தொகுப்பு
எல்லைக் கோடு – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
எல்லையிலா அருளால் காக்கும்
…..இறையவன் வகுத்த சட்டம்
எல்லைக்கோ டென்று பார்த்து
…..இணங்கிநீ வாழ்தல் திட்டம்
தொல்லைகளும் வரத்தான் செய்யும்
…தொடர்ந்துநீ முன்னே செல்வாய்
இல்லையென்றால் உழைப்பில் தேக்கம்.
…இருப்பதைக் கண்டு கொள்வாய்!
அளவுக்கு மிஞ்சும் போதில்
…அமுதமும் நஞ்சாய்ப் போகும்
பிளவுக்கு வழியைக் காட்டும்
….பிறர்மனம் புண்ணாய்ப் போகும்
அளவுக்கு மேலே காட்டும்
..அக்கறைக் கூடத் தொல்லை
களவில்லாக் கற்பைப் பேண
…காண்பது பண்பின் எல்லை!
நாட்டிலுள்ள எல்லைக் கோடு
…..நல்லவர் மதிக்கும் கோடு
வீட்டிலுள்ள எல்லைக் கோடு
…விரும்புவர் அண்டை வீடு
பாட்டிலுள்ள யாப்பின் கோடு
….பாடலின் அமைப்பைக் காட்டும்
வாட்டிவிடும் வறுமைக் கோடு
…வறுமையின் எல்லைக் கோடு!
ஆட்டத்தில் எல்லைக் கோடு
…..ஆட்டமும் சிறக்கச் செய்யும்
நாட்டத்தில் எல்லைக் கோடு
…நாளையை எண்ணிப் பார்க்கும்
நோட்டத்தில் எல்லைக் கோடு
..நோவினை இல்லாக் கற்பு
கூட்டத்தில் எல்லைக் கோடு
…கூச்சலைத் தடுத்து வைக்கும்!
நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
-
- அணைக்கட்டு
- அப்பா
- அமலால் நிறையும் ரமலான்
- ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??
- இணயதளம் ஓர் இனியதளம்
- இயற்கையெனும் இளையகன்னி
- இறையற்புதம்
- உறவுகள்
- ஊனம்
- எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!!
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பயணம்
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- மவுனம் களைந்தால்…
- முயன்றால் வெல்லலாம்
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- வாழ்க்கை எனும் பாடம்
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
வாழ்க்கை எனும் பாடம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
வெற்றிலையும் சுண்ணாம்பும் சேர்ந்தால் நாக்கு
வெளிக்காட்டும் செந்நிறத்தின் அழகு போல
வெற்றிகளை ஈட்டிவரும் சான்றோர் வாழ்வு
வீரியமாய்த் தந்திரமும் இணைந்த தாலே
சுற்றிவரும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டு
சுழற்றியதை முறியடித்தார் விரைந்து சென்று
கற்றிடுவோம் அவர்வாழ்வில் முன்னேற் பாட்டை!
கழற்றிடுவோம் நம்வாழ்வில் ஐயப் பாட்டை
பல்லுக்குள் அகப்பட்ட நாக்கைப் போலப்
பக்குவமாய்ச் சுழலுதலே வாழ்க்கை என்போம்
சொல்லுக்கும் செயலுக்கும் வேறு பாடோ
சோதனைகள் கொண்டுவரும் முன்னேற் பாடே
வில்லுக்குள் பூட்டிவைத்த அம்பைப் போல
விவேகத்தைப் பூட்டிவைப்போம் அன்பி னாலே
கல்லுக்குள் மறைந்துள்ளத் தேரை வாழக்
கருணையாளன் உணவளித்துக் காப்பா னன்றோ
வாய்கொண்டு விழுங்குகின்ற முயற்சி போல
வாழ்க்கையிலும் விடாமுயற்சி இருக்க வேண்டும்
நோய்கொண்டு வாடினாலும் மருந்தை நாடி
நோகாமல் சிகிச்சைகள் செய்வோம் தேடி
தாய்கொண்டு வந்தவுடல் அழிவைத் தேடித்
தானாக மாய்வதற்குக் குழியைத் தோண்டித்
தேய்கின்ற நிலைமைக்கு சைத்தான் நம்மைத்
தீண்டுகின்ற சூழ்ச்சிகளை அறிதல் நன்றே!
நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
-
- அணைக்கட்டு
- அப்பா
- அமலால் நிறையும் ரமலான்
- ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??
- இணயதளம் ஓர் இனியதளம்
- இயற்கையெனும் இளையகன்னி
- இறையற்புதம்
- உறவுகள்
- ஊனம்
- எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!!
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பயணம்
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- மவுனம் களைந்தால்…
- முயன்றால் வெல்லலாம்
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- வாழ்க்கை எனும் பாடம்
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
அண்மைய பின்னூட்டங்கள்