தொகுப்பு
வாழ்க்கைத் துணையுடன் இணைந்து திட்டமிடுங்கள்
- 20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை!
- அதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்
- அள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்
- அழகில் வருதே அசத்தல் வருவாய்
- இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி?
- உங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்
- எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்?
- கிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்
- தங்க நகைச் சீட்டு
- நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்
- பிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்
- பெஸ்ட் ரிட்டையர்மென்ட் பிளான்
- மாத சேமிப்பு… மெகா லாபம்
- மியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா?
- ஷரியா முதலீடு
- ஹாபியிலும் பார்க்கலாம் காசு
மின்னலில் இருந்து மின்சாரம்!
அளவற்ற மின்சக்தியின் வெளிப்பாடுதான் மின்னல் என்று படிப்பவர்களுக்கு, அந்த மின்சாரத்தை ஈர்த்துப் பயன்படுத்த முடியுமா என்ற யோசனை பிறந்திருக்கக்கூடும். ஆச்சரியப்படாதீர்கள், எதிர்காலத்தில் அது சாத்தியமாகும் வாய்ப்பிருக்கிறது!
-
- ஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்
- அதிவேக பிரவுசர் OPERA
- அன்புக் குழந்தைகளே! உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது
- அயோத்தி தீர்ப்பு-அரசியல்தனமான தீர்ப்பு
- அயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை
- ஆயுத விற்பனை… அடுத்தது மருந்து!
- இல்லறம்_இனிக்க
- உலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்!-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்
- எங்கும் எதிலும் தமிழ்
- கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்
- கமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்
- கம்ப்யூட்டர் படை
- கூச்சம் தவிர்
- கொளுத்தும் கோடை
- சமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்
- சாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்
- செல்போன்
- செல்லிடைப் பேசி
- திருட்டை தடுக்க
- தேன் – தேனீ
- நம்மை நாமே பார்ப்போம்
- பரிசு கொடு மகிழ்ச்சி பெறு
- பி.ஏ. ஷேக் தாவூத்
- பெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்
- மனம் விட்டுப் பேசுங்கள்
- ரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
- ரவிக்குமார் எம்.எல்.ஏ
- வருமானத்துக்கு வழிகள்
- வெறுங்கை என்பது மூலதனம்
- வேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா?
- ஸய்யத் மன்ஜூர் அஹ்மத்
- IPL 20000 கோடி
- PART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை!
- PART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை!
- கணினி
- கல்வி & வேலை
- +2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்
- ADMISSION TO PART TIME B.E / B.TECH
- அரசாங்க வேலைகள்
- இணைப்புக் கடிதம்
- இன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி
- கனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்
- கல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்
- குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி !
- சிறுபான்மையினர் கல்வி உதவி
- செலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்
- ஜாப் மார்க்கெட்-அப்ளிக்கேஷன் போட்டாச்சா?
- பகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்
- பிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை
- பொறியியல் கல்வியின் வீழ்ச்சி
- மாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா?
- வழி காட்டும் பார்மஸி படிப்பு
- வித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு
- வேலை வழங்கும் பல்வேறு துறைகள்
- வேலைவாய்ப்புச் செய்திகள்
- MBA படித்தும் வேலை இல்லை
வீடு சுத்தமாக இருக்க சில யோசனைகள் – சசிகலா ஸ்ரீனிவாஸ்
வீடு சுத்தமாக இருக்க சில யோசனைகள்
‘சின்ன வயசுல எங்க வீட்டு பாப்பு உபயோகிச்ச ஃபீடிங் பாட்டில், தொட்டில்’ என்று நிறைய உணர்வுபூர்வமான சமாசாரங்கள் வீட்டில் இருக்கும். இந்த ‘எமோஷனல் ஃபீலிங்’ஸுக்கு இடம் கொடுக்காதீர்கள். கொடுத்தீர்களானால், வீடு இன்னொரு ‘ஸாலார்சங் மியூஸிய’மாகிவிடும்!
