தொகுப்பு

Posts Tagged ‘உயர் ரத்த அழுத்தம்’

இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி – Celery (Medical Tips)


இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி !!!! ( Celery )

celery

இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி செலரி (Celery) என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம்.

செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக்  காம்பு முதலியவை உணவாக உபயோகப் படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கீரைத்தண்டு மாதிரி அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிடும் காலம் ஆரம்பமாகிவிட்டது.

காளானைப் போலவே இதுவும் ஓர் அரிய காய்கறியாகும். 1994 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மின்க்லீ என்பவர் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டார். தினமும் அவர் இரண்டு செலரித் தண்டுகள் வீதம் ஒரு வாரம் வரை சாப்பிட்டு, அத்தொல்லையிலிருந்து குணமாகி இயல்பான நிலைக்கு வந்துவிட்டார். இவர் மகன் குலாங் டிலீ, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் செலரியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வித இரசாயனப் பொருளை ஊசி மூலம் எலிகளுக்கு ஊட்டினார். அந்த எலிகளின் இரத்த அழுத்தம் 12 முதல் 14 சதவிகிதம் வரை குறைந்திருந்தது. இரத்த அழுத்தம் குறைகிறதே என்று இதை அதிகமாகச் சாப்பிடவும் கூடாது. இந்த உண்மையையும் இவர் கண்டுபிடித்துள்ளார். அளவுடன் செலரியை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கிக் கொள்ளலாம்.

குணமாகும் நோய்கள்!

உணவு செரிமானமின்மை, ஆஸ்துமா, இரத்த சோகை, சாகேமியா, உடற் பலவீனம், இதய நோய்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம், ஊளைச்சதை, நரம்புக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை செலரித் தண்டுகள் குணப்படுத்துகின்றன.

‘திடீர்’ நெஞ்சுவலி இனி இல்லை!

இதில் உள்ள மக்னீசியமும், இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்கவை. அவ்விரண்டும் அதிக அளவில் இருப்பதால் இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள் உடனே குணமாகின்றன. இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது.

இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.

100 கிராம் செலரியில் கிடைக்கும் கலோரி 37 ஆகும். இதன் இலைகளில் 88% ஈரப்பதமாகும்; புரதம் 6.3%, கொழுப்பு 0.6%, நார்ச்சத்து 1.4%, கார்போஹைடிரேட் 1.6%, தாது உப்புகள் 2.1% ஆகும். தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவற்றுடன் வைட்டமின் – ‘ஏ’, வைட்டமின் – ‘பி’ வைட்டமின் – ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது.

உடல் வளர்ச்சிக்குப் புரதம் தேவை. பிற காய்கறிகளில் அதிக பட்சம் 2% முதல் 3% வரை புரதம் உள்ளது. ஆனால், அது செலரியில் 6.3% ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காரணங்களால் (தாது உப்புகளால்) இரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு இரத்தம் கெட்டுவிடுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் நஞ்சுப் பொருள்கள் சேர்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் கீல் வாதம், ???????????????????????????????ஊளைச் சதை நோய் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.

செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில் சாறாக மாற்றி அருந்தலாம். செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள் அருந்தலாம்.

நரம்புக் கோளாறுகளுக்கு….

வலிப்பு நோயால் ஏற்பட்ட இசிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி நோய் முதலியவை குணமாகும். இதற்காகச் செலரித் தண்டு, இலை ஆகியவற்றின் சாற்றை காரட் சாறுடன் சேர்த்து அருந்த வேண்டும். இந்த முறையில் தினமும் ஒரு வேளை அருந்தினால் நரம்பு நோய்கள் குணமாகும்.

புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். அல்லது இலை, தண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கிச் சாப்பிட வேண்டும்.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படா. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

யுனானி வைத்தியத்தில் செலரி வேரைச் celery-natural-healing-foodசிறுநீரகக் கற்களைக் கரைக்க மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் இது மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும். இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

சத்துணவு டானிக்!

உடல் பலவீனமானவர்களுக்கும் சத்துணவுக் குறைவால் ஊட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் எளிய டானிக் ஒன்று இருக்கிறது. அது இதுதான்.

செலரியின் வேரைக் காய வைத்துப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியுடன் அதே அளவு தேனும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இப்படிச் சாப்பிட்டால் உடல் பலன் பெறும்.

‘சாலட்’ செய்வது உண்டா?

மிகவும் நறுமணமுள்ள காய்கறி இது. எனவே, இதை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும்.

வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, காரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட் (Salad) செய்வார்கள். இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட் சத்துணவாக ஆகிவிடுகிறது.

செலரியின் கொட்டைகள் சிறுநீர் நன்கு பிரிய பயன்படுகின்றன. வயிற்றுப் பொருமலைக் குணமாக்குகின்றன. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நரம்புத் கோளாறுகளைக் குணமாக்குகின்றன. இந்த விதைகளைக் காயவைத்து இடித்துத் தூளாக வைத்துக்கொண்டு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட செலரியின் தாயகம் சீனாதான். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்தே செலரியை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் இதே காலகட்டத்தில் செலரியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான்.

செலரியை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் உறுதி பெறுவோம்.

பிரிவுகள்:இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery, கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பேரிக்காய் சர்க்கரை நோயைத் தடுக்கும்!

மார்ச் 16, 2014 1 மறுமொழி

உண்ணும் விஷயத்திலும் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது பேரிக்காய். ஆனால், அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலரும் அதை விரும்புவது இல்லை. சுவையாக இருக்கிறது என்று அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேரிக்காயை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதிகம். அது சரியல்ல… பேரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம். 

‘நம் மக்கள் மறந்த கனிகளில், அதிக மருத்துவக் குணம் கொண்டது பேரிக்காய்தான். இது நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலையைத் பழுதுபார்க்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.  


ஆண்களுக்கு 60 வயதைத் தாண்டும்போது இனப்பெருக்க மண்டலத்துக்குத் தொடர்புடைய ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடையும். இதனால் சிறுநீர் குழாயின் அளவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். சிறுநீர் கழிக்கவே பெரிதும் அவதிப்படுவார்கள். இந்தநிலையில் இவர்களுக்கு ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அந்தக் குறைபாட்டைப் போக்கும் மிகச்சிறந்த மருந்து பேரிக்காய். உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பேரிக்காய் மிகவும் சிறந்தது!

பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை (சென்சிவிட்டி) மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த மருந்து. அதேபோல, செல்களின் வளர்ச்சியில் பேரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் கணுக்காலில் வீக்கம் ஏற்படும். இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்களின் பருவ மாற்றங்களின்போது ஏற்படும் நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கும், எலும்பு வீக்கம் அடையாமல் இருப்பதற்கும் இது நல்ல மருந்தாகும். இதிலுள்ள ‘பாலி அன்சாச்சுரேட் அமிலம்’ செல்கள் புதுப்பித்துக் கொள்வதற்கும், பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமி தாக்கதலில் இருந்தும் உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

பேரிக்காய் மட்டுமல்ல, பேரிக்காய் மரத்தின் பட்டையும் கூட மருத்துவப் பயன்மிக்கதுதான்! பேரிக்காய் மரப் பட்டை வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. பட்டையைக் களிம்பாக்கி தசை பிடிப்பு, தசை வீக்கம் உள்ள இடங்களில் தேய்த்தால் வீக்கம் குறையும்.

பேரிக்காயில் நிறைய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து நாட்டுப்பழங்களை உண்பது மிகவும் சிறந்தது. தற்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், பழங்களை சாதாரணமாகக் தண்ணீரில் கழுவுவதற்குப்பதில், வெந்நீரில் கழுவி உண்பது மிகவும் அவசியம்’ என்றார்.

நன்றி:- டாக்டர் விகடன்.

நன்றி:-  மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

 

பிரிவுகள்:கட்டுரைகள், பேரிக்காய் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்


யிற்றின் பின்பக்கம், முதுகுத்தண்டின் இரு புறமும் கைக்கு அடக்கமான மாங்காய் அளவுக்கு அவரை விதை வடிவத்தில் சிறுநீரகங்கள் இருக்கின்றன. வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ, அதேபோல நமக்கு இந்த உறுப்பு மிக முக்கியம். சிறுநீரகத்தில், சிறுநீரைப் பிரிக்கக் கூடிய சின்னச் சின்ன சிறுநீர் முடிச்சுகள் இருக்கும். இவற்றை ‘நெஃப்ரான்கள்’ (Nephrons) என்பார்கள்.  ஒவ்வொரு நெஃப்ரானும் ஒரு தலைமுடிபோல் இருக்கும். ஒரு சிறுநீரகத்தில் சுமார் 10 லட்சம் நெஃப்ரான்கள் இருக்கும். இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நீளவாக்கில் வைத்தால், சுமார் 65 கிலோ மீட்டர் நீளம் இருக்கும். 

