே இறங்கிய உமர் (ரலி) அவர்கள் அம்மூதாட்டி அருகே சென்று காரணம் கேட்டார்கள்.

 

அம்மூதாட்டி “”மனைவிக்கு நீங்கள் ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து நீங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-20வது வசனத்தை நினைவூட்டினார்கள்.

 

கலீபா அவர்களுக்கு நல்வழி காட்டியதாக அம்மூதாட்டியைப் பாராட்டினார். மூதாட்டி நினைவுபடுத்தியபடி அதிக மஹர் பெற மகளிருக்கு உரிமை உண்டு என்றும் பிரகடனப்படுத்தினார். மக்களாட்சியின் மாண்பை உயர்த்தினார்.

 

நன்றி:- தினமணி 07 Sep 2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பிரிவுகள்:மக்களாட்சியின் மாண்பு குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,