தொகுப்பு
தினை விதைத்தவன்! – மு.அ. அபுல் அமீன்

தஃமா, மாவு வாங்கி வரும்பொழுது பக்கத்து வீட்டில் புகுந்து கதாதாவின் உருக்குச் சட்டையைத் திருடி மாவு பையில் மறைத்து வைத்தான். அதனால் மாவு சிந்தியது. உருக்குச் சட்டையை அவனது வீட்டில் வைத்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று சாமர்த்தியமாக ஜைது பின் சலீமிடம் கொடுத்தான். திருட்டு கண்டுபிடிக்கப்பட்டதும் யூதரைச் சிக்க வைத்து விட்டான்.
சாய்விலா ஆய்வில் குற்றம் நிரூபிக்கப்பட்டதும் தஃமா மக்காவிற்கு ஓடி நபிகளாரின் ஏகத்துவ கொள்கையை எதிர்ப்போருடன் சேர்ந்து கொண்டான். தொடர்ந்து திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்தான். இறுதியில் கல்லடியால் கொல்லப் பட்டான்.
நன்றி:- தினமணி 25-May-2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
சாட்சி! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
அந்தந்த நாடுகளில் அவ்வப்பகுதிகளில் உள்ள பழக்க வழக்கத்தை ஒட்டி வியாபாரத்திலும் சாட்சி வைத்துக்கொள்ளவும். வியாபாரத்தில் ஏற்படும் லாபம், நஷ்டம், ஏற்றம், தாழ்வு, போட்டி போன்ற நிலைகளில் சாட்சியை சாதகமாக சாட்சி சொல்லத் துன்புறுத்துவது பாவம் என்றும் திருக்குர்ஆனின் 2.282வது வசனம் கூறுகிறது.
அதுமட்டுமின்றி “”அனாதைகளின் பொருட்களுக்குப் பொறுப்பேற்று பராமரிப்பவர், அனாதைகள் உரிய வயதடைந்ததும் அப்பொருட்களை சாட்சிகளை வைத்துக்கொண்டு ஒப்படைக்க வேண்டும்” என்றும் திருக்குர்ஆனின் 4-6வது வசனம் அறிவிக்கின்றது.
நன்றி:- தினமணி 18-May-2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
அகிலம் படைத்த அதிபதி
அல்லாஹ் சொல்கிறான் அமரர்
சகிதம் அண்ணல் நபி மீது
சகல பொழுதும் ஸலவாத்து
துஆவின் துவக்கமும் ஸலவாத்தே
தூயோன் அல்லாஹ்வை வேண்டும்
துஆவின் முடிவும் ஸலவாத்தே
துலங்கும் துவக்கும் செயலும்
தவறாது ஓதும் ஸலவாத்து
தவறுகளின் தக்க பரிகாரம்
அவதூறை அகற்றி அன்றாட
அமல்களைப் பரிசுத்த மாக்கும்
அவசர உலகில் அணுவளவும்
ஆபத்து நேரா திருக்க
அவசியம் ஓத வேண்டும்
அண்ணல் நபி மீது ஸலவாத்து
எந்த காலமும் நேரமும்
ஏந்தல் நபிமீது ஸலவாத்து
எந்த நிலையிலும் ஓதலாம்
ஏக இறைவன் ஏற்பான்.
நன்றி:- தினமணி – முஸ்லீம் முரசு பிப்ரவரி 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
அளப்பரிய அருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
இக வாழ்வின் இன்பங்களில் மூழ்கி திளைத்து முக்குளித்து சொக்கிக் கிடக்கின்றனர்.
ஏகத்துவ கொள்கையை ஏற்று எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாகி அல்லல்பட்டும் அல்லாஹ்விற்கு அஞ்சி நல்லன செய்யும் நல்லடியார்கள் பலர் உள்ளனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முதுகில் ஏற்பட்ட சிவந்த வடுக்களைப் பார்த்து வாடி உமர் (ரலி) அழுதார்கள்.
“”ஏன் அழுகிறீர்?” என்று நபிகள் நாயகம் கேட்டார்கள்.
“”ரோமாபுரி மன்னர் கைஸரும் பாரசீக மன்னர் கிஸ்ராவும் வசதிகளோடு வளமாய் வாழும்பொழுது நீங்கள் அதனினும் அதிக வசதிகளோடு உயர்ந்த வாழ்க்கை வாழலாமே” என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 06 April 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
நற்பலன் பெறுவோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்

அண்ணல் நபிகளாரின் மனைவி ஹஜ்ரத் உம்மு சலமா(ரலி) அவர்களுக்குப் பெண்களின் பெரும் பங்கைக் குறிப்பிடும் வசனங்கள் வான் முறை குர்ஆனில் இல்லையே என்ற ஆதங்கம். சாதகமான வேளையில் நபிகளாரிடம் நாயகி உம்மு சலமா (ரலி) “”அல்லாஹ்விற்காக நாட்டைத் துறந்து வந்த பெண்களைப் பற்றி அல்லாஹ் அறிவிக்கவில்லையே” என்று கேட்டார்கள்.
அப்பொழுது “”உங்களிடமிருந்து ஆணோ அல்லது பெண்ணோ யாராயினும் ஆற்றிய நற்செயல்களை நான் வீணாக்க மாட்டேன்” என்ற திருக்குர்ஆன் (3-195) வசனம் இறக்கப்பட்டது.
நற்கிரியைக்கு உரிய நற்பலன் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும் நல்ல சொர்க்கம். ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் கிடைக்கும். அல்லாஹ் அருளை அள்ளி வழங்குகையில் ஆண், பெண் பாகுபாடு பார்ப்பதில்லை. “நற்செயல்களுக்குரிய நற்பலன், செய்த நன்மையின் தன்மைக்கேற்ப ஆண், பெண் தரம் பிரிக்காது தரப்படும்’ என்று இவ்வசனத்தில் அல்லாஹ் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறான்.
நன்மையைச் செய்வோம். நற்பலனைப் பெறுவோம்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 30 Mar 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
நாமே வழங்குவோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தெருவில் எளிய ஆடை அணிந்து செல்லும் ஸல்மான் பார்ஸி (ரலி)யை கூலியாள் என்றெண்ணி ஷாம் நாட்டு வியாபாரிகள் சுமையைக் கொடுத்து தலையில் சுமந்து வர பணித்தனர். அவ்வாறு ஒரு நாள் சுமை தூக்கிச் செல்லும்பொழுது மதாயின் வாசிகள் அமீர் என்றழத்து சலாம் சொன்னார்கள். அவர் ஆளுநர் என்றறிந்து பதறிய ஷாம் வியாபாரிகள் ஸல்மான் பார்ஸி(ரலி) தலை சுமையை இறக்க முயன்றனர்.
இதையே திருவள்ளுவரும் செங்கோண்மை அதிகாரத்தில்,
“இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்” என்கிறார்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 27 Jan 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
ஸுஹைப் இப்னு ஸினான் ரூமி என்ற நபித்தோழருக்கு அபூயஹ்யா என்ற பெயரும் உண்டு. மக்காவில் செல்வமிக்கவர். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்ற பின் அவரும் ஒரு நாள் மதீனா செல்லப் புறப்பட்டார். அவர் மதீனா செல்வதறிந்த குறைஷி காபிர்கள் அவரைப் பிடித்து இழுத்து வந்து தண்டிக்க ஓடினர். ஸுஹைபைச் சுற்றி வளைத்தனர். வாகனத்திலிருந்து இறங்கிய ஸுஹைப்(ரலி) அம்புக் கூட்டிலிருந்து அம்புகள் அனைத்தையும் வெளியில் எடுத்து, “”என் அருகில் நெருங்கினால் அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைக் குறி வைத்து அம்பெய்தி கொன்றுவிடுவேன். அம்புகள் தீர்ந்ததும் எஞ்சியவரை என் வாள் வஞ்சம் தீர்க்கும்” என்றார்.
அல்லாஹ்வின் அருள் தேடி அவன் தூதர் இருக்கும் மதினாவிற்குச் செல்லும் ஸுஹைப் (ரலி) அவர்கள் பொருள் இருக்கும் இடத்தைப் புலப்படுத்தியதும் பிறர் பொருள் கவரும் கொள்ளையர்களான புல்லர் கூட்டம் புறமுதுகிட்டு மக்காவிற்குத் திரும்பி ஓடியது.
ஸுஹைப் (ரலி) அவர்கள் மதீனா சென்று சேருவதற்கு முன்னால், “”அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி தம்மையே விற்றவரும் மனிதர்களில் உண்டு. இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிக்க இரக்கம் காட்டுகிறவன்” (2-207) என்ற திருக்குர்ஆன் வசனம் இறங்கியது.
ஸுஹைப் (ரலி) அவர்கள் மதீனா வந்ததும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்,””அபூயஹ்யாவே! உங்களின் வியாபாரம் லாபம் அளித்துவிட்டது” என்று கூறி மேற்குறிப்பிட்ட வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 23 Sep 2011
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்
எவர் ஏழைகள் என்று புகாரி, முஸ்லிம், ஹதீது நூல்கள் வரையறுக்கின்றன.
இத்தகு தர்மங்களை இத்தரணியில் இறையச்சத்தோடு செய்து மறுமையில் பெறுவோம் பெரும் பலனை.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 23 Dec 2011
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
தானத்தின் பொருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
நாமும் நல்வழியில் பொருளீட்டி நன்மையை நாடி இல்லாதோருக்கு இன்முகத்தோடு ஈந்து இறையருளைப் பெறுவோம்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 02 Dec 2011
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
தகவல் பெட்டி 01
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ‘தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி’ மிகவும் பிரபலம். யூதரான அவர் பிறந்த நாடு ஜெர்மனியாக இருந்தாலும் யூதர்களின் எதிரியான ஹிட்லருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவரது ஆராய்ச்சிகள் அனைத்துமே அமெரிக்காவில் நடந்தன.
எகிப்தில் வெள்ளைத்தங்கம் என்று அழைக்கப்படுவது பருத்தி.
புத்தரின் தந்தை பெயர் சுத்தோதனர்.
இங்கிலாந்து நாட்டை ஆண்டவர்களில் ஜேன் கிரே (Jane grey) மட்டும்தான் மிக குறுகிய காலம் இருந்தவர். அவர் ராணியாக இருந்தது வெறும் ஒன்பது நாட்களுக்கு மட்டுமே.
ரோல்ட் அமுன்ட்ஸென் (Roald Amundsen) என்பவர்தான் தென்துருவத்தை முதன்முதலில் அடைந்தவர்.
உலக வாணிப நிறுவனத்தின் (WTO) தலைமையகம் அமைந்திருப்பது ஜெனிவாவில்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முதல் வைசிராயாக இருந்தவர் கானிங் பிரபு (Lord canning).
ஒரு அணுகுண்டு தயாரிக்க ஆகும் செலவு தெரியுமா? ஒரு கோடி ரூபாய். ஆனால், அவற்றால் ஏற்படும் இழப்புகள் அதைவிட வெகு அதிகம்.
இந்திய சுதந்திரத்துக்கு புரட்சி பாதையில் போராடியவர் சுபாஷ் சந்திர போஸ் என்பது உங்களுக்குத் தெரியும். அதற்காக அவர் தொடங்கியதுதான் இந்தியன் நேஷனல் ஆர்மி. சுருக்கமாக மி.ழி.கி.
ஸ்பெயின் நாட்டின் பிரபலமான நடனம் ஃப்ளமிங்கோ (Flamingo).
உலகின் மிக உயரமான பறவையான நெருப்புகோழியின் மற்றொரு பெயர் என்ன தெரியுமா? ஒட்டகப் பறவை.
சைடாலஜி (cytology) என்பது செல்களை ஆராயும் விஞ்ஞானப் படிப்பின் பெயராகும்.
முதன்முதலில் கிரகங்களின் சுழற்சியை ஆராய்ந்து கண்டறிந்தவர் கெப்ளர் (Kepler). பாலைவனத்தில் செல்லும்போது மிகக் குறைந்த ஒலியைக்கூட நம்மால் கேட்கமுடியும்.
விசில் அடிப்பது போன்ற ஒலியை உருவாக்கும் ஒரே உயிரினம் டால்பின்.
அகராதியை முதலில் தயாரித்தவர் சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson).
வகுப்பறையில் உங்கள் ஆசிரியரின் கையில் அதிக நேரம் இருக்கும் சாக்பீஸின் வேதிப் பெயர் கால்ஷியம் கார்பனேட் (Calcium carbonate)
இந்தியாவின் தலைநகரான டெல்லியின் பழைய பெயர்- இந்திரப்பிரஸ்தம்.
இறக்கைகளே இல்லாத பறவை ஆஸ்திரேலியாவில் உள்ள கிவி.
யானைகளின் தந்தங்களைப் பார்த்திருப்பீர்கள். அதே போல் தந்தங்கள் உள்ள மற்றொரு உயிரினம் கடலில் வாழும் வால்ரஸ் மட்டுமே. சீனாவின் புனித விலங்காக கருதப்படுவது- பன்றி.
தேன்கூட்டை கலைத்தால் தேனீக்கள் கொட்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவற்றால் ஒரு முறை மட்டுமே கொட்ட முடியும். ஏனெனில், அவை கொட்ட பயன்படுத்தும் கொடுக்குகள் கொட்டியதும் எதிரியின் உடலிலேயே தங்கிவிடும்.
உலகில் இதுவரை அமைக்கப்பட்ட சாம்ராஜ்யங்களில் மிகப்பெரியது மற்றும் மிகவும் பலம்பொருந்தியது செங்கிஸ்கானுடையது. கிழக்கில் சீன கடலில் ஆரம்பித்து மேற்கே கருங்கடல் வரை விரிந்திருந்தது அந்த சாம்ராஜ்யம்.
1918\ல் பரவிய ஃப்ளு காய்ச்சல் மிக கொடூரமானது. இதில் ஆறு கண்டங்களிலும் உலக மக்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பாதிக்கப்பட்டனர். பிரபல கிரிக்கெட் ஆட்டகாரான கபில்தேவின் சுயசரிதையின் பெயர் By Gods-decree. இதன் பொருள் ‘கடவுளின் தீர்ப்புப்படி’.
‘நம்பர் தியரி’யின் தந்தை என்று அழைக்கப்படுவர் பியரி-டி-பெர்மட் (pierre-de-Fermet) ஆனால், இவர் ஒரு வழக்கறிஞர். கணிதம் இவரது பொழுதுபோக்கு மட்டுமே!
உலகில் அதிகமாக திரைப்படங்கள் தயாரிக்கும் நாடு இந்தியா.
********************************************************************
நன்றி:- சு.வி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++