நம் உடலிலேயே அதிக ரத்த ஓட்டம் உள்ள ஓர் உறுப்பு சிறுநீரகம். இதனால், ரத்தத்தில் கலக்கும்எதுவும் உடனே சிறுநீரகத்துக்குப் போய்விடும். அதனால்தான், மாத்திரை-மருந்து சாப்பிட்டால் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியாகிறது. பொதுவாக, ‘நாட்டுக்கு பட்ஜெட் போடுபவர் நிதி அமைச்சர், வீட்டுக்கு பட்ஜெட் போடுபவர் அம்மா, உடலுக்கு பட்ஜெட் போடுபவர் சிறுநீரகம்’ என்பர். அதாவது, உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தேக்கி வைத்துக்கொண்டு, தேவை இல்லாதவற்றை வெளியேற்றுகிறது. சிறுநீரை வெளியேற்றுவது மட்டும் அல்ல, உடலுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்துவைப்பதும் சிறுநீரகமே.

ரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களைப் பிரித்து எடுத்து வெளியேற்றும் வேலையைத்தான் சிறுநீரகம் செய்கிறது’ என்பது மேலோட்டமான கருத்து. இது சிறுநீரகத்தின் முதன்மையானப் பணியாக இருந்தாலும், இன்னும் சில வேலைகளையும் சிறுநீரகம் மேற்கொள்கிறது.

உடலின் ரத்த அழுத்தத்தைச் சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது, ரத்தச் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் மூலக்கூறான ‘எரித்ரோபாய்ட்டின்’ (Erythropoietin) என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்-டி சத்தைப் பதப்படுத்தி, ‘125 வைட்டமின்- டி’யாக மாற்றுகிறது. ‘மெட்டபாலிக் ஃபங்ஷன்’ (Metabolic Function) என்று சொல்லக் கூடிய வளர்சிதை மாற்றப் பணியில் உடலுக்குத் தேவையான குளுக்கோஸின் ஒரு பகுதியைச் சுரக்கிறது. நாம் உட்கொள்ளும் மருந்து- மாத்திரைக் கழிவுகளின் ஒரு பகுதியையும் வெளியேற்றுகிறது.

இவ்வளவு பணிகளைச் செய்யும் சிறுநீரகம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கல் போன்ற பிரச்னைகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காவிட்டால், நாளடைவில் எந்த வேலையுமே செய்ய முடியாமல், சிறுநீரகம் முழுவதுமாகச் செயல் இழந்துவிடும். எனவே, ஆரம்பத்திலேயே சிறுநீரகச் செயல் இழப்பைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், மற்ற நோய்களைப்போல், சிறுநீரகச் செயல் இழப்பைக் குறிப்பிட்ட அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்க முடியாது. காரணம், நீங்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், சாதாரணமாகவே சிறுநீர் பிரியும். நீங்களும் ‘எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று நினைத்துக் கொள்வீர்கள்.

ஆனால், சிறுநீரகச் செயல் இழப்பானது, இதய நோய், எலும்பு நோய், ஜீரண மண்டலக் கோளாறுகள், ரத்தசோகை போன்ற நோய்கள் இருப்பது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே, மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிறுநீரக மருத்துவரையும் சந்திப்பது நல்லது. யூரின் மைக்ரோ அல்புமின் (Urine microalbumin) பரிசோதனை, ரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் க்ரியாட்டின் பரிசோதனை, சிறுநீரக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலை சிறுநீரகச் செயல் இழப்பைக் கண்டறிய முடியும்!’

சந்திப்பு: சி.காவேரி மாணிக்கம்

 அடக்கினால் ஆபத்து!

நாள் ஒன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்துவிடுவது நல்லது!

வலி நிவாரணி மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தைப் பாதிக்கும்.

சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தவிர, மரபு ரீதியாகவும் இந்த நோய் வரும் வாய்ப்பு உண்டு. எனவே, இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

உப்பின் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதிக அளவு உப்பானது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். உயர் ரத்த அழுத்தம் வந்தால், சிறுநீரக நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

நன்றி:-

 

 

 

நன்றி:- டாக்டர் விகடன்.

பிரிவுகள்:கட்டுரைகள், சிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,