தொகுப்பு
ரமழானின் சிறப்புகள்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ரமழானின் சிறப்புகள்
ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.
அருள் வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: புஹாரீ(1899), முஸ்லீம்(1957) மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.
நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பு.
“ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். முஸ்லீம் (2119) இது நோன்புக்கே உள்ள தனிச் சிறப்பாகும்.
நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரத்தில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமை மிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி
எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி (ரழி) நூல் : பைஹகி
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ◊ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ◊ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
நிச்சயமாக நாம் குர்ஆனை கண்ணியமிக்க லைலத்துல் கத்ர் என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அல்குர்ஆன் 972:1-3
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் மேலும் இம்மாதம் சிறப்பும், கண்ணியமும் மிக்க மாதமாகிறது.
லைலத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட, இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
நோன்பாளிகளுக்கு சுவர்க்கத்தில் தனி வாசல்
மறுமை நாளில் சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது. நூல்: புஹாரீ (1896), முஸ்-ம் (2121)
அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்
“நோன்பு நரகத்தி-ருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரீ (1904)
கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்
ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரீ, முஸ்லிம்
எனவே சிறப்பும், கண்ணியமும் மிக்க இந்த ரமழான் மாதத்தை அடைந்து நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நல் அமல்கள் செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக! அமீன்! அமீன்! யாரப்பல் ஆலமின்.
யா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே
யா ரஹ்மானே! எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே!
இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால் ரஹ்மத்தை சொரிவாயே!
முந்திய பத்தில் ரஹ்மத்தும், மத்திய பத்தில் குஃப்ரானும், இன்னும்
பிந்திய பத்தில் இத்கையும் பொதிந்த ரமழானை தந்தாயே! யா ரஹ்மானே! எங்களின்….
அஸ்ஸவ்முலீ வஆனல்லதீ அஜ்ஜி பிஹி என்று மொழிந்தாயே!
இந்த நோன்பெனக்காக்கும் நான் கூலி அளிப்பேன் என்று நீ பகர்ந்தாயே!
லைலத்துல் கத்ரி கைரும்மின் அல்ஃப்பிஷஹ்ரென்று உரைத்தாயே!
ஒரு ஆயிரமாதம் வணக்கத்தை விட இவ்விரவை நீ மதித்தாயே!
நோன்பு பிடித்தோம், தராவீஹ் தொழுதோம், பல அமல்கள் செய்தோம்!
எங்கள் வணக்கங்கள்தனையும், வேண்டுதல்களையும் கபூல்செய்தருள்வாயே!
பள்ளியில் தொழுதோம், திக்ருகள் செய்தோம், பல அமல்கள் செய்தோம்.
எங்கள் தையானே எம்மை ரமழானின் பொருட்டால் சுவனத்தில் சேர்ப்பாயே!
பிழை பொறுப்போன் உனையன்றி வேறாரும் இல்லையே! இல்லையே!!
பெரும் புகழுடையோனே இகபர வாழ்வில் ஆதரித்தருள்வாயே!
யாரப்பி ஸல்லி ஸல்லிம் அலாதா ஹா ஹைரு ஹல்கில்லாஹ்.
ரமளானே வருகவே…!!! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
இரவெலாம் விழித்து
அகமெலாம் நிறைந்து
வானில் இருந்த இறைவேதம்
வஹியின் வழியாக
தேனினும் இனிய திருநபியின் (ஸல்)
திருவதனம் மொழிய வந்த மாதம்
ஈகைத் திருநாளாம்
ஈத் பெருநாளைக்கு முன்பாகவே
வாகைத்தரும் பித்ரா தர்மம்
வழங்குவோம் ஏழைகட்கு அன்பாகவே
ரமழானை வரவேற்போம்! – மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும்
அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:
2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை:
3-கனக்கின்றி கூலி வழங்கப்படும்:
6-நோன்பு நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்:
7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்:
8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்:
9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி:
ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்
நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு:
முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.
ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:
நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’
ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:
இரவுக் காலங்களில் நின்று வணங்குவது:
ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:
நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!
நன்றி:- மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி
- இஸ்லாம்
- அண்ணல் நபி (ஸல்)
- அல் குர்ஆன்
- அல்லாஹ்வின் திருநாமங்கள்
- அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
- அஹ்லுல் பைத்
- இஸ்லாம் இலகுவான மார்க்கம்
- உம்ரா
- உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்
- எது முக்கியம்?
- கடமையான குளிப்பு
- கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்
- குழந்தைகள்
- சோம்பல் இஸ்லாத்தின் பார்வையில்
- ஜனாஸா (மய்யித்)
- ஜும்ஆ
- துஆ
- அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
- அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
- ஆயத்துல் குர்ஸி
- இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது
- இறந்தவருக்காகச் செய்யும் துஆ
- கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்
- கடமையான தொழுகைக்குப்பின்
- கப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)
- கவலையின் போது ஓதும் துஆ
- ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ
- தலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)
- தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை
- நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது
- மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது
- வீட்டிருந்து வெளியே செல்லும் போது
- தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்
- தொழுகை
- இஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்
- உளூ செய்யும் முறை
- குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட
- சுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்
- ஜமாஅத் தொழுகை
- ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை
- தயம்மும்-நோயாளி உளூ செய்வது
- தொழுகை கடமையும் சிறப்பும்
- தொழுகையும் உடல்ஆரோக்கியமும்
- தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்
- நல்லறங்கள்
- நோன்பு
- பர்தா
- பார்வை
- பிழை பொருத்தருள் யாஅல்லாஹ்
- பெற்றோர்
- மனைவி
- முன்மாதிரி முஸ்லிம்
- யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?
- வலிமார்கள்
- வாழ்வின் முன்னேற்றத்திற்கு
- விதியின் அமைப்பு
- ஷிர்க் என்றால் என்ன?
- ஸலாம் கூறுவதன் சிறப்பு
- ஸுன்னத் வல் ஜமாஅத்
- ஹஜ்
- Sadaqa
- Sadaqat-Ul-Jariyah
ரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்
‘ஸவ்ம்’ என்பதன் பொருள்: ‘தடுத்துக்கொள்ளல்’
தீய எண்ணங்கள், மனோ இச்சைகளிலிருந்து மனதைத் தூய்மையுறச் செய்தல்.
ஷைத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்தல்.
அளவுகடந்த உலகியல் ஆசைகளிலிருந்து மீளச்செய்தல்.
மரணத்தின் பின்னுள்ள வாழ்வு பற்றிய பிரக்ஞையை அதிகரிக்கச் செய்தல்.
ஏழைகளின் துன்ப துயரங்களை அனுபவபூர்வமாக உணரச் செய்து உதவும் மனப்பான்மையை வளர்த்தல்.
முழு வாழ்வையும் அல்லாஹ்வுக்காக அமைத்துக் கொள்ளல் வேண்டும் எனும் பயிற்சியை வழங்குதல்.
அல்லாஹ் மீதான பயபக்தியை அதிகரிக்கச் செய்தல்.
ரமழானை வரவேற்கத் தயாராவது எப்படி?
ரமழானின் வருகையைப் பற்றி ஆசையூட்டுதல்
குடும்பத்தினர், அயலவர்கள், நண்பர்கள் மத்தியில் ரமழானுக்காகத் தயாராவது குறித்து ஆர்வமூட்டுதல்
அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதற்கும் மனனமிடவும் ஆசையூட்டுதல்
சிறுவர்களுக்கு நோன்பு நோற்கப் பயிற்சியளித்தல்
ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுவர்களிடையே பரிட்சார்த்தமாக நோன்பு நோற்கச் செய்யலாம்.
அவர்களை நம்மோடு ஸஹர், இஃப்தார் செய்ய வைக்கலாம்
பெண்கள் இஃப்தார் சிற்றுண்டித் தயாரிப்புக்கு அதிக நேரம் விரயமாக்கக் கூடாது
ரமழானின் பயனை அதிகம் அடைந்து கொள்வதை முதன்மைப்படுத்துதல்.
சமையலறையிலேயே நாளில் பெரும் பகுதியைக் கழித்து பர்ழான அமல்களையும் கோட்டை விடுவதைத் தவிர்த்தல்.
வேலை நேரத்திலும் திக்ர், இஸ்திஃபார், குர்ஆனில் மனனமுள்ள பகுதிகளை ஓதுவதை அதிகப்படுத்துதல்
ரமழான் என்பது வயிறுமுட்ட சாப்பிடுவதற்கான மாதமல்ல
ஆண்கள் இதற்குப் புரிந்துணர்வோடு ஒத்துழைப்பு வழங்குதல்.
பெருநாள் ‘ஷாப்பிங்’கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுதல்
தான தர்மங்களை அதிகப்படுத்துதல்
புத்தி சுவாதீனமுடையவராக இருத்தல்.
நோன்பை நிறைவேற்றுவதற்குச் சக்தி உடையவராக இருத்தல்.
ஊரில் தங்கி இருத்தல். (பிரயாணத்தில் இல்லாதிருத்தல்)
அல்லாஹ்வை அதிகம் நினைவுகூர்தல்
ரமழான் என்பது குர்ஆனின் மாதமாகும்
பாவங்களிலிருந்து தவிர்ந்துகொள்ளல்
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ َثَبَتَ الْأَجْرٌ إِنْ شَاءَ اللَّهُ
நோன்பாளிகளை நோன்பு திறக்க வைத்தல்
லைலத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்தல்
“நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனைக் கண்ணியமிக்க ஓர் இரவில் இறக்கிவைத்தோம்.” (அல் கத்ர்:1)
“அந்த கண்ணியமிக்க இரவின் மகிமையை நீர் அறிவீரா?” (அல் கத்ர் : 2)
“கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மேலானதாகும்” (அல் கத்ர் :3)
ரமழானின் இறுதிப் பத்து நாட்கள்
ரமழான் இறுதிப் பத்து நாட்களைப் பற்றி ஆயிஷா (ரழி) பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
ரமழான் இறுதிப் பத்து நாட்களும் மஸ்ஜிதில் தங்கி (இஃதிகாஃப்) இருத்தல்.
இஃதிகாஃப் இருப்பதற்குரிய நிபந்தனைகள்
3. புத்தி சுவாதீனமுடையவராக இருத்தல்.
5. குளிப்புக் கடமையிலிருந்து நீங்கியிருத்தல்.
6. இஃதிகாஃப் இருக்கும் ஸ்தானத்தில் தரித்திருத்தல்
நோன்பு நோற்றுள்ள நிலையில் பல்துலக்குதல்
நோன்பாளி ஒருவர் கண்டிப்பாகத் தவிர்ந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்
வாய் வழியாகவோ அல்லது மூக்குத் துவாரம் மூலமாகவோ ஏதேனும் வயிற்றை அடைதல்.
விந்து வெளியாதல். முத்தமிடுதல்- அணைத்தல் முதலான செயல்களால் விந்து வெளியாதல்.
மாதவிடாய், பிரசவம் என்பனவற்றால் இரத்தம் வெளியேறுதல்
நோன்பு நோற்பதிலிருந்து சலுகை பெற்றவர்கள்
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்
நோன்பின் மூலம் கிடைக்கப்பெறும் பயிற்சி எவ்வாறு வாழ்க்கையை வளப்படுத்துகிறது?
என்ற இறை கட்டளையை உயிரோட்டமுள்ளதாக்கி, முழு வாழ்வையும் வணக்கமாக்குவதற்கு உரிய பயிற்சியை வழங்குகிறது.
“உமக்கு யகீன் எனும் மரணம் வரும்வரையில் உமது இரட்சகனை வணங்கிக்கொண்டிருப்பீராக.’” (அல்குர்ஆன் 15:99)
விடுபட்ட நோன்புகளைக் கழாச் செய்தல்
ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள்
பாவமான செயல்களை விட்டும் தவிர்ந்துகொள்வோம்
அதிகமதிகம் பாவமன்னிப்புக் கோருவோம்
அல்லாஹ்வை எந்நேரமும் திக்ர் செய்வோம்
நன்றி:- தொகுத்த லறீனா அப்துல் ஹக்
- இஸ்லாம்
- அண்ணல் நபி (ஸல்)
- அல் குர்ஆன்
- அல்லாஹ்வின் திருநாமங்கள்
- அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
- அஹ்லுல் பைத்
- இஸ்லாம் இலகுவான மார்க்கம்
- உம்ரா
- உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்
- எது முக்கியம்?
- கடமையான குளிப்பு
- கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்
- குழந்தைகள்
- சோம்பல் இஸ்லாத்தின் பார்வையில்
- ஜனாஸா (மய்யித்)
- ஜும்ஆ
- துஆ
- அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
- அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
- ஆயத்துல் குர்ஸி
- இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது
- இறந்தவருக்காகச் செய்யும் துஆ
- கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்
- கடமையான தொழுகைக்குப்பின்
- கப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)
- கவலையின் போது ஓதும் துஆ
- ஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ
- தலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)
- தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை
- நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது
- மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது
- வீட்டிருந்து வெளியே செல்லும் போது
- தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்
- தொழுகை
- இஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்
- உளூ செய்யும் முறை
- குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட
- சுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்
- ஜமாஅத் தொழுகை
- ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை
- தயம்மும்-நோயாளி உளூ செய்வது
- தொழுகை கடமையும் சிறப்பும்
- தொழுகையும் உடல்ஆரோக்கியமும்
- தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்
- நல்லறங்கள்
- நோன்பு
- பர்தா
- பார்வை
- பிழை பொருத்தருள் யாஅல்லாஹ்
- பெற்றோர்
- மனைவி
- முன்மாதிரி முஸ்லிம்
- யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?
- வலிமார்கள்
- வாழ்வின் முன்னேற்றத்திற்கு
- விதியின் அமைப்பு
- ஷிர்க் என்றால் என்ன?
- ஸலாம் கூறுவதன் சிறப்பு
- ஸுன்னத் வல் ஜமாஅத்
- ஹஜ்
- Sadaqa
- Sadaqat-Ul-Jariyah