தொகுப்பு
அளப்பரிய அருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
இக வாழ்வின் இன்பங்களில் மூழ்கி திளைத்து முக்குளித்து சொக்கிக் கிடக்கின்றனர்.
ஏகத்துவ கொள்கையை ஏற்று எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாகி அல்லல்பட்டும் அல்லாஹ்விற்கு அஞ்சி நல்லன செய்யும் நல்லடியார்கள் பலர் உள்ளனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முதுகில் ஏற்பட்ட சிவந்த வடுக்களைப் பார்த்து வாடி உமர் (ரலி) அழுதார்கள்.
“”ஏன் அழுகிறீர்?” என்று நபிகள் நாயகம் கேட்டார்கள்.
“”ரோமாபுரி மன்னர் கைஸரும் பாரசீக மன்னர் கிஸ்ராவும் வசதிகளோடு வளமாய் வாழும்பொழுது நீங்கள் அதனினும் அதிக வசதிகளோடு உயர்ந்த வாழ்க்கை வாழலாமே” என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 06 April 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
நற்பலன் பெறுவோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்

அண்ணல் நபிகளாரின் மனைவி ஹஜ்ரத் உம்மு சலமா(ரலி) அவர்களுக்குப் பெண்களின் பெரும் பங்கைக் குறிப்பிடும் வசனங்கள் வான் முறை குர்ஆனில் இல்லையே என்ற ஆதங்கம். சாதகமான வேளையில் நபிகளாரிடம் நாயகி உம்மு சலமா (ரலி) “”அல்லாஹ்விற்காக நாட்டைத் துறந்து வந்த பெண்களைப் பற்றி அல்லாஹ் அறிவிக்கவில்லையே” என்று கேட்டார்கள்.
அப்பொழுது “”உங்களிடமிருந்து ஆணோ அல்லது பெண்ணோ யாராயினும் ஆற்றிய நற்செயல்களை நான் வீணாக்க மாட்டேன்” என்ற திருக்குர்ஆன் (3-195) வசனம் இறக்கப்பட்டது.
நற்கிரியைக்கு உரிய நற்பலன் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும் நல்ல சொர்க்கம். ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் கிடைக்கும். அல்லாஹ் அருளை அள்ளி வழங்குகையில் ஆண், பெண் பாகுபாடு பார்ப்பதில்லை. “நற்செயல்களுக்குரிய நற்பலன், செய்த நன்மையின் தன்மைக்கேற்ப ஆண், பெண் தரம் பிரிக்காது தரப்படும்’ என்று இவ்வசனத்தில் அல்லாஹ் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறான்.
நன்மையைச் செய்வோம். நற்பலனைப் பெறுவோம்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 30 Mar 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
நாமே வழங்குவோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தெருவில் எளிய ஆடை அணிந்து செல்லும் ஸல்மான் பார்ஸி (ரலி)யை கூலியாள் என்றெண்ணி ஷாம் நாட்டு வியாபாரிகள் சுமையைக் கொடுத்து தலையில் சுமந்து வர பணித்தனர். அவ்வாறு ஒரு நாள் சுமை தூக்கிச் செல்லும்பொழுது மதாயின் வாசிகள் அமீர் என்றழத்து சலாம் சொன்னார்கள். அவர் ஆளுநர் என்றறிந்து பதறிய ஷாம் வியாபாரிகள் ஸல்மான் பார்ஸி(ரலி) தலை சுமையை இறக்க முயன்றனர்.
இதையே திருவள்ளுவரும் செங்கோண்மை அதிகாரத்தில்,
“இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்” என்கிறார்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 27 Jan 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
அண்மைய பின்னூட்டங்கள்