நிறைய வீடுகளில் ஒரு துடைப்பம் வாங்கினால், வருஷம் முழுக்க அதிலேயே குப்பை கொட்டப் பார்ப்பார்கள். அடிக்கடி நீண்ட தோகையுள்ள நல்ல துடைப்பங்களை வாங்குங்கள்.
குப்பைத் தொட்டிக்கு என்று தனிப்பட்ட முறையில் கார்பேஜ் பேக்ஸ் நிறைய அளவுகளில் கிடைக்கின்றன. அதை வாங்கக் கஞ்சத்தனம் செய்து, பலரும் ‘டஸ்ட் பின்’னுக்குப் பொருந்தாத ஏதோ ஒரு பையை மாட்டி வைப்பார்கள். இதனால் பாதிக் குப்பை தரையிலும் மீதிக் குப்பை பையைத் தாண்டி ‘டஸ்ட் பின்’னிலுமாகச் சிதறிப் போகும்.
பெண்களுக்கு எப்படி அவரவர் அளவுக்கேற்ற உள்ளாடையோ, அதுபோல்தான் இவையும் (‘ச்சீய்’ என முகம் சுளிப்பவர்கள், வேறு நல்ல உதாரணத்தைச் சொல்லுங்களேன்… பார்க்கலாம்!)
கிளீனிங் ஆரம்பிக்கும்போது, முதலில் டாய்லெட், கிச்சன் இவற்றில் ஆரம்பித்து, பின் படுக்கையறை, ஹாலுக்கு வாருங்கள். இல்லாவிட்டால், மீண்டும் மீண்டும் இடுப்பொடியத் துடைத்துக்கொண்டே இருக்க வேண்டிவரும்.
யாருக்கும் தெரியாமல் தூக்கியெறிய வேண்டும் என்கிற நினைப்பிலேயே சில பிரகஸ்பதிகள், ஒளித்து ஒளித்து வைத்து, பின் அப்பட்டமாக மாட்டிக் கொள்வது உண்டு.
உதாரணம்: பெண்டாட்டிக்குத் தெரியாமல் புருஷர்கள் ஒளித்து வைக்கும் விஸ்கி, பிராந்தி பாட்டில்கள், அல்பமான புகைப்படங்கள், வி.சி.டி|க்கள்!
மாமியார், கணவருக்குத் தெரியாமல் பெண்கள் பதுக்கும் புடவைக் கடை பில்கள், உருக்கிய ஈயச்சொம்புகள், உடைந்த பாத்திரங்கள், பூச்சி வந்த ரவை, பருப்புப் பொடி, சப்பாத்திக்குப் பிசைந்த மாவு (அளவே தெரியாமல் பிசைந்துவிட்டுத் தூக்கி எறிகிற பெண்களும் உண்டுங்க!)…
இவற்றை உடனுக்குடன் பைசல் செய்துவிடுவதுதான் உத்தமமான வழி!
சேர்ப்பானேன்… தவிப்பானேன்!
பொருட்களைச் சேர்ப்பதற்கு தேவைப்படுவதைவிட அதை அகற்றத்தான் நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. ஏனெனில், பிரிவு என்பது மனிதனைஅத்தனை பாதிக்கும் | அது, குப்பையாக இருந்தாலும் சரி!
குப்பையை ஸ்கீம் போட்டு அகற்றுவதைப் பற்றியெல்லாம் பாடம் சொல்ல நான் அறியேன். எனினும், ‘சேர்ப்பானேன்… தவிப்பானேன்!’ என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுகிறது.
இந்த அவசர காலத்தில், பொருள் ஈட்டவும் ஈட்டிய பொருளைச் செவ்வனே செலவிடவும் சேமிக்கவும் எவ்வளவு கடினமாக உள்ளது. செலவினங்கள் என்று எடுத்துக்கொண்டால் தேவையானவை, தேவையற்றவை எனச் சிக்கனம் கருதாமல், பல காரணங்களுக்காகப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். விளைவு? குப்பை. சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றுவதைவிட, சேரவிருக்கும் குப்பைகளை அகற்றலாமே!
