இல்லம் > ஊனம், கவிதைகள், கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் > ஊனம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

ஊனம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும்
ஞானமற்ற மனிதா…!
நீயும் ஒரு நாளில் நிலத்தில்
சாயும் வேளையில்
உயிரும் போய்விடும்;
பெயரும் போய்விடும்..!
உடல் முழுதும் செயலற்று
கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே
கிடைக்கும்….

வேதத்தைக் காணாத கண்கள்;
ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்;
உள்ளத்தால் ஊனமுற்றவைகளே..

அகம்பாவம் நிறைந்ததால்,
அகம்- பாவத்தில் உறைந்ததால்;
சுகம் தேடும் உள்ளமே- சுவனத்து
சுகம் தேடவேயில்லையே…!!

கருவறையே உலகமென்று
கருதியே சயனித்திருந்தாய்,
ஓருலகில் வந்து உதிப்பாயென்று
ஒருபோதும் நினைக்காதது போலவே;
மறு உலகம் உண்டென்பதை
மறந்து விட்டாய் மனமே..!

இரணமும்; மரணமும்
இரகசியமாய்த் தான்
இறைவனும் வைத்து விட்டான்;
இரண்டையும் நோக்கியே
இரவும் பகலும் பயணிக்கின்றோம்……

இரணத்தின் முடிவு;
மரணத்தின் துவக்கம்

சென்ற நிமிடம்-
நின்று பேசியவர்கள்
சென்ற இடம் எங்கே?
சென்று பார்த்து வா;
நின்று விடும் கற்பனைகள் மெதுவா(க)

ஒன்றுமே யில்லாதிருந்த உன்னை
நன்றாக உருவமமைத்த இறைவனே
ஒன்றுமே யில்லாமல் உருக்குலைத்து- மீண்டும்
ஒன்று சேர்க்கும் நாளில் எழுப்புவான்
உண்மை இதுவென்று உணராத உள்ளமே
உண்மையிலே “ஊனமுற்றவை”………

  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக