கூச்சம் தவிர்
கூச்சம் தவிர்ப்பது எப்படி? ஆளுமை வள்ர்க்க தோழமை டிப்ஸ்
.
‘கூச்சம் தவிர்’, ‘சந்திப்பு தவறேல்’ ஆத்தி சூடியை ரீ-மிக்ஸினால் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும். காரணம், இன்று இளைஞர்களை அதட்டி மிரட்டி உருட்டும் அசுரன்… கூச்சம்!
”ஒருமுறை என்னிடம் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன் ஒருவனை அழைத்து வந்தார்கள். அவனைச் சோதித்தபோது, கடுமையான மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவனது பெற்றோரிடம் விசாரித்தேன். ‘இவன் யாரிடமும் பேசுவதற்கு அவ்வளவு கூச்சப்படுவான். பக்கத்து வீட்டுக்காரர்களிடம்கூடப் பேச மாட்டான். ‘அமைதியான பையன்… தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கிறான்’ என்று நினைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களிடம் பேசுவதைக்கூடக் குறைத்துவிட்டான். இப்போது எங்களிடமும் பேசுவது இல்லை. அறைக்குள்ளேயே அடைந்துகிடக்கிறான். அறைக்குள் இருந்து தானாக முணுமுணுக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது’ என்று கண்கலங்கினார்கள்.
சின்ன தயக்கம், நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்துவிடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம். ‘சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை’ என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டுபிடித்தவர்களின் அனுபவங்கள் இவை.
”மேடை, மைக்கைப் பார்த்தாலே தடதடன்னு கை, கால் உதற ஆரம்பிச்சிடும். அவ்வளவு ஏன்… சுத்தி 10 பேர் நின்னாலே பயந்துருவேன். நாலு பேர் கைதட்டுற மாதிரி வாழணும்னு கனவு மட்டும் இருந்தது. ஆனா, அதைவிட அதிகமா பயம் இருந்தது. எனக்கு நெருக்கமான, கிண்டல் பண்ணாத 10 நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, என் முன்னாடி உட்காரச் சொல்வேன். விதவிதமா டான்ஸ் ஆடி, மிமிக்ரி பண்ணிக் காட்டினேன். அவங்க கிண்டல் அடிக்காம சரியா விமர்சனம் பண்ணி என் தவறுகளைத் திருத்தினாங்க. நேரம் கிடைக்கும்போது எல்லாம் கண்ணாடி முன்னாடி நின்னு பயிற்சி எடுத்தேன். கண்ணாடியில நம்ம கண்ணை நேருக்கு நேர் பார்த்துப் பேசும்போது, கூச்சம் இருக்கிற இடம் தெரியாமப் போயிரும். அந்தப் பயிற்சி கொடுத்த தைரியத்தில் 1,500 மாணவர்கள் கூடியிருந்த ஸ்டேஜில் டான்ஸ் ஆடினேன். பயங்கர அப்ளாஸ். கூச்சம் இருந்தா திறமையை மறந்திருங்க. திறமையை வெளிப்படுத்தணும்னா, கூச்சத்தை மறந்திருங்க!” என்று சிரிக்கிறார் சிவகார்த்திகேயன்.
‘கூச்சம் ஒரு வியாதி’ என்பதைக் கண்டுபிடித்து அதை அடியோடு அழித்து வெற்றிக் கொடி நாட்டியவர் ரேடியோ மிர்ச்சி ஜாக்கி ‘சேட்டை’ சேது.
எப்படி உங்கள் இஷ்டம்?
கூச்சத்தை உதறியெறிந்து சிகரம் தொட்ட சிலர்…
நன்றி:- பிரவீன், வினோத், கோகுல் , லோகாம்பாள்
படங்கள்: ஜா.ஜாக்சன், து.மாரியப்பன், ஜெ.தான்யராஜூ
நல்ல பதிவு நண்பரே…
இன்றைய இளைஞர்களுக்கு தேவையான பதிவு…
நன்றி…