உணவு, உடை, குழந்தைகளுக்காக வாங்கும் பொருட்கள் என அனைத்திலும் நாம் சற்றே கண்டிப்பைக் காட்டப் பழகிக்கொள்ள வேண்டும். விளம்பரங்களுக்கோ போலி கெளரவத்துக்கோ இரையாகாமல் அது தேவையா என்று தீர முடிவு செய்தபிறகே பர்ஸை பிரியுங்கள்.
கூடவே, பழுதடைந்த பொருட்களைக் களைந்த பின்னரே, புதியதை வாங்குவதென உறுதியாக இருத்தல் வேண்டும். இப்படி வாங்குவதிலும் அகற்றுவதிலும் பாலன்ஸ் இருந்தால், வீடே (அத்தனை சுத்தம்) நமக்கு சோறு போடும்.
********************************************************************
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பணவீக்கத்தை தாண்டி வருமானத்துக்கு வழிகள்..
”சம்பளம் 10 சதவிகிதம்தான் உயர்ந்திருக்கு… ஆனா, உணவுப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் 16 சதவிகிதமா இருக்கு. இந்த நிலைமையில எப்படி முதலீடு செஞ்சா தாக்குப் பிடிக்க முடியும் சார்?” என்று அண்மைக் காலத்தில் ஏராளமான தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள், இமெயில்கள்..!
சிறிது திட்டமிட்டால் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்துவிடலாம். முதலில், உங்களைச் சுற்றி செலவைக் குறைக்கும் வழிகள் என்னென்ன இருக்கின்றன எனக் கவனியுங்கள்.
பர்ஸ் கனக்கும்!
ஒரு சிறிய உதாரணம்… ஒருவர் சென்னையிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலுள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் வேலை பார்க்கிறார் எனில் தினமும் 90 கி.மீ. பயணம் செய்கிறார். அவருக்கு சென்னை மயிலாப்பூரில் சொந்த வீடு இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டால் 20,000 ரூபாய் கிடைக்கும். இதே அளவு வசதி உள்ள வீடு மஹிந்திரா வேர்ல்ட் சிட்டிக்கருகில் 10,000 ரூபாய்க்கு கிடைக்கும்போது, அவர் அலுவலகம் அருகே வீட்டை மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். இதனால் பர்ஸ¨ம் கனக்கும். முதுகுத் தண்டும் தப்பிக்கும்! இதன் மூலம் போக்குவரத்தையும் சேர்த்து மாதம் 12,000 மிச்சப்படுத்தலாம். இப்போது புறநகர்களில் நல்ல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் இருப்பதால் அங்கே வீட்டை மாற்றிக் கொள்வதில் பாதிப்பு எதுவும் வராது.
இதுவே அலுவலகம் நகரத்துக்குள் இருந்து, சொந்த வீடு புறநகரில் இருந்தால், உடல் நலன் கருதி அலுவலகம் அருகே வீட்டை மாற்றிக் கொள்வது நல்லது. உதாரணமாக, ஆவடியில் சொந்த வீடு உள்ளவர் சுமார் 30 கி.மீ. தள்ளியுள்ள அண்ணா சாலையிலுள்ள அலுவலகத்துக்கு வந்து செல்லும் செலவையும் உடற்சோர்வையும் ஆரோக்கியக் குறைவையும் கணக்கிட்டால் சொந்த வீட்டை ஆறாயிரத்துக்கு வாடகைக்கு விட்டுவிட்டு நுங்கம்பாக்கத்திலோ, ராயப்பேட்டையிலோ, திருவல்லிக்கேணியிலோ 10,000 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தால்கூட (பயணச் செலவு மாதம் 2,500 ரூபாய் மற்றும் ஆரோக்கியம்) நஷ்டமில்லை. பொதுவாக, வீடு, அலுவலகம், பள்ளிக்கூடம், ஷாப்பிங் கடைகள் என அன்றாடம் செல்லும் இடங்கள் எல்லாம் அருகருகே அமைந்திருந்தால்தான் நிறையச் செலவைக் குறைக்கமுடியும்.
வாங்கிக் குவிக்காதீர்கள்!
