தொகுப்பு
புளிச்சேப்பக்காரர் விருந்து – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தெரு முனையில் “அஸ்ஸலாமு அலைக்கும்” புது குரல்.
பதில் சொல்லி, திரும்பி பார்த்தேன். மஸ்ஜிதில் மகரிப் தொழுதவர்.
என்ன வேண்டும்? என்று கேட்டேன்.
ஆஹா இதுவல்லவோ பக்கா பிரியாணி, மிக்க சுவையான புலவு என்ற புகழுரைக்கு மயங்குகிறார்கள்.
அவரை நோக்கி “நீங்கள் பள்ளியில் சென்று அமருங்கள். நான் உணவு கொண்டு வருகிறேன் என்று கூறினேன்.
நானோ வெளியூர்க்காரன். அருகில் உணவு விடுதிகள் இல்லை. நேரமும் நெருக்கடி, யோசித்தேன்.
நன்றி:- முஸ்லிம் முரசு – ஆகஸ்ட் 2010ல் பிரசுரமானது
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
நிம்மதியே இல்லை! முல்லா கதை
ஒரு நாள் முல்லா வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். பார்வைக்கு ஒரு செல்வந்தனைப் போல் காட்சியளித்த அவன் மிகுந்த கவலையோடு காணப்பட்டான்.
முல்லா அந்த மனிதனின் அருகில் சென்று அமர்ந்தார். அந்த மனிதனை நோக்கி, ”ஐயா! தங்களைப் பார்த்தால் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. தாங்கள் கவலையோ, சங்கடமோ அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், தங்களைப் பார்த்தால் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்தவர் போல் தோன்றுகிறது.
முல்லா அந்த செல்வந்தனின் கையில் இருந்த பணப்பையைத் திடீரெனப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.அதைக்கண்டு பதறிப்போன செல்வந்தன், ‘
‘ஐயோ என் பணம் போய்விட்டதே… என் பணம் போய்விட்டதே!” என்று அலறியவாறு முல்லாவை துரத்திக் கொண்டு ஓடினான்.
பணப்பையை மரத்தடியில் வைத்துவிட்டு அருகிலிருந்த புதருக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டார் முல்லா.மூச்சிரைக்க ஓடிவந்த செல்வந்தன்
தம்முடைய பணப்பை மரத்தடியில் கிடப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.’பணம் போய்விட்டதே என்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன்.
அதைக்கேட்ட செல்வன், ”நீ கூறியது உண்மைதான். நீர்
சொன்னதுபோல் பறிபோன பணம் கிடைத்தவுடன் நான் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது,” என்று கூறினான்.
பிறகு செல்வந்தன் முல்லாவை நோக்கி, ”ஐயா! நீர் என்னைப் போல் ஒரு செல்வர் இல்லை போல் தோன்றுகிறது. சாமானிய நிலையில் உள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு பொருளாதார வளத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள நீங்கள் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறீர்களே, இது எவ்வாறு சாத்தியப்படுகிறது?” என்று கேட்டார்.”அது ஒரு ரகசியம்!,” என்றார் முல்லா.
‘அந்த ரகிசயத்தை எனக்குச் சொல்லுங்களேன். நானும் அதைத் தெரிந்து கொண்டால் உங்களைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியோடு இருக்க முடியுமல்லவா?” என்று செல்வன் கேட்டுக் கொண்டான்.
”அது மிகவும் சாதாரண விஷயம்தான்.
மனிதன் செல்வத்தின் மீது பேராசை கொண்டு அலையும் வரை மனிதனுக்கு மன நிம்மதியோ, மகிழ்ச்சியோசற்றும் இருக்காது. தமது அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணத்தைச் சம்பாதிக்கும் மனிதனிடம் பேராசை இருக்காது. ஆகவே, அவனால் நிரந்தரமான மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
அண்மைய பின்னூட்டங்கள்