மேலும், விருப்பப்பட்ட பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிக்காதீர்கள். தேவைக்கு மட்டும் வாங்குங்கள். வாரத்துக்கு ஒருமுறை ஓட்டலுக்குப் போய் சாப்பிடுகிறவர்கள், சினிமாவுக்கு போகிறவர்கள் அதனை 15 நாளைக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு ஒரு முறை என்று குறைத்துக் கொள்ளலாம். வருமானம் பெரிய அளவில் உயராதபட்சத்தில் செலவைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை நீங்களும் உங்கள் வீட்டினரும் புரிந்துகொண்டால் இந்த ஆலோசனையை முகம் சுளிக்காமலேயே செயல்படுத்துவீர்கள். 100 ரூபாய் செலவைக் குறைப்பது 1,000 ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம்.
பத்து நிமிடமாவது ஒதுக்குங்கள்!
விலை அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள். அதே நேரத்தில், மலிவாகக் கிடைக்கும் பொருட்களை அதிகம் பயன்படுத்தி, மற்ற பொருட்களின் செலவைக் குறையுங்கள். கல்வி, ஆரோக்கியம், உணவு இந்த மூன்றுக்கான செலவைத் தவிர எதிலெல்லாம் செலவைக் குறைக்க முடியுமோ, குறையுங்கள்.
உலக அளவில் அதிகமாக சேமிப்பவர்களில் இந்தியர்கள் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள். நாட்டின் ஜி.டி.பி.-ல் சுமார் 37% மக்களின் சேமிப்பாக இருக்கிறது. ஆனால், இதனை புத்திசாலிதனமாக அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்து லாபமீட்டுகிறார்களா என்றால் இல்லை. தினசரி 8-10 மணி நேரம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய நாம் பத்து நிமிட நேரம்கூட ஒதுக்குவதில்லை. இந்தப் போக்கை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
காலை வாரும் கவர்ச்சித் திட்டங்கள்
சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் பணத்தை அவசரத் தேவையில்லாதபோது அவற்றை குறுகிய கால டெபாசிட்டுக்கு மாற்றி சில சதவிகிதம் கூடுதல் வருமானத்தைப் பெற முயற்சி செய்யலாம். பல நேரங்களில் பாதுகாப்பான முதலீடு என்று நினைத்து மிக்ஸி, கிரைண்டர் பரிசுகளுக்கு ஆசைப்பட்டு, கவர்ச்சிகரமான திட்டங்களில் முதலீடு செய்து உள்ளதையும் இழக்கிறார்கள் நம் மக்கள். அதே நேரத்தில், ஒளிவு மறைவற்ற, ரிஸ்க் உள்ள அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்.
வரிச் சுமையை குறையுங்கள்…
// //
|
முதலீட்டின் நோக்கம் அதிக வருமானம்தான் என்றாலும், வருமான வரிச் சுமையை குறைப்பதற்கான வழிகளை முதலில் கடைப்பிடிக்கவேண்டும். உச்சபட்ச வருமான வரி வரம்பில் இருக்கும்போது 100 ரூபாய்க்கு சுமார் 30 ரூபாய் வரி கட்ட வேண்டிவரும். இந்தத் தொகையை வரிச்சலுகைக்கான திட்டங்களில் முதலீடு செய்தால் வரியை மிச்சப்படுத்துவதோடு, வருமானத்துக்கும் வழியைத் தேடியது போலாகும்.
சம்பளத்திலே பிடிக்கும் பிராவிடன்ட் ஃபண்ட் முதலீட்டை அப்படியே தொடரலாம். அது ஓய்வுக் காலத்துக்கான முதலீடு என்பதால் அதில் ரிஸ்க் எடுக்கவேண்டாம். முடிந்தால் கொஞ்சம் அதிகமாகவே சேமிக்கலாம். அடுத்து வரிச்சலுகை என்கிறபோது தனக்கு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ், தனி நபர் விபத்து பாலிசி, மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு பங்கு சந்தை சேமிப்பு திட்டமான இ.எல்.எல்.எஸ். மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம்.
சொந்த வீடு…
சொந்த வீடு வாங்க மூன்று விஷயங்களை நீங்கள் கவனிக்கவேண்டும். ஒன்று, கடனில் வாங்குங்கள் (கையில் பணமிருந்தாலும்); இரண்டு, வீட்டை வாடகைக்கு விடுங்கள், கடன் முடியும் வரை நீங்கள் அதில் வசிக்காதீர்கள். மூன்று, தம்பதிகள் இருவரும் பணிபுரிவதாக இருந்தால் வீடு மற்றும் கடனை இருவர் பெயரிலும் கூட்டாக வாங்குங்கள். இப்படிச் செய்தால் இருவருக்குமே இரு வரிச் சேமிப்பு வருமான வரிச் சட்டத்தின் 80சி-ன் கீழ் நபர் ஒருவருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வரையில் திரும்பக் கட்டிய அசல் தொகை மற்றும் முழு வட்டியை (வருமானவரி சட்டம் 24-ன் கீழ்) வரிவிலக்காகப் பெற்று அதிகமாக வரியை மிச்சப்படுத்த முடியும்.
பங்குச்சந்தை
வரிச்சலுகைக்கு போதுமான அளவு முதலீடு செய்துவிட்டீர்கள் என்றால், பணவீக்க விகிதத்தை தாண்டி வருமானம் வேண்டும் என்கிறவர்கள் பங்குச் சந்தை பக்கம் வரலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில் நீண்ட காலத்தில் ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் சுமார் 5 முதல் 6 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. உணவுப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் 20 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அந்த வகையில் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடு பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம் அளிப்பதாக இருக்கும். குறுகிய காலத்தில் கரெக்ஷன் வரும்போது நல்ல பங்குகள் மற்றும் ஃபண்ட்களில் முதலீடு செய்யுங்கள். பங்குச் சந்தை, ஃபண்ட் முதலீடு ரிஸ்க்கானதுதான். ஆனால், அவை அதிக வருமானத்தைக் கொடுக்கிறது என்பதை அறிந்து, வயதுக்கு ஏற்ப அதில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்த நோக்கில் நீங்கள் பணவீக்கத்தை பந்தாடி ஜெயிக்கலாம்.
அதிக வருமானம்…!
வருமான வரி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தது போக, மீதியுள்ள தொகையை ரிஸ்க் உள்ள அதே நேரத்தில் அதிக வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். 1 பங்குச் சந்தை முதலீடு இதில் ரிஸ்க் இருக்கும் அளவுக்கு வருமானமும் இருக்கிறது. நல்ல நிறுவனப் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வந்தால் நிச்சயம் சிறப்பான வருமானத்தைப் பெறலாம். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் பங்குச் சந்தை ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கொடுத்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் பணவீக்க விகிதம் சுமார் 10 சதவிகிதம்தான். எனவே 5 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானத்தையே பங்குச் சந்தை தந்திருக்கிறது. சென்செக்ஸ், நிஃப்டி, நிஃப்டி ஜூனியர் குறியீடுகளில் இடம் பிடித்துள்ள பங்குகளில் முதலீடு செய்வது மூலம் ஓரளவு பாதுகாப்பாகவும் அதேசமயம் அதிக வருமானத்தையும் பெறமுடியும். கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிந்த ஓராண்டு காலத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் 82%, நிஃப்டி புள்ளிகள் 77% அதிகரித்திருப்பதே இதற்கு சிறந்த ஆதாரம். 2. மியூச்சுவல் ஃபண்ட் வரி சேமிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள், மூன்றாண்டுகள் ‘லாக் இன் பிரீயட்’ கொண்ட இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிக வருமானம் பெற மூன்றாண்டுகள் கழித்து வேறு தீவிரமான ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். அல்லது மீண்டும் வரிச்சலுகை பெற இ.எல்.எஸ்.எஸ். திட்டங்களில் மறுமுதலீடு செய்யலாம். இந்த வரி சேமிப்பு ஃபண்டில் டிவிடெண்ட் மற்றும் வருமானத்துக்கு வரி இல்லை என்பது கூடுதல் லாபம். கடந்த மூன்றாண்டு காலத்தில், முதல் 10 இடங்களில் உள்ள இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள் 15 முதல் 25% வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. வரி சேமிப்பைத் தாண்டி முதலீடு செய்பவர்கள், முற்றிலும் பங்கு சார்ந்த டாப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது மூலம் அதிக வருமானத்தைப் பெறலாம். மார்ச் 25-ம் தேதியுடன் முடிந்த ஓராண்டு காலத்தில் முதல் பத்து இடங்களில் உள்ள டாப் மியூச்சுவல் ஃபண்ட்கள் 145-165% வருமானத்தை அள்ளித் தந்திருக்கின்றன. ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டில் முதலீடு செய்யும்போது எஸ்.ஐ.பி. முறையில் மாதாமாதம் ஒரு சிறு தொகையை முதலீடு செய்வது நீண்டகால அடிப்படையில் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். 3. தங்கம் – இ.டி.எஃப். இதை காகிதத் தங்கம் எனலாம். இதற்கு டீமேட் கணக்கு வேண்டும். ஆபரணத் தங்கமாக வாங்கும்போது உள்ள செய்கூலி, சேதாரம் இதில் இல்லை என்பதால் கூடுதல் லாபம். அதேபோல விற்கும் போதும் இது போன்ற கழிவுகள் கிடையாது என்பதால் லாபம் முழுவதும் உங்களுக்கே (தரகருக்கு கொடுக்கும் சிறு கமிஷன் போக). தங்க முதலீட்டோடு ஒப்பிடும்போது இதற்கான வருமானவரி குறைவுதான். இப்போது இந்த கோல்ட் இ.டி.எஃப். மிகவும் பாப்புலராகி வருகிறது. பங்கு, மியூச்சுவல் ஃபண்ட், கோல்ட் இ.டி.எஃப். முதலீட்டில் நீங்கள் எந்த விலையில் வாங்குகிறீர்கள் என்பது மிக முக்கியம். எப்போதும் கரெக்ஷன் காலத்துக்காக காத்திருந்து முதலீடு செய்வது மூலம்தான் அதிக லாபம் பெறமுடியும். மேலும், மொத்தமாக முதலீட்டைச் செய்ய வேண்டாம். எப்போதும் எஸ்..ஐ.பி. முறையை பின்பற்றி முதலீடு செய்து வாருங்கள். மேலே கண்ட மூன்று முதலீட்டு முறைகளிலும் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் வந்ததும் விற்று பணமாக்கி விட்டு, மீண்டும் குறையும் போது முதலீடு செய்யுங்கள். இவ்விதம் செய்தால் பண வீக்க விகிதத்தைத் தாண்டி அதிக வருமானத்தை நிச்சயம் பெறலாம். 4. ரியல் எஸ்டேட் இதிலுள்ள பெரிய பிரச்னை முதலீடு செய்ய நிறைய பணம் வேண்டும். தவிர, தேவைப்படும்போது விற்கவும் முடியாது. ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி பல மடங்கு வருமானம் தரும் முதலீட்டில் ரியல் எஸ்டேட் முக்கிய இடத்தில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. முதலில் சொந்த வீடு கடனில் வாங்கி ஏற்கனவே சொன்னது போல் வருமான வரியை மிச்சப்படுத்துங்கள். அது முடிந்த பிறகு அல்லது அதையும் தாண்டி பணமிருந்தால் புறநகர்களில் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் மனைகளில் முதலீடு செய்யலாம். மாதத் தவணை திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது, உங்கள் பிளாட்டை விற்பவர் நம்பகமான புரமோட்டார்தானா என்பதே. அகலமான சாலை, கார்னர் மனை, தண்ணீர் வசதி, அருகிலுள்ள நகரங்களில் தொழில் வளர்ச்சி போன்ற அம்சங்களைக் கவனித்து முதலீடு செய்தால்தான் முதலீடு மதிப்பு வேகமாகக் கூடும். ரியல் எஸ்டேட் முதலீட்டில் கணிசமான லாபம் பார்க்க குறைந்தது 5-10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 5 உத்தரவாத வருமானத் திட்டங்கள் முழுப் பணத்தையும் ரிஸ்க் உள்ள திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில், பொது பிராவிடன்ட் ஃபண்ட் மற்றும் கடன் சார்ந்த ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். இது அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து இருக்கிறது. |
அண்மைய பின்னூட்டங்கள்